Sunday, December 7, 2014

கொள்ளை லாபம் தரும் தொழில்

        மனிதனின் ஆசையும் வாழ்க்கைமுறையும் எப்படியாவது பணம் சம்பாதித்து சமுதாயத்தில் மற்றவர் மதிக்கும் இடத்தில் இருக்கவேண்டும் என்ற நோக்கோடு கொள்கை கோட்பாடுகள் ஏதுமற்ற முறையில் பொருளீட்ட துணிந்து விட்டான். விவசாய நிலங்களை கூறு போட்டு இலவச தங்க நாணையங்கள் கொடுத்து கொள்ளை லாபம் பார்க்கும் நிலத்தரகர்களும், அவர்களைப்போன்றோரை சமுதயாத்தில் பெரியமனிதர்கள் என்று மதிக்கும் இன்றய காலநிலையில் ஊருக்கே சோறுபோடும் விவசாயமும் விவசாயியும் ஏழனமாக பார்க்கபடுகிறான்.

      நம் மேல் நாட்டு மோகமும் அறிவியல் என்ற பெயரில் எதை கொடுத்தாலும் சிந்திக்காமல் நம்பிவிடும் ஏமாளிகளை உருவாக்கிவைத்திருக்கும் இந்த சமூக கட்டமைப்பிற்க்கு அவ்வப்போது அதன் முகத்தை கண்ணாடிகொண்டு காட்டிவருகிறார்கள். அய்யா நம்மள்வார் இயற்க்கை வேளான்முறையில் செலவுகளை குறைத்து நல்ல சத்துள்ள உணவுப்பொருட்களை உருவாக்கும் முறைகளை பரப்புரைசெய்தும், வானகம் என்ற சோதனை பண்ணை மூலம் நீரூபித்து. காண்பித்துள்ளார். அது போலவே புதுச்சேரியில் இருக்கும் ஆரோவில் என்ற இடத்தில் இயற்க்கை சார்ந்த முறையில் கிருஸ்ணா என்ற விற்ப்பன்னர் செய்துகாட்டும் இந்த ஒளிப்பதிவு நிச்சயம் பார்க்கவேண்டிய ஒன்று. எதையுமே வெள்ளைக்காரர் சொன்னால்தான் கேட்பேன் என அடம்புடிக்கும் நம்மவர்களுக்கு இந்த காணொளியை காண்பியுங்கள்.

ஆரோவில் பற்றிய தகவலுக்கு : http://www.auroville.org/


No comments:

Post a Comment