Sunday, March 1, 2015

மதுமயமாக்கலும் மதுமயக்கமும்

ஏற்கனவே இதே தலைப்பில் ஒரு நிலையை பதிவுசெய்திருந்த்தேன். அந்த நிலைக்கு அருகில்கூட தான் வந்த தடம் தெரியாது சென்ற பல நண்பர்கள் நேரடி உரையாடல்களில் அவர்களும் மதுமயமாக்கலை எதிர்ப்பதாகவும் அதை மது அருந்தும் தாங்கள் எப்படி வெளிப்படையாக எதிர்க்கமுடியும் என்று கேள்வி எழுப்பினர். நியாயம்தான்.. ஆனால் அந்த கேள்விக்கான பதிலை உங்களிடம் கேட்பதற்க்குப்பின் ஒரு உளவியல் நோக்கமுள்ளது. அது இந்த இனத்தையும் பண்பாட்டையும் சீரழத்து நமது அடையாளங்களை அழித்து நம்மை தனித்தன்மையில்லாதவராய் மாற்றுவது.
நாம் மதுவை ஒழிக்கச்சொல்லி போராடவோ எதிர்ப்பு தெரிவித்தோ கருத்து வெளியிடவில்லை. மாறாக மதுவை அனைவரின் கையிலும் எந்த கூச்சமும் இல்லாமல் கொண்டு சேர்ப்பதை எதிர்ப்பது நமது கடமை. "அப்படியென்றால் பெண்கள், ஏழைகள் மதுக்குடிப்பதை எதிர்க்கிறாயா?" என்று கேட்டிர்களானால், அது எமது நோக்கமல்ல. மதுப்பழக்கம் சிலருக்கு விருந்து(எப்போதாவது) சிலருக்கு மருந்து(மனதில் இறுக்கம் குறைக்க) சிலருக்கு உணவு(அன்றாடம் குடித்தல்). இதில் முதல் இரண்டு வகையினர் மது அடிமை கிடையாது. மூன்றாவது வகை மது அடிமை. முதல் இரண்டு வகையிலிருப்பவர்கள் எப்போதுவேண்டுமானாலும் மூன்றாவது வகைக்கு மாறாலாம். அது அவரின் மனச்சூழலை பொருத்தது. பெரும்பாலும் இவர்கள் மதுவினால் ஏற்ப்படும் சுய மற்றும் சமூகப்பாதிப்புகளை புரிந்து வைத்திருப்பார்கள். இவர்களால் மது இல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழமுடியும். ஆனால் இந்த மூன்றாவது வகையினரை மதுப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது மிகவும் சிக்கலானது. அது பல எதிவிளைவுகளைக்கொடுக்கக் கூடியது.
நீங்கள் ஒரு விசயத்தை மறைத்து அந்த விசயம் பற்றி விவாதிக்காமல் போவதால் இரண்டு விளைவுகள் ஏற்ப்படும். ஒன்று உங்களுக்கு தெரியாத விசயங்கள் தெரியாமலேயே போய்விடும். இரண்டு, அந்த விசயத்தைப்பற்றிய உங்கள் எண்ணம் உங்களுக்கே தெரியாமல் உங்களுக்கும் உங்களைச்சுற்றியிருப்பவர்களுக்கும் ஏதாவது பாதிப்பை ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கும். ஆதாலால் முடிந்த அளவுக்கு எந்த விடயம் உங்களை உருத்துகிறதோ அதை நம்பிக்கையுடைய நண்பர் அல்லது வாழ்க்கைத்துணையுடன் பகிர்ந்து தீர்வுகண்டுகொள்வது நல்லது. அந்த வகையிலேயே மதுவைப்பற்றிய நமது எண்ணங்களை தெளிவுபடுத்திக்கொள்வது ஒரு நல்ல விளைவை சமுதாயத்திற்க்கு ஏற்ப்படுத்தும் என்று நம்பலாம். சரி இதை எந்த பக்கச்சார்பும் இல்லாமல் அணுக சமுதாயத்திற்க்கு இன்று ஏற்ப்பட்டுள்ள சிக்கலை புரிந்துகொள்ள வேண்டும். கீழ்காணும் செய்திகள் நீங்கள் தற்ப்போது அதிகம் கேள்விப்படுபவையாக இருக்கும்,
1. குடித்துவிட்டு வண்டி ஓட்டு சாலைவிபத்தில் இளைஞர்கள் மரணம்.
2. பள்ளி மாணவர்கள் மது அருந்தி தெருவில் மயக்கமடைந்த நிலையில் கிடந்தனர்.
3. கல்லூரிப்பெண்கள் கையில் மதுப்புழக்கம் அதிகரிப்பு.
4. குடிபோதையில் பெண் கற்ப்பழிப்பு.
5. குடிபோதையில் கொலை.
மேல்குறிப்பிட்ட செய்திகள் சில தனிமனித உரிமை சார்ந்தது. மற்றது சமுதாயத்தை பாதிக்கும் செய்திகள். இதில் சமுதாயம் சார்ந்த விளைவுகளுக்கு எதிவினையாற்றுவது நல்ல சமுதாயத்தில் வாழ விரும்புபகர்கள் கடமை. நமது சட்டங்கள் அதற்க்கு ஓரளவு வழிவகுத்து கொடுத்துள்ளது. மேலும் அதை வலுப்படுத்தவும் நிறைவேற்றவும் அரசை நிர்பந்திக்க நமக்கு உரிமை இருக்கிறது. கீழ்காணும் சில உடனடி விளைவுதரக்கூடியவை.
1. பதினெட்டு வயதுக்கு குறந்தவருக்கு மது விற்ப்பது வாங்குவது தண்டனைக்குறிய குற்றம்.
2. மது குறித்த பாதிப்பை மது வாங்குபவருக்கு தெளிவாக தெரியும்படி குறிக்கவேண்டும்.
3. கற்பமாகியிருக்கும் பெண்கள் அல்லது கற்ப்பம் தரிக்க தயாராகிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு மது குழந்தைபிறப்பில் சிக்கல் உண்டாக்கும் என்பது மருத்துவர்களால் அறிவுருத்தப்படவேண்டும்.
4. மது அருந்தி வாகனம் ஓட்டுவது ஓட்டுனர் உரிமத்தையும் பறிக்கவும், சிறை தண்ணடனைக்குறிய குற்றமாகும்.
5. மது பழக்கத்திலிருந்து விடுபடுவதற்க்கும் மறுவாழ்விற்க்கும் அரசு அனைத்து வாய்ப்புகளையும் ஏற்ப்படுத்திக்கொடுக்கவேண்டும்.
6. மதுப்பழக்கத்தால் ஒருவர் தண்டனை பெற்றால் அதை பதிவு செய்தும், வேலைவாய்ப்பு மற்றும் அரசு உதவி பெறும்போது அந்த தகவலை அடிப்படியாகக்கொண்டு முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.
7. மதுக்கடைகள் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தளங்கள் அருகில் அமைப்பது அனுமதிக்கப்படக்கூடாது.
மது விற்ப்பது அரசின் கொள்கைமுடி அதை நீதிமன்றங்கள் கேட்க முடியாது என்ற ஒரு வரி, மேலுள்ள அனைத்து விதிகளுகும் விலக்காகாது. அரசு தவறு செய்யும்போது நீதிமன்றங்கள் தலையிடமுடியும். ஏனென்றால் நீதிமன்றங்கள் மக்களை அநீதியிலிருந்து காப்பற்றுவதற்க்காக அமைக்கப்பட்டவை. மதுவிற்று வரும் வருமானத்தில் அரசு தனது நலத்திட்டங்களுக்கு செலவளிப்பது கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீதிக்கு வீதி மதுக்கடைகளைத்திறப்பதும், பள்ளி மானவர்களுக்கு மதுகிடைக்கச்செய்வதும், மது அருந்தி வாகனம் ஓட்டுவோரை தண்டணையிலிருந்து தப்பச்செய்வதும் எந்த வகையிலும் சட்டத்திற்க்குட்படாது. ஒரு அரசு மக்களின் நலத்தைப்பேனுவதை முதற்க்கடமையாகக்கொண்டு செயல்படவேண்டுமேன்பது சாசன விதி. அந்த விதி மீறப்படும்போது நிச்சயம் நீதிமன்றம் தலையிட்டு தீர்வுதருவது அதன் கடமை.
மதுவை எதிர்த்து வீதியில் போராடும் தலைவர்கள் நீதிமன்றத்தில் தீர்வு தேடுவதும், மதுமயமாக்களை எதிர்ப்பதற்க்கு மது அருந்தாமல் இருப்பது தகுதி என்று தனக்குத்தானே தடையேற்ப்பத்திக்கொண்டிருப்பவர்கள் வெளிப்படையாக மதுமயமாக்களை எதிர்க்க முன்வருவதும் இன்றைய தேவை.
நாளை உங்கள் பிள்ளைகளின் கையில் மது எளிதாகச்சேரமல் தடுப்பதற்க்கும், மதுவினால் அடுத்த தலைமுறை மீட்கமுடியாத சிக்கலுக்குள் விழாமல் தடுப்பதற்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் குரல் கொடுக்கவேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு உயர்ந்த கல்வி குடுப்பதும், நல்ல வாழ்க்கைத்துணையமைத்துக்கொடுப்பதும் அவர்களை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவாது. மாறாக ஒரு சிறந்த சமூக கட்டமைப்பை அவர்களுக்கு ஏற்ப்படுத்திக்கொடுப்பதே பெற்றோறாக நாம் நம் பிள்ளைகளுக்கு செய்யிம் மிகப்பெரிய உதவியாய் இருக்கும்.
பெண்களும் ஆண்களும் இணைந்து எப்படி மதுமயமாக்களை எதிர்த்து மதுக்கைடையை நொறுக்கினார்களோ, அதுபோல் எங்கெல்லாம் விதிகளிமீறி மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் களத்திலிறங்கி போராடவேண்டும்.
மது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு. அந்தகேட்டை ஒரு அரசு செய்வது நாட்டுக்கு செய்யும் கேடாகும். அதை கேட்பது நீதிமன்றத்தின் கடமையாகும்.

No comments:

Post a Comment