Friday, September 2, 2016

ரிலையன்ஸ் ஜியோவுக்கு முன்...

இருபத்தி ஓராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், VOIP எனப்படும் வாய்ஸ் ஓவர் இண்டெர் நெட் புரொட்டொக்கால் என்னும் தொழில் நுட்பம், இண்டெர் நெட் மூலம், அதாவது ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினி தொடர்பு கொள்ளும் முறையில் (இண்டெர் நெட் பாக்கெட் எனப்படும் சிறு அளவிலான தகவல் கத்தையை அனுப்புனர், பெறுநர், இடைமறிக்கமுடியாதபடி இறுக்கிக்கட்டப்பட்ட முறை, கட்டை அவிழ்க்கும் சாவி என) குரல் அழைப்புகளை அனுப்புவது. முன்பு பிஎ ஸ் என் ல் தொலைபேசி இணைப்புக்காக, PSTN என்ற பொதுப்பயப்பாட்டுக்கான இணைப்பை ஏற்படுத்தும் டெலிபோன் நெட்வொர்க் மூலம், இண்டெர்நெட் சேவையைப் பெற, அனலாக் எனப்படும் வாய்ஸ் நெட்வொர்க்கில் டிஜிட்டல்(பைனரி/பாக்கட்) தகவலை அனுப்பும் முறை மூலம் இண்டெர்நெட்டைப் பயன்படுத்தினோமல்லவா, அதன் நேர் எதிர் முறை இது. அதாவது இண்டர்நெட் இணைப்பினுல் ஒரு டிஜிட்டல் ஓடை ஏற்படுத்தி, அதில் குரலை அனுப்பும் நுட்பம். ஆரம்பத்தில் வெளிநாடுகளிக்கான தொலைபேசி இணைப்பை வழங்கும் சேவையில், கட்டணம் மிச்சப்படுத்த பயன்படுத்தப்பட்டது. கட்டண மிச்சம், நிறுவனத்திற்கே, வாடிக்கையாளர்களுக்கு அல்ல, அதாவது வாடிக்கையாளர்கள் ஐஎஸ்டி கட்டணத்தைத்தான் கட்டினார்கள். பிறகு யாகூ மெஸ்ஸஞர் மூலம் கணினி வழி தொலைப்பேசி இலவசமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் நிலையான தொலைபேசி இல்லாமல் உலாவிக்கொண்டே உரையாடும் முறைக்கு வழிவகுத்தது.
இந்தியாவில் சில இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு இந்த VOIPஐ வழங்கியது. அதன் ஆரம்பகாலங்களில் அந்த இணையவழி குரல் உரையாடல் ஏற்படுத்தும் நுட்பத்துடன் இணைந்து, கட்டண அளவீடு செய்யும் மென்பொருளை அந்தகாலகட்டத்தில் வேலை செய்த நிறுவனத்தில், ஐஐடி மெட்றாஸ் வளாகத்தில் செய்த அனுபவம் இந்தத் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்ள எனக்கு உதவியது.
பிற்காலத்தில் 2G, 3G, 4G என அடுத்தடுத்த தலைமுறைச் செல்லிடப்பேசி நுட்பங்கள் வளர்ந்தபின், அதே நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு இப்போது ரிலையன்ஸ் ஜியோ இணைய நுட்ப்த்தைப் பயன்படுத்தி, அலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தும் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளர்ந்த நாடுகள் ஏற்கனவே கட்டடற்ற தொலைபேசி அழைப்புகளை வழங்கிவருகின்றன. இணைய இணைப்புகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் வகை செய்துள்ளார்கள். ஏற்கனவே சில அதிபுத்திசாலி நிறுவனங்கள் உங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. இந்த நுட்பத்தில் மிக முக்கியமானது தகவல்களை கத்தையாக்கும் நுட்பம். அதாவது Data Compression Technique. இது குறைந்த அளவு மென்ணெண்களைப்(Data)வைப் பயன்படுத்தி அதிக அளவிலான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறை.
ஆகவே.. ரிலையன்ஸ் ஜியோ - சந்தையைத் தனக்குச் சாதகமாப் பயன்படுத்திக் கொள்ளும் நுட்பமேயன்றி, அலைக்கற்றை வழங்கிய அம்பானிகளையும், வழியேற்படுத்தும் வழியில் நின்ற ராஜக்களையும் கும்பிடவேண்டியதில்லை.

No comments:

Post a Comment