Tuesday, August 7, 2018

தெற்கத்தியச் சூரியன் மறைந்தது

கடந்த சில நாட்களாக உடல் நிலை குன்றி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்து இன்று மாலை 6:10 மணியளவில் மறைந்தார் என்ற செய்தி தொலைக்காட்சிகளின் வழியே தெரிய வந்தது. அவரின் மறைவு உள்ளபடியே துயரத்தை ஏற்படுத்தியது.

அவர் அரசியல் மீதான விமர்சனங்கள் பல இருந்தாலும், அவர் காலத்தில் பல நல்ல திட்டங்கள் மக்களை பயனடையச் செய்தது என்பதை மறுக்க முடியாது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம், உழவர் சந்தை, பொதுப் போக்குவரத்திற்கு சிற்றுந்து அனுமதி என்பன வெகு சமீபத்திய திட்டங்கள். இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழு போன்ற திட்டங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை.

அவரின் இழப்பால் வாடும் திமுகழகத்தினரின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

8:00 PM: அதே நேரத்தில், திரு எடப்பாடி பழநிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கலைஞருக்கு அண்ணா சமாதி அருகே புதைக்க இடம் கொடுக்க இயலவில்லை என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இன்று மெரினாவில் புதிய நினைவிடங்கள் எழுப்பக்கூடாது என்ற பொது நல வழக்குத் தொடர்ந்திருந்தவர் தனது வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டிருந்ததால், உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

8:20 PM: மெரினாவில் இடம் தரவில்லையென்றால் போராடப்போவதாக திமுகவினர் கோசம் போடும் காட்சிகளை செய்தி ஊடகமான நியூஸ் 7 ஒளிபரப்புகிறது.

8:21 PM : கலைஞரின் உடல் அஞ்சலிக்காக கோபால புரம் இல்லத்தில் காலை 4 மணிவரை வைக்கப்படும் என்று அன்பழகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

8:30 PM: திமுகவினர் கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவேரி மருத்துவமனை முன்பு வைக்கப்பட்டிருந்து தடுப்புகளை வீசியெறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

8:35 PM: திமுக தலைவரின் மகனும் திமுகவின் செயல் தலைவருமான திரு ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தமிழக அரசிடம் மெரினாவில் இடம் வேண்டி கோரிக்கை விடபோவதாக செய்திகள் வருகிறது.

8:37 PM : மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் வேண்டி நீதிமன்றத்தை நாட இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.

8:40 PM: காவல் துறையினர் திமுகவினரைக் கலைக்க சிறு தடியடி நடத்தினர். இருந்தும் திமுகவினர் கோசமிட்டவன்னம் உள்ளனர்.

9:01 PM: திமுக தலைவர் கலைஞரின் உடல் கோபால புரம் இல்லத்திற்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்படுகிறது.

10:29 PM: திமுக தலைவர் கலைஞரின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இறக்கப்படுகிறது. மெரினாவில் இடம் வேண்டும் என்ற கோசத்துடன், டாக்டர் கலைஞர் வாழ்க என்ற கோசமும் விண்ணைப் பிளக்கிறது.

ஆகஸ்டு 8 2018

2:02 AM: கலைஞரின் உடல் அவரது மகள் கனிமொழி இல்லமான சி ஐ டி காலனிக்குக் கொண்டுவரப்பட்டது.

இன்றைய முரசொலி கலைஞரின் பார்வைக்கு அவர் படுத்திருக்கு பேழையுள் வைக்கப்பட்டுள்ளது.

5:21 AM : கலைஞரின் உடல் ஆம்புலன்சு மூலம் சி ஐ டி காலனியிலிருந்து ராஜாஜி மண்டபத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கொண்டுவரப் படுகிறது. கலைஞரின் உடல் அவர் நிறுவிய பெரியார் மற்றும் அண்ணா சிலைகளைக் கடந்து ஒரு பிரியா விடை கொடுத்துச் செல்கிறது...

11:30 AM: கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிடுகிறது.

4:00 PM : கலைஞரின் இறுதி ஊர்வலம் மெரினாவை நோக்கி தொடங்கியது.

7:00 PM:  கலைஞரின் உடல் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மெரினாவில் கலைஞரை நல்லடக்கம் செய்வதில் நடந்த அரசியல் மற்றும் நீதிமன்ற நிககழுகள் வரலாற்றில் இடம்பெறும்...


1. தமிழக அரசு காந்தி மண்டபத்திற்கு அருகில் இடம் ஒதுக்கில் வெளியிட்ட அறிக்கை.



2. கலைஞரின் இறுதி ஓய்விடம் குறித்த வரைபடம். (https://twitter.com/imranhindu)





3. தமிழ் நாடு அரசு மெரினாவில் இடம் அளிக்க மறுப்புத் தெரிவித்து செய்த வாதம் (https://twitter.com/imranhindu)






No comments:

Post a Comment