எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
Sunday, October 19, 2008
Tuesday, October 14, 2008
பூனைக்கு மணி கட்டிய புலி
செப் 9, அதிகாலை மணி 3. சூரியன் வந்து தூக்கம் கலைப்பதற்குள், நீண்ட துயிலில் இருந்த தமிழினத்தையும், சூரியனையும் எழுப்ப வரலாறு குறித்த கொடுத்த நேரம். பகை என்னும் நெறுப்பு எல்லாத் திசையிலும் பரவியிருந்த போதும் சிறகு முலைத்த இரண்டு புலிகள் வன்னிக்காட்டின் மேல் பறந்து, "என் கண்ணில் யாரும் தப்ப முடியாது" என்று இருமாப்புடன் விழித்திருந்த வான் கண்காணிப்பு பொறிகளின் கண்களில் மண் தூவி இடியை எச்சம் போல் தலையில் இறக்கிச் சென்றன பறக்கும் புலிகள்.
கண் விழிப்பதற்குள், கண்கள் குருடாகி வானம் பார்த்து வீழ்ந்தது சிங்களக் கொடி. விழுந்த சிங்களத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருந்த வல்லரசின் துருப்புக்களும் புலியின் வான் குண்டுக்கு தப்ப வில்லை. அங்கே அண்டார்டிக் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அவர்களை அங்கவீனப் படுத்தியது தொடர்பாக இந்தியப் பேரரசு எந்த கவலையும் வெளியிடவில்லை என்பது கியாஸ் தியரி.
அரசியல் அஞ்ஞானி, வன்முறை விஞ்ஞானி என்றெல்லாம் பெயர் சூட்டிப்பார்த்த அரசியல் ஞானிகளின் தலையில் குட்டி, பாடம் புகட்டிவிட்டான் யாழின் மைந்தன். வாரிக் கொடுத்து, ஆயுதங்கள் ஆயிரம் வாங்கிக் கொடுத்து, கூடிக் கூடி தீட்டிய திட்டமெல்லாம் இன்று குப்பை மேடானது. எதிரியின் விரல் கொண்டே அவன் கண்ணை குருடாக்கி நிலை குலையச் செய்ய இரண்டு குண்டுகளே போதும் அவனுக்கு.
தமிழினத்தை காவு வாங்க துடிக்கும் சிங்கத்தோல் போர்த்திய பூனைக்கு புலிகட்டிய மணி ஒலிக்கும் போதெல்லாம் விழித்துக் கொள்வார்களா இந்த கருப்பு, சிவப்பு என பல வண்ணங்களில் உலவும் இனக்காவலர்கள்?
கண் விழிப்பதற்குள், கண்கள் குருடாகி வானம் பார்த்து வீழ்ந்தது சிங்களக் கொடி. விழுந்த சிங்களத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருந்த வல்லரசின் துருப்புக்களும் புலியின் வான் குண்டுக்கு தப்ப வில்லை. அங்கே அண்டார்டிக் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அவர்களை அங்கவீனப் படுத்தியது தொடர்பாக இந்தியப் பேரரசு எந்த கவலையும் வெளியிடவில்லை என்பது கியாஸ் தியரி.
அரசியல் அஞ்ஞானி, வன்முறை விஞ்ஞானி என்றெல்லாம் பெயர் சூட்டிப்பார்த்த அரசியல் ஞானிகளின் தலையில் குட்டி, பாடம் புகட்டிவிட்டான் யாழின் மைந்தன். வாரிக் கொடுத்து, ஆயுதங்கள் ஆயிரம் வாங்கிக் கொடுத்து, கூடிக் கூடி தீட்டிய திட்டமெல்லாம் இன்று குப்பை மேடானது. எதிரியின் விரல் கொண்டே அவன் கண்ணை குருடாக்கி நிலை குலையச் செய்ய இரண்டு குண்டுகளே போதும் அவனுக்கு.
தமிழினத்தை காவு வாங்க துடிக்கும் சிங்கத்தோல் போர்த்திய பூனைக்கு புலிகட்டிய மணி ஒலிக்கும் போதெல்லாம் விழித்துக் கொள்வார்களா இந்த கருப்பு, சிவப்பு என பல வண்ணங்களில் உலவும் இனக்காவலர்கள்?
Tuesday, August 5, 2008
மீண்டும் பள்ளிக்கு
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பள்ளி வாழ்கை என்பது எல்லோர் மனதுக்குள்ளும் பசுமையாக ஏதாவது ஒரு ஓரத்தில் அசை போடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. சேரன் தங்கர் பச்சான் ஏற்க்கனவே மேய்ந்த புல் தான் என்றாலும் சற்று தனிப்புல் மேய்ந்து நம்ம ஆசைய தீத்துகலான்னு குலதெய்வம் கருப்பராயன் கிட்ட சீட்டெழுதி போட்டு சம்மதம் வாங்கி ஆரம்பிக்கரேங்க. யாரவது இந்த சொறிப்பய மாதிரி மிரட்டல் பின்னூட்டம் போட்டால் அதுக்கு கருப்பராயன் தான் பதில் சொல்லுவான்.
கருப்பராயன் துணை
கதையின் ஆரம்பத்தை தொட குறைந்தது இருபதாவது நூற்றாண்டு வரையாவது செல்லவேண்டும். 1989 இன் நடுப்பகுதியில் புளியம்பட்டிக்குள் பெண்கள் மேல் நிலைப்பள்ளியும், இன்ன பிற மெட்ரிகுலேசன் பள்ளிகளும் வராத காலம். கோ.வே.கா மேல் நிலை பள்ளியை ஆண்களும் பெண்களும் பிரித்துக் கொண்ட காலம் அது. (கோ வே காளியப்பன் என்ற வள்ளல் அளித்த பல ஏக்கர் நிலம் மற்றும் பல உதவிகளினால் உருவானதுதான் அந்த பள்ளி. அவர் மட்டும் தனியாக ஒரு பள்ளி ஆரம்பித்திருந்தால் இன்று நானெல்லாம் ப்லாக் எழுதிக்கொண்டிருக்க மாட்டேன், எங்காவது ஒரு பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராகியிருப்பேன்.)
கதை சொல்லும் நானே கதையின் நாயகன் கந்தன் ஆனேன். அதுவரைக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாவது வரை படித்து விட்டு எப்போது இந்த வெள்ளைச்சட்டையும் காக்கி கால் சட்டையும் போடுவோம் என்ற ஆர்வத்துடன் அலைந்த பலரில் நானும் ஒருவன். அதுவும் ஒரு உயர் நிலை பள்ளியில் சேருவதென்பது ஏதோ கேம்ப்ரிட்ஜில் சேருவது போன்ற எண்ணத்தில் தான் காலரை தூக்கி கொண்டு சுத்தினோம். ஊ ஓ தொடக்கப் பள்ளியில் டி சி எனப்படும் பள்ளி மாற்று சான்றிதழ் வாங்கிக் கொண்டு முருகன் காலண்ட்ர் பார்த்து அம்மா சொன்ன ஒரு நல்ல தேதியில் பள்ளியில் சேர்க்க முடிவாகியது.
இந்த முறை முழு ஆண்டு விடுமுறை முடிவது என்பது எனக்கும் என் நண்பர்களுக்கும் துக்கத்தை தர வில்லை. மாறாக ஆர்வத்தை தந்தது. வெய்யிலில் கிரிகெட் விளையாடி விளையாடி கரிக்கட்டை ஆனது தான் மிச்சம். தினமும் காலை ஏழு மணியிலிருந்து சாப்பிடாமல் ஆறு ஏழு மேச் விளையாடியதெல்லாம் நினைத்தால் இப்போதும் அந்த காலத்துக்கு செல்ல ஞாபகப் பசியெடுக்கிறது.
மேட்ச் ஆரம்பிக்கும் முன் எப்படியும் ஒரு மூன்று நான்கு பேர் எங்கள் டீமுக்கு கேப்டனாக இருப்பார்கள். கேப்டன், அஸிஸ்டன்ட் கேப்டன், பவ்லிங்க் கேப்டன் அப்படி இப்படின்னு ஏதாவது ஒரு பேர்ல கேப்டன்களாகி டாஸ் ஸ்பின் பண்ணும் போது எவன் கேட்டது விழுகுதோ அவனே உண்மையான கேப்டனாகி விடுவான். அதுவும் எங்கள் டீம் ஒரு அற்புதமான டீம். அந்த கிரவுண்டுல அன்னைக்கு மொத்தமா ஒரு பத்துபேர் ஒரே டீமா இருக்கறதால எங்களை விட்டா அங்க மேச் விளையாடரதுக்கு, மத்த ஏரியா பசங்களுக்கு வேறு வழியில்லை. அதனால் நாங்கள் பண்ணும் சலம்பல்கள் எல்லாத்தையும் தாயுள்ளம் கொண்டு ஏற்றுக்கொள்வார்கள்.பூவாக இருந்தாலும் தலையாக இருந்தாலும் நாங்கள் தான் முதல் பேட்டிங். எங்கள் டீமின் கேப்டன்கள் டாஸ் ஸ்பின் பண்ண காசை மேலே எரிந்ததும் தலை பூ இரண்டையும் கேட்டுவிடுவார்கள். எதிர் அணியுன் கேப்டன் வாய் திறப்பதற்க்குள் எங்கள் டீமின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் களத்தில் க்ரீசை சரி செய்து கொண்டிருப்பார்கள்.
வேறு வழியில்லாமல் எதிரணியினர் பந்து வீச பந்தை எடுக்க போவர். எங்கள் டீமின் கேப்டன் ஒரு அரசியல்வாதிக்கான தகுதியுடன் அன்றே திகழ்ந்தார். அன்றைய மேட்ச்சுக்கான விதிகளை இரண்டு டீம் கேப்டன்களும் தீர்மானித்த பின் ஆட்டம் தொடங்கும். அம்பயர் ஆக நிற்க தமிழில் உள்ள அனைத்து கெட்டவார்த்தைகளும் கற்றுத் தேர்ந்த இரண்டு பேர் எங்கள் டீமில் உண்டு.ஆள் பற்றாக்குறை காரணமாக, பொதுவாக பேட்டிங் செய்யும் டீமிலிருந்து தான் அம்பயர் மற்றும் ஸ்கோரர்கள் இருப்பார்கள்.
ஸ்கோரர் அம்பயரின் பார்வையை சரியாக புரிந்து கொண்டு சச்சின் ரன்களையும் எங்களுக்காக சேர்த்துக் கொள்வான். எதிர்த்து கேள்வி கேட்கும் எதிரணியின் அறிவு ஜீவிகளுக்கு அம்பயர்தான் தனக்கு தெரிந்த மொழியில் பதில் சொல்வார். அதனால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அப்படி இப்படி என்று எங்கள் முழு திறமையையும் காட்டி எடுத்த இருபது முப்பது ரன்களுக்குள் எதிர் டீமை ஆல் அவுட் செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய சவால் கடைசியாக பேட்டிங் பிடித்து முதல் ஓவர் வீச வரும் என்னைப் போன்ற பவுலர்களின் கையில் கொடுத்து விட்டு கேப்டன் அவராலான உதவிகளை செய்ய ஆரம்பிப்பார். எப்படியும் ஓவருக்கு ஐந்து பந்துகள் மட்டும் வீச ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருக்கும். அதற்குள் விக்கெட் விழுந்தால் அடுத்த ஓவர் சண்டை போடமலே கேப்டன் கொடுத்து விடுவார். இல்லையென்றால் பல உத்திகளில் சண்டை போட்டு பந்தை பிடுங்கிக் கொண்டு முதல் பந்தை வீசி ஓவரை தனதாக்கி கொள்ளும் சாமர்த்தியமும் ஒரு பவுலரை பவுலர் என்று தீர்மாணிக்கும்.
எப்படியும் எதிர் அணி ஜெயித்து விடும் என்ற சூழ்நிலையில் எங்கள் கேப்டன் ஸ்கோரில் தவறு உள்ளது என்று ஐந்து ரன்கள் குறைத்து விடுவான். எதிர் அணியினர் சம்மதிக்க வில்லையென்றால் மேட்ச்சை புறக்கணித்துவிட்டு வெளியேற பவுண்டரியில் இருக்கும் எங்கள் அணியினர் தயாராக இருப்பார்கள். இதை புரிந்து கொண்டு தாங்கள் மாங்கு மாங்கு என்று வீசிய பத்து ஓவர்களுக்காகவாவது எங்களை பந்து வீச வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் நாங்கள் சொல்லும் ஸ்கோர் கரெக்சன் மற்றும் அவுட் களை எதிர் அணியினர் ஏற்றுக்கொள்வார்கள். இத்தனையையும் தாண்டி எதிரணியினர் வெற்றி பெற்றுவிட்டால் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்துக் கொண்டிருக்கும். தோல்வி பெற்ற கேப்டன் என கையெழுத்து போடுவது எங்கள் டீமின் 16வது பிளேயர் கேப்டனின் 2வது படிக்கும் தம்பி. இத்தனையையும் தாங்கிக் கொண்டு அடுத்த மேச் விளையாட தேதி கேட்கும் எதிர் அணியிடம், நன்றாக விளையாடியவர்கள் பெயரை குறிப்பிட்டு அவர்கள் அடுத்த மேட்சுக்கு வரக்கூடாது என்று நிபந்தனை விதித்து களைவோம். அதையும் சம்மதித்து வரும் அவர்களின் கிரிக்கெட் ஆர்வத்துக்கு நாங்கள் தலை வணங்குவோம்.
முழு ஆண்டுத் விடுமுறையை இப்படியே கழித்து ஒரு வழியாக ஆறாவதில் சேர்வதற்க்கான தேதி வந்தது.........
(தொடரும்)
Thursday, July 31, 2008
ஒரு நடிகனின் வேசமும் நாகரிக கோமாளிகளும்
"எல்லோருமே திருடங்கதான், சொல்லப்போனா குருடங்கதான்" ன்னு இசை ஞானி பாடின பாட்டு இன்னைக்கும் அப்படியே இருக்கு. ஆனா அதை பாடுவது போல் பாவனை செய்த சிவப்பு மனிதனின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. தன் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே சினிமாவை சேர்த்துக்கொண்ட ரசிகனுக்கு இவர் போன்ற வேசதாரிகளின் நடிப்பை சினிமாவுக்கு வெளியிலும் புரிந்து கொள்ள முடியாத பகுத்தறிவு பாடம் புகட்டியுள்ளது முற்ப்போக்கு கழகங்கள்.
தண்ணீர் கேட்டு தமிழன் தவித்து கொண்டிருக்கும் இந்நாளில் அவன் கண்ணீரும் காசாக்க தெரிந்த்தவர்தான் இந்த வியாபாரி. தமிழனுக்கு செஞ்சோற்று கடன் பட்டவன் போல் மேடையில் பேசி இன்று அவன் சோற்றிலே கைவத்தவர்தான் இந்த கலியுக சிவாஜி.
தமிழன் காதுக்கெட்டாத தூரம் போய் அவனுக்கு ஆதரவாய் பேசியதற்கு மண்ணிப்பு கோரியிருக்கும் இந்த மாமனிதனையும் மண்ணிக்கப் போகிறானா இந்த மானங்கொண்ட தமிழன்?
ஆடிப் பிழைப்பவரின் ஆட்டத்தை மட்டும் ரசிக்கத் தெரிந்த்திருந்தால் இன்று பரதேசியாய் தண்ணீருக்காக பிச்சை பாத்திரமேந்தியிருக்க வேண்டியதில்லை. பிச்சை எடுக்க வேண்டும் என்று எண்ணித்தானே இந்த தமிழர் விரோத பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவனுக்கு தெரியாமலே அவன் மேல் கருத்தை தினித்துக் கொண்டிருக்கின்றன். அவாளை சொல்லி குற்றமில்லை. பகுத்தறிவு கற்றுத் தரவேண்டிய கழகங்கள் தமிழன் பெயர் சொல்லிக் கொள்ளையடிக்கும் கூட்டுத்தொழிலல்லவா செய்து கொண்டிருக்கின்றன.
"அடி வாங்குனது போன வாரம், இது இந்த வாரம்" னு சொல்லிட்டு குசேலன் பார்க்க கிளம்பும் ரசிகனுக்கு வாழ்த்துக்கள்.
தண்ணீர் கேட்டு தமிழன் தவித்து கொண்டிருக்கும் இந்நாளில் அவன் கண்ணீரும் காசாக்க தெரிந்த்தவர்தான் இந்த வியாபாரி. தமிழனுக்கு செஞ்சோற்று கடன் பட்டவன் போல் மேடையில் பேசி இன்று அவன் சோற்றிலே கைவத்தவர்தான் இந்த கலியுக சிவாஜி.
தமிழன் காதுக்கெட்டாத தூரம் போய் அவனுக்கு ஆதரவாய் பேசியதற்கு மண்ணிப்பு கோரியிருக்கும் இந்த மாமனிதனையும் மண்ணிக்கப் போகிறானா இந்த மானங்கொண்ட தமிழன்?
ஆடிப் பிழைப்பவரின் ஆட்டத்தை மட்டும் ரசிக்கத் தெரிந்த்திருந்தால் இன்று பரதேசியாய் தண்ணீருக்காக பிச்சை பாத்திரமேந்தியிருக்க வேண்டியதில்லை. பிச்சை எடுக்க வேண்டும் என்று எண்ணித்தானே இந்த தமிழர் விரோத பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவனுக்கு தெரியாமலே அவன் மேல் கருத்தை தினித்துக் கொண்டிருக்கின்றன். அவாளை சொல்லி குற்றமில்லை. பகுத்தறிவு கற்றுத் தரவேண்டிய கழகங்கள் தமிழன் பெயர் சொல்லிக் கொள்ளையடிக்கும் கூட்டுத்தொழிலல்லவா செய்து கொண்டிருக்கின்றன.
"அடி வாங்குனது போன வாரம், இது இந்த வாரம்" னு சொல்லிட்டு குசேலன் பார்க்க கிளம்பும் ரசிகனுக்கு வாழ்த்துக்கள்.
Sunday, July 27, 2008
சார்க் 2008 ம் விடுதலை புலிகளும்
"இந்த ஆண்டு சார்க் மாநாடு இன்று முதல் சிறிலங்கா தலை நகர் கொழும்புவில் தொடங்கியது"- இது இந்தியாவில் தென் மூலையில் இருந்து கொண்டு கலைஞர் டிவி மானாட மயிலாட நிகழ்ச்சியின் விளம்பர இடைவெளியில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்புக்கிடையே ஒரு வினாடி கேட்டுக்கொண்டு மீண்டும் இன்னும் ஒரு தமிழ் கலாச்சாரம் வளர்க்கும் தொலைக்காட்சிக்குள் மூழ்கிவிட எத்தனித்தேன். அப்பொழுது திடீரென நம் பாட்டன் பாரதி தோன்றினான்.
பாரதி : "என்னடா பேரா, நலமா?" என்றான்
அதெல்லாம் சவுக்கியமா இருக்கோம்ல. நீ எப்படி, சவுக்கியமா?
பாரதி : ஏதோ கொஞ்சம் உயிருடன் இருக்கும் தமிழின் உயிரைக் காப்பாற்ற ஆவியை பிடித்துக்கொண்டிருக்கிறேன்.
ஏன் தமிழுக்கென்ன? நாங்கதான் இப்ப சினிமா பேரெல்லாம் தமிழ்லதான் வெக்கறமல்ல.
பாரதி : ஆம். ஆம். இப்பொழுது தமிழ், திரைப்படங்களின் பெயரில்தான் வாழ்கிறது. அதற்கு விருதுகளும் வரி விலக்கும் தருவதுகூட இப்பொழுது எப்படி தமிழை தத்தெடுக்கிறீர்கள் என்பது தெரிகிறது.
உனெக்கென்ன தாத்தா உன்னோட பிரன்ஸுகளும் சிஸ்யர்களும் தமிழால் வாழ்ந்து தமிழையும் வாழவைச்சிட்டு போயிட்டீங்க.. இப்ப பாவம் நம்ம முத்தமிழ் காவலர் மட்டும் தனியா ஒத்த ஆளா நின்னு தமிழை தொலைக்காட்சில வாழ வெக்கிறார்.
பாரதி : ஆம். பார்த்தேனே.. நீங்கள் எப்படி தமிழை வளர்க்கிறீர்கள் என்று. தமிழ் பத்தினி தாயடா. அவளை ஏன் வேறு மொழிகளுடன் கலந்து வேசியாக்கி வணிகம் செய்கிறீர்கள் ?பதர்களே... உங்களிடமா என் தாயை ஒப்படைத்து விட்டு போனேன். அய்யகோ......
அய்யய்யோ.. தாத்தா நீ ஏன் உணர்ச்சி வசப்படரே. நீ இருந்த காலம் வேற இப்ப இருக்கற காலம் வேற. இப்பல்லாம் ஸ்கூல்ல தமிழ்ல பேசுனாலே தண்டனை குடுக்கிற காலம். நீ வேற சும்மா பொலம்பிட்டு... சரி வந்து இப்படி உக்காந்து நாங்க எப்படி இசைத்தமிழை நாட்டியத்தோட வாழ வைக்றம்னு பாரு.
பாரதி : "எங்களின் தாயவளை கொச்சை படுத்தி கூவி கூவி விற்க்கும் உங்களை கொன்றாலே அவளின் ஆயுள் அடுத்த நூறாண்டு வரை வாழுமடா" ன்னு கொலை வாளை எடுத்து முதலில் என் நாக்கை வெட்டி பின் என் தலையை வெட்டி அவன் வணங்கும் காளிக்கு என்னை காணிக்கை கொடுத்து விட்டான்.
நாக்க மூக்க ரிங் டோன் அலர எந்திருச்சு பாத்தா... யப்பா.. இது கனவுன்னு கன்பார்ம், சாரி.. மண்ணிக்கனும், உறுதிப்படுத்திக்கிறதுக்கு கழுத்தை தொட்டு பார்த்துக்கிட்டேன். தலை ஒட்டிக்கொண்டுதான் இருந்தது.
சரி எழுந்திருச்சு வெளிநாடு வாழ் தமிழ் நண்பனின் அழைப்பை ஏற்று நாட்டு நடப்பு பற்றி கதைத்து கொண்டிருந்தோம். அவன் "சார்க் மாநாட்டை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க.. தெரியுமா?" ன்னு கேட்டான்.
அட எங்க நீ வேற.. இங்க எங்கப்பா தைரியமா புலிகளை பத்தி செய்தி சொல்றாங்க. அப்பப்போ இத்தனை புலிகளை இலங்கை ராணுவம் கொன்றுச்சுன்னு கணக்கு சொல்லுவாங்க. அதுக்கு மேல ஒன்னும் சொல்ல மாட்டங்க. நான் சின்னப் பையனா இருந்தப்ப இருந்து இவுங்க சொன்ன கணக்குப்படி பார்த்தா புலிகளின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையவிட இரண்டு மடங்கு இருக்குமல்ல.
சரி சார்க் மாநாட்டுக்கு ஏன் புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க?
நண்பன் : என்ன இருத்தாலும் தமிழீழமும் தெற்க்காசிய நாடுதானே?
நான் : அதெப்படி இந்தியா அனுமதிக்காம தமிழீழம் உருவாச்சு. இங்க நாங்கதான் வல்லரசு தெரியும்ல.
நண்பன்: ஆமாம். உங்கள் உளவுத்துறையும் உங்கள் ஊடகங்களும் அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.
நான் : டேய். எங்க நாட்ட பத்தி தப்பா பேசாத. அப்பரம் விஜையகாந்த் அர்ஜுன் கிட்ட எல்லாம் சொல்லி உன்ன என்கவுண்டர் பண்ணிருவோம்.ஜாக்கிரதை!..
நண்பன்: நான் ஏண்டா உங்க நாட்டை பத்தி தப்பா பேசப் போறேன். இணையத்துல வந்து நாலு செய்திய படிச்சுப் பாரு. உனக்கே புரியும்.
நான் : என்னட சொல்றே?
நண்பன் : இப்ப உங்க பிரதமர் சார்க் மாநாட்டுக்கு சிறிலங்கா போறார்ல. அதுக்கு எதுக்கு 5000 வரையிலான உங்க ராணுவ வீரர்களோட போறார்?
நான் : அங்கதான் எப்ப பாத்தாலும் குண்டு வெடிக்குதல்ல. ஒரு வல்லரசின் பிரதமரை தீவிர வாதத்திடமிருந்து காப்பாத்தரதுல என்ன தப்பு?
நண்பன் : ஆமா. நேத்து கூடதான் உங்க நாட்ல பல இடங்கள்ல குண்டு வெடிச்சுது. அப்ப உங்க நாட்டுக்கு வர்ற அமெரிக்க அதிபர் 50000 படையினருடன் வருவாரா?
நான் : சரி என்னதான் சொல்ல வர்றே?
நண்பன் : முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும்னு உங்க அதிகாரிங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குப்பா.
நான் : புரியும் படி சொல்லு?
நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி சிறிலங்காவின் பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னாடி குண்டு வெடித்து பாகிஸ்தான் தூதர் Bashir Wali Mohmand மயிர் இழையில் உயிர்தப்பினார்..
நான் : அது விடுதலைப் புலிகள் செஞ்சிருப்பாங்க.
நண்பன்: ஆனா இதை அவங்க செய்யல. இது முழுக்க முழுக்க இந்திய உளவுத்துறை பண்ணின சதி வேலை ன்னு ஒரு சில பத்திரிக்கைல படிச்சேன். இலங்கை விசயத்துல பாகிஸ்தானோட தலையீடு மற்றும் ஆயுத உதவி போன்றவை வல்லரசுக்கு சற்று அச்சத்தை கொடுத்ததாகவும் எங்கே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கை என்ற சின்னப் பையன் வேறு ஒருவனின் கட்டுப்பாட்டுக்கு போயிருமோ என்ற எண்ணத்திலும் இன்னுமொரு காஷ்மீர் தென்னிந்தியாவில் உருவாகமல் தடுப்பதற்க்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் புலிகளின் பெயரை பயண்படுத்திக்கொண்டாதாகவும் தகவல்.
நான் : சே... சே... எங்க நாடு இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாது. இது முழுக்க முழுக்க வெளி நாட்டு சதி.
நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆப்கானிஸ்தான்ல இந்திய தூதரகத்துல குண்டு வெடிச்சு 40 க்கும் மேற்பட்டோற் இறந்த்ததாவது தெரியுமா?
நான் : ஆமாம். அது எங்களின் எதிரி பாகிஸ்தானின் சதிதான்.
நண்பன் : அதற்க்கு காரணம் தாலிபான்கள் என்று பாகிஸ்தான் சொல்லியிருக்கே?
நான் : அது பொய். பாகிஸ்தானின் ISI சதி.
நண்பன் : அது பாகிஸ்தானின் சதி. இங்கு நடந்தது புலிகளின் சதி.... நல்ல பகுத்தறிவுடா உனக்கு.
நான் : சரி இதுக்கும் புலிகளின் போர் நிறுத்தத்துக்கும் என்னடா சம்பந்த்தம்?
நண்பன் : இருக்கு. இந்த மாநாட்டை சாக்காக வைத்து பாகிஸ்தான் இந்திய பிரதமரை கொல்ல சதி திட்டம் தீட்டிருக்கலாம்னு ஒரு செய்தி இந்திய உளவுப்பிரிவுக்கு புலிகளின் உளவுப் பிரிவு மூலமா அனுப்பப் பட்டிருக்கு.
நான் : சரி நம்பிட்டேன். இதையே சாக்காக வைத்து பாகிஸ்த்தான் பிரதமரை கொலை செய்ய இந்தியா சதி செய்திருக்கிறதுன்னு தாலிபான் உளவுப்பிரிவு பாகிஸ்தான் உளவுப்பிரிகுக்கு தகவல் அனுப்பிச்சிருக்குமே?
நண்பன் : இருந்தாலும் இருக்கும். அதனால தான், அவுங்க இந்தியப் படைகள் பாதுகாப்புக்காக இலங்கையில் இருந்தால், தாங்கள் கலந்து கொள்ள போவதில்லைன்னு அறிவிச்சிருக்காங்க. இந்த வம்புல ஏன் தேவையில்லாம தமிழரின் விடுதலைப் போராட்டம் மாட்டிக்கிட்டு அல்லல் படனும்னு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிட்டாங்க.
நான் : காக்கா உக்காற பனை மரம் விழுந்த கதையாவல்ல இருக்கு.
நண்பன் : "உண்மை எதுன்னு யாருக்கு தெரியும். காலம் தான் பதில் சொல்லனும்" னு சொல்லிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.
என்னடா இன்னைக்கு ஒரே திகிலா போகுதுன்னு வொரி.. மண்ணிக்கணும்..வருத்தப்பட்டுட்டே .. வருத்தத்த போக்க ஏதவது ஒரு பள்ளிக்கூடம் பக்கம் பொறேன்.
அது என்னடா பள்ளிக்கூடத்துல வருத்தத்த போக்றாங்களான்னு நீங்க கேக்கறது தெரியுது.
அங்கதான் டாஸ்மாக் இருக்கும்ல............
http://www.dawn.com/2006/08/16/top10.htm
http://findarticles.com/p/articles/mi_kmafp/is_200608/ai_n16622684
http://www.thaindian.com/newsportal/india-news/isi-behind-the-indian-embassy-bombing-m-k-narayanan_10070860.html
http://wcbstv.com/topstories/afghanistan.bomb.blast.2.765878.html
http://www.colombopage.com/archive_08/July20160024JR.html
http://www.gulfnews.com/World/Afghanistan/10228788.html
பாரதி : "என்னடா பேரா, நலமா?" என்றான்
அதெல்லாம் சவுக்கியமா இருக்கோம்ல. நீ எப்படி, சவுக்கியமா?
பாரதி : ஏதோ கொஞ்சம் உயிருடன் இருக்கும் தமிழின் உயிரைக் காப்பாற்ற ஆவியை பிடித்துக்கொண்டிருக்கிறேன்.
ஏன் தமிழுக்கென்ன? நாங்கதான் இப்ப சினிமா பேரெல்லாம் தமிழ்லதான் வெக்கறமல்ல.
பாரதி : ஆம். ஆம். இப்பொழுது தமிழ், திரைப்படங்களின் பெயரில்தான் வாழ்கிறது. அதற்கு விருதுகளும் வரி விலக்கும் தருவதுகூட இப்பொழுது எப்படி தமிழை தத்தெடுக்கிறீர்கள் என்பது தெரிகிறது.
உனெக்கென்ன தாத்தா உன்னோட பிரன்ஸுகளும் சிஸ்யர்களும் தமிழால் வாழ்ந்து தமிழையும் வாழவைச்சிட்டு போயிட்டீங்க.. இப்ப பாவம் நம்ம முத்தமிழ் காவலர் மட்டும் தனியா ஒத்த ஆளா நின்னு தமிழை தொலைக்காட்சில வாழ வெக்கிறார்.
பாரதி : ஆம். பார்த்தேனே.. நீங்கள் எப்படி தமிழை வளர்க்கிறீர்கள் என்று. தமிழ் பத்தினி தாயடா. அவளை ஏன் வேறு மொழிகளுடன் கலந்து வேசியாக்கி வணிகம் செய்கிறீர்கள் ?பதர்களே... உங்களிடமா என் தாயை ஒப்படைத்து விட்டு போனேன். அய்யகோ......
அய்யய்யோ.. தாத்தா நீ ஏன் உணர்ச்சி வசப்படரே. நீ இருந்த காலம் வேற இப்ப இருக்கற காலம் வேற. இப்பல்லாம் ஸ்கூல்ல தமிழ்ல பேசுனாலே தண்டனை குடுக்கிற காலம். நீ வேற சும்மா பொலம்பிட்டு... சரி வந்து இப்படி உக்காந்து நாங்க எப்படி இசைத்தமிழை நாட்டியத்தோட வாழ வைக்றம்னு பாரு.
பாரதி : "எங்களின் தாயவளை கொச்சை படுத்தி கூவி கூவி விற்க்கும் உங்களை கொன்றாலே அவளின் ஆயுள் அடுத்த நூறாண்டு வரை வாழுமடா" ன்னு கொலை வாளை எடுத்து முதலில் என் நாக்கை வெட்டி பின் என் தலையை வெட்டி அவன் வணங்கும் காளிக்கு என்னை காணிக்கை கொடுத்து விட்டான்.
நாக்க மூக்க ரிங் டோன் அலர எந்திருச்சு பாத்தா... யப்பா.. இது கனவுன்னு கன்பார்ம், சாரி.. மண்ணிக்கனும், உறுதிப்படுத்திக்கிறதுக்கு கழுத்தை தொட்டு பார்த்துக்கிட்டேன். தலை ஒட்டிக்கொண்டுதான் இருந்தது.
சரி எழுந்திருச்சு வெளிநாடு வாழ் தமிழ் நண்பனின் அழைப்பை ஏற்று நாட்டு நடப்பு பற்றி கதைத்து கொண்டிருந்தோம். அவன் "சார்க் மாநாட்டை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க.. தெரியுமா?" ன்னு கேட்டான்.
அட எங்க நீ வேற.. இங்க எங்கப்பா தைரியமா புலிகளை பத்தி செய்தி சொல்றாங்க. அப்பப்போ இத்தனை புலிகளை இலங்கை ராணுவம் கொன்றுச்சுன்னு கணக்கு சொல்லுவாங்க. அதுக்கு மேல ஒன்னும் சொல்ல மாட்டங்க. நான் சின்னப் பையனா இருந்தப்ப இருந்து இவுங்க சொன்ன கணக்குப்படி பார்த்தா புலிகளின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையவிட இரண்டு மடங்கு இருக்குமல்ல.
சரி சார்க் மாநாட்டுக்கு ஏன் புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க?
நண்பன் : என்ன இருத்தாலும் தமிழீழமும் தெற்க்காசிய நாடுதானே?
நான் : அதெப்படி இந்தியா அனுமதிக்காம தமிழீழம் உருவாச்சு. இங்க நாங்கதான் வல்லரசு தெரியும்ல.
நண்பன்: ஆமாம். உங்கள் உளவுத்துறையும் உங்கள் ஊடகங்களும் அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.
நான் : டேய். எங்க நாட்ட பத்தி தப்பா பேசாத. அப்பரம் விஜையகாந்த் அர்ஜுன் கிட்ட எல்லாம் சொல்லி உன்ன என்கவுண்டர் பண்ணிருவோம்.ஜாக்கிரதை!..
நண்பன்: நான் ஏண்டா உங்க நாட்டை பத்தி தப்பா பேசப் போறேன். இணையத்துல வந்து நாலு செய்திய படிச்சுப் பாரு. உனக்கே புரியும்.
நான் : என்னட சொல்றே?
நண்பன் : இப்ப உங்க பிரதமர் சார்க் மாநாட்டுக்கு சிறிலங்கா போறார்ல. அதுக்கு எதுக்கு 5000 வரையிலான உங்க ராணுவ வீரர்களோட போறார்?
நான் : அங்கதான் எப்ப பாத்தாலும் குண்டு வெடிக்குதல்ல. ஒரு வல்லரசின் பிரதமரை தீவிர வாதத்திடமிருந்து காப்பாத்தரதுல என்ன தப்பு?
நண்பன் : ஆமா. நேத்து கூடதான் உங்க நாட்ல பல இடங்கள்ல குண்டு வெடிச்சுது. அப்ப உங்க நாட்டுக்கு வர்ற அமெரிக்க அதிபர் 50000 படையினருடன் வருவாரா?
நான் : சரி என்னதான் சொல்ல வர்றே?
நண்பன் : முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும்னு உங்க அதிகாரிங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குப்பா.
நான் : புரியும் படி சொல்லு?
நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி சிறிலங்காவின் பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னாடி குண்டு வெடித்து பாகிஸ்தான் தூதர் Bashir Wali Mohmand மயிர் இழையில் உயிர்தப்பினார்..
நான் : அது விடுதலைப் புலிகள் செஞ்சிருப்பாங்க.
நண்பன்: ஆனா இதை அவங்க செய்யல. இது முழுக்க முழுக்க இந்திய உளவுத்துறை பண்ணின சதி வேலை ன்னு ஒரு சில பத்திரிக்கைல படிச்சேன். இலங்கை விசயத்துல பாகிஸ்தானோட தலையீடு மற்றும் ஆயுத உதவி போன்றவை வல்லரசுக்கு சற்று அச்சத்தை கொடுத்ததாகவும் எங்கே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கை என்ற சின்னப் பையன் வேறு ஒருவனின் கட்டுப்பாட்டுக்கு போயிருமோ என்ற எண்ணத்திலும் இன்னுமொரு காஷ்மீர் தென்னிந்தியாவில் உருவாகமல் தடுப்பதற்க்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் புலிகளின் பெயரை பயண்படுத்திக்கொண்டாதாகவும் தகவல்.
நான் : சே... சே... எங்க நாடு இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாது. இது முழுக்க முழுக்க வெளி நாட்டு சதி.
நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆப்கானிஸ்தான்ல இந்திய தூதரகத்துல குண்டு வெடிச்சு 40 க்கும் மேற்பட்டோற் இறந்த்ததாவது தெரியுமா?
நான் : ஆமாம். அது எங்களின் எதிரி பாகிஸ்தானின் சதிதான்.
நண்பன் : அதற்க்கு காரணம் தாலிபான்கள் என்று பாகிஸ்தான் சொல்லியிருக்கே?
நான் : அது பொய். பாகிஸ்தானின் ISI சதி.
நண்பன் : அது பாகிஸ்தானின் சதி. இங்கு நடந்தது புலிகளின் சதி.... நல்ல பகுத்தறிவுடா உனக்கு.
நான் : சரி இதுக்கும் புலிகளின் போர் நிறுத்தத்துக்கும் என்னடா சம்பந்த்தம்?
நண்பன் : இருக்கு. இந்த மாநாட்டை சாக்காக வைத்து பாகிஸ்தான் இந்திய பிரதமரை கொல்ல சதி திட்டம் தீட்டிருக்கலாம்னு ஒரு செய்தி இந்திய உளவுப்பிரிவுக்கு புலிகளின் உளவுப் பிரிவு மூலமா அனுப்பப் பட்டிருக்கு.
நான் : சரி நம்பிட்டேன். இதையே சாக்காக வைத்து பாகிஸ்த்தான் பிரதமரை கொலை செய்ய இந்தியா சதி செய்திருக்கிறதுன்னு தாலிபான் உளவுப்பிரிவு பாகிஸ்தான் உளவுப்பிரிகுக்கு தகவல் அனுப்பிச்சிருக்குமே?
நண்பன் : இருந்தாலும் இருக்கும். அதனால தான், அவுங்க இந்தியப் படைகள் பாதுகாப்புக்காக இலங்கையில் இருந்தால், தாங்கள் கலந்து கொள்ள போவதில்லைன்னு அறிவிச்சிருக்காங்க. இந்த வம்புல ஏன் தேவையில்லாம தமிழரின் விடுதலைப் போராட்டம் மாட்டிக்கிட்டு அல்லல் படனும்னு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிட்டாங்க.
நான் : காக்கா உக்காற பனை மரம் விழுந்த கதையாவல்ல இருக்கு.
நண்பன் : "உண்மை எதுன்னு யாருக்கு தெரியும். காலம் தான் பதில் சொல்லனும்" னு சொல்லிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.
என்னடா இன்னைக்கு ஒரே திகிலா போகுதுன்னு வொரி.. மண்ணிக்கணும்..வருத்தப்பட்டுட்டே .. வருத்தத்த போக்க ஏதவது ஒரு பள்ளிக்கூடம் பக்கம் பொறேன்.
அது என்னடா பள்ளிக்கூடத்துல வருத்தத்த போக்றாங்களான்னு நீங்க கேக்கறது தெரியுது.
அங்கதான் டாஸ்மாக் இருக்கும்ல............
http://www.dawn.com/2006/08/16/top10.htm
http://findarticles.com/p/articles/mi_kmafp/is_200608/ai_n16622684
http://www.thaindian.com/newsportal/india-news/isi-behind-the-indian-embassy-bombing-m-k-narayanan_10070860.html
http://wcbstv.com/topstories/afghanistan.bomb.blast.2.765878.html
http://www.colombopage.com/archive_08/July20160024JR.html
http://www.gulfnews.com/World/Afghanistan/10228788.html
Tuesday, July 22, 2008
திண்ணை காலி
எங்கடா மன்மோகன், சிதம்பரத்தையெல்லம் நிக்க வச்சு நாக்க மூக்க கேள்வி கேட்டுட்டு வெளியபோகும்போது தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் நம்மளை கைது பண்ணிட்டாங்களோன்னு பொங்க வெச்சு கொண்டாடுன உங்களை விடாது இந்த கருப்பு.
நாங்க கோடு எழுதுலேன்னா அமெரிக்க பொருளாதாரமே சும்மா மொடங்கிபோயுரும்ல... அதான் கொஞ்சம் டைம் பாசுக்கு கோடு எழுதி எழுதி ரிவியூல கோக்கு மாக்கா கேள்வி கேட்டவங்களுக்கு ஆப்பு வெச்சு சாமாளிச்சு வெளிய வர கொஞ்சம் லேட்டாயிருச்சு.
அதனால இந்த நாலுமாச நாட்டு நடப்ப நம்ம கலைஞர் மாதிரி நானே என்னை பேட்டி எடுத்து உங்களுக்காக பதிக்கிறேன்.
உலக நாயகன் நடிச்சு ஓடு ஓடுன்னு ஓடிட்டு இருக்கர தசாவதாரம் பற்றி....?
படம் நல்லா இல்லைன்னு சொல்லல. நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்.
இந்தியர்கள் அதிகமா சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்கன்னு புஸ் சொன்னத பத்தி...?
அது என்ன "ஆரம்பிச்சிட்டாங்க". இத என்னால ஏத்துக்க முடியாது. புஸ்ஸுக்கெல்லாம் பதில் சொல்லி நம்ம டைம வீண் பண்ணக்கூடாது.
திமுக கூட்டணியிலிருந்து ப மா கா வை கழட்டி விட்டதை பற்றி...?
காடுவெட்டி குரு மாதிரி ஆளுங்க எங்க தன்னோட கட்சிகாரங்கள விட மக்கள்கிட்ட அதிக செல்வாக்கு வந்துரும்னு ஒரு பயத்துல இந்த முடிவை எடுத்திருப்பார்னு நான் நினைக்கிறேன்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொண்றதை கண்டித்து முதலமைச்சர் உண்ணா விரதம் இருந்தத பற்றி...?
எலக்சன் வருதல்ல. அதான் மீன் பிடிக்கறார் முதலை மச்சர்.
சிம்புவும் நயனும் சந்திச்சத பத்தி....?
நயந்தான் இந்த வம்ப பத்தி சிந்திக்கணும். தயவு செஞ்சு என்னோட நம்பர அந்த பொண்ணுகிட்ட குடுத்திடாதீங்க..
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐமுகூ வெற்றி பெற்றதை பத்தி....
பணம் 575ம் செய்யும்.
அடுத்த காவியம் எப்பன்னு நம்ம வாசகர்கள் கேள்விக்கு....?
விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
வருட்டுங்களா........
நாங்க கோடு எழுதுலேன்னா அமெரிக்க பொருளாதாரமே சும்மா மொடங்கிபோயுரும்ல... அதான் கொஞ்சம் டைம் பாசுக்கு கோடு எழுதி எழுதி ரிவியூல கோக்கு மாக்கா கேள்வி கேட்டவங்களுக்கு ஆப்பு வெச்சு சாமாளிச்சு வெளிய வர கொஞ்சம் லேட்டாயிருச்சு.
அதனால இந்த நாலுமாச நாட்டு நடப்ப நம்ம கலைஞர் மாதிரி நானே என்னை பேட்டி எடுத்து உங்களுக்காக பதிக்கிறேன்.
உலக நாயகன் நடிச்சு ஓடு ஓடுன்னு ஓடிட்டு இருக்கர தசாவதாரம் பற்றி....?
படம் நல்லா இல்லைன்னு சொல்லல. நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்.
இந்தியர்கள் அதிகமா சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்கன்னு புஸ் சொன்னத பத்தி...?
அது என்ன "ஆரம்பிச்சிட்டாங்க". இத என்னால ஏத்துக்க முடியாது. புஸ்ஸுக்கெல்லாம் பதில் சொல்லி நம்ம டைம வீண் பண்ணக்கூடாது.
திமுக கூட்டணியிலிருந்து ப மா கா வை கழட்டி விட்டதை பற்றி...?
காடுவெட்டி குரு மாதிரி ஆளுங்க எங்க தன்னோட கட்சிகாரங்கள விட மக்கள்கிட்ட அதிக செல்வாக்கு வந்துரும்னு ஒரு பயத்துல இந்த முடிவை எடுத்திருப்பார்னு நான் நினைக்கிறேன்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொண்றதை கண்டித்து முதலமைச்சர் உண்ணா விரதம் இருந்தத பற்றி...?
எலக்சன் வருதல்ல. அதான் மீன் பிடிக்கறார் முதலை மச்சர்.
சிம்புவும் நயனும் சந்திச்சத பத்தி....?
நயந்தான் இந்த வம்ப பத்தி சிந்திக்கணும். தயவு செஞ்சு என்னோட நம்பர அந்த பொண்ணுகிட்ட குடுத்திடாதீங்க..
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐமுகூ வெற்றி பெற்றதை பத்தி....
பணம் 575ம் செய்யும்.
அடுத்த காவியம் எப்பன்னு நம்ம வாசகர்கள் கேள்விக்கு....?
விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
வருட்டுங்களா........
Tuesday, March 4, 2008
யாருக்கு இந்த 60 ஆயிரம் கோடி
எல்லோரைப்போலவே நானும் நெகிழ்ந்து போனேன், சிதம்பரத்தின் நிதி நிலை அறிக்கையை பார்த்து. பிறகு எங்கோ படித்த சில கட்டுரைகள் சில உண்மைகளை சொன்னது.
விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்தது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டால், விவசாயிகளின் இந்த நிலமைக்கு என்ன காரணம் என்று ஒரு சின்ன ஆராய்ச்சி செய்தால் அது பொய்யென்று தெரிகிறது.
பெரும்பாலான தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ஆந்திரப் பிரதேச வாரங்கள் மாவட்டத்தை சேர்ந்த பருத்தி பயிரிட்டவர்கள். இந்திய அரசியல்வாதிகளின் நலம் நோக்கி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி மொன்சான்டோ என்ற வெளிநாட்டு விதை நிறுவனம் வழங்கிய மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் வந்த வினைதான் அது. அப்படியென்ன அந்த விதையில் உள்ளது என்கிறீர்களா?. இங்குதான் நமது மடமை நோக்கப்பட வேண்டியது. "சாதாரண விதையில் வளரும் பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க பூச்சிமருந்து செலவு செய்யவேண்டும், ஆனால் நாங்கள் கொடுக்கும் விதைக்கு பூச்சி மருந்து தேவையில்லை, விதையே எதிர்ப்பு சக்திகொண்டது, விலைமட்டும் கொஞ்சம் அதிகம்" என்று சொல்லி விவசாயிகளிடம் விற்றுவிட்டார்கள் சோதனை செய்யப்படாத ஊன விதைகளை. இந்த விலை அதிகமான பருத்தி பயிரிடுவதற்க்கு வங்கிகளின் மூலம்(ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி) விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்கியது இந்திய அரசு. அந்த பணமெல்லாம் அப்படியே மொன்சான்டோ கல்லாவிற்க்கு போனது.
இதுபோலவே பல மண்ணை மலடாக மாற்றும் வெளிநாட்டு உர நிறுவனங்களும் பணத்தை சுருட்டின மற்ற விவசாயிகளிடம் இருந்து.
பயிரிட்டு சில நாட்களுக்கு பிறகுதான் அந்த பயிரின் மகத்துவம் தெரிந்தது. அந்த பயிர் இந்திய மண்ணில் விழைச்சலை தராதென்று. சில நாட்களில் அனைத்து பயிர்களும் மடிந்து விட்டது. விவசாயிகளிடம் கடன் மட்டும் மிச்சமிருந்தது. பிறகு வெளிநாட்டு முதலாலிகள் முதலீடு செய்திருந்த வங்கிகள் கடனை வசூலிக்க சாட்டையய் சுற்றியதில் தப்பிப்பதற்க்கு தற்க்கொலை செய்து கொண்டான் இந்திய விவசாயி.
இப்படியே பயிரையும் மண்ணையும் கொன்று இனி எதிர்காலத்தில் அவர்களிடமே கையேந்தி நிற்க வேண்டும் என்ற தொலை நோக்கு திட்டத்தில் நம்மை விழவைத்து விட்டார்கள்.
எல்லாம் முடிந்த பிறகு இப்போது மக்களின் வரிப்பணத்தை எடுத்து வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி ஈட்டுத்தொகை கொடுக்கப்போகிறார்கள்.
இதற்க்கு பதிலாக இந்த அரசியல் வாதிகள் நேரடியாகவே வெளிநாட்டு நிறுவனத்திற்க்கு பணத்தை கொடுத்துவிட்டு அவன் வீசும் எழும்புத்துண்டை பொறுக்கிக்கொண்டு இருந்திருக்கலாம், பல இந்திய விவசாயிகளின் உயிர்களாவது மிஞ்சியிருக்கும்.
திட்டங்கள் வகுக்கும் மன்மோகன், சிதம்பரம், சுப்பிரமணிய சுவாமி எல்லாம் எங்கிருந்து கற்றுவந்தார்கள் இந்த பாடங்களை?
ஆதாரம்,
http://www.organicconsumers.org/monlink.cfm
http://www.scidev.net/content/opinions/eng/sowing-trouble-indias-second-green-revolution.cfm
http://www.globalresearch.ca/index.php?context=viewArticle&code=SHR20060911&articleId=3204
http://www.democracynow.org/2006/12/13/vandana_shiva_on_farmer_suicides_the
http://artsci.wustl.edu/~anthro/research/biotech_suicide.html
http://www.monsanto.com/
விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்தது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டால், விவசாயிகளின் இந்த நிலமைக்கு என்ன காரணம் என்று ஒரு சின்ன ஆராய்ச்சி செய்தால் அது பொய்யென்று தெரிகிறது.
பெரும்பாலான தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ஆந்திரப் பிரதேச வாரங்கள் மாவட்டத்தை சேர்ந்த பருத்தி பயிரிட்டவர்கள். இந்திய அரசியல்வாதிகளின் நலம் நோக்கி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி மொன்சான்டோ என்ற வெளிநாட்டு விதை நிறுவனம் வழங்கிய மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் வந்த வினைதான் அது. அப்படியென்ன அந்த விதையில் உள்ளது என்கிறீர்களா?. இங்குதான் நமது மடமை நோக்கப்பட வேண்டியது. "சாதாரண விதையில் வளரும் பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க பூச்சிமருந்து செலவு செய்யவேண்டும், ஆனால் நாங்கள் கொடுக்கும் விதைக்கு பூச்சி மருந்து தேவையில்லை, விதையே எதிர்ப்பு சக்திகொண்டது, விலைமட்டும் கொஞ்சம் அதிகம்" என்று சொல்லி விவசாயிகளிடம் விற்றுவிட்டார்கள் சோதனை செய்யப்படாத ஊன விதைகளை. இந்த விலை அதிகமான பருத்தி பயிரிடுவதற்க்கு வங்கிகளின் மூலம்(ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி) விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்கியது இந்திய அரசு. அந்த பணமெல்லாம் அப்படியே மொன்சான்டோ கல்லாவிற்க்கு போனது.
இதுபோலவே பல மண்ணை மலடாக மாற்றும் வெளிநாட்டு உர நிறுவனங்களும் பணத்தை சுருட்டின மற்ற விவசாயிகளிடம் இருந்து.
பயிரிட்டு சில நாட்களுக்கு பிறகுதான் அந்த பயிரின் மகத்துவம் தெரிந்தது. அந்த பயிர் இந்திய மண்ணில் விழைச்சலை தராதென்று. சில நாட்களில் அனைத்து பயிர்களும் மடிந்து விட்டது. விவசாயிகளிடம் கடன் மட்டும் மிச்சமிருந்தது. பிறகு வெளிநாட்டு முதலாலிகள் முதலீடு செய்திருந்த வங்கிகள் கடனை வசூலிக்க சாட்டையய் சுற்றியதில் தப்பிப்பதற்க்கு தற்க்கொலை செய்து கொண்டான் இந்திய விவசாயி.
இப்படியே பயிரையும் மண்ணையும் கொன்று இனி எதிர்காலத்தில் அவர்களிடமே கையேந்தி நிற்க வேண்டும் என்ற தொலை நோக்கு திட்டத்தில் நம்மை விழவைத்து விட்டார்கள்.
எல்லாம் முடிந்த பிறகு இப்போது மக்களின் வரிப்பணத்தை எடுத்து வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி ஈட்டுத்தொகை கொடுக்கப்போகிறார்கள்.
இதற்க்கு பதிலாக இந்த அரசியல் வாதிகள் நேரடியாகவே வெளிநாட்டு நிறுவனத்திற்க்கு பணத்தை கொடுத்துவிட்டு அவன் வீசும் எழும்புத்துண்டை பொறுக்கிக்கொண்டு இருந்திருக்கலாம், பல இந்திய விவசாயிகளின் உயிர்களாவது மிஞ்சியிருக்கும்.
திட்டங்கள் வகுக்கும் மன்மோகன், சிதம்பரம், சுப்பிரமணிய சுவாமி எல்லாம் எங்கிருந்து கற்றுவந்தார்கள் இந்த பாடங்களை?
ஆதாரம்,
http://www.organicconsumers.org/monlink.cfm
http://www.scidev.net/content/opinions/eng/sowing-trouble-indias-second-green-revolution.cfm
http://www.globalresearch.ca/index.php?context=viewArticle&code=SHR20060911&articleId=3204
http://www.democracynow.org/2006/12/13/vandana_shiva_on_farmer_suicides_the
http://artsci.wustl.edu/~anthro/research/biotech_suicide.html
http://www.monsanto.com/
Subscribe to:
Comments (Atom)