Sunday, February 5, 2017

டிராகு காலம் 2

அதிபர் டிரம்பின் குறித்த ஏழு நாட்டினர் அமெரிக்காவினுள் வருவதற்கான தடையை ஒரு உச்ச நீதிமன்ற நிறுத்திவைத்துள்ள நிலையில், இரண்டும் மாகாணங்கள் டிரம்பின் உத்தரவு, அரசியலமைப்பிற்கு எதிரானது என்று வழக்குத் தொடுத்துள்ளன. இந்த நிலையில் வெளிநாட்டவர் அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதிக்கும் H1B விசாவின் அதிகப்படியான பயணளர்களான இந்தியர்களுக்கு அச்சமும் குழப்பமும் நிறைந்த நாட்களாக இருக்கிறது.

பொதுவாக அமெரிக்காவிற்குள் வெளிநாட்டவர் வர அனுமதிக்கப்படும் விசாக்கள், சுற்றுலா, வணிகம், உயர் கல்வி மற்றும் வேலை என்ற பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. இதுவல்லாமல் அகதிகளுக்கான அனுமதி தனி. பொருளாதார தாராளமயத்திற்குப் பின் அமெரிக்காவில் ஏற்பட்ட கணினித்துறை வளர்ச்சி இந்தியர்களுக்குப் பெரும் வரமானது. ராஜீவ் காந்தி மற்றும் நரசிம்ம ராவ் காலத்தில் கணினித்துறையில் இந்தியா தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆந்திரம் மர்றும் தமிழ்நாடு கணினிசார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்களைக் கொண்டுவந்தது. அமெரிக்காவில் கணினி வல்லுனுர்களின் தேவை அதிகரிக்க அதிகரிக்க இந்தியாவில் ஆந்திராவும், தமிழகமும் கணினி வல்லுனர்களை உருவாக்கிக்கொண்டே இருந்தது. அதன் தொடர்ச்சியாக Offshore எனப்படும், அமெரிக்க வேலைகளை இந்தியாவிலிருந்து செய்யக்கூடிய முறையில் பல நிறுவங்கள் இந்தியாவில் அலுவலகங்களைத் தொடங்கி தொழிலைப் பெருக்கின. இது அமெரிக்க கணினித்துறைக்கு மிகவும் சாதகமாகவும், வணிகங்களுக்கு செலவைக் குறைத்து கணினி செயலிகளை உருவாக்கும் வாய்ப்பாகவும் அமைந்தது.

இந்தியாவில் இரண்டு, மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் அமெரிக்காவிற்கு அழைத்துவரப்பட்டு வேலையில் அமர்த்தப்பட்டனர். இதற்கு Onsiteல் வேலை வாய்ப்பும், வாடிக்கையாளர் விருப்பமும் முக்கியம். அப்படி அழைத்து வர H1B விசாக்கள் தேவைப்பட்டது. ஆரம்பத்தில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக இருந்த இந்த விசா எண்ணிக்கை, இந்தியா, சீனா போன்ற நாடுகள் மக்கள் தொகை காரணமாக அதிகம் எடுத்துக்கொண்டதால், பல்லின(Diversity) மக்கள் வருகையை ஆதரித்து சில நாடுகளுக்கு மட்டும் விசா எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. இதில் இந்தியர்களிக்கான கட்டுப்பாடு அமெரிக்காவில் பெரிய தக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் இந்தியாவிலிருந்து வேலைக்கு வரும் நபர்களுக்கு வாய்ப்புகளுக்கு முட்டிமோதல் ஏற்பட்டது. சில நிறுவனங்கள் இந்த இக்கட்டை சமாளிக்க L1 எனப்படும் நிறுவனங்களின் கிளைகளுக்கு இடையில் ஆட்களை நகர்த்தும் விசா அனுமதியை பயன்படுத்திக்கொண்டன. இதன்படி ஒரு நிறுவனத்தின் இந்தியக்கிளையில் இருந்து அமெரிக்கக் கிளைக்கு ஆட்களைக் கொண்டுவந்து தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளப்பட்டது. இது கணினி நிறுவனம் அல்லாத துறைக்காக உருவாக்கப்பட்டது, ஆனால் கணினி நிறுவனங்களால் அதிகம் பயண்படுத்திக் கொள்ளப்பட்டது.

ஒரு கட்டத்தில் கணினித்துறையில் 50 சதவீதமானவர்கள் இந்தியர்கள் என்ற நிலையும், அதில் 50 சதவீதம் ஆந்திரக்காரர்களும், 20 சதவீதம் தமிழர்களும் மீதி ஏனையோரும் என்ற நிலை உருவானது. அமெரிக்காவில் கடந்த பல பத்தாண்டுகளில் உயர்கல்வி முடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததும், கணினித்துறையில் உள்ள சிக்கலான வேலையும், அதிக கணித அறிவும் தேவைப்பட்டதும் உள்நாட்டினருக்குப் பாதகமாக அமைந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்த நிலையை மாற்ற அமெரிக்க அரசியல் தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து ஓரளவு வெற்றியும் கண்டனர். ஆனால் இன்றைய நிலையில் அமெரிக்காவின் கணினித்துறை வல்லுனர்களின் தேவையை உள்நாட்டினரை மட்டுமே கொண்டு பூர்த்தி செய்து விட முடியாத நிலையே இருக்கிறது.

வேலைக்காக வழங்கப்படும் விசாக்களுக்கு கால வரையறை உண்டு. H1B விசாவில் ஒருவர் அதிகபட்சம் 6 ஆண்டுகள் அமெரிக்காவில் பணி செய்து கொண்டு இருக்கலாம். L1 விசாவில் 5 ஆண்டுகள் இருக்கலாம். இந்த விசாக்கள் High Skill labor உயர் நுட்ப அறிவுப் பணியாளர் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. இதற்கு கல்வி மற்றும் அனுபவம் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது.

அடுத்து "இந்தியர்களின் கனவு முற்றுப்பெற்றதா."...


No comments:

Post a Comment