Thursday, January 15, 2015

ஏற்கப்படாத நட்பு

முகநூலில் நீண்ட நாளாய்
என் நட்பு அழைப்பை
கிடப்பில் வைத்துவிட்டான்
நெடுநாள் நண்பன்
என் மேல் அவனுக்கென்ன
அவ்வளவு கோபம் - அவன் முகநூலில்
இன்னும் கணக்கு வைத்திருப்பதால்
என்ன பயன்?
விசாரித்ததில் இன்னொரு நண்பன்
சொன்னான் - அவன் இந்த உலகில்
அவனுடைய கணக்கை முடித்து
மூன்று மாதமாகிவிட்டத்தென்று..
முகநூல் கணக்கு மட்டும் போதுமா
இந்த உலகில் (நட்பில்) இருப்பதை
உறுதிப்படுத்திக்கொள்ள?...
இனிமேல் அவன் என் நட்பின் 
அழைப்பை எப்போதுமே
ஏற்க்கப்போவதில்லை என்று தெரிந்தபோது
என் (மனதில்) நிலையில்
வெட்கமும் துயரமுமே எஞ்சியிருந்தது..

No comments:

Post a Comment