Saturday, November 28, 2009

எங்கள் தலைவன்

எங்கள் தலைவன் - டாஸ்மாக் உள்ளே போகும் முன்

ஐந்துவேலை சோறும்
அசதிபோக்க ஆடல் பாடல்
கேளிக்கை தொலைக்காட்சிகளும்
இருக்க எனக்கென்ன கவலை இந்த உலகத்திலே!

இருக்கிறார் எங்கள் தலைவர்
பசி தீர்க்க ஒரு ரூபாய் அரிசி போட
பொறுக்கிக் கொள்வோம் அவர்போடும் பிச்சையய் ஆசையாய்
அவர்பாதம் எம் தலைமேல் வைத்து
துதிபாடுவோம் எந்நாளும் அவர் புகழ் ஓங்க!

மூட்டைதூக்கி முதுகுவலி வந்தாலும்
சாக்கடை சுத்தம் செய்து நளிந்துபோனாலும்
ஆண்டு முழுதும் தூக்கமில்லாமல் ஆடை நெய்தாலும்
ஆதவனின் அன்புப் பிள்ளை எம் தலைவன் எழுதும்
ஆபாசக் கவிதை படித்தால் எம் துன்பம் பறந்து போகுமே!

(டாஸ்மாக் ஊள்ளே )

தன் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் ஊரார்பிள்ளை
தானெ வளரும் என்ற தத்துவம் கண்ட தற்கால சாக்ரடீசே!
எத்தனை துரோகம் செய்தாலும் உனக்குத்தான் என் ஓட்டு
மறக்காமல் குவாட்டர் மட்டும் தொடர்ந்து ஊத்து!

எவன் மாய்ந்தால் எனக்கென்ன?
எவன் எந்த நதியைய் தடுத்தால் எனக்கென்ன?
எவன் எங்கு குண்டு போட்டால் எனக்கென்ன?
என் பிள்ளை நாளை எவனுக்கு அடிமையய் இருந்தால் எனக்கென்ன?
எனக்கு இப்போது நீ குவாட்டர் ஊத்து!

சீனாக்காறான் கச்சத்தீவில் குண்டுபோடும்
களம் அமைத்தால் எனக்கென்ன?
அவன் நாளை என் மீது குண்டு போட்டால்
எனக்கென்ன?
இப்போ நீ எனக்கு குவாட்டர் ஊத்து!

தக்காளி! நீதாண்டா தமிழன தலைவன்!
புறநானூற்றின் வீரம் சொறிந்து சொறிந்து
புறமுதுகெல்லாம் புண்ணானபோதும்
உடன்பிறப்பை உசிப்பிவிட்டு ரசிக்கும் ரசிகனே!

தொலைபேசி தரகில் லட்சம் கோடி அமுக்கிவிட்டு
அதைபத்தி பேசாமல் உலகச் செம்மொழி மாநாடு
கும்மியடிக்கும் உன் திறன் வியந்து செயல்மறந்து
வாய் பிளக்கிறேன்... அந்த குவாட்டரை கொஞ்சம் ஊத்து!


அந்த குவாட்டரை கொஞம் ஊத்து!!!

- குவாட்டருடன் உடன் பிறப்பு

Friday, November 20, 2009

மாவீரர் நினைவுச்சுடர்!



உம் உயிர் கொடுத்து எமது மானம் காத்த
மாவீரர் உம் பாதம் தொட்டு வணங்குகிறோம்!!!

Monday, May 18, 2009

அகதி

மார்தட்டி கொள்வோம்
எங்கள் குலதெய்வம் நீ யென்று!
யார் சொல்லியும் உண்மையாகுமோ
ஆதவன் இல்லையென்று!

நாளை அவர் போல் புகழ்கொள்வாயென்று
உன் பேர் சொல்லி
வளர்த்தாள் அன்னை என்னை அன்று!

வீரம் கொண்ட வரலாறு எமதென்று
நாவினில் வாள் சுழற்றும்
கோமகன்கள் வாழும் காலமொன்றில்

கங்கைகொண்டான், கடாரம் வென்றான்
அவன் மீண்டும் வந்து நின்றான் எம்முன்
யாழ்தீபம் தரித்த அனல் பிழம்பென்று!

வேல்தாங்கி நிற்க்குமிந்த
அக்கினிக் குன்றுள்ளவரை
எதிரிக்கு தெரியும்
வெற்றி என்பது கனவென்று!

அவனைக் கொன்று விட்டால் யார்கேட்பார்
இந்த நாதியற்ற மக்களை தீண்டிணாலென்று
கொக்கரிக்கும் குருடர் கூட்டம் தெரிந்து கொள்ளும்
"விடுதலை தேசம்" எமதென்று!

அவர்கள் ரத்தம் கொண்டு
வெற்றித் திலகமிடும் நாள் சொல்லும்
எமது வீரம் எதுவென்று!

வெறி கொண்ட யானை வென்று
அதன்மேல் எம்மன்னன் ஊர்வலம் வரும்ப்போது
புத்தனும் இவன்மேல் ஆசைகொள்வான்
வெற்றி வீரன் இவனென்று!

அதுவரை சொல்லமாட்டோம்
உலகிற்கு நாம் தமிழனென்று,
மறக்கமாட்டோம்
"அகதி" என்பதே எமது இனமென்று!

- "அகதி" திரு

Sunday, May 17, 2009

முடிவின் தொடக்கம்

எல்லோராலும் எதிர்பார்த்ததாக தேர்தல் முடிவுகள் இல்லாவிடினும், கொடுத்தவர் எதிர்பார்த்த முடிவுவாகவே இருக்கிறது. எத்தனை ஊடகங்கள், எத்தனை ஆர்வளர்கள், எத்தனை பரப்புரைகள்?... எல்லாம் மண்ணாய் போனது பணத்தாலே. ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலை பணம் மட்டும் வென்று விட்டது என்று சொல்லி இந்த தேர்தல் முடிவுகளை ஒதுக்கிவிட முடியாது. அது ஆளுங்கட்சி பெற்ற வெற்றிகளுக்கு வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். ஆனால் எதிர்கட்சிகள் பெற்ற தோல்விக்கு நிச்சயம் அது மட்டும் காரணமல்ல.
சந்தர்பவாத அரசியல், அரசியல் வியாபரமயமாகிப்போனமை, கொள்கை இல்லாக் கூட்டணி மற்றும் தலைவர்களின் மேல் மக்கள் கொண்ட நம்பிக்கை போன்றவை மறுக்க முடியாத காரணிகள்.

பணம் கொடுத்து வாக்குப் பெற்று வெற்றிகளை குவிக்க முடியும் என்று தமிழகம் ஒரு தவறான முன்னுதாரணத்தை காட்டி நின்றும், எதிர்காலத்தில் சன நாயகத்தின் மீதான நம்பிக்கையும் அதைக்கொண்டு பின்னப்பட்ட அரசியலமைப்பும் அதை தாங்கி நிற்கின்ற அடிப்படை கோட்பாடுகளும் அதன் நம்பிக்கைத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் ஐயம் இல்லை.

அதே நேரம் பணத்துக்கு வாக்களிக்கும் வாக்காளன் தான் அதைச் செய்யாமல் தவிர்த்த வாக்காளனுடைய தலைவிதியையும் தீர்மானிப்பவன் என்றால் அதற்க்கு வாய்ப்பளிக்கும் அரசியலமைப்பை, சிறுபான்மை சிந்தித்து வாக்களிப்பவர்களின் கோபம், அதன் விழைவால் உருவாகப்போகும் அணுகுமுறையும் சிதைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

"உங்களைத்தான் நம்பியிருக்கிறோம் எங்களுக்கு ஒரு விடிவு தாருங்கள்" என்று அழுத ஓரு இனத்தின் அங்கத்திற்க்கு இன்னொரு அங்கம் செவிசாய்க்காத போது, நிச்சயம் அவர்கள் உதாசினப் படுத்தப் பட்டார்கள் அல்லது அவர்களின் குரல் இன்னும் இந்த பாமர மக்களிடம் போய்ச்சேர வில்லையோ என்ற கருத்தோட்டங்களை ஏற்படுத்துகிறது. இதில் உண்மை இரண்டாவது காரணமாக இருக்குமானால், அது சரி செய்யப்படலாம். ஆனால் அது முதல் காரணமாக இருப்பின் அந்த இனம் அதன் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது உறுதி.

அவர்ளுக்கான விடிவை அவர்களே தேடிக்கொள்வார்கள், அல்லது காலம் அவர்களுக்கு அதை கொடுக்கும். அந்த நேரத்தில், அழிவின் தொடக்கத்தை அந்த இனத்தின் இன்னொரு அங்கம் அடைந்திருக்கும். கலாச்சாரம், பண்பு, மொழி என அனைத்திலும் கலப்பை ஏற்படுத்தி தன் இனத்தை தானே அழித்து மாயையான தேசிய கோட்பாடுகளை தலைமேல் தூக்கிவைத்து தன் அடையாளத்தை இழந்து நிற்க்கும் இன்றைய தமிழக தமிழர்களின் நிலைக்கு அவர்களின் தலைவிதியைவிட தலைவர்களே முதல் காரணம்.

காகம் கூட தன் உறவு இறந்தால் கூடி அழும், ஆனால் இந்த இனம் மட்டும் தன் அங்கத்தையே தின்று பசிதீர்க்கும் குணம் கொண்டது என்பது மறுக்க முடியாத சோகம்.

Monday, May 11, 2009

கல்கியின் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவலை மின் நகலில் பெற

http://ponniyinselvan.in/pages/downloads.html

Thursday, May 7, 2009

யார் பெரியாரின் பேரன்?









"பெரியாரின் உண்மையான பேரன் நான் தான் என்று சீமான் சொல்கிறாறே?" என்று ஈ வெ கி ச இளங்கோவனிடம் நிறுபர்கள் கேட்ட கேள்விக்கு இறையாண்மை மிக்க நாட்டின் நாடளுமன்ற உறுப்பினர் அளித்த பதில் என்ன தெரியுமா?

"பெரியார் இளம் வயதில் செய்த தவறாக இருக்கலாம்" என்று எக்காளமாய் பதில் சொல்கிறார்.

அடிமைத் தனத்தை உடைத்தெரிந்த சுயமரியாதையை சொல்லிக்கொடுத்த பகுத்தறிவு பகலவனின் வாரிசு நிச்சயம் இளங்கோவனாக இருக்க வாய்ப்பில்லை. இளங்கோவன் பெரியாரின் தலைமுறை என்று சொல்வது வேண்டுமானால் பெரியார் இளம் வயதில் செய்த தவறாக இருக்கும்.



இவருக்கு முத்து குமார் யார் என்று தெரியாது. இலங்கை மக்கள் துயருக்கு காங்கிரஸ் கட்சி தான் விடியலை கொடுத்துள்ளது என்று சொல்லும் இந்த மூடரையா நாம் தேர்ந்தெடுத்தோம் என்னும்போது வெட்கம் தலைகுனிய வைக்கிறது.

சோனியாவை அன்னை என்று கூறும் இவர், யார் செய்த இளவயது தவறு என்று சோனியாவிடம் கேட்டுச் சொல்வாரா?

Tuesday, May 5, 2009

உரசல்

நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவனுடைய பேச்சில் பிடிப்பில்லாமல் இருப்பதை அறிந்து அவனிடம் என்னவென்று வினவினேன். அவனுடைய மனைவிமேல் அவனுக்கு அளவுகடந்த வெறுப்பு உண்டாகி விட்டதென்றும் அதனால் அவர்களிடையே விரிசல் விழுந்ததாகவும் சொன்னான். எனக்கு இதைக்கேட்டதும் அதிர்ச்சி!. ஏனென்றால் அவனுடைய திருமணம் காதல் திருமணம். அதுவும் நான்கு வருட கல்லூரி காதல். எனக்கு தெரிந்து இருவருக்கும் நல்ல புரிந்துணர்வு இருந்தது. திருமணத்திற்க்கு முன் அவளை பற்றி பேசும்போது சிறிது கூட விட்டுக் கொடுத்ததில்லை. அப்படியிருந்த அவன் எதனால் இப்படி பேசிகிறான் என்று புரியாமலும், இது அவனுடைய இல்வாழ்க்கை தொடர்புடையதும் ஆதலால், சிறிது தயக்கத்துடனேயே வினவினேன். பொதுவாக மனதிலுள்ள பாரம் மற்றவரிடம் பகிர்ந்து கொண்டால் குறைந்துவிடுமென்பார்கள். என்னைப்பொறுத்தவரை அது யாரிடம் சொல்கிறோம் என்பதை பொறுத்து. சிலரிடம் மனதில் உள்ள பாரத்தை சொன்னால் அடுத்த நாள் அது இருமடங்காகி விடும்.

அவன் மனைவி பற்றி அவன் சொல்கையில், "இப்போதெல்லாம் அவள் அவளுடைய வீட்டு உறவுகளைப்பற்றியே அதிகம் கவலை படுகிறாள். சின்ன சின்ன பிணக்கு என்றாலும் விழுந்து விழுந்து உதவி செய்கிறாள் என்றான்".

"சரி அது நல்லதுதானே" என்றேன்.

"மேலோட்டமாய் பார்க்கும்போது அது நல்லதுதான். ஆனால் அதிகமுறை அதுவே எங்களுக்குள் சண்டைக்கு காரணமாகிறது" என்றான்.

"புரியவில்லையே?".. என்றேன்

"அவள் செய்கிற உதவி என்னைப் பாதிக்காத வரையில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனல் சிலநேரங்களில் எனக்குப் பிடிக்காததை அல்லது அந்த உதவியினால் எனக்கு வரும் பாதிப்புகளை அறியாமல் அல்லது அறிந்தோ அவள் செய்யும் போது எனக்கு கோபம் வருகிறது. அதனால் வாய்ச்சண்டையில் தொடங்கி இரண்டு மூன்று நாள் பேசாமல் இருந்திருக்கிறோம்" என்றான்.

"இதுபோலத்தான் சென்ற மாதம் அவளுடையா அம்மாவுக்கு கால் வலி என்று சொல்லி மருத்துவ மனையில் சேர்த்து ஒருவாரம் பார்த்தோம். அதற்க்கு மட்டுமே பதினைந்தாயிரம் செலவு செய்தேன். அதற்க்குப் பிறகு கடைகளுக்கும் மற்றபிற இடங்களுக்கும் எளிதில் செல்ல மார்கெட்டுக்குப் பின் புறம் உள்ள என்னுடைய இன்னொருவீட்டை அவர்களுக்கு தந்துவிடலாம் என்றாள். என்னால் சரி என்று சொல்லவும் முடியவில்லை, முடியாது என்று சொல்லவும் முடியவில்லை. அதில் வரும் நாலாயிரம் வாடகையை தான் என் பெற்றோருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

சரிடா இதெல்லாம் எல்லோர் வீட்டிலும் இருக்கும் சிக்கல் தான். காலப்போக்கில் சரியாகிவிடும். இந்த சிக்கலில் உனக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி உன் மனைவியிடம் சொன்னாயா? என்று கேட்டேன்.

இல்லைடா.. இதைப்பத்தி எப்படி அவகிட்ட சொல்லறதுன்னு...... என்றான்

இதிலென்ன இருக்கு.. அப்புறம் நீ என்ன நினைக்கிறேன்னு அவங்களுக்கு எப்படி தெரியும்? என்றேன்

எனக்கென்னமோ பிரச்சினைக்கு காரணம் உங்க ரெண்டு பேருகிட்டையும் சரியான புரிதல் இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன்.

"என் கணவர் என்னை நேசிப்பது போலவே என் பெற்றோரிடமும் அன்பாக இருப்பார் " என்ற எதிர்பார்ப்பு உன் மனைவியிடம் இருந்துச்சுன்னா?

அவனிடம் பதிலில்லை...

"எந்த ஒரு மனிதனையோ அல்லது அவன் செயலையோ எப்போதும் நல்லது அல்லது தீயது என்று அறுதியிட்டு கூற முடியாது. ஏனென்றால் அவை மனிதனுக்கு மனிதன், இடத்துக்கு இடம், சூழ்நிலைக்கு தகுந்தாற்ப்போல் அவற்றின் பொருள் மாறுபடும்" என்பதற்க்கு இவர்கள் சரியான உதாரணம்.

பொதுவாக காதலிக்கும் போது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக எதிர்பார்ப்புகள் இருக்க வாய்ப்பில்லை. மனதுக்கு பிடித்த பிறகுதான் காதல் பிறக்கிறது, அதனால் அங்கு மூளைக்கு வேலையில்லை. கல்யாணத்திற்க்கு பிறகுதான் மூளை வேலை செய்கிறது. ஆனால் மூளையின் அறிவை இதையத்தின் அன்பு வெல்லும் என்பது பொதுவாக அறியப்படாத உண்மையாகவே இருக்கிறது.

காதல் என்பது உடலைதாண்டி வளரும்போதே அதன் உன்னதம் புரியப்படுகிறது.

Tuesday, April 28, 2009

தனி ஈழம் வேண்டி வாக்கெடுப்பு

கடையடைப்பு(டாஸ்மாக் தவிர்த்து), திடீர் உண்ணாவிரதம் என்று எதையாவது செய்து மக்களை திசை திருப்புவதில் கை தேர்ந்தவர் கலைஞர். அவரின் கலைத்திரமையய் பாராட்டித்தான் அவருக்கு கலைஞர் பட்டம் கொடுக்கப்பட்டதாயின், அந்த பட்டத்திற்க்கான உச்சகட்ட நாடகத்திறமையயை கருணாநிதி வெளிப்படுத்திவிட்டார். அதையும் நம்பி ஒரு நிமிடம் நாமும் ஏமாந்து போய்விட்டோம்தான், இலங்கை விமானங்கள் குண்டு வீசும்வரை.

நேற்றுவரை இலங்கையின் இறையாணமைக்குட்பட்டுத்தான் தமிழர்களுக்கு சுயாட்ச்சி வழங்க வேண்டும் என்று கூறிவந்த செயலலிதா இன்று, தனித்தமிழீழம் அமைத்து தருவேன் என்று கூறி மக்களிடம் ஒரு சுனாமியை ஏற்படுத்திவிட்டார். இவரும் ஒரு (திரைக்)கலைஞர்தான் என்பது இவரின் கடந்த காலத்தை புரட்டுபவர்களுக்கு தெரியும்.

தீர்க்கமான சிந்தனையுள்ள தமிழர் நலனில் அக்கரை கொண்ட தலைவரை இன்னும் இந்த தமிழகம் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படியொரு தலைவன் கிடைக்கும்வரை இன்றைய சமகால அரசியலில் நம்மால் முடிந்த, அல்லது நம்முடைய சிந்தை தெளிவை இந்த தேர்தலில் நாம் தெரிவிக்க வேண்டும்.

செயலலிதாவையம் கருணாநிதியையும் தவிர இன்றைய நிலையில் மத்தியில் ஆட்சி செலுத்துவதற்க்கு வேறு யாரும் இல்லை என்பது நிதர்சனம். அதனால் இவர்களுக்கு ஓட்டுப்போடுவதால் ஏற்ப்படப்போகும் நன்மை தீமைகளை பற்றி ஒரு சிறிய ஆய்வு செய்வோம்.

கருணாநிதி கூட்டணிக்கு ஓட்டுபோடுவதால் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில்,

1. கடந்த ஐந்துவருடம் கூடி நிறைவேற்றாத சேது சமுத்திரத்திட்டம் நிறைவேறப்போவதில்லை.
2. தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு மந்திரியாகி 75 பைசாவிற்க்கு தொலைதூர அழைப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பார்.
3. சட்ட சபை கலைக்கப்படாது என்ற உறுதியால், மணற் கொள்ளை, மின்சார நிறுத்தம், விலைவாசி உயர்வு போன்றவற்றிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவித தீர்வும் ஏற்படப் போவதில்லை.
4. இலங்கையில் உள்ள தமிழர்கள் மேலும் கொல்லப்பட்டு அங்கு தமிழ் இனம் இருந்ததிற்க்கு எந்த அடையாளமும் இல்லாமல் அழிக்கப் படும்.
5. தமிழ், தமிழர் உரிமை, சுயமரியாதை, சோனியா, இறையாண்மை, காவிரி, முல்லைப்பெரியார் போன்ற வார்த்தைகளை யாரவது பயன்படுத்தினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிறையில் இருக்க நேரிடும்.
6. தங்கபாலு தொல்லியல் துறை மந்திரியாகி தமிழரின் வரலாற்றை அழித்துவிட்டு அன்னை சோனியாவின் பெயரை அனைத்து கல்வெட்டிலும் இடம்பெறச்செய்வார்.
7. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கப் போவதில்லை.
8. அழகிரி கலால் மற்றும் சுங்கவரித்துறை மந்திரியாகி அவற்றை முறையாக கையாழ்வார், மேலும் கூடுதலாக உள்துறை மந்திரியாக பொறுப்பேற்று சட்டம் ஒழுங்கை நிலை குலையச் செய்வார்.

செயலலிதா கூட்டணிக்கு வாக்களித்தால்,

1. மத்தியில் காங்கிரசுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பிருந்தால், காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து 10 மந்திரிப்பதவிகளை வாங்கிக் கொள்வார்.
2. அடுத்த நிமிடமே தமிழ்நாடு சட்டப் பேரவை கலைக்கப்படும்.
3. முன்னாள் மந்திரிகளின் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்படும்.
4. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட போடா சட்டம் கொண்டுவரப்படும். அதில் விடுதலைபுலிகள், தனித் தமிழ் ஈழம் பற்றி பேசுபவர்கள் உள்ளே தள்ளப்படுவார்கள்.
5. சேது சமுத்திரத்திட்டத்திற்க்கு மூடு விழா செய்யப்படும். அந்த இடத்தில் இராமர் கோவில் ஒன்று கட்டப்படும்.

இரண்டு கெட்டதில் எந்த கெட்டதை தேர்ந்தெடுப்பதுதான் இந்த தேர்தல் என்றாலும், தனித் தமிழ் ஈழத்தை தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்க்கான தேர்தலாக நாம் ஏன் இந்த தேர்தலை பார்க்கக் கூடாது. கருணாநிதிக்கு ஓட்டு போடுவதை விட செயலலிதாவுக்கு ஓட்டுப் போடுவதில் இந்த நிலைப்பாட்டையாவது நாம் உலகிற்க்கு சொல்லலாம். ஏனென்றால் அந்த அம்மையார் தான் தனித் தமிழீழம் அமைத்துத் தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். நாம் ஓட்டுப் போடுவதால் அம்மையார் சொன்னதை செய்யப்போவதில்லை என்றாலும், நம்முடை நிலைப்பட்டை தெரிவிக்க இந்த ஒரு சந்தர்பத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படியொரு தீர்ப்பை நாம் சொல்லும் போது, தமிழகத் தமிழரின் துயர்கள் களையப்படாவிடிலும் நம்முடைய, ஆறு கோடி தமிழரின் விருப்பை, எண்ணத்தை வெளிப்படுத்திக்கொள்ள இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Monday, April 27, 2009

தமிழரின் உயிரும் தலைவர்களின் நாடகங்களும்

இன்று தமிழினத்தின் வரலாற்றின் துன்பமேகம் சூழ்ந்த நாள். ஆம், ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்கள் உலகின் அத்தனை கண்களின் முன் எந்தவித உதவியும் இன்றி மடிந்துகொண்டிருக்கின்ற தமிழினத்தின் குருதிகொண்டு இந்தியப் பெருங்கடல் சிவப்பு நிறமாக மாறிக்கொண்டிருக்கும் நேரம். உயிரிருந்தும் பிணமாய், உணர்ச்சியிருந்தும் மரமாய் கண்ணீருடன் ஒவ்வொரு நொடியயையும் கரைத்துக் கொண்டிருக்கும் புளுவாய் நெளிந்து கொண்டிருக்கின்றோம்.

தமிழனினப் படுகொலையும் அதை தமக்கு சாதகமாக்கும் தலைவர்களின் நாடகங்களும் சார்ந்த இன்றைய நிகழ்வுகள்

நேற்று விடுதலைபுலிகள் விடுத்த போர் நிறுத்தத்தை நிராகரித்துவிட்டு இலங்கை அரசு தமிழரை அழிக்க போர் தொடரும் என்று அறிவித்துள்ளது.

காலை 3.45 : சிங்கள ராணுவம் பாதுகாப்பு வலையத்தின் மீது இறுதிகட்ட தாக்குதலை தொடங்கி விட்டது.

கடல், தரை வழியாக தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு அகோர எரிகணை தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது.

எண்ணற்ற அப்பாவி மக்கள் மீதே குறிவைத்து நடத்தப்படும் இனப்படுகொலையின் உச்சகட்டம்.

புலிகள் தங்களுடை முழு பலத்தையும் கொண்டு நாற்புறமும் ராணுவத்தின் தாக்குதலுகு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

நேற்றைய ராணுவத்தின் கடல்வழி முயற்ச்சியை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 5 மணி: தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி போர் நிறுத்தம் வேண்டி திடீர் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவிப்பு. அண்ணா நினைவிடத்தி.

காலை 6 மணி: அனைத்து மாவட்டங்களிலும் திமுக தொண்டர்கள் அமைச்சர்கள் உண்ணாவிரதம் தொடங்கினர். மதுரையில் அழகிரி உண்ணாவிரதம்.

காலை 8 மணி : தமிழக காங்கிரள் தலைவர் தங்கபாலு முதலமைச்சரின் உண்ணாவிரதத்தை கைவிட கோரிக்கை. சோனிய மன்மோகன் சிங் போர்நிருத்த முயற்சி மேற்க் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார்.

சோனியா மற்றும் மன்மோகன் சிங்கின் உண்ணாவிரத கோரிக்கையயை கருணாநிதி நிராகரித்தார்.

காலை 9 மணி : சேலத்தில் தங்கபாலுவும் உண்ணாவிரதம். கலைஞருக்கு ஆதரவாக. இலங்கை தமிழர் பற்றி எதுவும் குறிப்பிட வில்லை.

நேற்றய தினம்,சிவ் சங்கர் மேனனும், எம் கே நாரயணனும் இலங்கை அதிபர் ராஜபக்ச, ராணுவ தலைவர் கோத்தபய ஆகியோரச்சந்திது ஆலோசனை நடத்தினர்.

அவர்கள் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியதாக திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு அறிவித்தனர். ஆனால் அவர்கள் போர்நிறுத்தம் பற்றி எதுவும் பேசவில்லை என்று இலங்கை அமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

அவர்கள் போர் நிறுத்தம் பற்றி ஆலோசனை செய்தார்களா? அல்லது இன்று உச்சகட்ட போர் நடத்த ஆலோசனை நடத்தி அதை கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரிவித்து சென்றார்களா? அதன் பேரில்தான் கருணாநிதி இன்று இந்த நாடகத்தை அரங்கேற்றுகைறாறோ என்று தமிழ் உணர்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

காலை 10 மணி: ராஜபக்ச முக்கிய மந்திரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம்.

காலை 11 மணி: இன்று தொடங்கிய மோதலில் இரண்டாயிரத்திற்க்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள் திரண்டு அந்தந்த நாடுகளை போர் நிறுத்தத்திற்க்கு இலங்கையய் வற்புறுத்த வீதியில் இறங்கி , என்று மில்லாத அளவுக்கு மிகப்பெரும் தமிழினப்படுகொலை நடக்கும் இந்த நாளில் போராட வேண்டும் என ப. நடேசன் கோரிக்கை.

காலை 11.30: சேலத்தில் புலம்பெயர் தமிழர் உண்ணாவிரதம்.

மதியம் 12.30: இலங்கை அரசு போர் நிறுத்தத்திற்க்கு இணங்கிவிட்டதாக ப. சிதம்பரத்தின் தகவலை அடுத்து கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட்டார்.

இலங்கை அரசு அதன் இணைய தளத்தில், கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை பயன்படுத்துவதில்லை என்று அறிவித்துள்ளது.

மதியம் 12.45: வன்னியின் மீது இரண்டு விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழ. நெடுமாறன் விபத்தில் உயிர் தப்பினார். இலங்கையில் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறினார்.

Tuesday, April 21, 2009

காலம் சொல்லும் கணக்கு

சாவின் எண்ணிக்கையை தங்களின் தேர்தல் வாக்குச்சீட்டுக்களாக மாற்றத்துணிகின்ற மாபெரும் தலைவர்களை தன்னகத்தே கொண்ட இந்த தமிழ் சமுதாயம், விழித்துக்கொண்டு அவர்களை ஒதுக்குமா, அல்லது வழக்கம் போல் ஆயிரத்திற்க்கும் ஐநூறுக்கும் இறையாண்மையையும், போலி சன நாயகத்தையும் வாங்கி அணிந்து கொள்வார்களா என்பது காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்.

புலிகளை அழித்துவிட்டு தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை கொடுப்போம் என்ற ராசபக்சவிற்க்கும், தேர்தல் முடிந்த பிறகு யுத்த நிறுத்தத்திற்க்கு வழிசெய்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகள் வழங்கும் கருணாநிதி, சோனியாவிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.

இதில் புலிகளை அழித்து விட்டால், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்பது புனைக்கதைகள் தான். புலிகள் எங்கோ வானத்திலுருந்து குதித்து வந்து துப்பாக்கியேந்தியவர்கள் போல பரப்புரை செய்யும் அரசியல் தரகர்களின் வஞ்சகம் என்றுமே வெல்லப்போவதில்லை. இருபது வருடங்களுக்கும் முன் இன அழிப்பின் பாதிப்பில் உறுவானவர்களே இன்றைய புலிகள். இன்று நடக்கும் இன அழிப்பில் பாதிக்கப் பட்டிருப்பது என்றுமே இல்லாத எண்ணிக்கையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். இவர்கள் நளைய புலிகளாகவோ சிறுத்தைகளாகவோ நிச்சயம் பழிதீர்க்க உருவெடுப்பார்கள்.

பிரபாகரன் என்ற தலைவன் இன்று கொல்லப்பட்டால் விடுதலை போராட்டம் முடங்கிவிடும் என்பது அறிவுக் குருடர்களின் கணக்கு. தலைவன் வளர்த்த ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் அனைவரும் பின்நாளில் பிரபாகரனை படிக்கும் அனைவருமே பிரபாகரன் தான். ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் அதன் காரணங்களை ஆராய்ந்து அடுத்த வெற்றிக்கு நாள்குறிப்பது அவர்களின் வாழ்க்கை முறை. வெறும் இலங்கைத்தீவிற்க்குள் நின்றிருந்த போராட்டம் இன்று உலகம் முழுதும் எட்ட தொடங்கி விட்டது. இன துரோகிகள் யார், நண்பர்கள் யார், உண்மையான இன உணர்வாளர்கள் யார் என்பதை இந்த இக்கட்டான தருணத்தில் தமிழன் தெரிந்து கொண்டான். துரோகிகளை புறம்தள்ளி நண்பர்களை கூட்டி விடுதலைப்போராட்டம் வலுப்பெறவேண்டிய காலம் வந்து விட்டது.

எரியும் வீட்டில் எவர் எவர் நெறுப்பு காய்கிறார் என்பதை தொலைவில் இருந்து பார்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் நெறுப்பை வென்றவர்கள். காலம் நிச்சயம் அவர்களின் கணக்கை தீர்த்துக்கொள்ளும். அதுவரை இவர்களின் ஏளனமும் இருமாப்பும் வாழட்டும்.

Friday, March 6, 2009

எதிரியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

நா வரல கத்தியாகிவிட்டது. நாதியில்லாத இந்த இனத்தின் ஈனக்குரல் சமாதியிலிருக்கும் பேரரசின் காதை எட்டவில்லை. மானம் விட்டு மண்டியிட்டது போதும். அரசியல் காரணங்களுக்காக எத்தனை நாட்கள் எத்தனை விலைமதிக்க முடியாத உயிர்களை சுருங்கிக் கொண்டிருக்கும் இனம் கொடுக்கமுடியும்.

கிளர்ந்தெழும் இனவெழுட்சியை எப்படி முடக்கவேண்டும் என்று எமது தலைவர்களுக்கு தெரியும். இன்னும் இவர்களை நம்பி வாய்பிளந்து காலம் கடத்துவது இன்னும் இருக்கும் உயிர்களை பலிகொடுப்பதை தவிர வேறெதுவும் சாதிக்கப்போவதில்லை.

தமிழன் என்ற தனி அடையாளத்துடன் இந்தியாவில் வாழவேண்டுமென்றால் அதற்க்கு சரியான இடம் சிறைச்சாலைகள் என இந்திய சட்டம் கூறுவதை இன்னும் புரிந்து கொள்ள நமக்கு ஏன் இன்னும் தாமதம்.

பாகிஸ்தானிடம்,சீனாவிடம் இலங்கை ஆயுதம் வாங்குவது தனது இறையாண்மைக்கு ஆபத்து என தானே ஆயுதம் வினியோகிக்கும் இந்தியாவிடம் போர் நிறுத்த பிச்சை கேட்பதற்கு மானத்துடன் மரணத்திற்க்கு அழைப்பிதழ் தரலாம். இலங்கையை இதற்குமேல் தன்னால் வற்புறுத்த முடியாது என்ற தனது இயலாமையை வெளிப்படையாக தெரிவித்து விட்டபிறகும்
உண்ணாவிரதமும் நடைபயணமும் எதற்க்கு?

இந்திய அரசிடம் இத்தனை மன்றாடியும் எதயும் சாதிக்கமுடியாத நாம் எதிரியிடமிறுந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். இந்திய தூதரகத்தை முற்றுகையிடுவதும் கையெழுத்து வாங்கி அனுப்புவதும் வீன் வேலை. இந்தியா சொல்லி இலங்கை கேட்காது என்பதும் தெரிந்துவிட்டது. யார் சொன்னால் இலங்கை கேட்குமோ அவரிடம் முறையிடுவது தானே அறிவுப் பூர்வமாக எடுக்கும் முடிவு. சீனாவும் பாகிஸ்தானும் தான் இலங்கையில் இன்றைய ஆளுமை செழுத்தும் நாடுகள். அதனால் சந்திக்க வேண்டிய, ஆதரவு கேட்கவேண்டிய, நிர்பந்திக்க கோருகிற கோரிக்கைகளை சீன மற்றும் பாகிஸ்தானிடம் முறையிடுவதுதான் பயனுள்ளதாகும் என்பது எதிரியிடமிருந்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.

Wednesday, February 18, 2009

பூநூல் கொலைகாரன்
















நன்றி. குமுதம் இணைய தொலைக்காட்ச்சி.

Sunday, February 8, 2009

ஏகாதிபத்தியமும் விசுவாசமும்

உலகிலுள்ள வளங்களை தனதாக்கி கொண்டு, அதன் மூலம் தான் மட்டும் பயண்பெறும் நோக்கில் அரசியல், ராணுவ உத்திகளை கொண்டு சிறிய ஏழை நாடுகளை தன்னுடைய அடிமையாக்கிக் கொண்டு சுரண்டிப் பிழைக்கும் பெரியண்ணனின் புதிய சின்னத் தம்பி, அண்ணன் வழி செல்வதில் ஆச்சர்யம் இல்லை.

சுரண்டிப் பிழைக்கும் வர்க்கம் ஆட்சி செய்யும் போது, ஏழையும் இயலாதவனும் இறையாண்மைக்கு அடிமையாகி கடைசியில் உயிர்த்தியாகம் செய்து விடுதலையை தேடிக்கொள்வதில் வியப்பேதும் இல்லை.

உயிர் பிழைக்க ஒருவாய் தண்ணீர் கேட்கும் தமிழருக்கு செவிசாய்க நேரமில்லாமல் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வளர்ச்சிதிட்டங்களை தீட்டிக் கொண்டு வெளியிட்டிருக்கும் மேதைகளின் அறிவை மெச்சிக்கொள்ள வார்த்தைகளில்லை.

சிறுவர், குழந்தகள், முதியவர், இளம் ஆண்கள் பெண்கள் என வருங்கால சந்ததியினரை அழித்து விட்டு யாருக்கு இந்த வளர்ச்சி திட்டங்கள். சோனியாவும் நீரோவை போல பிடில் வாசிக்கிறார்.

தமிழர் வளங்களை சுரண்ட இன்னும் என்னென்னமோ திட்டங்கள் வரும் நாட்களில் வரும்.... அதையெல்லாம் கேட்டுக் கொண்டும் அதையே தமிழனிடம் விற்பனைசெய்யவரும் குள்ள நரித்தலைவர்களை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த மானம் கெட்ட தமிழனின் விதியை மாற்றியெழுத இங்கு யாருமே இல்லை என்பதுதான் வேதனை கலந்த உண்மை...

Tuesday, January 27, 2009

அன்புடன்....

அன்புடைய அக்கா,தம்பி, தங்கைகளுக்கு,

அருள்மொழி காலத்தில் நம் மூதாதயர் பெருமையை தமிழம்மா சொல்லி மகிழ்ந்த காலம்

உங்களுக்கும் எனக்கும் நினைவிருக்கிறது...

என்னைவிட உங்களுக்கே அதிகம் நினைவிருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

பள்ளியில் என்னுடைய வரலாற்றுப் புத்தகத்தில் வீர சிவாஜியும், விக்டோரியாவும் இடம் பிடித்தது போக மீதமுள்ள பக்கங்களில் எங்கள் முதல்வர்களின் வரலாறு நிறம்பிப் போனதில் அருள்மொழியும் அவன் குல வரலாற்றுக்கும் இடமில்லாமல் போனது எங்களுடைய வரலாற்று தெளிவுக்கு காரணம்.

உயிரை விட மானத்திற்கு மதிப்பளிப்பவர்கள் தமிழர்கள் என்பதற்க்கு நீங்கள் தான் சான்று.

எங்களை பாருங்கள், ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் எங்கள் வாக்குகளை விற்று மானம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோம். இறையான்மை என்றால் அம்மனமாகவும் தெருவில் நடப்போம். யாருடைய இறையான்மை என்ற பகுத்தறிவு பெரியாருடன் மறித்துப் போனது.

ஊழல், லஞ்சம், நயவஞ்சகம், பொறாமையில் ஊறிப்போன எங்களுக்கு மானத்தின் அருஞ்சொற்பொருள் விளங்காது.

பசிக்கிறதென்று உணவு கேட்டீர்கள். பாசம் வந்து பொருள் சேர்த்து அனுப்பிவைத்தோம். ஆதரவு கேட்டீர்கள். அணைக்க நீட்டிய கைக்கு முன் ஏவுகணை எறிந்தோம்.

அடுப்பூத குழல் கேட்டீர்கள், இதோ அனுப்பிவைக்கிறோம் பல்குழல் வெடிகணைகள். சிங்களவன் எரிவான் பிடித்துக் கொள்ளுங்கள்.

ஒருவேலை சோறு கேட்டீர்கள். நிலாச் சோறு தின்று அலுத்துபோன எங்களுக்கு நிலவுக்கு போய்வர நேரம் பத்தவில்லை.. போய் வந்ததும் அனுப்பி வைக்கிறோம்.

ஆசையாய் அக்காள் ஒரு சேலை கேட்டாள்...
பாசமாய் தங்கை ஒரு மிதிவண்டி கேட்டாள்...
காடுகளில் நடந்து புண்பட்ட அம்மா மிதியடி கேட்டாள்...
செல்லடித்து புறையோடிய கண்ணுக்க அப்பா மருந்து கேட்டார்..

அதையெல்லாம் வங்கத்தானம்மா நான் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறேன். நிச்சயம் அவை உங்களை வந்து சேரும் என்று நம்பியிருந்தேன். ஆனால், அதற்கு முன் நான் கட்டிய வரியில் வாங்கிய குண்டுகள் உங்களை வந்து சேர்ந்துவிட்டதென்பது தெரியாதம்மா...

இதொ புதிதாக டாங்கிகள்... இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்....
இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்...

மிச்சமுள்ளவர்களையும் முடித்துக்கட்ட வந்து சேரும், எங்கள் மானம் விற்ற காசில் வாங்கிய விமானங்கள்.

Saturday, January 24, 2009

தொலைவில் நீ, அருகில் நான்....

இங்குதான்...இங்குதான்..
உன் அருகில் நான் இருக்கிறேன்
காற்றுடனே உன் இதழுரசும் இடைவெளியில்..

எங்கெல்லாமோ தேடினேன் உன்னை..
என் இருப்பை உறுதி செய்து கொள்ள...

இன்றுதான் உன்னிடம் என் காதலை...
காதலை.. காதலை...

இப்படித்தான் ஒவ்வொருமுறையும் உன்
கொலுசு என் காதலை தின்றுவிடுகிறது..

காற்றை தென்றலாக்கும் உன் கூந்தல்
என்னை மட்டும் ஏன் கள்வனாக்குகிறது...

உன்னை பிரிந்த கூந்தல்கள்தான்
உடையாமல் என் நெஞ்சை கட்டி வைக்கிறது...

மழையாய் நனைக்கிறாய் பார்வையில்
இழையாய் துளிர்க்கிறேன் காதலில்..

இல்லை என்று சொல்ல உன் நா தொடங்கும்..
இல்லை.. இல்லை.. என இமைகள் முடிக்கும்..

தேவையில்லை வார்த்தைகள்..
இல்லாமலே போகட்டும் வார்த்தைகள்..

இங்கு வார்தைகள் காதல் சொல்வதில்லை..

எதற்க்கு நானம்... என்னை இன்றா முதலாய் பார்க்கிறாய்..
ஆம்.. இன்றுதான் முதலாய் பார்க்கிறாய்...

ஒவ்வொறுமுறையும் இறந்து பிறக்கிறேனல்லவா...

வழிவிட்டு நின்றாய்...
கடந்து செல்லச் சொல்கிறாய்
என்றே நினைத்தேன்...

காதலை வழி மறிக்க எனக்கு மட்டும்தான்
தோன்றியது.. உனக்கில்லை...

தொடர்கிறேன்...தொட்டுவிட..
தொலைவில் நீ.. நிலவாய்..
உன் அருகில் நான்.. நிழலாய்..

Sunday, January 4, 2009

சில நாட்கள் பாரதிதாசனாய் இருந்துதான் பார்ப்போமே!!!!!!

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை!
தமிழகமேல் ஆணை!
தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்:

நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.

தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!

"தமக்கொரு தீமை" என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!

மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்தஎன் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!

ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்!