Sunday, January 4, 2015

ஆட்கொல்லி

ஆட்கொள்ள முடியாத 
கால நீட்சியில் 
நான் கரைந்துபோகும் முன்

ஆட்கொல்லி 
அதை சொல்லிவிட
வேண்டுமென நங்கை 
வரும் வீதி வலம் வந்தேன்

நாட்கள் கொன்றதல்லாமல் 
வேல் விழியில் 
வீரச்சாவெதுவும் நான் 
கொண்டதில்லை ....

அதிசயமாக இன்று 
ஆற்றுவெள்ளம் நிறுத்தி 
ஆகாயம் முழுதும் 
நனைத்த அந்தி மழையாய் 
ஒரு புன்னகை செய்தாள்..
.
.
.
.
.
.
.
அப்பா... அப்பா.. நீச்சல் 

குளம் போகலாம் எந்திரிங்க... 
என மகள்..
மீண்டும் நனையபோகிறேன்..



-23-06-2013

No comments:

Post a Comment