Saturday, December 1, 2007

யோகி - பாகம் 2


பாகம் 1 படிக்க இங்கே அழுத்தவும்..

முதல் பாகம் எழுதும்போது நுகர்வோர்(அதாங்க கிளையண்ட்-ன்னு தமிழ்ல சொல்லுவாங்கல்ல) கால் வந்ததால நம்ம கதாநாயகன பத்தி வெவறமா சொல்ல முடியாம போச்சி. இப்ப விம் போட்டு வெளக்கிருவோம்.....

அன்னைக்கு தூங்கிட்டு இருக்கும்போது கரடி சொன்னது எதுவும் காதில விழாம சீக்கிரமா ஒம்பது மணிக்கு எந்திருச்சு, அந்தப்பக்கம் தூங்கிட்டு இருந்த கோழியயும் எழுப்பி அன்றய கடமைய முடிசிட்டான். எழுந்து பொறுப்பா சமயலறைக்கு போய் தியாகி நம்பர் ஒண்(அம்மா) கிட்ட போயி என்ன டிபன்னு கேட்டு அன்றைய வேலைக்கு ஆரம்பமானான்.


மொதல்ல போயி பல்ல வெளக்குடா என் சிங்கக்குட்டின்னு செல்லமா சொன்னாங்க அந்த தியாகி. சிங்கமெல்லாம் பல்லு வெளக்காதுன்னு சொல்லிக்கிட்டே பாத்திரங்களை மோப்பம் பிடுச்சு ஒருவழியா அரவயித்துக்கு பத்து இட்லிய உள்ள அனுப்பிச்சிட்டு வெளியே நெளிந்த்தான்.

வியாழக்கிழமை என்பது புளியம்பட்டியில் புதன் கிழமையே ஆரம்பிச்சிடும். சந்தைக்கு வெளியூர்ல இருந்து பிசினஸ் டெலிகேட்செல்லாம் வந்து சுல்தான் ரோட்ல, சத்திரோட்ல இருக்குர டாஜ், ரெசிடன்சி ஹொட்டல்ல ரூம் போட்டு தங்கிடுவாங்க. அனில் அம்பானி அவங்க அப்பா குருபாய் அம்பானியெல்லாம் இங்க நடக்கிர வார சந்தையில வந்து வியாபரம் பண்ணி ஒரு லாரி நெறய பணத்த அள்ளிட்டு போவங்களாம். சுத்துபட்டு பதினேழு கிராமத்துக்கும், இப்ப புதுசா உருவாயிருக்கிற திருப்பூரோட சேத்து பதினெட்டு கிராமத்துக்கும் மானாவாரியா வருமானத்த அள்ளித்தர்ர சந்தை அது. தலால் வீதி சந்தையில எப்பவாவது கொஞ்ச நாளைக்குதான் புள் ரன் இருக்கும். ஆனா இந்த சந்தையில எப்பவுமே புள், கவ் ரன் எல்லாம் இருக்கும். பஸ்டாண்டுக்கு பக்கதிலதான் சந்தைங்கிறதால அங்கு நடந்த ஆயிரங்கோடி வியாபாரங்கள் எவ்வளவுதான் துண்டு போட்டு மறைத்தும் எப்படியொ யோகியும் மற்றவர்களின் காதையும் இரைச்சலாக குடைந்த்தது.

இதெல்லாம் செகண்ட் செமஸ்டர் லீவுல வந்து புளியம்பட்டி மண்ணுல சைக்கிள்ள சேரன் மாதிரி சுத்தி கூட்டாளிகளோட கும்மியடிச்சிட்டு இருந்தப்ப நடந்த்தது.

தன்னோட குலத்தொழிலான விவசாயம் மற்றும் கடலை எண்ணை தயாரிக்கிர லோட்டரிக்கு எங்கே தன்னோட வாரிசு வந்து நாசம் பண்ணிரும்னு நெனச்சு பன்னண்டாவது பாடர்ல பாஸ்பண்ண உடனேயே நல்லூருக்கு பக்கத்துல இருந்த பத்து ஏக்ரா நிலத்த வித்து கொண்ட்டுபோயி ஈரோடு கொங்கு பொறியியல் காலேஜ்ல அணுவ பொளந்து அதுக்குள்ள சுத்திட்டு இருக்கிற எலக்ட்ரான்கள பத்தி படிக்கிற படிப்புல சேத்திவிட்டுட்டாரு நம்ம தியாகி நம்பர் டூ(அப்பா).

நம்ம ஆளும் எங்கயோ அணு ஆராய்ச்சியெல்லாம் செஞ்சு அமேரிக்கா போயி நோபல் பரிசெல்லாம் வாங்கி அத கொண்டுவந்து அத்த மக அகிலாகிட்ட காமிச்சு அவள கரெக்ட் பண்ணிரலாம்னு கனா கண்டுட்டு இரும்பு பெட்டிய தூக்கிட்டு ஈரோடு கெளம்பிட்டான்.

இந்த புளியம்பட்டி வயசு பொண்ணுகள பத்தி சொல்லலைன்னா இந்த காவியம் முற்றுப்பெறாதுன்னு பின்னூட்டம்(பீட்பேக்) தந்த நம்ம நண்பர்களின் நப்பாசைய நிறைவேத்திருவோம்.

பொதுவா பிகருங்களுக்கு தாந்தான் அழகுன்னு எப்பவுமே மனசுல ஒரு நெனப்பு, அது அவிஞ்சு போன ஆயில் கேனா இருந்தாலும் அப்படித்தான் நெனைக்கும். அது புளியம்பட்டி ஆயில் கேன்களுக்கும் பொறுந்தும். இதுல படிச்சது படிக்காததுன்னு எல்லாம் வித்தியாசம் கெடையாது. அதனால இந்த வெளியூரு போயி படிக்கிர ஐஸ்வர்யா ராய்களெல்லாம் உள்ளூர் பசங்கள ராமராசனாக்கூட மதிக்காதுங்க. பஸ் ஏற்ர வரைக்கும் குணிஞ்ச தலை நிமிராத கொடமொலகா மாதிரி இருக்குஙக. பஸ் ஏறி அன்னூர் தாண்டுனா அவிங்க அலம்பல் தாங்காம அங்க நிக்கிர அனாம்பத்து ஆண்களெல்லாம் தெரிச்சு கடசி சீட்ல வந்து விழுவாங்க. நம்ம வெளியூரு சாரூக்கான், அமீர்கான் கிட்ட மட்டும்தான் கதைப்பாங்க. இதப்பாத்த ஒண்ணு ரெண்டு உள்ளூர் சிங்கங்க "உலகம் இதைகண்டு எள்ளி நகையாடுமேன்னு" பக்கத்துல நிக்கர பாட்டிகிட்டே பால்லுமேல நாக்க போட்டு டைம் கேட்டு பஸ்ஸுக்குள்ள படகு வைக்கிர அளவுக்கு வழியரத என்னன்னு சொல்ரது....

இதுல யோகியோட அத்த பொண்ணு மட்டும் விதி விலக்கு இல்லை. பத்தாததுக்கு அவிங்கப்பன் அங்கமுத்து பொண்ணை ஒண்ணாவதுலேயே ஊட்டி கான்வெண்ட்ல கோண்டு பொயி விட்டு தாய் தமிழுக்கு கலங்கம் கர்ப்பித்தான். நாலுவருசத்துக்கு அப்பரம் அங்க இருக்கிர குளுரு தாங்க முடியலேன்னு புளியம்பட்டி கான்வெண்ட்ல கொண்டுவந்து அஞ்சாவது சேத்தி விட்டார். போதுவா அந்த கான்வெண்ட்ல படிக்கிரவிங்க தமிழ்மீடியத்தில படிக்கர பசங்கள திரும்பிகூட பாக்க மாட்டாங்க. நம்ம மைனரு வேர தமிழுக்கு சங்கம் வெச்சு பெருமை சேர்த்த பள்ளிக்கூடத்தில படிச்சான். இந்தியக்கூட அப்பப்ப தூர்தர்சன் சனிக்கிழமை படம் பாக்கிறப்ப கேட்டுட்டு அப்புறம் அதையும் தார் பூசி அழிச்சிருவான். இந்த இங்லீச, பள்ளிக்கூடத்தில வாத்தியாரு வந்து பாடம் நடத்துர ஒரு மணி நேரத்துக்கும் அவரு ஏதோ திட்டராருன்னு பல்ல கடிச்சிட்டு முகம் சிவக்க தலைகுனிஞ்சு திரைக்காவியம் படிச்சிட்டு இருப்பாங்க. ஒரு சிலர் ரொம்ப ஒவரா போயி அழ ஆரம்பிச்சிருவாங்க. அவங்கள சமாதனப்படுத்தரதுக்கு ஜாக்டா, டான் குய்க்சாட் கதைய தமிழ்ல சொல்லிட்டுப்போவாரு அந்த வாத்தியாரு. இதுல பத்தாததுக்கு மைனரு அப்பாவும் அகிலா அப்பாவும் புளியம்பட்டி பஞ்சாயத்து போர்டு ப்ரெசிடெண்டுக்கு எதிரெதிர் மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டு மைனரு அப்பா 3712 ஓட்டு வித்யாசத்துல ஜெயிச்சிட்டாரு. அப்புரம் சொல்லவா வேணும் மைனரும் அவங்க அத்த பொண்ணு அகிலாவும் காதல் அளவளாவியதை.

இருந்தாலும் மைனருக்கு எப்படி அந்த மயில் மேல மையல் வந்துச்சுன்னா.......



(அலம்பல் தொடரும்..)

6 comments:

  1. Thiru Karuvayan avargalae,
    Superaa kalakittinga....

    Ore oru clarification, Akila nu peru rembo stylish vechutinga...

    Great narration....

    ReplyDelete
  2. Thiru Karuvayan avargalae...
    Pinnintinga ponga....

    Great narration....

    Heroine peru Akila nu remba moderna irukkura mathiri irukku...

    ReplyDelete
  3. adai ennada achu unnaku????
    nalla thana iruntha??? kadhai nalla comedy yave poguthu....
    naan unaku oru pattam tharain...
    puliampatti pitthan!!!!

    ReplyDelete
  4. எங்க ஊர்லயும் பொண்ணுகளுக்கு மாடர்னா பேர்வப்பமல்ல...

    ReplyDelete
  5. வசந்த்துக்கு நன்றி. சும்மா பிச்சி போடுவோம் பிச்சி....

    ReplyDelete
  6. ரொம்ப தாங்க்ஸ் மகாத்மா(?)..

    ReplyDelete