எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
Tuesday, June 27, 2017
கைக்கெட்டும் தூரத்தில் வாய்ப்புகள்
Thursday, April 27, 2017
கல்வியும் பாடமும்
அக்கவுண்ட்ஸ்- பெயரைக்கேட்டாலே தெரிக்க வைத்த பாடம். வேறு வழியில்லாமல் இளநிலை, முது நிலை பாடங்களில் படித்து தேர்ச்சி பெறவேண்டிய சூழலில் வேறு வழியில்லாமல் படித்தது. C, C++, Java என்று மோட்டு வளையைப் பார்த்து கனவு கண்டுகொண்டிருந்த போது, விதி Tallyஐ- வேண்டா வெறுப்பாக படித்து புலமை பெற்று பிழைப்பு நடத்த வேண்டிய சூழலை உருவாக்கியது. இப்போது வேறு ஒரு முயற்சிக்காக மீண்டும் பொருளாதாரக் கணக்கியலைப் படிக்க வேண்டிய சூழல். ஒன்றிரண்டு பாடங்கள் முடித்த பின் நிகழ்காலத்தைக் கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். நானறிந்த சில B.Com படித்த நண்பர்கள் தனியாக தொழில் தொடங்கி நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் தொழிலைவிட்டு வெளியேற எண்ணிக்கொண்டு சில காரணங்களைச் சொன்னார்கள். அந்தக்காரங்களுக்கான விடை அவர்கள் கற்ற கல்வியிலேயே இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்து படித்திருப்பார்களா என்று கேள்வி எழுகிறது.
ஒருவர் தன் துறையின் எதிர்காலத்தைக் கணித்து முடிவுகளெடுக்க தவறியவர். இன்னொருவர் அடிப்படைக் கணக்குகளைக்கூடச் சரிவர செய்யாதவர்.
தொழில் செய்பவர்களுக்கு முக்கியமான தேவை, Market Sense. அதாவது சந்தை அறிவு, கூடவே தனது தொழிலை சந்தைக்குத் தகுந்தாற்போல் தகவமைத்துக் கொள்வது. இதைச் சுட்டிக்காட்ட பயன்படுவதே கணக்குகளின் மூலம் கிடைக்கும் நிலைகாட்டிகள்(Indicators). அதாவது லாபம், நட்டம், இயங்கு செலவுகள், சந்தை செல்லும் போக்கு போன்றவை. மோசமான சூழலில் இவை ஒன்றைச் சொல்லும், அதாவது தொழிலை விட்டு வெளியேறும் தருணம். இதைக் கணிக்க முடியாமல்தான் இவர்கள் சுழலுக்குள் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்கள்.
ஆக கல்வியில் குறையில்லை, பாடங்களைக் கற்றுக்கொள்ளாதவர்களின் குறையே தோல்விக்குக் காரணம் என்று சொல்லலாம்.
Wednesday, December 21, 2016
சதுரங்கவேட்டை
Friday, November 13, 2015
மழைக்கால பாதுகாப்பு
சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையைக் கொண்டாடியும், கோபித்தும் பல பதிவுகளை எழுதியாகிவிட்டது. மின்சாரமில்லை, மீட்பு நடவடிக்கைகள் இல்லை என்ற குரல்கள் ஒரு புறமும், அரசின் போர்க்கால நடவடிக்கைகள் ஒருபுறமும் நடந்து கொண்டிருக்க, நம்மாலான சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது நம்மை பெரும் சிக்கல்களில் இருந்து காக்கும்.
1. மழை தொடரும் என்று வானிலை அறிக்கை தெரிவிப்பதால், தொடர்ந்து விழிப்புடன் இருங்கள். தாழ்வான பகுதியில் இருப்பதை முடிந்த அளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்.
2. இது போன்ற அவசர காலங்களில் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், எரிபொருட்களை ஒன்றிரண்டு வாரத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
3. சாலைகளில் தண்ணீர் தேங்கி, சாலை தெரியாத அளவிற்கு தண்ணீர் இருந்தால், அந்த சாலையை தவிர்திடுங்கள். மழையின் நீரோட்டத்தால் பாலங்கள், சாலைகள் உடைந்து பெரும் குழிகள் இருப்பது மேலிருந்து பார்த்தால் தெரியாது. அது போன்ற இடங்களில் பயனிக்கும் போது வாகனத்துடன் நீரீல் மூழ்கும் அபாயம் உண்டு. அவ்வாறான சூழல்களில் வாகனத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடவேண்டும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முடிந்த அளவு பயணங்களைத் தள்ளிப் போடுவது பாதுகாப்பானது.
4. மரங்கள், மின் கம்பங்கள், கட்டிட வேலை நடக்கும் இடங்களில் வசிப்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழையினால் இவை பாதிப்படைத்து விழுவது மட்டுமல்லாமல் பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி விடும்.
5. மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தாலோ அல்லது தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தாலோ, அருகில் நெருங்க வேண்டாம். உடனடியாக மின் வாரியத்திற்கும், உங்கள் பகுதி உள்ளூர் நிர்வாகத்திற்கும் தகவல் கொடுக்கவும். வேறு யாரும் நெருங்காமல் இருக்க, சிவப்பு துணிகொண்டும்/ தடுப்புகள் அமைத்தும் எச்சரிக்கை செய்யுங்கள்.
6. மழை காலங்களில் தண்ணீர் நிலத்தில் தேங்கும் போது, நிலத்தில் வாழும் பாம்பு, எலி போன்ற உயிரினங்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வெளியே வரும். கவனமுடன் இருப்பது நல்லது.
7. மழைக் காலங்களில் நிலவும் ஈரப்பதம் மற்றும் தண்ணீரில் பரவும் கிருமிகள் காரணமாக நோய்த்தொற்று ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இவற்றுள் காலரா, டெங்கு போன்ற நோய்களும் அடங்கும்.
8. வீட்டிற்குள் நுழைந்தவுடன் கைகளை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.
9. உணவுப் பண்டங்கள் எளிதில் கெட்டுப் போகும். பாதுகாக்கப்படாத உணவுப்பண்டங்களை தவிர்த்திடுங்கள்.
10. கொதிக்க வைத்து வடிகட்டிய தண்ணீரையே பருகுங்கள்.வெளியிடங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.
11. கொசுக்கள் வளராமல் சுற்றுப் புறத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
Thursday, October 8, 2015
படிக்கச் சொல்லிக்கொடுப்போம்
Sunday, January 4, 2009
சில நாட்கள் பாரதிதாசனாய் இருந்துதான் பார்ப்போமே!!!!!!
தமிழகமேல் ஆணை!
தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்:
நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.
தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!
"தமக்கொரு தீமை" என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!
மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்தஎன் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!
ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்!
Thursday, December 18, 2008
Friday, November 28, 2008
இந்திய அரசே.. இந்தியர்களை காப்பாற்று
இழப்பின் கொடுமை தமிழினத்தைவிட வேறு எந்த இனமும் அதிகமாக அனுபவித்திருக்காது. அந்த அடிப்படையில் இந்திய அரசை இவ்வாறு கோருவதில் எமக்கே அதிக கடமை இருக்கிறது.
"இந்தியர்களை பாது காக்க இந்திய கடற்படை மற்றும் அனைத்து படைகளையும் பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு ஒரு நாட்டுக்கு வாடகைகு அனுப்பியதால்தான் இந்த விளைவுகள் என்பதை சொல்ல இந்தியன் என்ற தகுதி போதுமென்றே நினைக்கிறேன்."
Friday, November 7, 2008
அரசியல் சதுரங்கம் 1
தி மு க - கலைஞர்
தன் இளம் வயதில் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு திராவிட கொள்கைகளையும், பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாட்டையும் மக்களிடம் கொண்டுசேர்த்ததில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார் என்பது கழகம் அவருக்கு கொடுத்த பதவிகள் சொல்லும். அடிமட்ட தொண்டனில் தொடங்கி தலைமை பொறுப்பை தன்வசப் படுத்த, அற்பணிப்பை விட அவரின் அரசியல் சாமர்த்தியம் முக்கிய காரணம். போரில் போர் தர்மங்கள் எப்படியோ, அதே போல் அரசியலில் தர்மம் இருக்கக் கூடாது என்பதுதான் அரசியல் தர்மம். அன்று இருந்த கலைஞர் தான் இன்றும் இருக்கிறார் என்றால் அவரிடம் சில கேள்விகள்,
1. அறியாமை இருளகற்ற தொடங்கிய இயக்கத்தின் தலைவர், மக்களின் அறியாமையைய் தன் ஆட்சிக்கு படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டது, பகுத்தறிவா?
உதாரணம்:
1. இலவச தொலைக்காட்சியினால் ஒரு குடும்பத்தை வருமையில் இருந்து உயர்த்த முடியும் என்ற கண்டுபிடிப்பு பகுத்தறிவா?.
2. ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை தனிமனிதனின் வருமானம் ஒரு ரூபாய் அரிசி வாங்கும் அளவிலேயே வைத்திருப்பதுதான் பகுத்தறிவு கோட்பாடா?
3. பெரியாரின் கொள்கைகளை இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் இத்தனை ஆண்டுகள் பரப்பியும் சாதியையும், சாமியின் பெயரால் நடக்கும் கூத்துக்களையும் ஏன் ஒழிக்கமுடியவில்லை?
4. பொதுவுடமை தத்துவத்தில் வளர்ந்த இயக்கத்தில் எத்தனை முதலாலிகள், மக்கள் வரிப்பணத்தை தின்றுகொண்டு அமைச்சர் பதவி அனுபவிக்கிறார்கள் என்று தெரியுமா, தலைவருக்கு?
5. மக்களாட்சி தத்துவத்தை முன்னெடுக்கும் இயக்கம் மன்னராட்சி முறைபோல் வாரிசுக்கு பட்டம் கட்டுவது ஏன்? ஸ்டாலினும், அழகிரியும், கணிமொழியும் இயக்கத்துக்காக உழைத்தவர் என்றால் கழகத்தில் வேறு யாருமே உழைக்கவில்லையா? அப்படியானால் உழைக்காத தொண்டர்களை உருவாக்கியது யார்?
6. உங்களைப்போல் அடிமட்ட தொண்டன் இன்று தலைமை பதவிக்கு வரக்கூடிய சூழலை (உங்கள் குடும்பத்தை தவிற)இயக்கம் வைத்திருக்கிறதா?
இவையெல்லாம் அடிப்படை கோட்பாட்டின் கீழ் அமைந்த கேள்விகள். அன்றாட அரசியலில் அர்த்தம் புரியாம் தவிக்கும் பாமரனின் மனதில் ஆயிரம் கேள்விகள்.
Wednesday, October 29, 2008
செய்தி திணிப்பு 2
தி ஹிந்து.
1. தேஸ்முக் வட இந்தியர்களுக்கு ஆறுதல்.
2. ஆனத் உலக சாம்பியன்.
3. நில நடுக்கம் காரணமாக பாகிஸ்தானில் 170 பேர் பலி.
4. மஹாராஸ்ட்ரா வில் நடந்த சம்பவங்களுக்கு மத்திய அரசு. - மாயாவதி.
5. பாராமுலாவில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.
6. ஜெயலலிதாவுக்கு வந்த மிரட்டல் கடிதம் மீதான மனுவை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.
7. பாதுகாப்பு குறைவான மாநிலங்களுக்கு ரயில் போக்கு வரத்தை நிருத்த தயங்க மாட்டோம். - பிகார் மக்கள் மகாராஸ்ட்ராவில் தாக்கப் பட்ட சம்பவத்துக்கு லாலு பிரசாத் எச்சரிக்கை.
8. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை - கருணாநிதி.
9. தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பின் பாதுகாப்பை மீறி குண்டுகள் வீசி சென்றுள்ளனர்.
இலங்கையில் கள முனையில் 60 ராணுவ வீரர்கள் பலி மற்றும் சீமான், அமீர் பினை விடுதலை போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
தினமலர்
1.ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் மிரட்டல்! தாய்லாந்தில் இருந்து வந்தது எச்சரிக்கை.(எழுதியது விடுதலைப் புலிகள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட வில்லை. இந்த சூழ்நிலையில் புலிகளின் இயக்கம் இது போன்ற செயல்களை செய்திருக்க வாய்ப் பில்லை என்பது அறிவுள்ள எவர்க்கும் விளங்கும்)
2. பாகிஸ்தானில் பூகம்பம்: 200 பேர் பலி.(மற்ற பத்திரிக்கை களில் 170.)
3. இலங்கை பிரச்சனைக்கு ராஜிவ் வழியில் தீர்வு காணவேண்டும். - கருணாநிதி.
4. அடுத்த தாக்குதல்! மும்பையில் உ பி வாலிபர் கொலை. அமர்சிங் மாயவதி கடும் எரிச்சல்.
5. நிதி நெருக்கடி நிலவரம். சிதம்பரம் ஆலோசனை.
6. கொழும்பு, மன்னார் முகாம்களில் புலிகள் குண்டு வீச்சு.
7. ஆனந்த் உலக சாம்பியன்.
புலிகளின் கொழும்பு விமான தாக்குதல், கள முனையில் 60 ராணுவ வீரர்கள் பலி மற்றும் சீமான், அமீர் பினை விடுதலை போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.
தின தந்தி
1. பாகிஸ்தானில் நில நடுக்கம் : 170 பேர் பலி
2. இயக்குனர்கள் சீமான், அமீர் பினையில் விடுதலை.
3. இலங்கை தமிழர்களுக்கு 2 1/2 கோடி கருணாநிதியிடம் வசூல்.
4. ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்.
5. உலக சதுரங்கம் - ஆனந்த் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.
தின மணி
1. இன்னும் பத்து நாட்களில் தனியார் நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கை.
2. பாகிஸ்தானில் நில நடுக்கம் 170 பேர் பலி
3. கனடாவில் இருந்து ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்.
4. நீலிக்கண்ணீர் வடிக்கிறார் இலங்கை அதிபர் - ராமதாஸ்
5. பா ஜா கா ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு.
6. உ. பி இளைஞர் மும்மையில் அடித்து கொலை.
7. இலங்கை ராணுவத்தினர் 60 பேர் பலி.
8. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ஆனந்த்.
தமிழர் எழுச்சியை தடுக்கும் நாளேடுகளை உங்கள் இல்லத்திலும், அலுவலகங்களிலும் தவிர்க்கவும்.

