Friday, January 27, 2017

பன்னீர் வாயில் மிச்சரா?

போராட்டத்தில் கலவரம் நடந்ததற்கு பன்னீர் செல்வத்தின் மீது பழியைப்போட்டு ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது கீழ்வரும் கேள்விகளைக்கொண்டு நிகழ்வுகளை பகுத்தறியலாம்?
1. கலவரம் நடந்து பொதுமக்கள் தக்கப்பட்டால், தான் எடுத்த முயற்சிக்கு பலனில்லாமல், மக்கள் மத்தியில் கெட்ட பெயரெடுப்போம் என்று மோடியை சமாளித்த ப்ன்னீருக்குத் தெரியாதா?
2. போராட்டத்தின் இறுதியில் கலவரம் நடந்தால் யாருக்குப் பயன்?

   2அ முதல்வராகத் துடிக்கும் சசிகலா கும்பல்? தேர்தலில் கோட்டைவிட்ட ஸ்டாலின்        தரப்பு? ஆளுநர் வழியே மத்திய அரசின் ஆட்சியை அடைய எண்ணும் பாஜக?
   
 2ஆ. கலவரம் நடந்த பகுதிகள் குப்பம், பாதிக்கப்பட்டது ஏழைகள். சரி. கடந்தகால தேர்தல் முடிவுகளை எடுத்து கலவரம் நடந்த பகுதிகளில் எந்தக் கட்சி தொடர்ந்து அதிக ஓட்டுக்களை வாங்கியுள்ளது? அவர்களைத் தூண்டிவிட்டது யார்?

 2இ முதல்வரை ஆபாசமாக திட்டியும், அட்டைகள் வைத்தும் போராடியது மாணவர்கள்தானா? அல்லது இனையத்தில் ஆபாசமாம எழுதும் நிலைய வித்துவான்களுக்கு கூலி கொடுக்கும் எஜமானர்களின் வேலையா?

  2ஈ. பன்னீர் மக்களிடம் நல்ல பெயர் எடுத்து முதல்வர் பதவியில் நீடிப்பதாலும், அதன்மூலம் அதிமுகவில் ஆளுமை கொண்ட தலைமையாக மாறுவது யாருக்கெல்லாம் ஆபத்து? யாருடைய கனவுகளெல்லாம் பாழாய்ப்போகும்?

3. மற்ற மாநிலங்களுடன் இனக்கப்போக்கையும், மத்திய அரசுடன் இனக்கப்போக்கையும் கடைபிடுத்து தமிழக உரிமைகள் காக்கப்படவேண்டும், திட்டங்கள், நிதி தமிழகத்திற்கு தேவையான அளவு கிடைத்திட வேண்டும் என்று ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள், பன்னீரின் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை பாராட்டாமல், வாய்ப்பு கிடைத்தவுடன் மூடி நிறவ எண்ண என்ன காரணம்?

இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால், மாணவர் போராட்டத்தின் வெற்றியும், அதற்குப் பின்னால் உள்ள பன்னீரின் வெற்றியும் தெரியும்.
பன்னீர் வாயில் மிச்சரா என்பது தெரியாது, பன்னீரின் ஆளுமையைக் கண்டுகொள்ளவில்லையென்றால் நம் தலையில் மண் என்பது மட்டும் உறுதி.

No comments:

Post a Comment