Thursday, December 18, 2008

அடைகாக்கப் படும் அக்கினிக் குஞ்சுகள்

இலங்கையின் குண்டுவீச்சில் இருந்து தமிழீழ மன்னர்களை காக்கும் தாய்மார்கள்.


Wednesday, December 17, 2008

காதல், கல்யாணம்

வர வர இந்த சக்தியோட நடவடிக்கைகள் ஒன்னும் விளங்க மாட்டிங்குது.

"காலைல ஏழு மணிக்கு கோயமுத்தூர் போகனும், கூட நியும் துணைக்குவான்னு" இரவு பத்து மணிக்கு போன் பன்றான்.

"என்னடா திடீர்னு? " கேட்டேன்.

"ஒன்னுமில்லடா, அப்பாவோட பிரண்டு ஒருத்தர் பையன், பெங்களூர்ல பெரிய கம்பெனில பெரிய மேனஜரா இருக்காரம். அவர் ஊருக்கு வந்திருக்கார், அதனால எங்கப்பா அவர்கிட்ட, என் வேலை விசயமா சொல்லி, என்னை சந்திக்க சொல்லியிருக்கார்" என்றான்.

"அட.. இங்க பார்ரா... அப்பா.. பிரண்டு... வேலை... சரி.. சனியன்.. எத்தனைய கேட்டாச்சு.. இத கேக்க மாட்டமா..." - என் மனதுக்குள்..

எங்க வீட்ல "நாளைக்கு இண்டர்வியூக்கு போகனும்" அப்படின்னு சொல்லி ஒரு பிட்ட போட்டு, இருநூறு ரூபாய ஆட்டைய போடலாம்னு அம்மா கிட்ட அப்படியே பேச்சு குடுத்தா, "ஆனிய புடுங்க வேண்டாம்னு" அப்பா யார்கிட்டயோ பேசுறது காதுல விழுந்துச்சு.

அப்புறம் எங்கே....

நானும், நண்பனுக்கு நல்ல காலம் பொறக்க போகுது.. அவனுக்கு வேலை கிடச்சுடுச்சுன்னா, எப்படியும் அவன் என்னைய ரெக்கமண்ட் பண்ண வெச்சு, நானும் ஒரு வேலைய வாங்கிறலாம்னு ஏழு மணிக்கெல்லாம் பஸ்டாண்டுல வெய்ட்பண்ணிட்டு இருந்தா... பையன் எழரை மணிக்கு வந்து..

"சாரிடா மச்சான்.. பிரிபேர் ஆகி வர லேட்டாயிருச்சு.. அடுத்த பாயிண்டு பாயிண்ட்ல போயிர்லாம்" னு சமாதானப்படுத்துனான்...

சரி.. கழுதை விடுன்னு மன்னிச்சு விட்டுட்டேன்.

"மாப்ளை... என்னோட ட்ரஸ் எப்படி இருக்கு? ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கா?" அப்படின்னு கேட்டு அறிச்சான்.

"என்னதான் உயரமா பறந்தாலும், காக்கா குருவியாக முடியாது" ன்னு சொல்லி அவனை கூல் பண்ணினேன். இப்ப எதுக்கு இதபத்தி ரொம்ம பீல் பண்றான்?, அப்பா பிரண்டத்தான் பாக்க போறான்!.. ஒரு வேளை அவுங்க பையன் டிசிப்ளின், டீசென்சியெல்லாம் பாப்பாறோன்னு..... நானும் "கொஞ்சம் நல்ல சட்டைய போட்டுட்டு, மேக்கப் பண்ணிட்டு வந்திருக்கலாம்" னு தோனுச்சு.....

ஏழரை மணியாகியும் பாயிண்டு பாயிண்டு வரலை. அதுக்காக எப்பவும் வெயிட்பன்ற ரெகுலர் கூட்டம், ரோட்டுலு போயி எட்டி எட்டி பாக்கிறதும், டைம் ஆபிசுல போய் விசாரிகிறதும்.. ஒன்னும் சொல்றாப்புல இல்ல... நம்ம ஆளும் பஸ்ஸை எதிர் பார்த்து எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தான்... எப்படியாச்சும் கஸ்டப்பட்டு வேலை வாங்கிரணும்னு வெறி போல... இருக்காத பின்ன.. எங்கப்பா ஒரு அண்ணா(நல்லா பேசுவார்). அவுங்கப்பா ஒரு காமரசர்(செயல் வீரர்)...

எனக்குதான் எதுக்கு நிற்கிறோம்னு தெரியாம ஒவ்வொருத்தறோட நடவடிக்கையயும் கவனிச்சுட்டு இருந்தேன். எல்லாரும் பரபரப்பா இருந்தாங்க. அந்த பக்கம் எங்க ஏரியா எதிரிங்க நின்னுகிட்டு பொண்ணுகளை பாத்து ஏதோ பாட்டெல்லாம் பாடிக்கிட்டு அவுங்களை சந்தோசப் படுத்திட்டு இருந்தானுங்க..

எங்களுக்கு அந்த பழக்கமெல்லாம் கிடையாது.. ஏன்னா நாங்க பாடுனாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க.. அப்படியே கவனிச்சிட்டாலும் அதை பாத்த பெரிசுங்க வீட்டுக்கு வந்து ப்ளாக் எழுதிட்டு போயிருவாங்க... அதனால.. பாட்டெல்லாம் பாடாம, பேசும் படம் மட்டும்தான்.

காத்துட்டு இருந்தவங்க எல்லாத்து கண்லயும் அவ்வளவு சந்தோசம். பாயிண்டு பாயிண்டு வந்தாச்சு.அடுத்து சீட் புடிக்க தயாரானாங்க... ஆன நம்ப ஆளு மட்டும் காத்து புடுங்குன பலூன் மாதிரி சுருங்கிட்டான்...ஓருவேளை "பஸ்ஸுல சீட் கிடைகாதுன்னு பீல் பன்றானோ?"

கேட்பதற்கு முன்.. "இல்லடா.. அடுத்த பஸ்ல போலாம். ஒரே கூட்டமா இருக்கு, நின்னுட்டுதான் போகனும்" னு சொன்னான். சரிதான்.. அப்படின்னு விலகி நின்னு மத்தவுங்களுக்கு வழி விட்டோம்.

அடுத்த பஸ் எப்பன்னு டைம் டேபில்ல பாத்து வச்சுகிட்டேன். அதையெல்லாம் பாக்காம அடுத்த பஸ்ஸுக்கு இப்பவே ரோட்ட பாத்து பாத்து நின்னுட்டு இருந்தான் நம்ம ஆளு. இந்த பஸ்ஸும் புறப்பட ஆரம்பிச்சது. அப்ப பாத்து டி வி எஸ்ல ஒருத்தர் ஒரு பிகரை கொண்டு வந்து பஸ் முன்னாடி நிறுத்தி ஏத்திவிட்டார். எனக்கும்,பேசாம நின்னுட்டே இந்த பஸ்ல போயிடலாம்னு தோனுச்சு. இத நம்ம ஆளுகிட்ட சொல்லி அவன் எங்க நம்மள ஒருமாதிரி கேவலமா நினைச்சுக்குவானோன்னு பீல் பண்ணி விட்டுட்டேன். ஆனா நம்ம ஆளு, "சரிடா வா இந்த பஸ்லயே போயிரலாம், இல்லேன்னா லேட் ஆயிடும்" னு சொல்லி பஸ்ல ஏறிட்டான்.

அவன் என்ன சொன்னான்னு கேட்க தோனாம நானும் ஓடி போயி அந்த பஸ்லயே ஏறிட்டேன். நின்னுட்டு போனாலும் பரவால்லைன்னு, நண்பனோட வேலை தான் முக்கியம்னு பஸ்ல ஏறி என்னை நானே சமாதனம் பண்ணிக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல நம்ம ஆளு எங்கிட்ட பணத்த குடுத்து மூனு கோயமுத்தூர் வாங்கிருன்னு சொல்லிட்டு முன்னாடி லேடிஸ் இருக்கற பக்கமா போனான்.

என்னடா மூனு டிக்கெட் வாங்க சொல்றான்னு கொழப்பத்துல நடத்துனர்கிட்ட ரெண்டுடிக்கட் மட்டும் வாங்கி வைச்சுகிட்டேன். நானும் லேட்ட வந்து பஸ்ஸ நிறுத்தி ஏறுன அந்த பிகரு இந்த பக்கம் பாக்கும், அப்படி இப்படின்னு இம்ப்ரெஸ் பண்ணனும்னு கனவுகண்டுட்டே இருந்தேன்.

நம்ம ஆளு முன்னாடி ஸ்டெப்ஸ்ல நின்னுட்டு என்னமோ அவனுக்கு அவனே பேசிட்டிருந்தான். அங்க போயி எப்படி பேசனும்னு ரிகர்ஸ் பண்ணிக்கிறான் போல... நேரம் ஆக ஆக பின்னாடி இருந்த காடையர்கள் எல்லாம் முன்னாடி போயி, அந்த பிகரின் சிக்னல் நாட் ரீச்சபில் டிஸ்டன்சுக்கு என்ன பின்னாடி தள்ளிட்டானுங்க...

அப்படி இப்படின்னு ஒரு வழியா காந்திபுரத்துல பஸ் நின்னுது. சரி இப்பவாவது அந்த பிகர பக்கத்துல போயி பாக்கலாம்னு அவசரமா கீழ இறங்கி போனா... அந்த பிகரு என்ன பாக்க நின்னுட்டு இருந்துச்சு. எனக்கு.."எகிரி குதித்தேன் வானம் விழுந்தது" மாதிரி இருந்துது...

அந்த நேரம் பாத்து நம்ம ஆளு குறுக்க வந்து நின்னான். எனக்கு வந்த கோபத்துக்கு......சரி விடுங்க.. இவனோட உதவி நாளைக்கு நானும் அந்த பொண்ணும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போறப்ப தேவைப்படும்னு நெனச்சுகிட்டு அமைதியாயிட்டேன்.

ரெண்டுபேரும் கொஞ்சம் முன்னாடி போயி ஒரு ஆட்டோ பக்கத்தில் நின்றோம். அவன் ஏதோ ஆட்டோ காரர் கிட்ட பேசிட்டு இருந்தான். அந்த பிகரு என்னை பாத்து என் பின்னாலேயே வந்திட்டு இருந்த்துச்சு.. ஆஹா.. இத்தனை நாளா என்னோட அருமை எனக்கே தெரியாம போச்சே... அப்படின்னு தலைய யெல்லாம் கோதிவிட்டுட்டு போற வர்றவனை எல்லாம் ஏளனமா பாத்துட்டு இருந்தேன். "சாருக்... சாருக்.. "ன்னு யாரோ கூப்டர மாதிரி இருந்துச்சு...

நம்ம ஆளுதான்.. வாடா போலாம்னு ஆட்டோல உக்காந்துட்டு கூப்டான்.. அவனையும் அப்படியே ஒரு லுக்கு விட்டுட்டு, அந்த பிகரு இருக்கிற பக்கம் திரும்பாம.. திமிரா போயி ஆட்டோல உக்காந்துட்டு ஹலோ சொல்லனும்னு நெனச்சுட்டு ஆட்டோல உக்கார போனா.. ஏற்கனவே அந்த பிகரு உள்ள உக்காந்துட்டு...ஹலோ சொல்லுச்சு...

எனக்கா.. ஒன்னும் புரியல... என்ன நடக்குதுன்னு சுதாரிக்கரதுக்குள்ள நம்ம ஆளு அது பக்கத்துல உக்காந்துட்டு இருக்கறத கவனிச்சேன். கண்ணெல்லாம் சுத்த ஆரம்பிச்சது.. உள்ள உக்காந்ததுக்கு அப்புறம்.. சாரிடா மாப்ள... உன்கிட்ட சொல்லாம மறைச்சுட்டேன்.. ஆனா என்னைக்கு இருந்தாலும் நீதான் எனக்கு முன்னாடி இருந்து எல்லாத்தையும் செய்வேன்னு தெரியும்.. இவளும் நானும் உயிருக்கு உயிரா (உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ன்னு மட்டும்தான் எனக்கு கேட்டுச்சு) காதலிக்கிறோம்னான். எப்படியும் எங்க வீட்ல எங்க காதலுக்கு சம்மதிக்க மாட்டாங்கன்னு தெரியும் , அதான் நாங்களே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். அதான் இன்னைக்கு நல்ல நேரம் பாத்து பேருர்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு.. நீதாண்ட எல்லாத்தையும் பாத்துக்கனும்னான்......

ஆனி....சாரூக்...கல்யாணம்.... வேலை.... அண்ணா ...காமராசர்..... அய்யோ............................

Saturday, December 13, 2008

பாடம்

நண்பர்கள் கூடி கேக் வெட்டி இருபத்தொன்பதாவது பிறந்த நாள் கழிக்கப்பட்டு விட்டது. எத்தனை மாற்றங்களை இயற்கை வாழ்வில் ஏற்படுத்தியிருந்தாலும், சக்கரம் கட்டிய கால்களுடன் ஊரைச்சுற்றி திரிந்து, அப்பா கொடுத்த பத்து பைசாவுக்கு இரண்டு பால்கோவா கட்டி வாங்கி ஒன்றை அக்கா முன் தின்று வெறுப்பேற்றி அழ வைத்து பிறகு மற்றொன்றை அவளுக்கு தந்து அதனையும் பங்கு கேட்டு வாங்கித்தின்ற அந்த நாட்கள் அசை போட மட்டுமல்ல மீண்டும் அனுபவிக்க ஏக்கம் தருபவை.

மங்கிய தெரு விளக்கு வெளிச்சத்தில் மணலில் வீடுகட்டி நண்பர்களுடன் விளையாடிய நாட்களை சோடியம் வேப்பர் வெளிச்சத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் அம்மா அடித்தால், பாட்டியிடம் ஓடி தஞ்ச மடைந்து கொள்வேன். அவளுக்கென்று ஒரு தனி உலகம் இருந்தது. அங்கு என்னைத்தான் ராஜாவாக வைத்திருந்தாள். வெளியே எங்கு போனாலும் என்னையும் கூட்டிச்செல்வாள். என் தாத்தா எப்போது என்னை வெளியில் கூட்டிச்சென்றாலும், தோழில் வைத்துத் தான் தூக்கி செல்வாராம். அவர் தலையில் அமர்ந்து ஊரை சுற்றியது, பின்பொரு நாளில் 10 பைசாவுக்கு செய்த யானை சவாரியை போல் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவர் மறைந்த பின்பு பாட்டிதான் எனக்கு தாத்தாவும். ஆனால் அவளால் தாத்தா போல் என்னை தோழில் தூக்கி வைக்க முடியாது. ஏதொ காரணத்தால் அவள் முதுகு கூண் விழுந்து குணிந்து தான் நடப்பாள். இருந்தும் அவள் என் கை பிடித்து அழைத்து செல்வது தாத்தாவுடன் போவது போன்றே இருந்தது. தன் நண்பர்களிடம், "எம் பேரன்" என்று இருமாப்புடன் சொல்வதை கவனித்திருக்கிறேன். அவர்களோ என் தாத்தாவை போலவே இருக்கிறேன் என்பதும், அதற்கு ஆமாம் என்பது போல், "அக்காங்... அவுங்க அப்பாராட்ட ஒரெடத்தில அடங்கிறதில்லை" என்று என் பெருமைகளை சொல்லத் தொடங்குவாள். அவளின் செல்லப்பரிசு கரும்பு சர்க்கரை. அவள் சொல்லும் வேலைகளை செய்ததும் எனக்குத் தருவாள் அந்த பரிசை. பாலில்லாத காபியில் அந்த சர்க்கரை சேர்த்த சுவை எனக்கு கசப்பை தரும். ஆனால் அவள் விரும்பிக் குடிப்பது அதுதான்.

வியாழன் என்பது எனக்கும் என் சகோதரிக்கும் வாரத்தில் இன்னொரு ஞாயிற்றுக் கிழமை. அன்று அம்மா சந்தைக்கு போய்விடுவாள் என்பதால் எங்களுக்கு பள்ளி விடுமுறைவிடப்பட்டு பாட்டியிடம் ஒப்படைத்து விடுவார்கள். எப்படியும் விளையாட்டில் இரண்டு மூன்று தடவை அக்காவை அழ வைத்துவிடுவேன். அப்போதெல்லாம் பாட்டிதான் எனக்கு நற்சான்று வழங்குவாள் என் பெற்றோரிடம். அதையும் மீறி என்னை திட்டினால், அன்று வீடு போர்களம் தான். அதனால் அதற்கான பூசை வேறொரு நாள் வழங்கப்படும்.

அந்த நாட்களில் அந்த வீதியில் தொலைக்காட்சிப் பெட்டியிருந்தது எங்கள் வீட்டில் மட்டும் தான். அதனால் தூர் தர்சனில் ஜீனோ, ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக் கிழமை தமிழ்ப்படம் போடும் நேரங்களில் எங்கள் வீடு ஒரு திரையரங்கு போல காட்சியளிக்கும். பாட்டிதான் அருகில் அமர்ந்திருப்பாள். அவள் மடியில் அமர்ந்துதான் எல்லா பார்வையாளர்களையும் கவனித்துக் கொண்டிருப்பேன். பிறகு எல்லோர் வீட்டிலும் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வந்தும் எங்கள் வீட்டில் மட்டும் கருப்பு வெள்ளை பெட்டியில் படம் பார்த்தபோதும் பாட்டிதான் அருகில் அமர்ந்திருப்பாள்.

தேர்தல் நேரங்களில், பாட்டிக்கு அவ்வளவு மரியாதை இருக்கும். காரில் வந்து கூட்டிச்செல்வார்கள் வாக்களிக்க. துணையாக என்னையும் கூட்டிச்செல்வாள். வாக்குச் சாவடி செல்வது அதுதான் முதல் தடவை. துப்பாக்கியுடன் நின்ற காவலரை பார்த்து சிறிது பயந்து கால்கள் அடியெடுக்க மறுக்கும். பாட்டிதான் இழுத்துச் செல்வாள். "பேரனா?" என்று கேட்டு உள்ளே அனுமதிப்பார் அந்த காவலர். பாட்டிக்கு கருப்பு மை வைத்தபின் எனக்கும் வைகச்சொல்லி கேட்டு வாங்கி வைத்துக் கொள்வேன். ஓட்டுப்பெட்டிவரை கூட்டிச்சென்று, என்னைத்தான் சின்னம் சொல்லி முத்திரை குத்த சொல்வாள். ஓட்டு போட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வருவோம். எப்படியும் ஒன்றிரண்டு பெரிசுகள் துணைக்கு சேர்ந்து அரசியல் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்வோம்.

அப்பொதெல்லாம் எனக்கு தெரிந்து அவள் உடல் நிலை சரியில்லையென்று மருத்துவரிடம் சென்ற நினைவில்லை. திருநீரு மந்திரித்து பாடம் சொல்லும் பெரியவரிடம் தான் மாலை நேரத்தில் என்னையும் அழைத்து செல்வாள். எனக்கும் பெரும்பாலான நேரங்களில் அவர்தான் பாடம் போட்டிருந்தார். அவர் தன்னை ஒரு பெரிய மந்திரவாதி போலெல்லாம் காட்டிக் கொண்டதில்லை. மெலிந்த தேகத்தோடு நெற்றி நிறைய திருநீரு வைத்து,சட்டை அணிந்து கொள்ளாமல் வெள்ளை வேட்டி மட்டும் அணியும் காங்கிரஸ் காரர். ஏதொ ஒரு வகையில் அவர் எங்களுக்கு உறவுக்காரர் என்பதால், அங்கு உபசரிப்பும் நலம் விசாரிப்புகளும் எப்போதும் இருக்கும். அவரின் பிளைப்பு நெசவுத்தொழில் தான். அப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் அதுதான் தொழிலாக இருந்தது. நாங்கள் சென்றதும் அவர் மங்கிய ஒளியில் இருக்கும் வீட்டில், தறியிலிருந்து வந்து நலம் விசாரிப்பார். பாட்டி சிறிது நேரம் கதைகளை பேசிக்கொண்டே தன் கழுத்து வலியையொ, காய்ச்சலை பற்றியோ சொல்வாள். கழுத்து வலியாக இருந்தால் இரண்டு உலக்கைகளை பாட்டொயின் இரண்டு கைகளில் கொடுத்து சிறிது நேரம் நிற்க வைத்து விடுவார். பின்னார் தனது பூசை அறையில் உள்ள அனைத்து சாமிகளிக்கும் பாட்டு பாடி திரு நீரு கொடுப்பார். அதனை நெற்றியில் பாட்டி இட்டுக்கொண்டு எனக்கும் வைத்து விடுவாள். சிறிது நேரம் பேசிக்கொண்டு பாட்டி தான் நிவாரணம் அடைந்ததாக உணர்ந்ததையும் சொல்லுவாள். பின் பெரும்பாலான நேரங்களில் அங்கேயே உணவு உண்டுவிட்டு கிளம்புவோம். மந்திரம் சொல்லும் பெரியவர் வருபவர்களிடம் கேட்கும் ஒரெ பொருள் கற்பூரம்.

அப்போதெல்லாம் எனக்குள்ளே அவரைப்பற்றி நிறைய கேள்விகள் எழும். வருமையில் இருந்த அவர் ஏன் வைத்தியம் செய்ததற்கு காசு வாங்குவதில்லை? அவர் சொல்லும் பாடம் மற்றும் மந்திரத்தினால் எப்படி வலியும் பயமும் நோயும் குணமாகிறது? போன்ற கேள்விகள் விடையில்லாமல் இன்னும் இருக்கின்றன.

Friday, November 28, 2008

இந்திய அரசே.. இந்தியர்களை காப்பாற்று

மும்மையில் தீவிர வாதத்தின் பிடியில் சிக்கி உயிரிழந்த அனைத்து மனிதர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆறுதல்கள். பல உயிர்களை காப்பற்ற தங்கள் உயிரை கேடையமாக்கிய காவலர்கள், இராணுவ வீரர்கள், தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் விடுதியின் பணியாளர்களுக்கு எமது இரங்கல் மற்றும் வணக்கங்கள்.

இழப்பின் கொடுமை தமிழினத்தைவிட வேறு எந்த இனமும் அதிகமாக அனுபவித்திருக்காது. அந்த அடிப்படையில் இந்திய அரசை இவ்வாறு கோருவதில் எமக்கே அதிக கடமை இருக்கிறது.

"இந்தியர்களை பாது காக்க இந்திய கடற்படை மற்றும் அனைத்து படைகளையும் பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு ஒரு நாட்டுக்கு வாடகைகு அனுப்பியதால்தான் இந்த விளைவுகள் என்பதை சொல்ல இந்தியன் என்ற தகுதி போதுமென்றே நினைக்கிறேன்."

Friday, November 7, 2008

அரசியல் சதுரங்கம் 1

ஆட்சி, பதவி, மரியாதை, ஒப்பத்தங்கள் என்ற பல பரிமானங்களில் பயணம் செய்யும் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் விமர்சனம் செய்யும் தகுதி தனக்கில்லை என்றாலும் அவர்களின் செயல்கள் ஏதாவது ஒருவகையில் தன்னை பாதிக்கவே செய்கிறது என்ற பாமரனின் குரல் பெரும்பாலான நேரங்களில் கவனிக்கப் படுவதில்லை.

தி மு க - கலைஞர்

தன் இளம் வயதில் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு திராவிட கொள்கைகளையும், பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாட்டையும் மக்களிடம் கொண்டுசேர்த்ததில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார் என்பது கழகம் அவருக்கு கொடுத்த பதவிகள் சொல்லும். அடிமட்ட தொண்டனில் தொடங்கி தலைமை பொறுப்பை தன்வசப் படுத்த, அற்பணிப்பை விட அவரின் அரசியல் சாமர்த்தியம் முக்கிய காரணம். போரில் போர் தர்மங்கள் எப்படியோ, அதே போல் அரசியலில் தர்மம் இருக்கக் கூடாது என்பதுதான் அரசியல் தர்மம். அன்று இருந்த கலைஞர் தான் இன்றும் இருக்கிறார் என்றால் அவரிடம் சில கேள்விகள்,

1. அறியாமை இருளகற்ற தொடங்கிய இயக்கத்தின் தலைவர், மக்களின் அறியாமையைய் தன் ஆட்சிக்கு படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டது, பகுத்தறிவா?

உதாரணம்:

1. இலவச தொலைக்காட்சியினால் ஒரு குடும்பத்தை வருமையில் இருந்து உயர்த்த முடியும் என்ற கண்டுபிடிப்பு பகுத்தறிவா?.

2. ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை தனிமனிதனின் வருமானம் ஒரு ரூபாய் அரிசி வாங்கும் அளவிலேயே வைத்திருப்பதுதான் பகுத்தறிவு கோட்பாடா?

3. பெரியாரின் கொள்கைகளை இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் இத்தனை ஆண்டுகள் பரப்பியும் சாதியையும், சாமியின் பெயரால் நடக்கும் கூத்துக்களையும் ஏன் ஒழிக்கமுடியவில்லை?

4. பொதுவுடமை தத்துவத்தில் வளர்ந்த இயக்கத்தில் எத்தனை முதலாலிகள், மக்கள் வரிப்பணத்தை தின்றுகொண்டு அமைச்சர் பதவி அனுபவிக்கிறார்கள் என்று தெரியுமா, தலைவருக்கு?

5. மக்களாட்சி தத்துவத்தை முன்னெடுக்கும் இயக்கம் மன்னராட்சி முறைபோல் வாரிசுக்கு பட்டம் கட்டுவது ஏன்? ஸ்டாலினும், அழகிரியும், கணிமொழியும் இயக்கத்துக்காக உழைத்தவர் என்றால் கழகத்தில் வேறு யாருமே உழைக்கவில்லையா? அப்படியானால் உழைக்காத தொண்டர்களை உருவாக்கியது யார்?

6. உங்களைப்போல் அடிமட்ட தொண்டன் இன்று தலைமை பதவிக்கு வரக்கூடிய சூழலை (உங்கள் குடும்பத்தை தவிற)இயக்கம் வைத்திருக்கிறதா?

இவையெல்லாம் அடிப்படை கோட்பாட்டின் கீழ் அமைந்த கேள்விகள். அன்றாட அரசியலில் அர்த்தம் புரியாம் தவிக்கும் பாமரனின் மனதில் ஆயிரம் கேள்விகள்.

Friday, October 31, 2008

சாப்ட்வேர் இஞ்ஜினியர் - நேற்று - இன்று

நேற்று:

பக்கத்து ரூம் நண்பர்கள் :அவனுக்கென்னப்பா ஒன்னாந் தேதியான ரொக்கமா இருபதாயிரம், முப்பதாயிரம் சம்பளம் வாங்குறான்.
---------
ஆட்டோகாரர் : சார்.. பாத்து ஒரு நூறு ரூபா கூட போட்டு குடு சார். டைடல் பார்க்ல வேலை செய்யற... ஆட்டோக்காரங்கிட்ட கணக்குப் பாக்கிறயே சார்.

சாப்ட்:(மனதுக்குள்) டைடல் பார்க் முன்னாடியே இறங்கி கொஞ்ச தூரம் நடந்து வந்திடனும்.
-----------
டாக்டர்: என்ன வேலை பாக்குறீங்க...

சாப்ட்: (மனதுக்குள்)பல் வலிக்கு மருந்து குடுக்க நான் என்ன வேலை செய்யறேன்னு சொல்லனுமா.... சாப்ட்வேர் இஞ்ஜினியர்..

டாக்டர் : அப்படிங்களா.... இதுல உங்க பல்லு வலிக்கு மருந்து எழுதிருக்கேன். பீஸ் மூனாயிரம்.

சாப்ட் : (மனதுக்குள்)நெஞ்சு வலிக்குதுங்க டாக்டர்.

------------
போக்கு வரத்து காவலர் : ஏப்பா இவ்வளவு வேகமா வண்டிய ஓட்டிடு எங்க போற.(மத்திய கைலாஸ்-ல் நின்னுட்டு.)

சாப்ட் : சார்.. ஸ்பீடு லிமிட்ல தான் வந்தேன். (அதான் ஐடி கார்ட பாத்துட்டீங்கள்ள.. வண்டிய தள்ளிட்டு வந்தாலும், ஓவர் ஸ்பீடுன்னு புடிப்பீங்க..நேத்து லேட் நைட் வேலை செஞ்சது, காலைல கிளையன்ட் மீட்டிங்குன்னு சொன்னா விட்டுடவா போறீங்க..)

போக்கு வரத்து காவலர் : பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க... எந்த கம்பெனி.. சரி ஒரு 500 ரூபா பைன் கட்டிருங்க.

சாப்ட் : பணத்தை கொடுத்து விட்டு. (மனதுக்குள்)இனிமேல் இந்த ஐ.டி கார்ட வெளிய மாட்ட கூடாது..
------------

வீட்டு புரோக்கர் : சார்.. இப்பல்லாம் வீடு கிடைக்கறதே பெரிய விசயம். நீங்க சாப்ட்வேர்ல ஒர்க் பண்றேன்னு சொல்றீங்க... உங்களுக்காக ஒரு வீடு பாத்து வச்சுருக்கேன். வாடகை பதினைஞ்சாயிரம் ரூபா. கமிசன் எழாயிரத்து ஐநூறு.

சாப்ட் : (மனசுக்குள்..) இதுக்கு முன்னாடி குடியிருந்தவர் மூவாயிரத்து ஐநூறு ரூபாதான் குடுத்துட்டு இருந்தாருன்னு பக்கத்து வீட்ல சொல்றாங்க.
----------

பெண்வீட்டார் : மாப்ளை சாப்ட் வேர் இஞ்ஜினீர்ங்கரதால நாங்க வேற எதப்பத்தியும் கவலை படலை. இந்த 100 சவரன் நகையும், காரும், ரொக்கம் 10 லட்சம்தான் என்னால என் பொண்ணுக்கு செய்ய முடியும்.

சாப்ட்: (மனதுக்குள்..) எனக்கு பொண்ணை குடுக்கிறீங்களா? இல்லை என் வேலைக்கு பொண்ணை குடுக்குறீங்களா?
... சரி இவ்வளவு தொந்தரவு பண்றதால சரி.. உங்க பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.

------------

இன்று.... நாளை..

Wednesday, October 29, 2008

செய்தி திணிப்பு 2

இன்றய செய்தி திணிப்பு

தி ஹிந்து.

1. தேஸ்முக் வட இந்தியர்களுக்கு ஆறுதல்.
2. ஆனத் உலக சாம்பியன்.
3. நில நடுக்கம் காரணமாக பாகிஸ்தானில் 170 பேர் பலி.
4. மஹாராஸ்ட்ரா வில் நடந்த சம்பவங்களுக்கு மத்திய அரசு. - மாயாவதி.
5. பாராமுலாவில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.
6. ஜெயலலிதாவுக்கு வந்த மிரட்டல் கடிதம் மீதான மனுவை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.
7. பாதுகாப்பு குறைவான மாநிலங்களுக்கு ரயில் போக்கு வரத்தை நிருத்த தயங்க மாட்டோம். - பிகார் மக்கள் மகாராஸ்ட்ராவில் தாக்கப் பட்ட சம்பவத்துக்கு லாலு பிரசாத் எச்சரிக்கை.
8. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை - கருணாநிதி.
9. தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பின் பாதுகாப்பை மீறி குண்டுகள் வீசி சென்றுள்ளனர்.

இலங்கையில் கள முனையில் 60 ராணுவ வீரர்கள் பலி மற்றும் சீமான், அமீர் பினை விடுதலை போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

தினமலர்

1.ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் மிரட்டல்! தாய்லாந்தில் இருந்து வந்தது எச்சரிக்கை.(எழுதியது விடுதலைப் புலிகள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட வில்லை. இந்த சூழ்நிலையில் புலிகளின் இயக்கம் இது போன்ற செயல்களை செய்திருக்க வாய்ப் பில்லை என்பது அறிவுள்ள எவர்க்கும் விளங்கும்)
2. பாகிஸ்தானில் பூகம்பம்: 200 பேர் பலி.(மற்ற பத்திரிக்கை களில் 170.)
3. இலங்கை பிரச்சனைக்கு ராஜிவ் வழியில் தீர்வு காணவேண்டும். - கருணாநிதி.
4. அடுத்த தாக்குதல்! மும்பையில் உ பி வாலிபர் கொலை. அமர்சிங் மாயவதி கடும் எரிச்சல்.
5. நிதி நெருக்கடி நிலவரம். சிதம்பரம் ஆலோசனை.
6. கொழும்பு, மன்னார் முகாம்களில் புலிகள் குண்டு வீச்சு.
7. ஆனந்த் உலக சாம்பியன்.

புலிகளின் கொழும்பு விமான தாக்குதல், கள முனையில் 60 ராணுவ வீரர்கள் பலி மற்றும் சீமான், அமீர் பினை விடுதலை போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

தின தந்தி

1. பாகிஸ்தானில் நில நடுக்கம் : 170 பேர் பலி
2. இயக்குனர்கள் சீமான், அமீர் பினையில் விடுதலை.
3. இலங்கை தமிழர்களுக்கு 2 1/2 கோடி கருணாநிதியிடம் வசூல்.
4. ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்.
5. உலக சதுரங்கம் - ஆனந்த் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.

தின மணி

1. இன்னும் பத்து நாட்களில் தனியார் நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கை.
2. பாகிஸ்தானில் நில நடுக்கம் 170 பேர் பலி
3. கனடாவில் இருந்து ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்.
4. நீலிக்கண்ணீர் வடிக்கிறார் இலங்கை அதிபர் - ராமதாஸ்
5. பா ஜா கா ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு.
6. உ. பி இளைஞர் மும்மையில் அடித்து கொலை.
7. இலங்கை ராணுவத்தினர் 60 பேர் பலி.
8. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ஆனந்த்.

தமிழர் எழுச்சியை தடுக்கும் நாளேடுகளை உங்கள் இல்லத்திலும், அலுவலகங்களிலும் தவிர்க்கவும்.

Tuesday, October 28, 2008

செய்தி திணிப்பு 1

சில இந்திய நாளேடுகளின் செய்தி திணிப்பு மற்றும் திரிப்புகளை இந்த தொடர் பதிவின் மூலம் வாசக நெஞ்சக்களின் பார்வைக்கு.


தி ஹிந்து

சிறப்பு பத்தி: நாங்கள் அரசியல் தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளோம்.- ராஜ பக்ச.
http://www.hindu.com/2008/10/29/stories/2008102957320100.htm

முதன்மை செய்தி: நேர்காணல் : நானே அரசியல் நடவடிக்கைகளை முன்னின்று நடத்துவேன் - ராஜ பக்ச.
http://www.hindu.com/2008/10/29/stories/2008102960181200.htm

அமைதியை காப்பதில் ஊடகங்கள் சமூக அக்கறை கொண்டிருக்க வேண்டும் - ராம் http://www.hindu.com/2008/10/29/stories/2008102960181200.htm

வான் தாக்குதலுக்குப் பிறகு கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
http://www.hindu.com/2008/10/29/stories/2008102960191200.htm

கொழும்பின் இரவில் வானில் அரங்கேரிய நாடகங்கள்
http://www.hindu.com/2008/10/29/stories/2008102957380100.htm

இலங்கை தமிழர்களுக்கான தமிழ் மக்களின் உதவி குவிகின்றது.
http://www.hindu.com/2008/10/29/stories/2008102957310100.htm

செய்திகளை அதனின் முக்கியத்துவம் பொறுத்து அதனை முதன்மை படுத்துவதில் தொடங்கி
ஹிந்துவின் தமிழ் உணர்வு செய்திகளின் இருட்டடிப்பும் சிங்கள அரசின் அடிவருடுவதும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


தின மலர்

மகிழ்ச்சி மத்திய அரசுக்கு - நெருக்கடி நீங்கியதால். பாராளுமன்ற தேர்தல் வரை இழுத்தடிக்க முடிவு.

திமுக வுக்கு ஆதரவாக காங்கிரஸ் நடக்கிறது - ஜெயலலிதா.

தமிழகத்தில் ஊடுருவிய விடுதலை புலிகள்?(தினத்தந்தி செய்தியை பார்க்க)

நடிகர் சங்க உண்ணாவிரதத்துக்கு கட்டுப்பாடு.
ரஜினி, கமல் பங்கேற்கலாம்

இலங்கை தமிழர் பிரச்சனையில் ரஜினி தனி ஆவர்த்தனம் - ரசிகர்களின் அதிருப்தியை சிதரடிக்க திட்டம்

தமிழக அரசு சொந்த நிதியிலிருந்து உதவ வேண்டும் - ராமதாஸ்

வன்முறையாளர்களை எதிர்ப்போம் - காங் தலைவர் தங்க பாலு.

சீமான், அமீர் சாமீன் மனு அக் 31 வரை தள்ளிவைப்பு

தினத்தந்தி

இலங்கை தமிழ்ர்களுக்கு நிவாரணம் குவிகிறது

விடுதலை புலிகளின் விமானம் கொழும்பு நகரில் குண்டு வீச்சு

இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல்தீர்வு காண அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் - என். வரதராஜன். கம்யூனிஸ்டு தலைவர்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்கள் பெரிய அளவில் உதவி செய்ய முன் வரவேண்டும். மு. கருணாநிதி

இலங்கையில் தவித்த தமிழக மீனவர்கள் ஆறுபேர் விமானம் மூலம் சென்னை வருகை.

இலங்கை தமிழர் பிரச்சினையில் தீர்வு காணும் வரை நமது கூட்டு மூயற்சி தொடர வேண்டும் - ராமதாஸ்

படகில் அகதிகளாக வந்த இலங்கை தமிழ் மீனவர்கள் ஐந்துபேர் இந்திய கடற்படையிடம் சிக்கினர்.(தினமலர் இவர்களை புலிகள் என்று குறிப்பிட்டுள்ளது)

இலங்கை தமிழர் பிரச்சினையில் இரயில் மறியல் நடத்த திட்டம் - புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ சி சண்முகம்.

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியிருந்தால் என்னை தாராளமாக கைது செய்ய்யுங்கள்.- திருமா.

இலங்கையில் போர் நிறுத்தம் மட்டுமே மன நிறைவை தரும் - தா. பாண்டியன். கம்யூனிஸ்ட்.


தமிழர் விரோத ஏடுகளை அடையாளம் கண்டு கொள்வீர்.

Thursday, October 23, 2008

விடுதலையும் சனநாயகமும்

விடுதலை என்பது யாராலும் அடிமையாக்கப் படாமல் இருப்பது மட்டுமல்ல. தான் நினைத்ததை சொல்லவும், செய்யவும், செயலால் வரும் விளைவை அனுபவிப்பதும், கொண்டாடுவதும் கூட.

மக்களாட்சியில் மக்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும். முக்கியாமான முடிவுகள் எடுப்பதில் தொடங்கி அயலுறவுக் கொள்கை வரை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மேல் சொன்ன இரண்டும் உலகின் மிகப்பெரும் விடுதலை அடைந்த மக்களாட்சி நாடான இந்தியாவுக்குப் பொருந்துமா என்பது இந்திய குடிமக்கள்தான் சிந்திக்கவேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல், அதில் பெரும்பாண்மை மக்கள் வாக்களித்து தேரிவு செய்யும் நபரே முதலமைச்சர், பிரதம மந்திரி(வடக்கு சார்ந்த பதவி என்பதால் வடமொழி, மற்றபடி இரண்டும் ஒரே கருப்பொருளை கொண்டுள்ளன).

இவர்களின் பதவியின் பெயரிலேயே யார் இவர்கள் என்பது விளங்கும். ஆனால் முதல் அமைச்சரும், பிரத மந்திரியும் மன்னனாக முடியாது. மன்னன் சொல்லும் முடிவுகள் மற்றும் திட்டங்களை செயல் படுத்த வேண்டும். அப்படியா இருக்கின்றது இன்றைய சனநாயகம்? இந்தியா விடுதலை பெற்ற 1947 களில் வேண்டுமானால் மக்களின் கருத்தை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கேட்பது சரியாக இருந்திருக்கலாம்.

வெண்ணிலாவிற்கு விண்கலம் அனுப்பிய 2007லில் மக்கள்(மன்னன்) கருத்தை முக்கியமான முடிவெடுக்கும் நேரங்களில் கேட்பது ஒன்றும் நடக்காத செயலில்லை. சரி.. அப்படி முடியாமல் இருக்குமானால், இதே மக்களாட்சிதான் இனி வரும் காலங்களிலும் இருக்குமா?
ஐம்பது ஆண்டுகாலம் மக்களின் பெயரால் மண்ணையும் மக்களின் வரிப்பனத்தையும் தின்ற இந்த அமைச்சர்கள் உண்மையான மக்களாட்சியை கொண்டுவர என்ன முயற்சி செய்துள்ளனர்?.அல்லது இனிமேல் செய்வதற்கான திட்டங்கள் ஏதாவது இருக்கிறதா?

இங்கு காஷ்மீரில் ஒரு சட்டம், ஒரிஸ்ஸாவில் ஒரு சட்டம், தமிழகத்தில் ஒரு சட்டம். காஷ்மீரில் ஹூரியட் பிரிவினை பேசினால், அது பேச்சு சுதந்திரம். தமிழ்நாட்டில் பேசினால் தேச துரோகம். அப்படியானால், காஷ்மீர் இந்தியாவின் அங்கம் இல்லை என இந்திய அரசே ஒத்துக்கொள்கிறதா?.

இங்கு சட்டம் என்பது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் ஆயுதமாகவே மாற்றிவிட்டனர் இந்த அமைச்சர்கள். மகுடம் தரிக்க வேண்டிய மன்னன்(மக்கள்) மண்டியிட்டு கிடக்கிறார்கள்.

இருக்கும் வேட்பாளர்களில் எந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மட்டுமே மக்கள் தீர்மானிக்க வேண்டியது, இந்த சனநாயகத்தில். யாரை வேட்பாளரக நிறுத்த வேண்டும் என்பது கட்சிகளின் தலைவர்கள்தான், அவரின் செல்வாக்கை(!) பொறுத்து, நியமனம் செய்வார்கள். தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளார் மக்கள்(மன்னன்) தலையெழுத்தைய மாற்றக்கூடிய வல்லமை பொறுந்திய அமைச்சர்களாகின்றனர். இது தான் மக்களாட்சியா?

காலையில் எட்டு மணிக்கு தொடங்கி மாலை ஆறுமணி வரையும், அதற்கு மேலும் அலுவலகத்தில் வாழ்ந்துவிட்டு மீதி நேரத்தை தொலைக்காட்சிப் பெட்டியில் கழிக்கும் மக்களாட்சி மன்னர்கள் வாழ்க்கை முறையால், எதிர்காலத்தில் யாராவது ஒருவர்க்கு அடிமையாகவே இருந்துகொண்டு தன் வாழ்க்கையையும், தன் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையையும் அடகுவைத்து விடவேண்டியதுதான்.

தன்னுடைய தலையெழுத்தை தானே தீர்மானிக்க முடியாதவனை அடிமையென்ற சொல்லை தவிற வெறெந்த சொல்லும் அடையாளப்படுத்தாது. அப்படித்தான் இந்த உலகின் மாபெரும் மக்களாட்சி நாட்டின் குடிமக்கள் இருக்கின்றனர். சிந்திக்க சொல்லில் கொடுத்தவர் தந்தை பெரியார். நேர்மையின் இலக்கணம் கர்ம வீரர் காமராசர். அறிவின் ஊற்று அண்ணா. இவர்கள் காலத்தில் வேண்டுமானால் உண்மையான மக்களாட்சி இருந்திருக்கலாம். இன்றைக்கு ஆட்சியாளர்கள் மக்களை(மன்னனை) ஆணையிட(வாக்களிக்க) கூட அனுமதிக்காமல் அடித்து வீட்டுக்கு அனுப்பி, அவன் பெயரில் அவர்களே அதை செய்து கொள்கிறார்கள். ஆட்சிக்கு வந்ததும் மன்னனை(மக்களை) மதியிழக்க, மது(டாஸ்மாக்), மாது(மானாட மயிலாட)மற்றும் இன்ன பிற இலவசங்கள் கொடுத்து போதை யேற்றுகிறான்.

இதையெல்லாம் எதிர்க்க மக்கள் ஒன்று திரண்டால், சாதி, மொழி, மதம் என்று சொல்லி ஒரு ஊசியை போட்டு படுக்கவைத்து விடுகிறான்.இன்றைய இளவரசர்களோ, நாடக நாயகர்கள் பின்னாலும், மேற்கத்திய கலாச்சார மோகத்தினாலும் தான் யாரென்று தெரியாமலே அழிந்து போகிறான். இவர்கள் விழிக்காத வரை இந்த அமைச்சர்கள் தான் அமைச்சராட்சி ந்டத்திக் கொண்டிருப்பார்கள்.

சனநாயகம், அது இறந்து விடவில்லை, ஆனால் அது இந்தியாவில் இல்லை.

Tuesday, October 14, 2008

பூனைக்கு மணி கட்டிய புலி

செப் 9, அதிகாலை மணி 3. சூரியன் வந்து தூக்கம் கலைப்பதற்குள், நீண்ட துயிலில் இருந்த தமிழினத்தையும், சூரியனையும் எழுப்ப வரலாறு குறித்த கொடுத்த நேரம். பகை என்னும் நெறுப்பு எல்லாத் திசையிலும் பரவியிருந்த போதும் சிறகு முலைத்த இரண்டு புலிகள் வன்னிக்காட்டின் மேல் பறந்து, "என் கண்ணில் யாரும் தப்ப முடியாது" என்று இருமாப்புடன் விழித்திருந்த வான் கண்காணிப்பு பொறிகளின் கண்களில் மண் தூவி இடியை எச்சம் போல் தலையில் இறக்கிச் சென்றன பறக்கும் புலிகள்.

கண் விழிப்பதற்குள், கண்கள் குருடாகி வானம் பார்த்து வீழ்ந்தது சிங்களக் கொடி. விழுந்த சிங்களத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருந்த வல்லரசின் துருப்புக்களும் புலியின் வான் குண்டுக்கு தப்ப வில்லை. அங்கே அண்டார்டிக் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அவர்களை அங்கவீனப் படுத்தியது தொடர்பாக இந்தியப் பேரரசு எந்த கவலையும் வெளியிடவில்லை என்பது கியாஸ் தியரி.

அரசியல் அஞ்ஞானி, வன்முறை விஞ்ஞானி என்றெல்லாம் பெயர் சூட்டிப்பார்த்த அரசியல் ஞானிகளின் தலையில் குட்டி, பாடம் புகட்டிவிட்டான் யாழின் மைந்தன். வாரிக் கொடுத்து, ஆயுதங்கள் ஆயிரம் வாங்கிக் கொடுத்து, கூடிக் கூடி தீட்டிய திட்டமெல்லாம் இன்று குப்பை மேடானது. எதிரியின் விரல் கொண்டே அவன் கண்ணை குருடாக்கி நிலை குலையச் செய்ய இரண்டு குண்டுகளே போதும் அவனுக்கு.

தமிழினத்தை காவு வாங்க துடிக்கும் சிங்கத்தோல் போர்த்திய பூனைக்கு புலிகட்டிய மணி ஒலிக்கும் போதெல்லாம் விழித்துக் கொள்வார்களா இந்த கருப்பு, சிவப்பு என பல வண்ணங்களில் உலவும் இனக்காவலர்கள்?

Tuesday, August 5, 2008

மீண்டும் பள்ளிக்கு

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பள்ளி வாழ்கை என்பது எல்லோர் மனதுக்குள்ளும் பசுமையாக ஏதாவது ஒரு ஓரத்தில் அசை போடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. சேரன் தங்கர் பச்சான் ஏற்க்கனவே மேய்ந்த புல் தான் என்றாலும் சற்று தனிப்புல் மேய்ந்து நம்ம ஆசைய தீத்துகலான்னு குலதெய்வம் கருப்பராயன் கிட்ட சீட்டெழுதி போட்டு சம்மதம் வாங்கி ஆரம்பிக்கரேங்க. யாரவது இந்த சொறிப்பய மாதிரி மிரட்டல் பின்னூட்டம் போட்டால் அதுக்கு கருப்பராயன் தான் பதில் சொல்லுவான்.

கருப்பராயன் துணை

கதையின் ஆரம்பத்தை தொட குறைந்தது இருபதாவது நூற்றாண்டு வரையாவது செல்லவேண்டும். 1989 இன் நடுப்பகுதியில் புளியம்பட்டிக்குள் பெண்கள் மேல் நிலைப்பள்ளியும், இன்ன பிற மெட்ரிகுலேசன் பள்ளிகளும் வராத காலம். கோ.வே.கா மேல் நிலை பள்ளியை ஆண்களும் பெண்களும் பிரித்துக் கொண்ட காலம் அது. (கோ வே காளியப்பன் என்ற வள்ளல் அளித்த பல ஏக்கர் நிலம் மற்றும் பல உதவிகளினால் உருவானதுதான் அந்த பள்ளி. அவர் மட்டும் தனியாக ஒரு பள்ளி ஆரம்பித்திருந்தால் இன்று நானெல்லாம் ப்லாக் எழுதிக்கொண்டிருக்க மாட்டேன், எங்காவது ஒரு பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராகியிருப்பேன்.)


கதை சொல்லும் நானே கதையின் நாயகன் கந்தன் ஆனேன். அதுவரைக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாவது வரை படித்து விட்டு எப்போது இந்த வெள்ளைச்சட்டையும் காக்கி கால் சட்டையும் போடுவோம் என்ற ஆர்வத்துடன் அலைந்த பலரில் நானும் ஒருவன். அதுவும் ஒரு உயர் நிலை பள்ளியில் சேருவதென்பது ஏதோ கேம்ப்ரிட்ஜில் சேருவது போன்ற எண்ணத்தில் தான் காலரை தூக்கி கொண்டு சுத்தினோம். ஊ ஓ தொடக்கப் பள்ளியில் டி சி எனப்படும் பள்ளி மாற்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு முருகன் காலண்ட்ர் பார்த்து அம்மா சொன்ன ஒரு நல்ல தேதியில் பள்ளியில் சேர்க்க முடிவாகியது.

இந்த முறை முழு ஆண்டு விடுமுறை முடிவது என்பது எனக்கும் என் நண்பர்களுக்கும் துக்கத்தை தர வில்லை. மாறாக ஆர்வத்தை தந்தது. வெய்யிலில் கிரிகெட் விளையாடி விளையாடி கரிக்கட்டை ஆனது தான் மிச்சம். தினமும் காலை ஏழு மணியிலிருந்து சாப்பிடாமல் ஆறு ஏழு மேச் விளையாடியதெல்லாம் நினைத்தால் இப்போதும் அந்த காலத்துக்கு செல்ல ஞாபகப் பசியெடுக்கிறது.

மேட்ச் ஆரம்பிக்கும் முன் எப்படியும் ஒரு மூன்று நான்கு பேர் எங்கள் டீமுக்கு கேப்டனாக இருப்பார்கள். கேப்டன், அஸிஸ்டன்ட் கேப்டன், பவ்லிங்க் கேப்டன் அப்படி இப்படின்னு ஏதாவது ஒரு பேர்ல கேப்டன்களாகி டாஸ் ஸ்பின் பண்ணும் போது எவன் கேட்டது விழுகுதோ அவனே உண்மையான கேப்டனாகி விடுவான். அதுவும் எங்கள் டீம் ஒரு அற்புதமான டீம். அந்த கிரவுண்டுல அன்னைக்கு மொத்தமா ஒரு பத்துபேர் ஒரே டீமா இருக்கறதால எங்களை விட்டா அங்க மேச் விளையாடரதுக்கு, மத்த ஏரியா பசங்களுக்கு வேறு வழியில்லை. அதனால் நாங்கள் பண்ணும் சலம்பல்கள் எல்லாத்தையும் தாயுள்ளம் கொண்டு ஏற்றுக்கொள்வார்கள்.பூவாக இருந்தாலும் தலையாக இருந்தாலும் நாங்கள் தான் முதல் பேட்டிங். எங்கள் டீமின் கேப்டன்கள் டாஸ் ஸ்பின் பண்ண காசை மேலே எரிந்ததும் தலை பூ இரண்டையும் கேட்டுவிடுவார்கள். எதிர் அணியுன் கேப்டன் வாய் திறப்பதற்க்குள் எங்கள் டீமின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் களத்தில் க்ரீசை சரி செய்து கொண்டிருப்பார்கள்.

வேறு வழியில்லாமல் எதிரணியினர் பந்து வீச பந்தை எடுக்க போவர். எங்கள் டீமின் கேப்டன் ஒரு அரசியல்வாதிக்கான தகுதியுடன் அன்றே திகழ்ந்தார். அன்றைய மேட்ச்சுக்கான விதிகளை இரண்டு டீம் கேப்டன்களும் தீர்மானித்த பின் ஆட்டம் தொடங்கும். அம்பயர் ஆக நிற்க தமிழில் உள்ள அனைத்து கெட்டவார்த்தைகளும் கற்றுத் தேர்ந்த இரண்டு பேர் எங்கள் டீமில் உண்டு.ஆள் பற்றாக்குறை காரணமாக, பொதுவாக பேட்டிங் செய்யும் டீமிலிருந்து தான் அம்பயர் மற்றும் ஸ்கோரர்கள் இருப்பார்கள்.

ஸ்கோரர் அம்பயரின் பார்வையை சரியாக புரிந்து கொண்டு சச்சின் ரன்களையும் எங்களுக்காக சேர்த்துக் கொள்வான். எதிர்த்து கேள்வி கேட்கும் எதிரணியின் அறிவு ஜீவிகளுக்கு அம்பயர்தான் தனக்கு தெரிந்த மொழியில் பதில் சொல்வார். அதனால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அப்படி இப்படி என்று எங்கள் முழு திறமையையும் காட்டி எடுத்த இருபது முப்பது ரன்களுக்குள் எதிர் டீமை ஆல் அவுட் செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய சவால் கடைசியாக பேட்டிங் பிடித்து முதல் ஓவர் வீச வரும் என்னைப் போன்ற பவுலர்களின் கையில் கொடுத்து விட்டு கேப்டன் அவராலான உதவிகளை செய்ய ஆரம்பிப்பார். எப்படியும் ஓவருக்கு ஐந்து பந்துகள் மட்டும் வீச ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருக்கும். அதற்குள் விக்கெட் விழுந்தால் அடுத்த ஓவர் சண்டை போடமலே கேப்டன் கொடுத்து விடுவார். இல்லையென்றால் பல உத்திகளில் சண்டை போட்டு பந்தை பிடுங்கிக் கொண்டு முதல் பந்தை வீசி ஓவரை தனதாக்கி கொள்ளும் சாமர்த்தியமும் ஒரு பவுலரை பவுலர் என்று தீர்மாணிக்கும்.

எப்படியும் எதிர் அணி ஜெயித்து விடும் என்ற சூழ்நிலையில் எங்கள் கேப்டன் ஸ்கோரில் தவறு உள்ளது என்று ஐந்து ரன்கள் குறைத்து விடுவான். எதிர் அணியினர் சம்மதிக்க வில்லையென்றால் மேட்ச்சை புறக்கணித்துவிட்டு வெளியேற பவுண்டரியில் இருக்கும் எங்கள் அணியினர் தயாராக இருப்பார்கள். இதை புரிந்து கொண்டு தாங்கள் மாங்கு மாங்கு என்று வீசிய பத்து ஓவர்களுக்காகவாவது எங்களை பந்து வீச வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் நாங்கள் சொல்லும் ஸ்கோர் கரெக்சன் மற்றும் அவுட் களை எதிர் அணியினர் ஏற்றுக்கொள்வார்கள். இத்தனையையும் தாண்டி எதிரணியினர் வெற்றி பெற்றுவிட்டால் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்துக் கொண்டிருக்கும். தோல்வி பெற்ற கேப்டன் என கையெழுத்து போடுவது எங்கள் டீமின் 16வது பிளேயர் கேப்டனின் 2வது படிக்கும் தம்பி. இத்தனையையும் தாங்கிக் கொண்டு அடுத்த மேச் விளையாட தேதி கேட்கும் எதிர் அணியிடம், நன்றாக விளையாடியவர்கள் பெயரை குறிப்பிட்டு அவர்கள் அடுத்த மேட்சுக்கு வரக்கூடாது என்று நிபந்தனை விதித்து களைவோம். அதையும் சம்மதித்து வரும் அவர்களின் கிரிக்கெட் ஆர்வத்துக்கு நாங்கள் தலை வணங்குவோம்.

முழு ஆண்டுத் விடுமுறையை இப்படியே கழித்து ஒரு வழியாக ஆறாவதில் சேர்வதற்க்கான தேதி வந்தது.........

(தொடரும்)

Thursday, July 31, 2008

ஒரு நடிகனின் வேசமும் நாகரிக கோமாளிகளும்

"எல்லோருமே திருடங்கதான், சொல்லப்போனா குருடங்கதான்" ன்னு இசை ஞானி பாடின பாட்டு இன்னைக்கும் அப்படியே இருக்கு. ஆனா அதை பாடுவது போல் பாவனை செய்த சிவப்பு மனிதனின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. தன் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே சினிமாவை சேர்த்துக்கொண்ட ரசிகனுக்கு இவர் போன்ற வேசதாரிகளின் நடிப்பை சினிமாவுக்கு வெளியிலும் புரிந்து கொள்ள முடியாத பகுத்தறிவு பாடம் புகட்டியுள்ளது முற்ப்போக்கு கழகங்கள்.

தண்ணீர் கேட்டு தமிழன் தவித்து கொண்டிருக்கும் இந்நாளில் அவன் கண்ணீரும் காசாக்க தெரிந்த்தவர்தான் இந்த வியாபாரி. தமிழனுக்கு செஞ்சோற்று கடன் பட்டவன் போல் மேடையில் பேசி இன்று அவன் சோற்றிலே கைவத்தவர்தான் இந்த கலியுக சிவாஜி.

தமிழன் காதுக்கெட்டாத தூரம் போய் அவனுக்கு ஆதரவாய் பேசியதற்கு மண்ணிப்பு கோரியிருக்கும் இந்த மாமனிதனையும் மண்ணிக்கப் போகிறானா இந்த மானங்கொண்ட தமிழன்?

ஆடிப் பிழைப்பவரின் ஆட்டத்தை மட்டும் ரசிக்கத் தெரிந்த்திருந்தால் இன்று பரதேசியாய் தண்ணீருக்காக பிச்சை பாத்திரமேந்தியிருக்க வேண்டியதில்லை. பிச்சை எடுக்க வேண்டும் என்று எண்ணித்தானே இந்த தமிழர் விரோத பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவனுக்கு தெரியாமலே அவன் மேல் கருத்தை தினித்துக் கொண்டிருக்கின்றன். அவாளை சொல்லி குற்றமில்லை. பகுத்தறிவு கற்றுத் தரவேண்டிய கழகங்கள் தமிழன் பெயர் சொல்லிக் கொள்ளையடிக்கும் கூட்டுத்தொழிலல்லவா செய்து கொண்டிருக்கின்றன.

"அடி வாங்குனது போன வாரம், இது இந்த வாரம்" னு சொல்லிட்டு குசேலன் பார்க்க கிளம்பும் ரசிகனுக்கு வாழ்த்துக்கள்.

Sunday, July 27, 2008

சார்க் 2008 ம் விடுதலை புலிகளும்

"இந்த ஆண்டு சார்க் மாநாடு இன்று முதல் சிறிலங்கா தலை நகர் கொழும்புவில் தொடங்கியது"- இது இந்தியாவில் தென் மூலையில் இருந்து கொண்டு கலைஞர் டிவி மானாட மயிலாட நிகழ்ச்சியின் விளம்பர இடைவெளியில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்புக்கிடையே ஒரு வினாடி கேட்டுக்கொண்டு மீண்டும் இன்னும் ஒரு தமிழ் கலாச்சாரம் வளர்க்கும் தொலைக்காட்சிக்குள் மூழ்கிவிட எத்தனித்தேன். அப்பொழுது திடீரென நம் பாட்டன் பாரதி தோன்றினான்.

பாரதி : "என்னடா பேரா, நலமா?" என்றான்

அதெல்லாம் சவுக்கியமா இருக்கோம்ல. நீ எப்படி, சவுக்கியமா?

பாரதி : ஏதோ கொஞ்சம் உயிருடன் இருக்கும் தமிழின் உயிரைக் காப்பாற்ற ஆவியை பிடித்துக்கொண்டிருக்கிறேன்.

ஏன் தமிழுக்கென்ன? நாங்கதான் இப்ப சினிமா பேரெல்லாம் தமிழ்லதான் வெக்கறமல்ல.

பாரதி : ஆம். ஆம். இப்பொழுது தமிழ், திரைப்படங்களின் பெயரில்தான் வாழ்கிறது. அதற்கு விருதுகளும் வரி விலக்கும் தருவதுகூட இப்பொழுது எப்படி தமிழை தத்தெடுக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

உனெக்கென்ன தாத்தா உன்னோட பிரன்ஸுகளும் சிஸ்யர்களும் தமிழால் வாழ்ந்து தமிழையும் வாழவைச்சிட்டு போயிட்டீங்க.. இப்ப பாவம் நம்ம முத்தமிழ் காவலர் மட்டும் தனியா ஒத்த ஆளா நின்னு தமிழை தொலைக்காட்சில வாழ வெக்கிறார்.

பாரதி : ஆம். பார்த்தேனே.. நீங்கள் எப்படி தமிழை வளர்க்கிறீர்கள் என்று. தமிழ் பத்தினி தாயடா. அவளை ஏன் வேறு மொழிகளுடன் கலந்து வேசியாக்கி வணிகம் செய்கிறீர்கள் ?பதர்களே... உங்களிடமா என் தாயை ஒப்படைத்து விட்டு போனேன். அய்யகோ......

அய்யய்யோ.. தாத்தா நீ ஏன் உணர்ச்சி வசப்படரே. நீ இருந்த காலம் வேற இப்ப இருக்கற காலம் வேற. இப்பல்லாம் ஸ்கூல்ல தமிழ்ல பேசுனாலே தண்டனை குடுக்கிற காலம். நீ வேற சும்மா பொலம்பிட்டு... சரி வந்து இப்படி உக்காந்து நாங்க எப்படி இசைத்தமிழை நாட்டியத்தோட வாழ வைக்றம்னு பாரு.

பாரதி : "எங்களின் தாயவளை கொச்சை படுத்தி கூவி கூவி விற்க்கும் உங்களை கொன்றாலே அவளின் ஆயுள் அடுத்த நூறாண்டு வரை வாழுமடா" ன்னு கொலை வாளை எடுத்து முதலில் என் நாக்கை வெட்டி பின் என் தலையை வெட்டி அவன் வணங்கும் காளிக்கு என்னை காணிக்கை கொடுத்து விட்டான்.

நாக்க மூக்க ரிங் டோன் அலர எந்திருச்சு பாத்தா... யப்பா.. இது கனவுன்னு கன்பார்ம், சாரி.. மண்ணிக்கனும், உறுதிப்படுத்திக்கிறதுக்கு கழுத்தை தொட்டு பார்த்துக்கிட்டேன். தலை ஒட்டிக்கொண்டுதான் இருந்தது.

சரி எழுந்திருச்சு வெளிநாடு வாழ் தமிழ் நண்பனின் அழைப்பை ஏற்று நாட்டு நடப்பு பற்றி கதைத்து கொண்டிருந்தோம். அவன் "சார்க் மாநாட்டை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க.. தெரியுமா?" ன்னு கேட்டான்.

அட எங்க நீ வேற.. இங்க எங்கப்பா தைரியமா புலிகளை பத்தி செய்தி சொல்றாங்க. அப்பப்போ இத்தனை புலிகளை இலங்கை ராணுவம் கொன்றுச்சுன்னு கணக்கு சொல்லுவாங்க. அதுக்கு மேல ஒன்னும் சொல்ல மாட்டங்க. நான் சின்னப் பையனா இருந்தப்ப இருந்து இவுங்க சொன்ன கணக்குப்படி பார்த்தா புலிகளின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையவிட இரண்டு மடங்கு இருக்குமல்ல.

சரி சார்க் மாநாட்டுக்கு ஏன் புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க?

நண்பன் : என்ன இருத்தாலும் தமிழீழமும் தெற்க்காசிய நாடுதானே?

நான் : அதெப்படி இந்தியா அனுமதிக்காம தமிழீழம் உருவாச்சு. இங்க நாங்கதான் வல்லரசு தெரியும்ல.

நண்பன்: ஆமாம். உங்கள் உளவுத்துறையும் உங்கள் ஊடகங்களும் அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

நான் : டேய். எங்க நாட்ட பத்தி தப்பா பேசாத. அப்பரம் விஜையகாந்த் அர்ஜுன் கிட்ட எல்லாம் சொல்லி உன்ன என்கவுண்டர் பண்ணிருவோம்.ஜாக்கிரதை!..

நண்பன்: நான் ஏண்டா உங்க நாட்டை பத்தி தப்பா பேசப் போறேன். இணையத்துல வந்து நாலு செய்திய படிச்சுப் பாரு. உனக்கே புரியும்.

நான் : என்னட சொல்றே?

நண்பன் : இப்ப உங்க பிரதமர் சார்க் மாநாட்டுக்கு சிறிலங்கா போறார்ல. அதுக்கு எதுக்கு 5000 வரையிலான உங்க ராணுவ வீரர்களோட போறார்?

நான் : அங்கதான் எப்ப பாத்தாலும் குண்டு வெடிக்குதல்ல. ஒரு வல்லரசின் பிரதமரை தீவிர வாதத்திடமிருந்து காப்பாத்தரதுல என்ன தப்பு?

நண்பன் : ஆமா. நேத்து கூடதான் உங்க நாட்ல பல இடங்கள்ல குண்டு வெடிச்சுது. அப்ப உங்க நாட்டுக்கு வர்ற அமெரிக்க அதிபர் 50000 படையினருடன் வருவாரா?

நான் : சரி என்னதான் சொல்ல வர்றே?

நண்பன் : முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும்னு உங்க அதிகாரிங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குப்பா.

நான் : புரியும் படி சொல்லு?

நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி சிறிலங்காவின் பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னாடி குண்டு வெடித்து பாகிஸ்தான் தூதர் Bashir Wali Mohmand மயிர் இழையில் உயிர்தப்பினார்..

நான் : அது விடுதலைப் புலிகள் செஞ்சிருப்பாங்க.

நண்பன்: ஆனா இதை அவங்க செய்யல. இது முழுக்க முழுக்க இந்திய உளவுத்துறை பண்ணின சதி வேலை ன்னு ஒரு சில பத்திரிக்கைல படிச்சேன். இலங்கை விசயத்துல பாகிஸ்தானோட தலையீடு மற்றும் ஆயுத உதவி போன்றவை வல்லரசுக்கு சற்று அச்சத்தை கொடுத்ததாகவும் எங்கே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கை என்ற சின்னப் பையன் வேறு ஒருவனின் கட்டுப்பாட்டுக்கு போயிருமோ என்ற எண்ணத்திலும் இன்னுமொரு காஷ்மீர் தென்னிந்தியாவில் உருவாகமல் தடுப்பதற்க்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் புலிகளின் பெயரை பயண்படுத்திக்கொண்டாதாகவும் தகவல்.

நான் : சே... சே... எங்க நாடு இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாது. இது முழுக்க முழுக்க வெளி நாட்டு சதி.

நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆப்கானிஸ்தான்ல இந்திய தூதரகத்துல குண்டு வெடிச்சு 40 க்கும் மேற்பட்டோற் இறந்த்ததாவது தெரியுமா?

நான் : ஆமாம். அது எங்களின் எதிரி பாகிஸ்தானின் சதிதான்.

நண்பன் : அதற்க்கு காரணம் தாலிபான்கள் என்று பாகிஸ்தான் சொல்லியிருக்கே?

நான் : அது பொய். பாகிஸ்தானின் ISI சதி.

நண்பன் : அது பாகிஸ்தானின் சதி. இங்கு நடந்தது புலிகளின் சதி.... நல்ல பகுத்தறிவுடா உனக்கு.

நான் : சரி இதுக்கும் புலிகளின் போர் நிறுத்தத்துக்கும் என்னடா சம்பந்த்தம்?

நண்பன் : இருக்கு. இந்த மாநாட்டை சாக்காக வைத்து பாகிஸ்தான் இந்திய பிரதமரை கொல்ல சதி திட்டம் தீட்டிருக்கலாம்னு ஒரு செய்தி இந்திய உளவுப்பிரிவுக்கு புலிகளின் உளவுப் பிரிவு மூலமா அனுப்பப் பட்டிருக்கு.

நான் : சரி நம்பிட்டேன். இதையே சாக்காக வைத்து பாகிஸ்த்தான் பிரதமரை கொலை செய்ய இந்தியா சதி செய்திருக்கிறதுன்னு தாலிபான் உளவுப்பிரிவு பாகிஸ்தான் உளவுப்பிரிகுக்கு தகவல் அனுப்பிச்சிருக்குமே?

நண்பன் : இருந்தாலும் இருக்கும். அதனால தான், அவுங்க இந்தியப் படைகள் பாதுகாப்புக்காக இலங்கையில் இருந்தால், தாங்கள் கலந்து கொள்ள போவதில்லைன்னு அறிவிச்சிருக்காங்க. இந்த வம்புல ஏன் தேவையில்லாம தமிழரின் விடுதலைப் போராட்டம் மாட்டிக்கிட்டு அல்லல் படனும்னு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிட்டாங்க.

நான் : காக்கா உக்காற பனை மரம் விழுந்த கதையாவல்ல இருக்கு.

நண்பன் : "உண்மை எதுன்னு யாருக்கு தெரியும். காலம் தான் பதில் சொல்லனும்" னு சொல்லிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.

என்னடா இன்னைக்கு ஒரே திகிலா போகுதுன்னு வொரி.. மண்ணிக்கணும்..வருத்தப்பட்டுட்டே .. வருத்தத்த போக்க ஏதவது ஒரு பள்ளிக்கூடம் பக்கம் பொறேன்.

அது என்னடா பள்ளிக்கூடத்துல வருத்தத்த போக்றாங்களான்னு நீங்க கேக்கறது தெரியுது.

அங்கதான் டாஸ்மாக் இருக்கும்ல............

http://www.dawn.com/2006/08/16/top10.htm
http://findarticles.com/p/articles/mi_kmafp/is_200608/ai_n16622684
http://www.thaindian.com/newsportal/india-news/isi-behind-the-indian-embassy-bombing-m-k-narayanan_10070860.html
http://wcbstv.com/topstories/afghanistan.bomb.blast.2.765878.html
http://www.colombopage.com/archive_08/July20160024JR.html
http://www.gulfnews.com/World/Afghanistan/10228788.html

Tuesday, July 22, 2008

திண்ணை காலி

எங்கடா மன்மோகன், சிதம்பரத்தையெல்லம் நிக்க வச்சு நாக்க மூக்க கேள்வி கேட்டுட்டு வெளியபோகும்போது தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் நம்மளை கைது பண்ணிட்டாங்களோன்னு பொங்க வெச்சு கொண்டாடுன உங்களை விடாது இந்த கருப்பு.

நாங்க கோடு எழுதுலேன்னா அமெரிக்க பொருளாதாரமே சும்மா மொடங்கிபோயுரும்ல... அதான் கொஞ்சம் டைம் பாசுக்கு கோடு எழுதி எழுதி ரிவியூல கோக்கு மாக்கா கேள்வி கேட்டவங்களுக்கு ஆப்பு வெச்சு சாமாளிச்சு வெளிய வர கொஞ்சம் லேட்டாயிருச்சு.

அதனால இந்த நாலுமாச நாட்டு நடப்ப நம்ம கலைஞர் மாதிரி நானே என்னை பேட்டி எடுத்து உங்களுக்காக பதிக்கிறேன்.

உலக நாயகன் நடிச்சு ஓடு ஓடுன்னு ஓடிட்டு இருக்கர தசாவதாரம் பற்றி....?

படம் நல்லா இல்லைன்னு சொல்லல. நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்.

இந்தியர்கள் அதிகமா சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்கன்னு புஸ் சொன்னத பத்தி...?

அது என்ன "ஆரம்பிச்சிட்டாங்க". இத என்னால ஏத்துக்க முடியாது. புஸ்ஸுக்கெல்லாம் பதில் சொல்லி நம்ம டைம வீண் பண்ணக்கூடாது.

திமுக கூட்டணியிலிருந்து ப மா கா வை கழட்டி விட்டதை பற்றி...?
காடுவெட்டி குரு மாதிரி ஆளுங்க எங்க தன்னோட கட்சிகாரங்கள விட மக்கள்கிட்ட அதிக செல்வாக்கு வந்துரும்னு ஒரு பயத்துல இந்த முடிவை எடுத்திருப்பார்னு நான் நினைக்கிறேன்.


தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொண்றதை கண்டித்து முதலமைச்சர் உண்ணா விரதம் இருந்தத பற்றி...?

எலக்சன் வருதல்ல. அதான் மீன் பிடிக்கறார் முதலை மச்சர்.

சிம்புவும் நயனும் சந்திச்சத பத்தி....?
நயந்தான் இந்த வம்ப பத்தி சிந்திக்கணும். தயவு செஞ்சு என்னோட நம்பர அந்த பொண்ணுகிட்ட குடுத்திடாதீங்க..

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐமுகூ வெற்றி பெற்றதை பத்தி....
பணம் 575ம் செய்யும்.

அடுத்த காவியம் எப்பன்னு நம்ம வாசகர்கள் கேள்விக்கு....?
விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

வருட்டுங்களா........

Tuesday, March 4, 2008

யாருக்கு இந்த 60 ஆயிரம் கோடி

எல்லோரைப்போலவே நானும் நெகிழ்ந்து போனேன், சிதம்பரத்தின் நிதி நிலை அறிக்கையை பார்த்து. பிறகு எங்கோ படித்த சில கட்டுரைகள் சில உண்மைகளை சொன்னது.

விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்தது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டால், விவசாயிகளின் இந்த நிலமைக்கு என்ன காரணம் என்று ஒரு சின்ன ஆராய்ச்சி செய்தால் அது பொய்யென்று தெரிகிறது.

பெரும்பாலான தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ஆந்திரப் பிரதேச வாரங்கள் மாவட்டத்தை சேர்ந்த பருத்தி பயிரிட்டவர்கள். இந்திய அரசியல்வாதிகளின் நலம் நோக்கி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி மொன்சான்டோ என்ற வெளிநாட்டு விதை நிறுவனம் வழங்கிய மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் வந்த வினைதான் அது. அப்படியென்ன அந்த விதையில் உள்ளது என்கிறீர்களா?. இங்குதான் நமது மடமை நோக்கப்பட வேண்டியது. "சாதாரண விதையில் வளரும் பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க பூச்சிமருந்து செலவு செய்யவேண்டும், ஆனால் நாங்கள் கொடுக்கும் விதைக்கு பூச்சி மருந்து தேவையில்லை, விதையே எதிர்ப்பு சக்திகொண்டது, விலைமட்டும் கொஞ்சம் அதிகம்" என்று சொல்லி விவசாயிகளிடம் விற்றுவிட்டார்கள் சோதனை செய்யப்படாத ஊன விதைகளை. இந்த விலை அதிகமான பருத்தி பயிரிடுவதற்க்கு வங்கிகளின் மூலம்(ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி) விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்கியது இந்திய அரசு. அந்த பணமெல்லாம் அப்படியே மொன்சான்டோ கல்லாவிற்க்கு போனது.

இதுபோலவே பல மண்ணை மலடாக மாற்றும் வெளிநாட்டு உர நிறுவனங்களும் பணத்தை சுருட்டின மற்ற விவசாயிகளிடம் இருந்து.

பயிரிட்டு சில நாட்களுக்கு பிறகுதான் அந்த பயிரின் மகத்துவம் தெரிந்தது. அந்த பயிர் இந்திய மண்ணில் விழைச்சலை தராதென்று. சில நாட்களில் அனைத்து பயிர்களும் மடிந்து விட்டது. விவசாயிகளிடம் கடன் மட்டும் மிச்சமிருந்தது. பிறகு வெளிநாட்டு முதலாலிகள் முதலீடு செய்திருந்த வங்கிகள் கடனை வசூலிக்க சாட்டையய் சுற்றியதில் தப்பிப்பதற்க்கு தற்க்கொலை செய்து கொண்டான் இந்திய விவசாயி.

இப்படியே பயிரையும் மண்ணையும் கொன்று இனி எதிர்காலத்தில் அவர்களிடமே கையேந்தி நிற்க வேண்டும் என்ற தொலை நோக்கு திட்டத்தில் நம்மை விழவைத்து விட்டார்கள்.

எல்லாம் முடிந்த பிறகு இப்போது மக்களின் வரிப்பணத்தை எடுத்து வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி ஈட்டுத்தொகை கொடுக்கப்போகிறார்கள்.

இதற்க்கு பதிலாக இந்த அரசியல் வாதிகள் நேரடியாகவே வெளிநாட்டு நிறுவனத்திற்க்கு பணத்தை கொடுத்துவிட்டு அவன் வீசும் எழும்புத்துண்டை பொறுக்கிக்கொண்டு இருந்திருக்கலாம், பல இந்திய விவசாயிகளின் உயிர்களாவது மிஞ்சியிருக்கும்.

திட்டங்கள் வகுக்கும் மன்மோகன், சிதம்பரம், சுப்பிரமணிய சுவாமி எல்லாம் எங்கிருந்து கற்றுவந்தார்கள் இந்த பாடங்களை?

ஆதாரம்,

http://www.organicconsumers.org/monlink.cfm
http://www.scidev.net/content/opinions/eng/sowing-trouble-indias-second-green-revolution.cfm
http://www.globalresearch.ca/index.php?context=viewArticle&code=SHR20060911&articleId=3204
http://www.democracynow.org/2006/12/13/vandana_shiva_on_farmer_suicides_the
http://artsci.wustl.edu/~anthro/research/biotech_suicide.html
http://www.monsanto.com/

Saturday, February 23, 2008

நாங்கள் இந்தியர்கள்

நாங்கள் இந்தியர்கள்.

எங்களுக்கு எங்கே யார் கொல்லப்பட்டாலும், ஏன் இந்தியாவை விட்டு வெளியே எங்கள் சொந்தங்கள் கொல்லப்பட்டாலும், ஏன் இந்தியாவில் கொல்லப்பட்டாலும் எங்களுக்கு கவலையில்லை.

நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடுவோம், நமீதாவின் நடனத்தைப்பாராட்டி விவாதம் நடத்துவோம்.

அதுவும் நாங்கள் தமிழர்கள். உலகத்தில் இருக்கிற இனங்களில் பழமையான இனம் எங்களது. நாங்கள் எப்பொழுதுமே ஒற்றுமையாக இருப்பதில்லை என்ற சபதம் எடுத்திருக்கிறோம். ஒரே ஒற்றுமை மற்றொரு தமிழன் காலை வாருவது.

ராஜிவ் காந்தி கொலையை பயங்கரவாதம் என்போம். சத்திய மூர்த்தி பவனில் நடக்கும் கத்தி குத்துக்கள் அகிம்சை என்போம்.

தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும் என்போம். அதில் அண்ணன் பெரியவனா தம்பி பெரியவனா என்ற போட்டிகள் வைப்போம். அதற்க்கு அப்பாவிகளை எரிப்போம்.

சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி ஆகியோர் தேசப்பற்றாளர் என்போம். ஏனென்றால் அவர்கள் சி ஐ ஏ ஏஜண்டுகளாக இருந்து பாகிஸ்தான் இந்திய எல்லயில் ஊடுருவுவதை அறிந்து தகவல் தேரிவித்து நாட்டை காப்பாற்றியவர்கள்.

சீதயும் ராவணனும் இப்போது பேசிக்கொள்வதை ரசிப்போம்.

தமிழனை கொல்ல மாற்றானுக்கு ஆயுதம் வழங்கவே நாங்கள் ஒவர் டைம் வேலை செய்து வரி கட்டுவோம்.

எவனாவது ஒருவன் போதை தெளிந்து கேள்விகேட்டால், பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் போட்டு உள்ளே தள்ளி பேச்சு சுதந்திரத்தை காப்பாற்றுவோம்.

"நாங்கள் இப்பொழுதெல்லாம் உணவில் உப்பு சேர்த்துவதை நிறுத்திவிட்டோம் என்பதை பெருமையுடன் இந்த நேரத்திலே உங்களுக்கு தெரிவிக்க நான் கடமை பட்டிருக்கிறேன்" என்று மேடையில் பேசுவோம்.


கீழே உள்ள படங்கலெல்லாம், நேற்று சிரிலங்கா விமானம் கிரஞ்சி பிரதேசம் மீது குண்டு வீசி கொன்ற விடுதலைப்புலிகள். இன்னும் பயங்கரமான ஆயுதங்களை வழங்கி மீதமுள்ள கருவிலுள்ள விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என இந்திய அரசை வலியுருத்துகிறோம்.











யோகி - இறுதிப்பாகம்

எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கையில் அவர்கள் இதயங்கள் எதயோ பரிமாரிக்கொண்டன.

"இவன் யாரோ, இவன் யாரோ, வந்தது எதர்க்காக" என்று பாடிக்கொண்டிருந்தது அவள் உதடு.

"நீ இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை, வான வில்லே..." என்று இவனும் பாடிக்கொண்டிருந்தான்.

பேருந்து நகர்ந்து கொண்டிருக்கும்போதே யோகி பழய நினைவுக்குள் மூழ்கினான்...

இரண்டு வாரங்களுக்கு முன்னால்,

அகிலாவின் படிப்போ அல்லது அவள் எண்ணமோ தன் காதலால் திசை மாறிவிடக் கூடாதென்று காத்திருந்து அவளின் கடைசி தேர்வு முடிந்த நாளில் யோகி தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று அவள் பள்ளியில் இருந்து வரும் வழி பார்த்து நின்றான்.

தூரத்தில் வருவோரெல்லாம் அவனுக்கு ஆரம்பத்தில் அகிலா போல் தெரிவதும், பின் பக்கத்தில் வந்தபோது அவளில்லாமல் ஏமற்றமே அவனை எதிர் கொண்டது.

ஒரு மணி நேரம் நின்று காத்துக் கொண்டிருந்த பின் அகிலாவும் கடைசியில் வந்து கொண்டிருந்தாள்.. அவள்தான் கடைசியாக வந்து கொண்டிருந்தாள் என்பதால் அந்த நேரம் அவளை சுற்றி யாரும் இல்லை.

கால தேவன் தன் காதலுக்கு உதவிசெய்ததை, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அகிலாவை நோக்கி முன் நகர்ந்தான். தன்னை நோக்கி வருவதை விளங்கிக்கொண்டவளின் முகம் நானத்தால் சிவந்து தனது பாதையில் இருந்து சற்று விலகி நடக்கத்தொடங்கினாள்.

அவள் அருகில் சென்று.." அகிலா.. உன்னை பார்க்கத்தான் இவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கிறேன்..."

அவள் அதை எதையும் கேட்காதது போல் தொடர்ந்து நடந்தாள்...

"அகிலா.. அகிலா... உங்கிட்டதான் நான் பேசிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு போயிட்டு இருக்கே..."


" என்னை உனக்கு புடிக்கலையா? "

"உங்கள எனக்கு எதுக்கு பிடிக்கனும்?"

"ஆமா.. நீ எங்க மாமன் பெத்த பொன்னுதான.. அப்ப அவன் குணம் உங்கிட்ட இல்லாம இருக்குமா"

"என்ன சொல்ல வர்ரீங்க?"

"உன்னை எனக்கு புடிச்சிருக்கு.. என்னை உனக்கு புடிச்சிருக்கா?"

"சரி.. உங்கள எனக்கு பிடிச்சிருந்தா மட்டும் என்ன?"

உள்ளத்தில் பனிமழை பொழிய மீண்டும் அதை ஒருமுறை கேட்க

"என்ன சொன்னே?"

"எனக்கு உங்கள பிடிச்சிருந்தா மட்டும் இப்ப என்ன?. ஆரம்மத்துல உங்கள பத்தி நான் தப்பா நெனச்சிருந்தேன். ஆனா அப்பரம் எங்க பாட்டி உங்கள பத்தி சொன்னதுக்கப்பரம் தான் புரிஞ்சுது எங்கப்பாவுக்கும் உங்கப்பாவுக்குக் இருக்கிற பிரச்சினை. எங்கப்பவை யாரலும் மாத்த முடியாது."

"ஆன அதுமட்டும் இப்ப பிரச்சினை இல்ல.. எனக்குன்னு சில ஆசை, கனவுகள் எல்லாம் இருக்கு...."

"ஆசை இல்லாம இங்க யாருதான் இருக்கா? சொல்லு....."

"எனக்கு இப்ப கல்யணத்த பத்தி பேசர காலம் இப்ப இல்லேனாலும், என்னோட விருப்பத்த சொல்ரதுல தப்பு இல்ல"

"என்னைக்கவது ஒரு நாள் என்னை எங்கப்பா யாருக்காவது ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வெக்கதான் போராரு. ஆனா முன்ன பின்ன தெரியாத யாரோ ஒருத்தர்கிட்ட என்னோட வாழ்க்கைய குடுக்கரதுல எனக்கு விருப்பமில்லை... "

"நான் நினைச்சத்தான் நீயும் சொல்லிட்டு இருக்கே ...."

"அந்த அளவு மனசு ஒன்றிப்போறதனாலதான் இப்ப நான் இங்க நின்னு பேசிட்டு இருக்கேன்னு நெனைக்கிறேன்..."

"நீங்களும் என்னை சுத்தி சுத்தி வர்ரத நான் கவனிச்சிட்டுதான் இருக்கேன். இருந்தாலும் எனக்கு இந்த மாதிரி காதல்ல எல்லாம் விருப்பமில்லை. கல்யாணம் பண்ரதுன்னு முடிவெடுத்துட்டு காதல் பண்ணும்போது யாருக்கும் யாருமில்லாத தெருவில் நின்னு பேசனும்னோ, காதல்கடிதம் பரிமாரிக்கரதோ, பைக்ல சேர்ந்து சுத்தரதெல்லாம் செய்யத்தோணாது. தன்னை நம்பி தன்னோட வாழ்க்கைய தர்ர பொண்ணை எப்படி வாழ்க்க முழுதும் சந்தோசமா வெச்சுக்கரதுன்னு யோசிச்சு அதுக்கான முயற்சிய செய்ய ஆரம்பிக்கரவன் தான் உண்மயான காதலன்"

அகிலாவைப்பத்தி என்னென்னமோ எண்ணிக்கொண்டு வந்தவனிடம், அகிலாவின் வார்த்தைகளால் அவளை ஒரு தேவதையாகவே பார்க்க தொடங்கினான்.

"எங்கப்பா என்ன வசதியான வீட்லதான் கல்யாணம் பண்ணிக்கொடுப்பாரு. ஒரு அப்பாவா யாரும் தன் மகளோட வாழ்க்கய யோசிச்சு இந்த முடிவுதான் எடுப்பாங்க.."

"நீங்களும் நானும் வாழ்க்கைல ஒன்னா சேரணும்னா அதுக்கு நீங்க இப்ப இருக்கர நிலமையில இருந்து மேல வர முயற்ச்சி செய்யனும். எதாவது சாதிக்கனும்........"

"உங்களை நம்பி நாளைக்கு நான் வந்தா, உங்களோட உழைப்பில நாம வாழனுமல்ல?"

யொகிக்கு கொதிக்கும் எண்ணைக் குழிக்குள் போட்டது போன்று இருந்தது..

"காதலை நான் புரிஞ்சு வெச்சிருக்கரத விட நீ ரொம்ப புரிஞ்சு வச்சிருக்கே".

"என்னை வேறொருத்தர் கைல பிடிச்சு கொடுக்கரதுக்கு முன்னாடி நீங்க வந்து பொண்ணு கேட்டா எங்கப்பா குடுக்கர மாதிரி உங்க உழைப்பில முன்னேறி வாங்க. அப்ப எங்கப்பா என்னை உங்களுக்கு தர மாட்டேன்னு சொன்னாருன்னா நான் உங்க பின்னாடி வந்திருவேன். அதுவரைக்கும் இந்த மாதிரி பின் தொடர்ந்து வந்து காதலிக்கறதெல்லாம் வேண்டாம். சரி எனக்கு நேரமாச்சு. நான் போகனும்"

"சரி அப்ப மறுபடியும் நான் உன்ன பாக்க முடியாதா?" என்றான் ஏக்கத்துடன்.

"இன்னும் பத்து நாள்ல நான் காலேஜ்ல சேர அப்ளிகேசன் வாங்க சத்தி போவேன்."
என்று சொல்லிவிட்டு அவள் வீடு நோக்கி தொடர்ந்தாள்.

யோகி அவளிடம் பேச வருவதற்க்கு முன் பல ஒத்திகைகள் செய்து வந்திருந்தான். ஆனால் அவை அனைத்தும் அவளின் வார்த்தைகளால் வீனாய் போனது.

கண்களில் அவள் பிம்பமும் இதயத்தில் அவளின் வர்த்தைகளும் ஒலித்துகொண்டிருக்கும் போதே சத்தியை பேருந்து அடைந்திருந்தது. அவளிடம் பேச காத்திருந்த யோகி, அவள் பேருந்திலிருந்து இறங்கி அவனை கண்டு கொள்ளாமல் கல்லூரி நோக்கி சென்றது அவனுக்கு ஏமாற்றம் தந்தது, இருந்தும் அவளை புரிந்து கொண்டான்.

அவனும் அவன் கல்லூரி நோக்கி பயணம் செய்தான்.

கல்லூரிக்கு சென்று துறைத்தலைவரை சந்திக்க சென்றான். அவன் எழுதத் தவறிய தேர்வுக்குரிய பேராசிரியாய் அவனை அழைத்து விசாரித்தார்.

கொஞ்சமா படிக்கிற பசங்கல்ல கொஞ்சம் அதிகமா படிக்கர பய்யன்னு பேரெடுத்த யோகிய தேர்வில் தோல்வியடைய விரும்ப்பாத அந்த பேராசிரியய் மீண்டும் அவனை தேர்வெழுத அனுமதித்தார் அன்றய தினமே. யோகியும் தான் வந்த நோக்கம் நிரைவேரியதற்க்கு பேரசிரியய்க்கு நன்றி தெரிவித்து விடை பெற்றான்.

மூன்று வருடங்களுகுப் பிறகு படிப்பு முடிந்த நிலையில் வளாக நேர்முகத்தேர்விற்க்காக அமெரிக்காவின் மிகப்பெரும் கணினி நிறுவனமான இன்டெல் அவன் கல்லூரிக்கு வந்திருந்தது.

அவன் அகிலா விதைத்த கனவுகளுடன் தேர்வுகளின் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான். அவனின் எண்ணப்படியே நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று அடுத்த மாதம் அமெரிக்காவில் பணி நியமன ஆணை பெற்றான்.

எண்ணத்தில் கொள்ள முடியாத மகிழ்ச்சியுடன் அகிலாவை பார்க்க அவசரமாக ஊருக்கு கிளம்பினான்.

ஊரில் நுழைந்தவுடன் பேருந்து நிலையம் அருகே மக்கள் கூட்டமாக இருந்தது. யோகியும் என்னவென்று ஆர்வத்துடன் கூட்டத்தை விலக்கி பார்த்தான். அங்கு அவன் கண்ட காட்சி அவன் இதயம் உடைந்து அழச்செய்து விட்டது.

ஆம்.. அகிலா ரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்தாள். அன்று மாலை அவள் பேருந்திலிருந்து இரங்கி பாதையை கடக்கும் போது கட்டுப்பாடிழந்த லாரி யொன்று அவள் மீது மோதியது.
அது அவளின் வாழ்வுடன் யோகியின் வாழ்வையும் எடுத்து சென்றது.

அன்றிலிருந்து தன்னை மறந்து கால் போகும் போக்கில் நடந்து காலத்தை அகிலாவின் நினைவால் கரைத்து நடந்தான் முழு யோகியாக........


(முற்றும்)

Saturday, January 12, 2008

யோகி பாகம் 4

முந்தைய பாகம் படிக்க இங்கே அழுத்தவும்

யோகி : இது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க குமார் கையை ஒரு கிள்ளி அவன் கத்துனதுல தெரிஞ்சிட்டேன். இருந்தாலும் என்னால இத நம்ப முடியல. சரி பக்கத்துல போயி பேசித்தான் பாக்கலாம்னு நெனச்சு அந்தப்பக்கம நகர எத்தனித்தேன். அது வரைக்கும் அமைதிய இருந்த குமார் இப்போ ரொம்ப அமைதியா இருந்தான்.

என்னடா ஆச்சுன்னு கேட்டா...

"டே.. இப்ப எதாவது நடந்துச்சா?" அப்படின்னு கேட்டான்.

நான் ஜெர்க்காகி.. ஒருவேலை நம்ம பையன் எல்லாத்தயும் கவனுச்சுட்டான் போல இருக்குன்னு "இஇஇல்லடா..ஒன்னும் நடக்கல.. ஏன்?" அப்படின்னு டரியலாகி கேட்டேன்.

இல்லடா..."எனக்கு வானத்துல பறந்துட்டு வந்த மாதிரி ஒரு பீலிங்..." அப்படின்னான்..

எங்களுக்கு ஒன்னும் புரியாம அவனையெ பாத்திட்டு இருந்தோம்.

மல்லிகா என்ன பார்த்து சிரிச்சிட்டு போனாடா.......

ஆகா... மறுபடியுமாடா....

இல்லடா இது உண்மையான காதல்டா.... அப்படின்னான்...

இது அவனுக்கு பதிமூனாவது உண்மையான காதல்.

"ச்சே.." அப்படின்னு எல்லார்க்கும் பலூன்ல காத்த எடுத்து விட்ட மாதிரியாகி அப்படியே நகர ஆரம்பிச்சோம்.

குமார் மட்டும் அங்க இருந்து நகர முடியாம, வேற வழி இல்லாம எங்களுக்கு பின்னாடி வர ஆரம்பிச்சான்.

குமார்-ம் கஜினியும் ஒன்னுன்னு சொல்லலாம். ஒவ்வொரு தோல்வியிலயும் துவண்டுவிடாம அடுத்த அட்டெம்ட் பண்ற மனச கடவுள் அவனுக்கு கொடுத்திருக்கார். போனவாரம் தான் அவன் எதிர்த்த வீட்டுக்கு அடிக்கடி வர்ர அந்த வீட்டு பொண்ணோட பிரண்ட்டுக்கு கஸ்டப்பட்டு காதல் கடிதம் கம்போஸ் பண்ணி கணேசனோட தம்பிக்கு ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்து தூது விட்டான். ரெண்டு நாள் கழிச்சு ஒரு பதில் கடிதம் வந்துச்சு " அண்ணா... இந்த லெட்டர் தப்பா எனக்கு வந்துடுச்சு... ரமேஸ்மாதிரியே நீங்களும் நல்லா எழுதரீங்க.. ஆனா இது அண்ணிக்கு சேர வேண்டியது." அப்படின்னு.

அன்னைக்கு நடந்த தாபா சங்கமத்துல அஞ்சு பீர் குடிச்சிட்டு, அமைதிய இருக்கிற மாதிரி நடிச்சிட்டு இருந்த அடுத்த வீதி ரமேஸ்-ங்கர குள்ள நரிய திட்டிட்டு அந்த பொண்ணயும் சேர்த்து வாந்தியெடுத்தான்.

அடுத்தவங்க மேல இரக்கப்படுரவுனுக்கு அடிக்கடி காதல் வர்ரதுல ஒன்னும் தப்பில்லயே.. அத மனசுல மறைச்சி வெச்சி கள்ளக்காதல் பண்றதுதான் தப்புன்னு தத்துவம் வேற பேசினான்.

அடுத்த நாள்,

எப்பவும் போல யோகி வீட்டு திண்ணைல சட்டசபை கூட்டம் நடந்திட்டு இருந்த போது

ஏதோ போன் வந்து உள்ளே போனான் யோகி.

வெளியே வரும்போது தலைல கைய வெச்சிட்டு வந்தான். என்னட ஆச்சுன்னு கேட்டான் கணேசன்,

"செமஸ்டர் லீவுங்கர சந்தோசத்துல (இங்க அகிலாவ பாக்கனும்கர ஆர்வத்துல) அவசரமா காலேஜ்ல இருந்து கெளம்பி வந்ததுல ப்ராக்டிகல் பரிச்சை எப்ப அப்படிங்கரத கவனிக்காம வந்துட்டேன். இன்னைக்கு அது முடிஞ்சு போச்சு. அந்த லெக்ட்சரர் என்ன தேடுனாருன்னு என் ப்ரண்டு போன் பண்ணான் ".

எதுலயும் குற்றம் கண்டு பிடிக்கர நம்ம குற்றமில்லாத கணேசன் " என்னடா செமஸ்டர் லீவுல வந்துருக்கரன்னே. இப்ப போயி எக்சாம் அது இதுன்னு சொதப்பரயேடா " அப்படின்ன்னான்.

யோகி: பொதுவா தியரி எக்சாம் முடிஞ்சு கொஞ்ச நாளுக்கப்பரந்தான் ப்ராக்ட்டிகல் எக்சாம் வப்பாங்க. அதெல்லாம் காலேஜ்ல படிக்கரவுங்களுக்குதான் தெரியும். ஸ்கூல்ல படிக்கரவுங்களுக்கெல்லாம் தெரியாதுன்னா கணேசனை மண்ணை கவ்வ வைத்தான்.

அதை விடு.. ஆனா நீ மொதல் வருசத்துலயே அரியர் வெச்சு முழு மனுசனாகிட்டயே காதல் மன்னா...

சரி விடு... ஒரு பேப்பர் தானென்னு சொன்னான் குமார்.

யோகி மனதுக்குள் : ஒரு பேப்பர்னாலும் அது அகிலாவுக்கு தெரிஞ்சா.... அப்படின்னு ஏதோ நெனச்சான்...

இதைபத்தியெல்லாம் கவலை படாமல், "இன்னைக்கு செகண்ட் சோ ஸ்ரிதேவில காதலுக்கு மரியாதைக்கு போலாமா"ன்னு திரியை பத்தவச்சான் மூர்த்தி.

ஏதோ காதல்னா என்னன்னு தெரியாத மாதிரியும் இந்த படத்த பாத்துதான் அத தெரிஞ்சுக்க போற மாதிரியும் யோசிச்சிட்டு யோகியும் குமாரும் சரின்னு சொன்னவுடன் சபை கலைந்தது.

அன்னைக்கு தியெட்டருக்கு போனப்ப நம்ம யோகியோட மூஞ்சில 1000 வாட்ஸ் பல்ப் எரிஞ்சத யாரும் கவனிக்கலை...

ஆம்... அங்கே அகிலாவும் காதலுக்கு மரியாதை செய்ய வந்திருந்தாள்.

உயிரற்ற மனிதர்களெல்லாம் காதலை திரையில் பார்க்க, காதல் உயிருள்ள யோகி அகிலாவின் கடைக்கண் பார்வையால் தாலாட்டப் பட்டான்.

அவர்கள் கண்களால் பேசிக்கொண்டதை நம்மால் டி-க்ரிப்ட் செய்ய முடியவில்லை....

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கே எந்திரிச்சு காலேஜ்க்கு கெளம்ப ரெடியானான் யோகி.

"என்னடா லீவுன்னு சொல்லிட்டு இப்ப திடீர்னு காலேஜ்க்கு போகனும்கற" ன்னு தாய்க்குலம் கேட்க.. "இல்லம்மா.. இன்னைக்கு ஒரு முக்கியமான் ஸ்பெசல் க்ளாஸ் இருக்குன்னு ப்ரெண்டு போன் பன்னான்"னு, எட்டவதுல சயின்ஸ் புக், அறிவியல் புத்தகம் வாங்கனும்னு சொல்லி காசு வாங்குன அதே புத்தி சாலிதனத்தை பயன்படுத்தினான்.

காலையில் சத்தி செல்லும் KMK வில் முதல் சீட்டில் இடம் பிடித்தான். ஆம் அவன் எதிர் பார்தது போல் அகிலாவும் வந்து பஸ்ஸில் முன் சீட்டில் அமர்ந்தாள்..

(தொடரும்...)