Thursday, August 14, 2014

சுதந்திரம்...


சுதந்திரம்...கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாயுடன் முடிந்துவிடும் ஒரு சடங்கான நிகழ்வகிப்போன பிறகு, ஆளும் அரசாங்கம் தான் சுதந்திரத்தை பெற்றுதந்தது போல எங்கெல்லாம் சுதந்திரம் பற்றி விமர்சனம் எழுகிறதோ அங்கெல்லாம் தண்டைகாரர்களாகி கம்பு சுத்துவது தேசப்பற்றாகாது. காந்தி , நேரு மட்டுமல்ல, எங்கள் தாத்தனும் முப்பாட்டனும் சுதந்திர நாட்டிற்காக தியாகங்கள் செய்திருக்கிறார்கள். அதற்க்காக இந்த சுதந்திரத்தை நீங்கள் எப்படி கொண்டாட வேண்டும் என்று நான் சொல்ல முடியாது.. அதே போல் என்னிடம் நீங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது..எங்கள் விமர்சனம், விசனம் எல்லாம், ஒரு தகப்பனை போல் நடந்து ஈழ மக்களை கப்பற்றியிருக்க வேண்டிய தேசம், கண்ணை மூடிக்கொண்டும் கருணையே இல்லாமல் எம் உறவுகளை அழிக்க அத்தனை உதவிகளை செய்து கொண்டு ஒரு கொலை காரனாய் எங்கள் முன் நின்று கொண்டு, நீ கேட்கும் மரியாதையை இந்த அரசுக்காக என்னால் செய்ய முடியாது. இந்த சுதந்திரம், இந்த அரசு பெற்றுக்கொடுததல்ல.. அது என் பாட்டன் வழி சொத்து. எனக்கான உரிமை வேறு எவர் கொடுத்ததும் வந்ததில்லை. போரில் இறந்த சிங்கள சிப்பாய்களின் உடலுக்கும் அவர்களின் மரணத்திற்கும் மரியாதையை தந்தவர், தலைவர். அவர்களின் சுதந்திரத்தையும் மதித்தவர், மதிக்க கற்றுகொடுதவர். எதிரியின் சுதந்திரத்திற்கே மரியாதை கொடுத்த இனம், இன்னொருவர் சுதந்திரத்தை எப்போதும் அவமதிக்காது. நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த ஈகிகளுக்கும் இன்னும் எல்லையில் காவல் நிற்க்கும் எமது காவல் தெய்வங்களுக்கும் இந்த சுதந்திர தினத்தில், எமது வணக்கம். மற்றபடி எம் இனத்தை கொலை செய்து கொண்டாடிய அனைவர்க்கும்.... போ.. போ..பிழைத்து போ...உங்களுக்கு உயிர் பிச்சை போட்டு உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது..கொண்டாடுங்கள்...