Wednesday, January 14, 2015

மக்கள் பள்ளி

ஒவ்வொரு குழந்தையும் அவரவர் இயல்பில் ஒரு பேராசானே. இருபது வருட கல்வியையும் அனுபவதையும் ஒரு கேள்வியில் ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறார்கள் இந்தக் குழந்தைகள். அவர்கள் தெளிந்த நன்னீர்போல அறிவுடனும் திறனுடனும் பிறக்கிறார்கள். நம்முடைய கல்விமுறையும் வாழ்க்கை முறையும் அவர்களை ஏதொ ஒரு வடிவத்திற்க்கு மாற்றுகிறது. அவர்களை அவர்களின் முழுத்திறனுடனும் அறிவுடனும் சிந்திக்க விடாமல் நாம் நமக்குத்தெரிந்த அல்லது நாம் சிறந்தது என்று நினைக்கும் ஏதோ ஒன்றை கல்வி என்ற பெயரில் திணிக்கின்றோம். அவ்வாறல்லாமல், அவர்களின் சிந்திக்கும் திறனுக்கும் அறிவின் தேவைக்கும் உணவளிப்பதே நமது தலையாய கடமையாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன். 

இந்திய- தமிழக கல்வி முறை குழந்த்தைகளை நடத்துகின்ற முறையில், ஒரு சிந்திக்கும் திறனற்ற குழந்தைகளை உருவாக்க முனைகிறது. நீங்கள் கற்றுக்கொடுக்கும் கல்வி முதலில் குழந்தைகளை ஒரு நல்ல மனிதனாகவும் குடிமகனாகவும் உருவாக்க வேண்டும். ஒழுக்கமில்லாத பொறியாளரும், நேர்மையில்லாத மருத்துவரும் இந்த சமுதாயத்திற்க்கு எதை கொடுக்கப்போகிறார்கள். பணம் கொடுத்து வாங்கும் கல்வி நல்ல மனிதரை உருவாக்குவதில்லை. சமூக ஏற்றத்தாழ்வை சரி செய்துகொள்ள கல்வி ஒரு வழியாக இருந்த காலம் போய் இப்போது கல்வியே சமூக ஏற்றத்தாழ்வை உருவாக்கும் காரணியாக உள்ளது. எல்லோருமே பொறியாளர்களாக மாறி வரும் இந்த கல்விச்சூழலில் யார் கலையையும் இலக்கியத்தையும் வரலாறையும் விவசாயத்தையும் இன்ன பிற தொழில்களையும் செய்யப்போகின்றனர். இன்றைய ஒரு பொறியியல் பயின்றவரால் ஒரு கொய்யா மரத்தைகூட ஒழுங்காக வளர்க்கத்தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம் புத்தகத்தில் இருப்பதை மனப்படம் செய்து காகிதத்தில் எழுதுவது.

இந்த மாதிரி இயந்திரங்கள் தயாரிக்கும் கருவிகள்போல இளைஞர்கள் சமுதாயத்திற்க்கு உற்ப்பத்தி செய்யப்படுவதால் நீண்ட காலத்தில் யாருக்கும் பயனில்லை. 

அந்த வகையில் நான் வசித்துவரும் சிகாகோ பகுதியில் உள்ள நேப்பர் பாளையம்(நேப்பர்வில்) பள்ளிகளில் உள்ள பாட முறைகளைப்பற்றி கூறி அதில் நமக்கு என்னென்ன முறைகள் பயனுள்ளவையாக இருக்கிறதோ அவற்றை எடுத்துக்கொள்வோம். 

பொதுவாக வட அமெரிக்காவில் கல்விமுறை சீறாக அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் குழந்தைகளின் வயதிற்க்கேற்ப்ப நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் வடிவமைக்கப்படுகின்றன. முக்க்கியமாக அனைத்துப்பள்ளிகளும்(அல்லது பெரும்பாலான) அரசு பள்ளிகளே. இங்கு யாரும் தனியார் பள்ளிகளை தேரிச்செல்லும் தேவையோ வாய்ப்போ இல்லை. பெரும்பாலும் பள்ளிகள் மாநில மற்றும் உராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளால் நிர்வகிப்படுகிறது. இங்குள்ள உள்ளூர் நிர்வாகங்கள் வீட்டு வரி, வாகன வரி, எரி பொருள் வரி மற்றும் சிகரட், மது பானம் போன்றவற்றில் நேரடி வரி விதிப்பை மேற்க்கொண்டு உள்ளூர் திட்டங்களை செயல்படுத்துகின்றன. பள்ளிகளை பொருத்தவரை மாநில நிதி ஆதாரம் பொதுவான பள்ளிச்செலவுகளான ஆசிரியர்களுக்கான சம்பளம், கணினி பாடங்கள் மற்றும் நிர்வாகச்செலவுகளுக்கு பெரும் பங்களிப்பு செய்கின்றன. மற்ற செலவுகளான விளையாட்டு, கூடுதல் திறன் வளர் திட்டங்கள் ( மேலதிக ஆங்கில புலமை, கணித அறிவு மேம்பாடு), நீச்சல், கால் பந்து மற்றும் இன்ன பிற விளையாட்டுகளும் அதற்க்கு தேவையான அரங்கங்களும் திடல்களும் உள்ளூர் நிர்வாகத்தால் முன்னெடுக்கப்படுகின்றன. எங்கள் பகுதி பள்ளி வட்டம் வட அமெரிக்காவில் முதன்மையானது. இங்கிருந்து மேல் நிலைபள்ளிப்படிப்பை முடிப்பவர்கள் நாட்டின் மிகச்சிறந்த பல்கலைகழகங்களில் அரசு ஊக்கத்தொகையுடன் படிக்க வாய்ப்பு பெருகின்றனர். காரணம் இந்த பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மிகு திறன் வளர்ப்பு கல்வித்திட்டம். அதனாலேயே இந்த பகுதியில் வாழும் செலவு மற்ற இடங்களை காட்டிலும் சற்று அதிகம், காரணம் முன் சொன்ன உள்ளூர் வரிகள்.

கல்வித்தரத்தை உயர்த்துவதில் இங்குள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள். அனைத்துப்பெற்றோர்களும் சங்கத்தில் உறுப்பினறாக இருக்க வலியுறுத்தப்படுகிறார்கள். கல்விக்கூடத்தின் முக்கிய முடிவுகள் பெற்றோர் சங்கங்களே எடுக்கின்றன. மாநில அரசின் நிதி ஒதுக்கீடுக்கு அதிகமாக தேவைப்படும் நிதியை "நிதி சேர் நிகழ்வுகள்" (Fund raising events) மூலம் உருவாக்கிக்கொள்கிறார்கள். இந்த நிகழ்வுகள் விளையாட்டு போட்டிகளில் தொடங்கி, மரத்தான் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. ஒரு எடுத்துக்காட்டுக்காக, ஆங்கிலப் புலமைக்காக நடத்தப்படும் வகுப்புகளுக்கு தேவையான அதிகப்படியான ஆசிரியர்க்கு சம்பளம், அந்த பாடத்திட்டத்தை செயல் படுத்த உதவும் மென்பொருள்கள் மற்றும் மாணவர்கள் கணினி செயலி மூலம் வீட்டுப்பாடங்கள் செய்வதற்க்கு தேவையான இணையதள கட்டணசேவைக்கான கட்டணம் மற்றும் வகுப்பில் பயண்படுத்தப்படும் பாட புத்தகங்கள் மற்றும் இன்ன பிற பொருட்களுக்கு ஆகும் செலவை இந்த நிதியைக்கொண்டு ஈடுகட்டுகின்றனர். இதற்க்காக பெற்றோரிடம் தனியாக கட்டயமானன்கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. விருப்பமுள்ளவர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்க்கு நன்கொடை தந்து ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

இங்கு அதிக பட்சமாக 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கட்டணமாக 100 டாலர் முதல் 300 டாலர் வரை ஆண்டுக்கொருமுறை வசூலிக்கப்படுகிறது. இது பள்ளிக்கு குழந்தைகளை கூட்டிவந்து கொண்டுவிட ஆகும் பேருந்து கட்டணத்தையும் சேர்த்து.

வியப்பாக இருக்கிறதா?. ஆம்.. ஏகதிபத்தியம்.. முதலாளித்துவம் என்று நாம் என்னவெல்லாம் சொன்னாலும் இந்த மாதிரியான விசயங்களில் அவர்கள் கம்யூனிஸ்டுகளாகவே இருக்கிறார்கள். ஆனால் நாம் சோசலிசத்தையும் முதலாலித்துவத்தையும் குழப்பி அரசியல்வாதிகளுக்கும் பெருந்தனக்காரர்களுக்கு நம் வாழ்நாளின் பெரும்பகுதியின் உழைப்பைக்கொண்டு சேர்த்தன்செல்வத்தை கொடுத்து அந்த உழைப்புக்காக நாம் செலவிட்ட நேரமெல்லாம் நாம் அவர்களுக்கு மறைமுகமாக அடிமையாய் இருக்றோம். ஆம்.. அடிமையாக. கையில் விலங்குடன் கடும் வேலையை குறைந்த கூலியுடன் செய்பவர் மட்டும் அடிமையல்ல. நல்ல கூலியுடன் எந்த விலங்குகளும் இல்லாமலெட்டுமணினேர உழைப்பைக்கொண்டு ஈட்டும் பணத்தை நீங்கள் விரும்பாவிட்டலும் உங்களிடமிருந்து கல்விக்கட்டணமாக பறித்துக்கொண்டாலும் அது நீங்கள் அவர்களுக்கு அடிமையாய் உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றே அர்த்தம். இன்னும் ஒரு படி மேலே போய், உன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வேண்டுமானால் நீங்காள் இத்தனை லட்சம் கொண்டுவந்து கட்டணமாக கட்டவேண்டும். அதற்க்காக நீங்கள் எவ்வளவு நேரம் உழைகிறீர்கள் எவ்வளவு ஈட்டுகிறீர்கள் என்றெல்லாம் கவலையில்லை என்று உங்களையும் உங்கள் உழைப்பையும் சுரண்டி அடிமையாக மாற்றிக்கொண்டுவிடுகிறார்.

சரி.. இந்த நம் நாட்டில் இருக்கும் தனியார் கல்விமுறையிலும் கட்டணக்கொள்ளையிலிருந்து நாம் விடுபட முடியாதா என்று கேட்கிறீர்கள். நிச்சயம் முடியும். அதற்க்கு நாம் முன்னெப்போதும் இல்லாத அதிக பொருப்புகளை ஏற்க்க தயாராகவேண்டும். நமது அரசு ஏற்க்கனவே பல நல்ல திட்டங்களுடன் பள்ளி கட்டடங்கள் வகுப்பறைகள் நமது வரிப்பணத்தில் கட்டிகொடுத்துள்ளது. ஒரு அரசாங்கம் அதன் தகுதிக்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்து கொண்டுதான் இருக்கிறது.

நாம் இப்போது இருக்கும் பெற்றோர் சங்கங்களை வலுப்படுத்தவேண்டும். அதற்க்கான சட்டங்கள் இன்னும் சிறப்பானதாகவே உள்ளது. நமது பங்களிப்புதான் சுத்தமாக இல்லாமல் இருக்கிறது. அதனால் நாமாக முன்வத்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை வலுப்படுத்தி கல்விற்றத்தை உயர்த்திக்கொள்ளவேண்டும்.

நீங்கள் தனியார் பள்ளிக்கு கொண்டு கொடுக்கும் லட்சங்களால் அந்த பள்ளி முதலாளிக்கு மட்டுமே பயன். அதற்க்கு பதிலாக ஒரு சில ஆயிரங்களையோ சில நூறுகளையோ பெற்றோர் ஆசிரியர் சங்கத்துக்கு நன்கொடையாக கொடுத்து நீங்களே பல கல்வித்திட்டங்களை நிபுனரின் ஆலோனையுடன் உங்கள் குழந்தை படிக்கும் பள்ளியில் செயல் படுத்தலாம். பள்ளி முதல்கர் மற்றும் கல்வி அலுவலருடன் கலந்தாலோசித்து தேவையான உபகரணங்கள், மேலதிக பாடத்திட்டங்கள் சுகாதாரத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். எல்லோரும் இங்கு வளம் படைத்தவரில்லை. இருப்பவர் தன்னிடம் இருப்பதை இல்லாதவரிடம் பகிர்ந்து கொள்வதுதான் இதன் சிறப்பு. ஒரு பெரு முதலாளியை வாழவைப்பதை விட நாலு ஏழைக்குழந்தைகளுக்கு கல்வியைக்கொடுப்பது நமது கடமையாகக் கொள்ளலாம்.

அடுத்தது ஆசிரியர் திறன் மேம்பாடு. எப்படியெடுத்துகொண்டாலும் தனியார் பள்ளி ஆசிரியர்களைவிட அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்வியிலும் திறனலும் முன்னனியிலேயே இருக்கின்றனர். ஆனால் அவர்களின்
திறனை பயன்படுத்திக்கொள்வதில்தான் சிக்கல உள்ளது. அரசின் கல்வித்திட்டத்துடனுனேயே அவர்களின் திறன் சார்ந்து கற்ப்பித்தலின்  உன்னதம் உயர்த்த அவர்களுக்கு பயிற்ச்சி மற்றும் சிறந்த சாதனங்கள் வழங்கி ஊக்கப்படுத்துதல்ஓரளவு பயன்படும். மாண்டிசாரி கல்விமுறை போன்ற உலகின் சிறந்த கல்விமுறைகளின் மகத்துவம் மற்றும்
அவை மாணவர்களிடம் ஏற்ப்படுத்தும் தாக்கம் ஆகியற்றை அவர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். இவை எல்லாவற்றையும் விட அவர்களை அவர்களின் பங்களிப்பையும், சேவையையும் கவுரவிக்கவேண்டும், ஊதியம், பதவி உயர்வைவிட அரசு ஆசிரியர்கள் அதிகம் எதிர்பார்ப்பது அவர்களின்
அளப்பரிய சேவையை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுதலிலும், அதற்க்கான அங்கீ்காரத்தையுமே.

அடுத்து கல்விமுறையில் சில சில மாற்றங்கள். மதிப்பெண்களுக்கு மனப்பாடத்திற்க்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போக்கை மாற்றி மாணவர்கள் அவர்களி்ன் அறிவை சமுதாயத்தின் பல்வேறு சூழலி்ல்
எவ்வாறு பயன்படுத்துவது என்பது போன்றது. இங்கு நாம் இஞ்சினீயரையோ டாக்டரையோ உருவாக்குவதற்க்குப்பதில், சிந்திக்கும் திறன் மி்குந்த நல்ல மனிதர்களை, குடிமகனை உருவாக்குவது முதன்மை நோக்கமானது.

நமது இப்போதைய கல்வி முறையில் கற்ப்பவர்கள் எத்தனைபேர் கல்லூரி படிப்பை முடித்ததும் சொந்தமாக தொழில் தொடங்கவும், ஒரு மக்கள் பயன்பாட்டு கண்டுபிடிப்பை செய்கிறார்கள்  என்று சிந்திதீர்களனால் நமது ஏட்டுக்கல்வி செல்லவேண்டிய தூரம் தெரியும். இங்கு கல்வியை விட அந்த கல்வியை அடைடும் முறைதான் வியப்பானது. ஒரு தந்தை தன் மகனோ மகளோ மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நல்ல சம்பளத்துடன் வேலைகிடைக்க வேண்டுமென்று விரும்புகிறார். அதனை எப்படி பெற்றுத்தருவது என்று சிந்திக்கையில் சமூகம் அவருக்கு பல எஞ்சினீர்களையும் டாக்டர்களையும்
எடுத்துக்காட்டுகிறது. அதற்க்காக தன் மகனை எஞ்சினரீங் படிக்க நல்ல கல்லூரி, அதற்க்கான அதிக கட்டணத்தை கடனாகவோ அல்லது தன்னுடைய சேமிப்பிலிருந்தோ எடுத்து கட்டுகிறார். அவர் நினைத்தது போல் மகன் கல்லூரிப்படிப்பை முடித்து நல்ல வேலை கிடைத்ததும் அவர் கடமை முடிந்தது என்று நினைத்து விடுகிறார்.

ஆனால் பிரச்சினை அப்பொழுதுதான்  தொடங்குகிறது. அவர் உருவாக்கிய இஞ்சினியர் இயந்திரம் வேலை செய்து மாதச்சம்பளம் ஈட்டுகிறது, குடும்பம் நடத்துகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று கேட்டீர்களானால், பதில் தெரியாது. கடவுள் மனிதனை ஈட்டுவதற்க்கும், உண்ணுவதற்க்கும், உறங்குவதற்க்கும் மட்டும் படைக்கவில்லை. இயற்க்கையை அறிந்துகொண்டு அதனூடேயே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அடுத்த பரினாம நிலையை அடைந்து தன் சந்ததியை திழைக்க வைக்கவேண்டும் என்று விரும்புகிறான். வரலாற்றை புரட்டினீர்களானால், அடிமைகள் எந்தப்பக்கத்திலும் எழுதப்பட்டிருக்கமாட்டார்கள். மாறாக மாற்றத்தையும், சாதனைகள் நிகழ்த்தியவர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பார்கள். அவர்கள்
உலகி்ன் ஒரு பகுதியில் மட்டு்ம் இருப்பதாக நாம் தான் நினைத்துக்கொண்டு, மற்ற அனைவரையும் சேவகர்களாக உருவாக்கிவிடுகிறோம்.

உங்கள் பிள்ளைகள் சாதனையாளர்களாக வேண்டுமா அல்லது சாதனையாளர்களுக்கு சேவகர்களாகவேண்டுமா என்று தீர்மானிப்பது
உங்கள் கையில் தான் உள்ளது.

1 comment:

  1. அருமையான கட்டுரை. பாராட்டுகள்!!

    ReplyDelete