Tuesday, January 27, 2009

அன்புடன்....

அன்புடைய அக்கா,தம்பி, தங்கைகளுக்கு,

அருள்மொழி காலத்தில் நம் மூதாதயர் பெருமையை தமிழம்மா சொல்லி மகிழ்ந்த காலம்

உங்களுக்கும் எனக்கும் நினைவிருக்கிறது...

என்னைவிட உங்களுக்கே அதிகம் நினைவிருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

பள்ளியில் என்னுடைய வரலாற்றுப் புத்தகத்தில் வீர சிவாஜியும், விக்டோரியாவும் இடம் பிடித்தது போக மீதமுள்ள பக்கங்களில் எங்கள் முதல்வர்களின் வரலாறு நிறம்பிப் போனதில் அருள்மொழியும் அவன் குல வரலாற்றுக்கும் இடமில்லாமல் போனது எங்களுடைய வரலாற்று தெளிவுக்கு காரணம்.

உயிரை விட மானத்திற்கு மதிப்பளிப்பவர்கள் தமிழர்கள் என்பதற்க்கு நீங்கள் தான் சான்று.

எங்களை பாருங்கள், ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் எங்கள் வாக்குகளை விற்று மானம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றோம். இறையான்மை என்றால் அம்மனமாகவும் தெருவில் நடப்போம். யாருடைய இறையான்மை என்ற பகுத்தறிவு பெரியாருடன் மறித்துப் போனது.

ஊழல், லஞ்சம், நயவஞ்சகம், பொறாமையில் ஊறிப்போன எங்களுக்கு மானத்தின் அருஞ்சொற்பொருள் விளங்காது.

பசிக்கிறதென்று உணவு கேட்டீர்கள். பாசம் வந்து பொருள் சேர்த்து அனுப்பிவைத்தோம். ஆதரவு கேட்டீர்கள். அணைக்க நீட்டிய கைக்கு முன் ஏவுகணை எறிந்தோம்.

அடுப்பூத குழல் கேட்டீர்கள், இதோ அனுப்பிவைக்கிறோம் பல்குழல் வெடிகணைகள். சிங்களவன் எரிவான் பிடித்துக் கொள்ளுங்கள்.

ஒருவேலை சோறு கேட்டீர்கள். நிலாச் சோறு தின்று அலுத்துபோன எங்களுக்கு நிலவுக்கு போய்வர நேரம் பத்தவில்லை.. போய் வந்ததும் அனுப்பி வைக்கிறோம்.

ஆசையாய் அக்காள் ஒரு சேலை கேட்டாள்...
பாசமாய் தங்கை ஒரு மிதிவண்டி கேட்டாள்...
காடுகளில் நடந்து புண்பட்ட அம்மா மிதியடி கேட்டாள்...
செல்லடித்து புறையோடிய கண்ணுக்க அப்பா மருந்து கேட்டார்..

அதையெல்லாம் வங்கத்தானம்மா நான் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறேன். நிச்சயம் அவை உங்களை வந்து சேரும் என்று நம்பியிருந்தேன். ஆனால், அதற்கு முன் நான் கட்டிய வரியில் வாங்கிய குண்டுகள் உங்களை வந்து சேர்ந்துவிட்டதென்பது தெரியாதம்மா...

இதொ புதிதாக டாங்கிகள்... இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்....
இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்...

மிச்சமுள்ளவர்களையும் முடித்துக்கட்ட வந்து சேரும், எங்கள் மானம் விற்ற காசில் வாங்கிய விமானங்கள்.

Saturday, January 24, 2009

தொலைவில் நீ, அருகில் நான்....

இங்குதான்...இங்குதான்..
உன் அருகில் நான் இருக்கிறேன்
காற்றுடனே உன் இதழுரசும் இடைவெளியில்..

எங்கெல்லாமோ தேடினேன் உன்னை..
என் இருப்பை உறுதி செய்து கொள்ள...

இன்றுதான் உன்னிடம் என் காதலை...
காதலை.. காதலை...

இப்படித்தான் ஒவ்வொருமுறையும் உன்
கொலுசு என் காதலை தின்றுவிடுகிறது..

காற்றை தென்றலாக்கும் உன் கூந்தல்
என்னை மட்டும் ஏன் கள்வனாக்குகிறது...

உன்னை பிரிந்த கூந்தல்கள்தான்
உடையாமல் என் நெஞ்சை கட்டி வைக்கிறது...

மழையாய் நனைக்கிறாய் பார்வையில்
இழையாய் துளிர்க்கிறேன் காதலில்..

இல்லை என்று சொல்ல உன் நா தொடங்கும்..
இல்லை.. இல்லை.. என இமைகள் முடிக்கும்..

தேவையில்லை வார்த்தைகள்..
இல்லாமலே போகட்டும் வார்த்தைகள்..

இங்கு வார்தைகள் காதல் சொல்வதில்லை..

எதற்க்கு நானம்... என்னை இன்றா முதலாய் பார்க்கிறாய்..
ஆம்.. இன்றுதான் முதலாய் பார்க்கிறாய்...

ஒவ்வொறுமுறையும் இறந்து பிறக்கிறேனல்லவா...

வழிவிட்டு நின்றாய்...
கடந்து செல்லச் சொல்கிறாய்
என்றே நினைத்தேன்...

காதலை வழி மறிக்க எனக்கு மட்டும்தான்
தோன்றியது.. உனக்கில்லை...

தொடர்கிறேன்...தொட்டுவிட..
தொலைவில் நீ.. நிலவாய்..
உன் அருகில் நான்.. நிழலாய்..

Sunday, January 4, 2009

சில நாட்கள் பாரதிதாசனாய் இருந்துதான் பார்ப்போமே!!!!!!

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை!
தமிழகமேல் ஆணை!
தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்:

நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.

தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!

"தமக்கொரு தீமை" என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!

மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்தஎன் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!

ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்!