Saturday, November 21, 2015

ஒரு லைக் ஒரு லைப் - இறுதிப் பாகம்

பக்கம் 1 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

பக்கம் 2 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

"இல்லை. எனக்கு முக்கியமான பிராஜக்ட் ரிலீஸ் இருக்கிறது. ஏன்?" என்று கேட்டான். நாளை குழுவின் உறுப்பினர்கள் ஒன்று கூடி இது பற்றி விவாதிக்க இருப்பதாகச் சொன்னார்.

தன்னால் வர இயலாத நிலையையும், குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தான் உதவுவதாகவும் வாக்குறுதியளித்தான். அடுத்த இரண்டு நாட்கள் புராஜக்ட் ரிலீஸ் சம்பந்தமான வேலைகள் இறுக்கவே, அவனால் முகநூல் பக்கம் போக முடியவில்லை.

உலகம் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தது. யாரும் விலை வாசியைப் பற்றி கவலைப் படவில்லை. அறை நண்பனுக்கு, கவலையெல்லாம் தளபதி படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரிலீஸ் ஆகவேண்டும் என்று. மேனெஜருக்கோ டிக்கெட் எஸ் எல் ஏ வைக் கடக்கக் கூடதென்று. டிராபிக் சிக்னலில் ஹெல்மெட் போடதவருக்கு தூரத்தில் நிற்கும் காக்கிச்சட்டைக் காரரின் கண்ணில் படக்கூடதென்ற கவலை.

வழக்கமான அலுவல்கள் முடித்த பின், பேஸ்புக்கை திறந்தான். அவனது மெஸெஞ்சரில் அவரது நண்பரிடம் இருந்து பல செய்திகள் காத்திருந்தது. ஒன்றன் பின் ஒன்றாக படிக்க ஆரம்பித்தான்.

"ஹாய்"..

"நேற்று குழுவின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விவதம் நடந்தது"

"உங்களை நண்பர் ராஜேஸ் எதிர்பார்த்திருந்தார். நான் தான் அவருக்கு உங்கள் நிலையைச் சொன்னேன்"

"ஜனநாயகத்திற்கெதிரான இந்த நகர்வை நாம் தடுப்பதென உறுதி மொழி எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக இதில் சட்ட ஆலோசனை செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நகர்வாக ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளை சந்தித்து ஆதரவு கேட்டு ஒரு போராட்டத்தை ஒருங்கினைக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் வரும் 14ம் தேதி, வெள்ளிக் கிழமை காலை காந்தி மண்டம் அருகே நடைபெற உள்ளது". என்று முடிந்திருந்தது.

அவனக்கு அந்த குழுவின் நடவடிக்கைகள் நியாயமாகப் பட்டது. 

"நன்றி. நிச்சையம் பங்கேற்கிறேன்" என்று பதிலளித்திருந்தான்.

அவனுக்கு ஜனநாயகத்தின் முறைகளின் மேல் நம்பிக்கை வந்திருந்தது. அநீதியை எதிர்க்க ஜனநாயகத்தில் வழிகளும் இருக்கிறது என்று நம்பினான்.

சிறிது நேரத்தில் அவனுக்கு செய்தி வந்தது.

"நன்றி.. போராட்ட ஏற்ப்பாடுகள் குறித்து மாலை தெரிவிக்கிறேன். போராட்டத்திற்கும், சட்ட முன்னெடுப்பிற்கும் பொருட் செலவு ஆகும். உங்களால் முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றாலும் பராவியில்லை" என்று பதில் வந்திருந்தது.

அவனுக்கு அந்தச் செய்தி ஒரு வித கூச்சத்தை ஏற்படுத்தியது. "இல்லையென்றாலும் பராவியில்லை" - எப்படி நம்மைப் பற்றி அவர் இந்த மாதிரி ஒரு மதிப்பீடு செய்திருந்தார். "எனக்கும் இந்த நாட்டின் மீது அக்கறையிருக்கிறது" என்று அவனுக்கு ஒரு குரல் பேசியது.

"நிச்சயம் உதவி செய்கிறேன். வங்கிக் கணக்கு எண்ணை அனுப்புங்கள்" என்று பதிலளித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர் பதிலளித்திருந்தார்.

"நன்றி. வங்கிக் கணக்கு, XXXXXXXXXXX".

அதற்கு முகிலன், "அனுப்புகிறேன். நமது முயற்சி வெற்றி பெற என்னாலான உதவிகளைச் செய்கிறேன்" என்று பதிலளித்தான்.

"நன்றி. நிச்சயம் போராட்ட நிகழ்வில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்" என்று நண்பர் கோரிக்கை வைத்தார்.

"நிச்சயமாக" என்று பதிலளித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு தனது வங்கிக் கணக்கிலிருந்து நண்பர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ஐந்தாயிரம் ரூபாய்களை அனுப்பி வைத்தான்.

இப்போது ஒரு நிறைவான அனுபவத்தை உணர்ந்தான். தான், நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ளவனாகவும், அநீதிக்கெதிராகக் குரல் கொடுப்பதையும் நினைத்து பெருமிதமாகவும் உணர்ந்தான்.

அரசியல் போரட்டங்கள் மூலம் ஜனநாயக வழியில் போராடி தனியார் நிறுவனங்கள், பொதுமக்களின் சொத்தை கொள்ளையடிக்கும் போக்கிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று உறுதியாய் நம்பினான். போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்டான். அவனது இணைய நண்பனிடம் காந்தி மண்டபம் அருகே எங்கு சந்திப்பது என்ற தகவலைப் பெற்றுக்கொண்டான்.

வெள்ளி.......சனி...... ஞாயிறு.......... எப்போதும் போல் கடந்து சென்றது.

இன்று திங்கட் கிழமை மதியம்.....அவனது அலுவலகத்தில் அவனது இருக்கை காலியாகவே இருந்தது. தலைக்குமேல் இருந்த வேலைகளைச் செய்ய மேனஜர் முகிலனைத் தேடிக்கொண்டிருந்தார். அவனது செல்போன் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

அன்றைய மாலை மலரில் செய்தி இப்படியாக இருந்தது....

'சென்னையில் நக்சலைட் கைது'......

தமிழக காவல்துறையின் புலனாய்வுத்துறை மற்றும் சைபர் கிரைம் இணைந்து நடத்திய ஆப்பரேசனில், முகிலன் என்ற நக்சலைட்டை, சென்னையில் மடக்கி கைது செய்தனர். அவர் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குழைக்கும் திட்டம் ஒன்றைத் தீட்டியபோது போலிசாரால் வலைவிரித்து பிடிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர் எஞ்சினியரான முகிலன் கடந்த சில நாட்களாக நக்சலைட்களுடன் தொடர்பு கொண்டு இயங்குவதை மோப்பம் பிடித்த காவல்துறை, அவரை லாவகமாக ஒரு இடத்திற்கு வரவைத்து பிடித்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திவரும் காவல் துறை, பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் கழித்து இன்னொரு செய்தி..

'நாட்டு மக்களனைவருக்கும் தட்டுப்பாடில்லாத, சுகாதாரமான குடிநீரை கொண்டு சேர்க்கும் 'அனைவருக்கும் தண்ணீர்' சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேரியது. இந்த சட்டத்தின் மூலம், சுகாதாரமான குடி நீர் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடைய, அரசு வழி வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு இரண்டு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவுள்ளது. குடிநீரை சுத்தீகரித்து மக்களிடம் வினியோக்கும் செலவுளுக்கு அரசு  இந்த நிறுவனங்களுக்கு ஆண்டொன்றுக்கு, இருபத்தி நாலாயரம் கோடி ஒதுக்கியிள்ளது.

................

முற்றும்.

No comments:

Post a Comment