Wednesday, July 29, 2015

பிம்பங்கள்

எல்லா மனிதர்களும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு மனிதனின் பழக்க வழக்கங்கள், சுபாவங்கள் எப்போதும் மாரிக்கொண்டே இருக்கும். அவனைச்சுற்றி இருக்கும் மனிதர்களின் உணர்ச்சிகளை உள்வாங்கிக் கொண்டு தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறான். ஒரு வகையில் இது "அட்ஜஸ்ட்"  செய்து வாழ்தல் தான். சில நேரங்களில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் ஒரு மனிதனின் நிலையை தாழ்த்திவிடக்கூடச் செய்யும். எங்கெல்லாம் தன்னால் எதிர்வினையாற்ற முடியாதோ அங்கெல்லாம் அடங்கிப்போவதே உயிர்களின் பிழைத்தல். ஒரு நிறுவத்தில் மேலாளருக்கு அடிபணிந்து வேலைசெய்வது, அரசியல் கட்சித்தலைவருக்கு கீழ்படிந்து ஆணைகளைச் செய்வது மற்றும் மனைவியிடம் அடங்கி நடப்பதுகூட இந்த 'பிழைத்தல்' சார்ந்ததே.

இந்த 'பிழைத்தலு'க்கான வரையறை மனிதர்களின் சாமர்த்தியத்தைப் பொறுத்து மாறும். தன்னைவிட பலம் குறைந்தவரிடம் அடிபணிந்து போவது பிழைத்தலுக்கானது அல்லாமல், எதிர்வினையின் பாதிப்பு ஒரு தற்க்காலிக வெற்றியைத் தந்தாலும் பின்னால் கொண்டுவரப்போகும் பெரும் தோல்வியை தவிற்ப்பதற்க்காக் கூட இருக்கலாம். சில நேரங்களின் எதிர்வினையாற்றத் தேவைப்படும் காலம், ஆற்றல் விரையத்திற்கு ஈடானதாய் நம்மேல் இன்னோருவர் காட்டும் உணர்ச்சி இருக்கலாம். அம்மாதிரியான நேரங்களில் அங்கு எதிர்வினையேதும் இருப்பதில்லை. சரி இந்த தத்துவங்களை நிறுத்திக்கொண்டு ஒரு மனிதனின் வாழ்வு எப்படி நம்மிடம் உணர்ச்சிகளையும் எண்ண அலைகளையும் உருவாக்குகிறது என்பது நம்மை சுயமதிப்பீடு செய்துகொள்ள உதவும்.

படிப்பை முடித்து வேலைக்கு போக ஆரம்பித்த அரும்பு மீசை பருவத்தில் இந்தியா அணு வெடிப்பு சோதனை செய்து உலகத்திற்க்கு தானும் அழிக்கும் வலுவுள்ளவனே என்று சொன்ன தருணம். எந்த நாட்டு கிரிக்கெட் டீமுடன் இந்தியா விளையாடும்போதும் வராத நாட்டுப்பற்று பாகிஸ்தானுடன் விளையாடும்போது வெளிவந்துவிடும். அர்ஜுன் மற்றும் விஜயகாந்த் படங்கள் அதிகம் பார்த்ததனால் வந்த பாதிப்பாகக்கூட இருக்கும். அணு சோதனை செய்து இந்தியாவின் மீது பொருளாதார தடை விதித்திருந்த நேரம் அது. உலக பொருளாதாரம், அரசியல் போன்ற எந்த மண்ணாங்கட்டியும் அறியாத காலத்தில் முதன் முதலில் வாங்கிய TVS Champல் Atom Pokhran என்று மூவண்ணத்தில் எழுதி சுத்தித் திரிந்த காலம். கலாம் அந்த அணு சோதனையின் நாயகனாக எனக்கு அறிமுகமானார். பின் சுஜாதாவும் கூட அப்துல் கலாமுடன் படித்த அனுபவத்தை ஆனந்த விகடனில் பகிர்ந்திருந்ததாக ஞாயபகம். இராமேஸ்வரத்தில் பிறந்து எந்த அரசியல் பின்புலமும் இல்லாத குடும்பத்திலிருந்து மெல்ல மெல்ல இஸ்ரோவின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்த அவர் வாழ்க்கை - வாழ்க்கையின் ஆர்வத்தை தூண்டியது. "அக்கினிச்  சிறகுகள்" ஒரு சிறந்த தன்னம்பிக்கையூட்டும் புத்தகமாக என்னிடம் வந்து சேர்ந்தது. கலாமின் உதவியாளர் கலாமின் அனுபவங்களைக்கேட்டு அவரின் சுயசரிதையாக எழுதி வெளியிட்டிருந்தார். அந்த புத்தகத்தை படிக்கும் எந்தவொரு சாமனியனுக்கும் அப்துல் கலாம் ஒரு நம்பிக்கையூட்டும் விடிவெள்ளியாகத் தெரிந்தது ஆச்சர்யம் இல்லை, அது உண்மையுங்கூட.

காலப்போக்கில் அவரைச்சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்ற ஆரம்பித்தது. ஒரு முஸ்லிமாக பிறந்து தன் தேச நலனுக்காக அணு ஆயுதங்களை உருவாக்கி எதிரி நாட்டுக்கு ஒரு கலக்கத்தை உண்டுசெய்த அவர் ஒரு புரட்சியாளராக, தேசப்பற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டார். பின்னர் வந்த கார்கில் போர் கூட தேச அபிமானிகளுக்கு ஒரு வலுவான தலைவர் அப்துல் கலாம், அவர் தலைமையில் தேசம் இருந்திருந்தால் வாலாட்டும் எதிரி இல்லாமல் போயிருப்பான் என்று எண்ணத்தூண்டியது. பின்னர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியரசுத் தலைவருக்கான அதிகார வரம்பு தெரிந்தும், கலாம் தேசத்தை புரட்டிப் போட்டு விடுவார் என்று நம்ப வைக்கப்பட்டோம். அது நிச்சயம் கலாமின் தவறு கிடையாது. குடியரசு தலைவரானாலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போனார்.

ஐய்யா அவர்களின் ஆளுமை பிரதிபலித்த இஸ்ரோவின் திட்டங்களிலும் சதிஸ் தவான் மற்றும் விக்ரம் சாராபாயுடன் பணியாற்றிய அனுபவங்களையும் அவர்களிடம் கற்றுக்கொண்ட படிப்பினையையும் வைத்து தன் துறையில் பெரும் மைல் கற்களை கடந்தார். நமக்குத் தெரிந்த அரசியல் மற்றும் சமூகப் பார்வை ஒரு அரசு ஊழியரிடம் இருக்கும் என்று எதிர்பார்ப்பது நமது கருத்தை அவர் கொண்டிருக்க வேண்டுமென்ற அதிகப்பிரசங்கித் தனமின்றி வேறெதுவுமில்லை. அவரின் அரசியல் நிலைப்பாடுகள் நிச்சயம் அவர் நம்பும் தேசக் கட்டமைப்பு சார்ந்தது. தேசத்தின் எல்லா வியாதிகளுக்கும் அவரிடம் மருந்தை எதிர்பார்த்தது நமது அறிவின்மையே.

ராக்கெட் தொழில் நுட்ப ஆராய்ச்சியில் கண்டுபிடித்த பொருளைக்கொண்டு மனிதர்களுக்கு செயற்கை உறுப்புக்களை செய்து உதவமுடியும் என்று நம்பியவரிடம், அணு உலைகள் ஆபத்தானவை என்ற கருத்தை ஆதரிக்கச் சொன்னது அவருக்கும் நமக்குமான அறிவு மற்றும் அனுபவத்தின் இடைவெளிதான். நாம் சாதாரண நிலையிலிருந்து நமக்குத் தெரிந்த செய்திகளின் அடிப்படையில் அணு உலை வேண்டாமென்கிறோம். ஒருவேளை நாம் தூக்கிப் பிடிக்கும் கருத்து வெற்றியடையப்போவதில்லை என்ற உண்மை தெரியாமல் பிழைக்க முற்ப்பட்டோமோ என்னவோ தெரியவில்லை. முன்னர் தேசத்தின் விடிவெள்ளியாக தோன்றியவர் அணு உலையில் வேறு கருத்து கொண்டிருந்தார் என்பதற்காக அவர் பின் அவ்வளவாக நம் அபிமானத்திற்க்குறியவராக இல்லாமல் போய்விட்டார். பெரும் சாதனைகள் புரிந்தவர், ஏன் ராக்கெட் சயின்ஸ் தெரிந்தவராயினும் நமக்கு ஒவ்வாத ஒரு கருத்தைக் கொண்டிருந்ததனால் அவர் நம் மனதிலிருந்து விலக்கியே வைக்கப்படுவார் என்பதற்க்கு சிறந்த உதராணம் நாம் கொண்டிருந்த அவரின் பிம்பம்.

கலாம் ஒருபோதும் நாம் ஏற்ப்படுத்திக்கொண்ட 'விடிவெள்ளி' என்ற பிம்பத்திற்க்காகவும் பின் நாம் மாற்றிக்கொண்ட 'புராஜக்ட் மேனஜர்" என்ற பிம்பத்திற்க்காகவும் வாழ்ந்ததில்லை. அவர் எப்போதும் அவராக வாழ்ந்து வந்தார். இன்றைய இளைய சமுதாயம் கற்றுக்கொள்ள ஆயிரம் பாடங்களை கலாம் வாழ்க்கை நமக்கு விட்டுச்சென்றிருக்கிறது. உயர்குடியில் பிறக்காத ஒருவர் நாட்டின் உயர் பொறுப்புகளை வெற்றிகரமாக செய்து முடிக்கமுடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளார் கலாம். இப்போதும் கூட நமக்கு அவகாசம் இருக்கிறது, கண்ணாடிமுன் நின்று நமது பிம்பம்தான் எது என்று அறிந்துகொள்ள. நம்பிக்கை கொண்டவருக்கு எப்போதுமே கலாம் விடிவெள்ளி தான். அவர் இந்த மண்ணுலகை விட்டுச் சென்றிருக்கலாம், ஆனால் அவரின் பிம்பம் ஏற்ப்படுத்திய தாக்கம் அவ்வளவு எளிதாக நம்மைவிட்டு சென்றுவிடாது.

ஐய்யாவிற்க்கு அஞ்சலி...

Tuesday, July 21, 2015

காமராஜரும் சாதி அரசியலும்


நண்பர் அழகேசபாண்டியன் அவர்களின் காமராஜர் பற்றி ஜூலை 16 2015 அன்று வெளியிட்ட கருத்து பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவு.

அழகேச பண்டியனின் கருத்து :

"எனது பெருந்தலைவர் அறிஞர் அண்ணா மட்டும் தான். குலக்கல்விக்கு எதிராக திராவிடக்கழகமும், அண்ணா தலைமையிலான திமுகவும் உருவாக்கிய பொது பிரச்சாரங்களும் இன்றைக்கு எவராலும் பேசப்படுவதில்லை. தனித்தமிழ் நாடு கோரிக்கையை நேருவிடம் பகடைக்காயாக உருட்டி, காமராசர் தான் சாதித்துக் கொண்ட விசயங்கள் இன்று பேசப்படுவதில்லை. சிவகாமியின் புதல்வர், தாயை தள்ளி வைத்ததைப் போல, சாதியை தள்ளி வைக்க வில்லை. காமராசர் ஆட்சி(பக்தவச்சலம் வழியாக) தொடர்ந்திருந்தால், பொன்னும் வைரமும் கொட்டி நாடு சுபிட்சமடைந்திருக்கும் என்ற கருத்து அபத்தமானது. காமராசரின் சமூகப்பார்வையில் பல கோளாறுகள் உண்டு. அவரது நல்ல நேரம், அன்று அண்ணா இருந்தார். தமிழகத்தின் தொழிற்வளர்ச்சிக்கு காமராஜரின் பங்கு முக்கியமானது என்பதில் மறுப்பேதுமில்லை."

அந்த பதிவில் எமது மறுமொழிகளும் அதற்க்கு அவர் பதில்களும்:

Alagesa Pandian அப்பட்டமாக பணத்தை காட்டி அண்ணாவை மிரட்டிய காமராஜர் எங்கே? காமராஜர் தோற்கக்கூடாது என்று பாடுபட்ட அண்ணா எங்கே? ரெண்டும் எப்படி ஒன்றாக முடியும்?

Perumal Mani 9 ஆண்டு கால காரியங்களை விட அதற்கான காரணங்கள் பெரிது என சொல்கின்றீர்கள். அண்ணா பேசினார் அதனால் காமராசர் செய்தார் என்றும் சொல்கின்றீர்கள். 'கட்சி'யாக பேசுவது எளிது ஆனால் 'ஆட்சி'யில் செய்வது அரிது என்ற அரசியல் அரிச்சுவடி அறியாதவறல்ல நீங்கள்.

  • Like · Reply · 7 · July 15 at 8:38pm
    • Alagesa Pandian Perumal Mani: அரசியலில் மக்களை ஒரு கருத்தை நோக்கி திரட்டுவதை அவ்வளவு கீழாக எடை போட வேண்டாம். காமராஜர் அதை செய்தார், இதை செய்தார் என்றால், அதற்கான சூழல் பலவும் அண்ணாவால் உருவாக்கப்ட்டவை.
  • Perumal Mani எத்தனை மாவட்ட தலைவர்களை காமராசர் தன் சாதியில் இருந்து நியமித்தார்? எத்தனை அமைச்சர்கள்? தன் சாதி அதிகாரிகள் எத்தனை பேருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார்? அரசியல் ரீதியாக காமராசர் எப்படி தன்சாதிக்கு உதவினார்?
    Like · Reply · 2 · July 15 at 8:46pm
    • Alagesa Pandian மாவட்டத்தலைவர்களை நியமித்தால் சாதியை வளர்ப்பவர் இல்லையென்றால் சாதி மறுப்பாளரா? காமராஜர் ஆட்சியில் சாதி அடிப்படையிலான சமரசப்பகிர்வு இருந்தது, அதில் எல்லோருக்கும் பொதுவான பகிர்வு இல்லை. பக்தவச்சலமு, சத்தியமூர்த்தியும், சுப்ரமனியமும் எப்படி தன் சாதிக்கு உதவினார்களோ அப்படித்தான் காமராசரும் உதவினார். ஆதாரம் கொடு.. ஆதாரம் கொடு என்றால், தேடிக்கிட்டே இருக்க வேண்டியது தான்.

      • கொங்குநாட்டு தமிழன் உங்கள் இந்த கருத்து பொது வெளியில் அதிகம் கிடைக்காத பதிவு. இதை புரிந்துகொள்ள உங்களுக்கு என்ன தகவல் தெரியுமோ அதை குறைந்தபட்ச கருத்துப் புரிதலுக்காகவாவது நீங்கள் வெளிப்படுத்தவேண்டும். இல்லையென்றால் எல்லோரும் போகிற போக்கில் வீசிவிட்டும் போகும் கல்லைப்போலவே இருக்கும்.
      • Kailash Ganesan Atlast u accepted u dont hv evidence for your allegations dint expected this from u and Elango Kallanai .
      • Alagesa Pandian என்ன எவிடன்ஸ் வேனும்?
      • Alagesa Pandian காமராசரின் சாதி சார்பு பற்றி என் கருத்துக்கு சான்றாக, அடுத்த நிலைத்தகவலைக் காண்க. அதுவும் ஆதாரமாக கொள்ளவில்லையென்றால், அது உங்கள் பாடு. கருத்தை சொன்னேன் என்பதற்காக மேலும் இம்சிக்க வேண்டாம்.
      • Alagesa Pandian திரும்பவும் இங்கே இணைப்பை பகிர்கிறேன்.http://journals.cambridge.org/abstract_S0026749X00010970

        ****
        JOURNALS.CAMBRIDGE.ORG
      • Kailash Ganesan I tried to read the article but its costly to read . You dont need to get permission to write about some one but when you are blaming someone you need to have evidence or evidence should be known to public right . Whats your problem to cite some evidence here if you have it ?
  • கொங்குநாட்டு தமிழன் காமராசரைப்பற்றிய உங்களின் இன்னொரு பார்வைக்கு மூலமென்ன?
    Like · Reply · 1 · July 15 at 8:48pm
    • Alagesa Pandian மூலத்தை விரிவாகத் தான் எழுதனும். என் பதிவில் குறிப்பிட்டுள்ள படி தொழிற்வளர்ச்சியில் காமராஜரின் பங்கை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் காமராஜர் பற்றிய சிறுவிமர்சனமும், கடும் வன்மத்தோடு எதிர்கொள்ளபடுவது ஆபத்தானது.

  • கொங்குநாட்டு தமிழன் உங்கள் விமர்சனம் வன்மத்தோடு எதிர்கொள்ளப்படவில்லை. ஒரு ஆச்சர்யத்துடன் இது உண்மையா என்ற கேள்வியுடன் எதிர்கொள்ளப்படுகிறது. உங்களுக்கு வேறு வழியில்லை, விளக்கமாக எழுதித்தான் தீர வேண்டும்.
  • Alagesa Pandian கொங்குநாட்டு தமிழன்: சாதி ரீதியான இணைப்புகளை அவ்வளவு எளிதாக வெளிக்கொணர முடியாது. அதில் எப்போதும் ஆதாரங்கள் தோல்வி அடையத்தான் செய்யும். போகிற போக்கில் கல் எறிதல் அல்ல இது.
  • கொங்குநாட்டு தமிழன் இது போல ஒரு குற்றச்சாட்டை யார் மீது வேண்டுமானாலும் சொல்லலாமில்லையா? உங்களைப்போன்று சிந்தனையாளர்கள் ஏதுனும் குறிப்பெழுதியிருந்தாலோ அல்லது அவருடன் பழகியவர்கள் எழுதியிருந்தாலோ அதை குறிப்பிடுங்கள்.
    Like · 1 · July 15 at 9:16pm · Edited
  • Jeya Kumar ஆம் ஆதாரம் வேண்டும்
  • Alagesa Pandian மற்ற தலைவர்களுக்கு எதிராக இருப்பதைப் போல வலுவான ஆதாரங்கள் தற்போது என்னிடம் இல்லை. ஒத்துக் கொள்கிறேன். எனக்கு தோன்றிய கருத்தை சொல்லலாம் இல்லையா? அல்லது அதுக்கு யாரிடமாவது முன் அனுமதி வாங்கனுமா?
  • கொங்குநாட்டு தமிழன் நண்பரே உங்களுக்கு தோன்றியதைச் சொல்ல தடையில்லை. ஆனால் அதை மற்றவரும் புரிந்துகொள்ள கூடுதல் தகவல் தரும்போது உங்கள் கருத்து வெளியீட்டின் நோக்கம் நிறைவேறுமல்லவா. என்னுடைய கேள்வியெல்லாம், இப்படியொரு கருத்து உங்களுக்கு வர ஏதோ ஒன்று உங்களுக்கு உந்துதலாக இருந்திருக்கவேண்டும். அது வெறும் Assumption ஆக இருக்குமேயானால் அதற்க்கான காரணிகளை உள்ளடக்கிய பிறகு வெளியிட்டுருக்கலாம் என்பதே என் தாழ்மையான கருத்து.

இந்த உரையாடலில் நண்பர் அழகேச பாண்டியன் யாருக்கும் கிடைக்காத, கேம்ப்ரிட்ஜ் ஜர்னலின் இணைப்பை கொடுத்திருக்கிறார். சரி அப்படி அந்த இதழின் கட்டுரையில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க அதன் பிரதியை வாங்கி படித்ததில் கீழ்க்கண்ட செய்திகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த இதழ் 1970ல் சென்னை கிருத்துவக் கல்லூரியிலிருந்து தெற்க்காசிய படிப்பினை என்ற இதழில் டங்கன் பாரஸ்டர் வெளியிட்டிருக்கிறார். இது ஒரு ஆய்வுக்கட்டுரை என்பதுடன் இந்த கட்டுரையை வெளியிட்ட பாரஸ்டரைப்பற்றி இப்போது தெரிந்து கொள்வது நமது வாதத்திற்க்கு ஒரு பக்கச்சார்பை ஏற்ப்படுத்திவிடும் என்பதால், அவரைப்பற்றிய விவரம் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

காமராஜர் தனது சொந்த சாதி சார்பு நிலையில் அரசியல் செய்தார் என்பது நண்பரின் வாதம், அந்த வாதத்திற்கு துணையாக பாரஸ்டரின் கட்டுரையை பகிர்கிறார். ஆனால் அந்த கட்டுரையில் " காமராஜர் தன் சாதிக்காரர்களுடன் ஒத்து போகததால் கமுதியில் கல்லடிபட்டார்" என்று பாரஸ்டர் குறிப்பிடுகிறார். மேலும் அந்த இதழின் பக்கம் 48ல் காமராஜர் எப்படி தனது சாதிக்கு எதிராக நிலையெடுத்து காங்கிரஸில் இயங்கினார், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு ஆதரவான நீதிக்கட்சிக்கும், நாடார் ஜன சங்கத்திற்க்கும் எதிராக காமராஜர் எவ்வாறு செயல்பட்டார் என்பதையும் குறிப்பிடுகிறார்.

மேலும் காமராஜரின் ஆரம்ப காலங்களில் எந்த கொள்கை அவரை காங்கிரஸை நோக்கி இழுத்தது என்ற கேள்வி எழுப்பி அதற்கு "காங்கிரஸின் கொள்கையோ, காந்தியமோ அவரை காங்கிரஸை நோக்கி இழுக்க காரணமில்லை...சமத்துவம் மற்றும் ஏழைகளுக்கான முக்கியத்துவமே காமராசரை காங்கிரஸை நோக்கி செலுத்தியது" என்று விடை கண்டு பிடிக்கிறார் பாரஸ்டர்.

பக்கம் 50ல் "காமராஜர் தேசிய அரசியலில் கோலோச்ச கொண்டிருந்த ஆர்வம் வரலாற்றில் எங்குமே காணக்கிடைக்கவில்லை. அவர் அரசியல் சாசன உருவாக்கத்திலோ அல்லது தேசியக் கொள்கை வடிமைப்பிலோ எந்த ஒரு பங்களிப்பும் செய்யவில்லை" என்றவாறு குறிப்பிடுகிறார்.

இந்த குறிப்பை எழுதும்போது பாரஸ்டர் காமராஜரை ஒரு தேர்ந்த தேசிய அரசியல் தலைவராக உருவகப்படுத்தியிருக்க வேண்டும். காமராஜர் எந்த ஒரு நிலையிலும் தலைமைப் பொறுப்பை எதிர்பார்த்து தன் செயல்பாட்டை அமைத்துக் கொண்டதில்லை. அவர் இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானதுகூட அன்றைய சூழலில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைவர் என்ற காரணத்தாலேயே அன்றி அவரிடம் மெத்த படித்த பண்டிதத்தை எதிர்பார்த்து அல்ல. காமராஜர் பொது சனங்களின், கடைசி குடிமகனின் தலைவர். அவரை ஒரு மேல்தட்டு படித்த பண்டிதராக கருதிக்கொண்டு ஏன் நாட்டின் கொள்கை வடிவமைப்பிலும் அரசியல் சாசனம் எழுதுவதிலும் பங்கெடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புவது விதண்டாவாதம், உள்நோக்கம் கொண்டது.

பக்கம் 55 ல் "I do not mean in any derogatory way to Kamaraj, and it does not imply that he was using his position as Congress Leader illegitimately to further the interests of his own caste" என்றும் குறிப்பிட்டிருக்கிறார் பாரஸ்டர்.

பக்கம் 60: காமராஜர் நாடர்கள் அதிகம் இருக்கும் பகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிட்டார்.

- காமராஜர் விருதுப்பட்டியில் பிறந்து இயங்கிக்கொண்டிருந்த நிலையில், ஒரு வேட்பாளர் தன்னைச்சுற்றியுள்ள மக்களின் குரலாக இருப்பதற்க்காக விருதுப்பட்டியை தேர்ந்தெடுப்பது எப்படி சாதிய நோக்கோடு பார்க்கப்படும். அவர் விருது நகரில் போட்டியிட்ட காலங்களில் நாடார் சமூகம் நீதிக்கட்சிக்கே ஆதராவாக இருந்தது என்பது நிதர்சனம், அதையும் மீறி அவர் வெற்றிபெற்றது நிச்சயம் அவர் சாதி அடிப்படையில் வெற்றி பெறவில்லை, மாறாக அனைத்து சமூக மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றார் என்றே புரிந்துகொள்ள முடியும்.

கீழ்கண்ட குற்றச்சாட்டுகளையும் பாரஸ்டர் வைக்கிறார்.

  1. 1937 - சாத்துரில் நாடார்களின் வாக்குகளால் வெற்றிபெற்றார்.
  2. 1951-52 - சிரிவில்லிப்புத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதும் நாடார்கள் ஆதரவுடன்.
  3. 1967 - பொதுத்தேர்தலில் தோல்வியடைய காரணம் - நாடார்களுக்கிடையே பிளவு, இளம் நாடார் சமூகத்தார் தி மு க வை ஆதரித்தது
  4. 1969 - இடைத்தேர்தலில் நாகர்கோவில் பகுதியில் வெற்றிபெற்றதுகூட நாடார் சமூகத்தின் ஆதரவில் தான்.(நம்முடைய கேள்வி: ஏன் நாடார் சமூகத்தின் பிளவு இந்த தேர்தலில் அவரை தோற்க்கடிக்கவில்லை?)


காமராஜருக்குப் பின் மேற்ச் சொன்ன தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது உண்மையாய் இருக்கும்போது, காமராஜர் நாடார்களின் தயவில் வெற்றிபெற்றார் என்பது உண்மையில்லை என்று தெளிவாகிறது.

நண்பரின் வழி முறையிலேயே நம்மாலும் பல ஆங்கில எழுத்தாளர்கள் காமராஜர் சாதி அரசியல் செய்யவில்லை என்று எழுதியதை எடுத்துக்காட்ட முடியும். உதாரணமாக,

Robert L. Hardgrave, University of California, Berkeley. Center for South and Southeast Asia Studies அவர் தனது புத்தகத்தில்(The Nadars of Tamilnad: The Political Culture of a Community in Change) பக்கம் 265ல் காங்கிரஸ் கட்சியின் தலைமப்பொறுப்பிற்க்கு காமராஜர் வந்தது காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாகவும், தலைவர் சத்திய மூர்த்தியின் நம்பிக்கையின் பேரிலேயே அன்றி, நாடார் சமூகத்தின் ஆதரவினால் அன்று. பல சந்தர்ப்பங்களில் நாடார் சமூகம் காமராஜருக்கு எதிராகவும், நீதிக்கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட்டதற்க்கு ஆதாரங்களை அடுக்கிறார்.

மேற்க்குறிப்பிட்ட செய்திகளின் மூலம் காமராஜர் பற்றிய டங்கன் பாரஸ்டரின் கருத்துக்களும், அதனுடன் பல்வேறு சமயங்களில் அவரே முரண்படுவதும் படிப்பவர்களுக்கு புரியும் என்றே நம்புகிறேன்.


முதலில் நாம் சொன்னது போல டங்கன் பாரஸ்டரைப்பற்றிய குறிப்பு:

1962 வாக்கில் இந்தியாவில் கிருத்துவ மதபோதத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை கிருத்துவக்கல்லூரியில் அரசியல் பற்றி வகுப்பெடுக்கும் பேராசிரியராக ஸ்காட்லாந்து மிசனிரியின் பிரதிநிதியாய் பணியை தொடங்குகிறார். இவரது படைப்புகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் கிருத்துவ மதத்தை பரப்புவதை அடிப்படையாகக் கொண்டது. கிருத்துவ மத போதகம் குறித்து அவரின் கட்டுரைகள் மற்றும் கருத்துக்களின் தொகுதி(Forrester on Christian ethics and practical theology : collected writings on Christianity, India, and the social order) என்ற புத்தகமாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதை படித்தீர்களானால் பாரஸ்டரின் உண்மை முகத்தை புரிந்து கொள்ளலாம்.
இந்து சாதிகளுக்குள் உள்ள பிளவைப் பயன்படுத்தி ஒடுக்கப்படும் சாதியை அரவணைத்து அவர்களை கிருத்துவர்களாக மற்றும் பணியைத்தான் கிருத்துவ மிசனரிகள் கடந்த பல நூற்றாண்டுகளாக செய்து வந்தன.

சமூகங்களுக்கிடைய கருத்து வேறுபாடுகளும் மோதல் போக்கும் இருந்தாலும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஒரு சமயத்தில் காமராஜ நாடார் பக்கமே நின்றார். இந்த சமூக இனக்கம் கிருத்துவ மிசனரிகளின் நோக்கத்திற்க்கு தடையாக இருந்த நிலையில், நாடார் சமூகத்திலிருந்து உருவெடுத்த மக்கள் தலைவரை அவரின் திறமைகள் மற்றும் சாதனைகளை குறைத்து மதிப்பிட்டு கருத்து வெளியிட்டது, எந்த உள்நோக்கமும் இல்லாதது என நம்புமளவிற்க்கு நாம் இன்னும் பாவிகளாய் இருக்கவில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சமுதாயத்தில் மதிப்பை தேடுவது இயல்பு. அதற்கு அவர்கள் தங்கள் சமூகத்திற்குள் அடையாளங்களைத் தேடுவதும் கொண்டாடுவதும் இயல்பு. அதானாலேயே காமராஜர் தன் சாதிக்காரர்களுக்காக அரசியல் செய்தார் என்பது தவறு. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்று சாதிகள் மனிதர்களின் அடையாளமாயிருக்கும்போது ஒவ்வொருவரும் தன்னை மற்றவர் மதிக்கும் நிலைக்கு மாற தன் சாதி புகழ்பாட ஆரம்பித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு சமூகம் காமராஜரை கொண்டாடுவதை காமராஜரின் தவறாக சித்தரிப்பது அழகல்ல. இதுபோன்ற குற்றச்சாட்டை எந்த ஒரு தலைவர் மீதும் சுமத்திவிட முடியும். ஆனால் உண்மையென்பது அவையெல்லாவற்றையும் தாண்டி நிற்கிறது.