Sunday, January 4, 2015

என்ன மாதிரியான டிசைன்?

பத்தாயிரம் மாணவர்களில் 100 அல்லது இருநூறு பேரை பல கட்ட தேர்வுகளுக்குப்பின் கேம்பஸ் மற்றும் ஆப் கேம்பஸ் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்ந்தெடுத்தவரெல்லாம் திறமைசாளிகள் என்று நிர்வாகம் நம்புகிறது. கேம்பஸ் தேர்வுக்கு முதல் தகுதி  - சீராக உயர்ந்து செல்லும் மதிப்பெண். அதாவது முதல் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணைவிட அடுத்த தேர்வில் மதிப்பெண் அதிகம் பெற்றிருக்கவேண்டும். இது அந்த மாணவரின் எதிர்கால திறன் வளர்ச்சிக்கான ஒரு காரணமாக நிறுவனங்கள் பார்க்கின்றன.

இந்த முப்பதாயிரம் பேருக்கு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பின் திறமை குறந்து விட்டது எனில், அது அந்த நிறுவனத்தின் குறையாகத்தான் தெரிகிறது. நியாப்படி பார்த்தால் இது நிறுவனத்தின் குறைதான். 

இத்தனைக்கும் இன்றைய ரூபாய் மதிப்பு சரிவினால் அதிகம் லாபம் அடைந்தவை இந்த நிறுவனங்கள்தான். எந்தவித அதிக விற்ப்பனையில்லாமல் வெறும் கரன்சி கன்வர்சன் மூலமே 10 முதல் 15 சதவீத லாபத்தை இந்த காலாண்டில் பெற்றுவிட்டார்கள்.
அதே போல இந்த ஆட்குறைப்பு வழக்கமான ஒன்று என்று சொல்லும் நிறுவனம், முன்பு இதுபோல் நடந்தபோது இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியதாக எங்காவது சுட்டிக்காட்டியதாக தெரியவில்லை.

அரசங்கத்திடம் இத்தனைபேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறோம் என்று வாக்குறுதிகூறி வரி, மின் கட்டணம், ஏற்றுமதி சலுகை இன்னும் எத்தனையோ பெற்று பின் தவறான வியாபார உத்திகளால் பாதிக்கப்படும்போது முதலில் கை வைக்கப்படுவது ஊழியரின் மேல்தான். காரணம் இங்கு ஊழியர்கள்தான் சந்தைப்பொருள்(commodity).

பிரச்சினை ஒரே நேரத்தில் இத்தனை பேரை வெளியேற்றும்போது சந்தை அவர்களை ஏற்றுகொள்ளும் அளவு வளரவில்லை என்றால் இந்த முப்பதாயிரம்பேரையும் அவர்களின் குடும்பத்தையும் ஒரு நிறுவனத்தை நம்பி இவ்வளவுகாலம் வாழ்ந்த அந்த மனிதர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவே அர்த்தம். இதன் விழைவுகள் எதிர்மறையாக இருக்கும் பட்சத்தில் இது ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கக் கூடும்.

02-01-2015 TCS Layoff எதிர்வினை

No comments:

Post a Comment