Wednesday, February 15, 2017

நன்றியுள்ள நாய்...

அந்த நாய் தெருவோரம் ஆதரவில்லாமல் அநாதையாக இருந்தது. அதனால் சக நாய்களுடன் சண்டையிட்டு தன் உணவைத் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அது தன் பலவீனத்தால் பல நேரங்களில் பட்டினி கிடந்தது. ஒரு நாள் அந்த வழியே வந்த இறக்க மனம் படைத்த பெண்மணி அதை அரவணைத்துக் கொண்டாள். அந்த நாய்க்கு அன்றிலிருந்து சுக வாழ்வுதான். அந்த வீட்டு வேலைக்காரிக்கு அந்த நாய்க்கு மூன்று வேளையும் தவறாமல் உணவளிக்கவும் பராமரிக்கவும் ஆணை வழங்கினாள் அந்தப் பெண்மணி. அந்த நாயும் ஆரோக்கியத்துடன் வளர்ந்து வந்தது. 

ஒரு நாள் அந்தப் பெண்மணிக்கு உடல் நிலை சரியில்லாமல் படுக்கையில் படுத்தால். அந்த நேரங்களில் வேலைக்காரி அந்த நாய்க்கு உணவளிக்கும்போது தன்னை ஒரு எஜமானியாகவே கற்பணை செய்து கொண்டு ஒய்யாரமாக உணவளித்தும், தன் பேச்சைக் கேட்காதபோது அவ்வப்போது அந்த நாயை மிரட்டியும், சாட்டையால் அடித்தும் அடக்கி வந்தாள். அந்த நாய்க்கோ தன் எஜமானியின் நிலையால் வருத்தமும், வேலைக்காரியின் கொடுமையாலும் நாளுக்கு நாள் கவலையடைந்து வந்தது. அவள் போடும் உணவைக்கிஉட உண்ணாமல் பசியோடு சிலன்நாட்கள் இருந்தது. அப்போதெல்லாம் அது தன் எஜமானியின் பெரும் அன்பையும், அவர் அளித்த ஆதரவையும் நன்றியோடு நினைத்துப் பார்த்துக் கொள்ளும். தன் பேச்சைக் கேட்காத நாயின் மீது வேலைக்காரிக்கு நாளுக்கு நாள் கோபம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இந்த நிலையில் ஒரு நாள் எஜமானி நோயினால் மரணமடைந்தாள். அந்த நாய் மிகவும் கவலையடைந்த தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. அது அந்த எஜமானியின் இறுதி ஊர்வலத்தில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் இறுதியில் கண்ணீருடன் பின் தொடர்ந்தது. இறுதி ம்ரியாதை முடிந்து அனைவரும் திரும்பிய பிறகும் அந்த நாய் அந்த எஜமானியின் கல்லறை அருகிலேயே அழுது கொண்டு படுத்துவிட்டது. அந்த எஜமானியின் மறைவு பெரும் இழப்பையும், தனக்கு ஆதராவக இருந்த ஒரே உறவையும் இழந்தும் தவிர்தது.

வீட்டு வேலைக்காரி தான் இனிமேல் இந்த வீட்டு எஜமானியாகிவிடலாம் என்ற எண்ணத்துடன் வீட்டில் புதிய வேலைக்காரர்களை அமர்த்திக் கொண்டால். அவள் தன் எஜமானியைப் போலவே உடை, ஆபரணங்களை அணிந்து கொண்டாள். தனது எஜமானித் தனத்தை சோதிக்க அந்த நாயைத் தேடினாள். அது அந்த வீட்டிற்கு வந்து சேரவில்லை. அது அவளை எஜமானியாக ஏறதுக்கொள்ளவில்லை என்று குறிப்பால் உணர்த்தியதோ என்னமோ. கடைசி வரை அந்த நாய் தன் எஜமானிக்கு மரியாதை செத்யும் விதமாக அது அனத வேலைக்காரியை ஏற்றுக்கொள்ளவே இல்லை.

அது சிலநாள் அந்த சுடுகாட்டிலியே எஜமானியின் கல்லரையைச் சுற்றிச் சுற்றி வந்து பின் ஒரு நாள் இறந்து போனது. அதன் நன்றியையும் எஜமானி விசுவாசத்தையும் பார்த்த வெட்டியான் அதற்கு சகல மரியாதைகளும் செய்து எஜமானியின் காலடியிலேயே புதைத்தான். அந்த நாயும் அதன் நன்றியும் அதன் எஜமானியின் புகழைச் சொல்லி காலம் கடந்தும் நினைவு கூறப்பட்டது.

No comments:

Post a Comment