Thursday, January 19, 2017

இது வெறும் சல்லிக்கட்டுக்கான போராட்டமா?

... இல்லை..

எனது மொழி, கலாச்சாரம் எதிலும் தலையிட அயலவருக்கு உரிமையில்லை என்று சொல்ல நடக்கும் போராட்டம்.

எங்களுக்குள் சாதியுமில்லை, மதமுமில்லை என்று உறக்கச்சொல்ல நடக்கும் போராட்டம்.

GST, NEET என்று மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசிற்கு, நாங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவர்கள், உங்கள் சட்டங்கள் எங்களுக்கு வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று அடித்துச் சொல்லும் போராட்டம்.

கட்சிகள் தேவையில்லை, நடிகர்கள் தேவையில்லை, ஏன் தலைவனென்று எவரும் தேவையில்லை, நாங்களே எங்களுக்கு வழிகாட்டி என்று சொல்லும் போராட்டம்.

ஆணும் பெண்ணும் சரி நிகர் என்று சொல்லும் போரட்டம்.

அடித்தால் திருப்பி அடிப்போம் என்று சொல்லும் போராட்டம்.

இனியும் எங்களை அடக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் போராட்டம்.

அகிம்சையென்றால் என்னவென்று இந்தியாவிற்கு நினைவூட்டும் போராட்டம்.

தமிழர்கள் தனித்தன்மையானவர்கள் என்று சொல்லும் போராட்டம்.

இதுவல்லவோ போரட்டம், இதுவல்லவோ போராட்டம்.

No comments:

Post a Comment