Saturday, October 11, 2014

ஆதிமனிதன் நீ.. இங்கே அடிமைக்கோலத்தில் அலைவது ஏனோ?

தமிழராக பிறந்ததற்க்கு பெருமை கொள்ளுங்கள். இதோ ஒரு மிகச்சிறந்த கள ஆய்வாய்வாளரான ஒரிசா பாலு அவர்களின் நேர்காணல், தென்றலில் இருந்து.

அதிலிருந்து சில துளிகள்

*அதிகபட்சம் ஒரு நாளைக்கு 80 கி மி தொலைவு செல்லக்கூடிய ஆமைகள், ஆரய்ச்சியில் பல ஆயிரம் மைல்கள் பயணிப்பது தெரியவந்தது. ஆமைகள் கடல் நீரோட்டத்தைப்பயன்படுத்துதியே அவ்வளவு தொலைவு பயனித்திருக்கிறது.

*பயணத்தில் ஆமைகள் கரையொதுங்கும் இடங்கள் பெரும்பாலும் துறைமுக நகரங்களாகவே இருந்திருக்கின்றன.

*ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகளின் இந்த துறைமுக நகரங்களில் தமிழரின் நாகரீக, கலாச்சார அடையாளங்கள் காணப்படுகின்றன.

*இந்த துறைமுக நகரங்களின் பெயர்கள் தமிழில் இருக்கிறது.

*லெமூரியா கண்டம் இருந்தது உண்மை. அது சங்ககால இலக்கியத்தில் உள்ள சான்றுகள் மற்றும் இவருன் ஆய்வின் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது. 

*தெலுங்கு சோழர்கள் என்ற குறிப்பு இந்த கட்டுரையில் உள்ளது. சோழர்கள் திராவிடர்களா? என்ற வினாவிற்க்கு வரலற்றாய்வாளர்கள்தான் பதிலளிக்க வேண்டும்.