Tuesday, July 22, 2008

திண்ணை காலி

எங்கடா மன்மோகன், சிதம்பரத்தையெல்லம் நிக்க வச்சு நாக்க மூக்க கேள்வி கேட்டுட்டு வெளியபோகும்போது தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் நம்மளை கைது பண்ணிட்டாங்களோன்னு பொங்க வெச்சு கொண்டாடுன உங்களை விடாது இந்த கருப்பு.

நாங்க கோடு எழுதுலேன்னா அமெரிக்க பொருளாதாரமே சும்மா மொடங்கிபோயுரும்ல... அதான் கொஞ்சம் டைம் பாசுக்கு கோடு எழுதி எழுதி ரிவியூல கோக்கு மாக்கா கேள்வி கேட்டவங்களுக்கு ஆப்பு வெச்சு சாமாளிச்சு வெளிய வர கொஞ்சம் லேட்டாயிருச்சு.

அதனால இந்த நாலுமாச நாட்டு நடப்ப நம்ம கலைஞர் மாதிரி நானே என்னை பேட்டி எடுத்து உங்களுக்காக பதிக்கிறேன்.

உலக நாயகன் நடிச்சு ஓடு ஓடுன்னு ஓடிட்டு இருக்கர தசாவதாரம் பற்றி....?

படம் நல்லா இல்லைன்னு சொல்லல. நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்.

இந்தியர்கள் அதிகமா சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்கன்னு புஸ் சொன்னத பத்தி...?

அது என்ன "ஆரம்பிச்சிட்டாங்க". இத என்னால ஏத்துக்க முடியாது. புஸ்ஸுக்கெல்லாம் பதில் சொல்லி நம்ம டைம வீண் பண்ணக்கூடாது.

திமுக கூட்டணியிலிருந்து ப மா கா வை கழட்டி விட்டதை பற்றி...?
காடுவெட்டி குரு மாதிரி ஆளுங்க எங்க தன்னோட கட்சிகாரங்கள விட மக்கள்கிட்ட அதிக செல்வாக்கு வந்துரும்னு ஒரு பயத்துல இந்த முடிவை எடுத்திருப்பார்னு நான் நினைக்கிறேன்.


தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொண்றதை கண்டித்து முதலமைச்சர் உண்ணா விரதம் இருந்தத பற்றி...?

எலக்சன் வருதல்ல. அதான் மீன் பிடிக்கறார் முதலை மச்சர்.

சிம்புவும் நயனும் சந்திச்சத பத்தி....?
நயந்தான் இந்த வம்ப பத்தி சிந்திக்கணும். தயவு செஞ்சு என்னோட நம்பர அந்த பொண்ணுகிட்ட குடுத்திடாதீங்க..

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐமுகூ வெற்றி பெற்றதை பத்தி....
பணம் 575ம் செய்யும்.

அடுத்த காவியம் எப்பன்னு நம்ம வாசகர்கள் கேள்விக்கு....?
விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

வருட்டுங்களா........

3 comments:

  1. Hi master
    this is my first visit to ur blpg... enjoyed a lot... nice post... keep rocking...

    ReplyDelete
  2. புளியமரத் திண்ணையாரின் கேள்வியும் பதிலும் நச்.

    கோவை விஜய்
    http://pugaippezhai.blogspot.com/

    ReplyDelete