Wednesday, February 1, 2017

நமக்கு எதுக்கு வம்பு?

இவரின் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பதும், அவ்வப்போது நட்பு ரீதியான முகநூல் உரையாடல்களில் இவர் எனக்கு நெஞ்சுக்கு நெருக்கம். சில பிரச்சினைகளில் நாம் கருத்துச் சொல்லத் தயங்கி நிற்கின்ற வேளையில், போர்க்களத்தில் முன்னே சென்று எதிரிகளைத்தாக்கி வழியேற்படுத்தும் வீரன் போல், நமக்கொரு இலகுவான சூழலை ஏற்படுத்தி விடுவார். பிரபல பத்திரிக்கையில் இருந்தும் தன் அரசியல் சார்பான கருத்துக்களைத் தெரிவிப்பதில் சமரசம் செய்து கொண்டதில்லை. ஒரு காலத்தில் சவுக்கின் துணிச்சலான அரசியல் நகர்வுகளுக்கு சமூக ஆதரவிற்கு நியாயப்பாடு கற்பித்தவர்களில் முக்கியமான ஒருவர் இவர். இவரின் கருத்துக்களுக்கு திமுகவினரிடம் எப்போதுமே புகைச்சல் இருக்கும். அதனாலேயே பலரிடம் எனக்கு இவரை ஆதரிப்பதால் கருத்துமோதல் நடந்ததுண்டு. இப்படி இவரைப்பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டிய சாதாரண மனிதரில்லை. இருந்தும் என் பார்வையில் இவரைப்பற்றி எழுதி இவரின் எழுத்துக்களை என் குறுகிய நட்பு வட்டத்தில் அறிமுகம் செய்வதை பெருமையாக உணர்கிறேன். அவர்தான் கார்டூனிஸ்டு பாலா என்கிற Bala G. 

இவரின் "நமக்கு எதுக்கு வம்பு" என்கிற புத்தகம், இவர் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள், அரசியல் விமர்சனங்கள் என்ற அனைத்தையும் உள்ளடக்கி ஒரு புத்தகமாகத் தந்திருக்கிறார்கள் யாவரும்.காம் நண்பர்கள். புத்தகத்தை படித்த பின்பு, "அட.. நாம நினைச்சதை, சொல்லத் தயங்குவதை பொளீரென்று போட்டுடைத்திருக்கிறாரே" என்று எண்ணத்தோன்றும். புத்தகம் வெளிவந்து ஓராண்டானாலும், மீண்டும் படிக்கும்போது, கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க உதவும் ஒரு கண்ணாடியாகவே உணருவீர்கள். 

உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் பாலா..

1 comment: