Tuesday, April 21, 2009

காலம் சொல்லும் கணக்கு

சாவின் எண்ணிக்கையை தங்களின் தேர்தல் வாக்குச்சீட்டுக்களாக மாற்றத்துணிகின்ற மாபெரும் தலைவர்களை தன்னகத்தே கொண்ட இந்த தமிழ் சமுதாயம், விழித்துக்கொண்டு அவர்களை ஒதுக்குமா, அல்லது வழக்கம் போல் ஆயிரத்திற்க்கும் ஐநூறுக்கும் இறையாண்மையையும், போலி சன நாயகத்தையும் வாங்கி அணிந்து கொள்வார்களா என்பது காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்.

புலிகளை அழித்துவிட்டு தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை கொடுப்போம் என்ற ராசபக்சவிற்க்கும், தேர்தல் முடிந்த பிறகு யுத்த நிறுத்தத்திற்க்கு வழிசெய்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகள் வழங்கும் கருணாநிதி, சோனியாவிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.

இதில் புலிகளை அழித்து விட்டால், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்பது புனைக்கதைகள் தான். புலிகள் எங்கோ வானத்திலுருந்து குதித்து வந்து துப்பாக்கியேந்தியவர்கள் போல பரப்புரை செய்யும் அரசியல் தரகர்களின் வஞ்சகம் என்றுமே வெல்லப்போவதில்லை. இருபது வருடங்களுக்கும் முன் இன அழிப்பின் பாதிப்பில் உறுவானவர்களே இன்றைய புலிகள். இன்று நடக்கும் இன அழிப்பில் பாதிக்கப் பட்டிருப்பது என்றுமே இல்லாத எண்ணிக்கையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். இவர்கள் நளைய புலிகளாகவோ சிறுத்தைகளாகவோ நிச்சயம் பழிதீர்க்க உருவெடுப்பார்கள்.

பிரபாகரன் என்ற தலைவன் இன்று கொல்லப்பட்டால் விடுதலை போராட்டம் முடங்கிவிடும் என்பது அறிவுக் குருடர்களின் கணக்கு. தலைவன் வளர்த்த ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் அனைவரும் பின்நாளில் பிரபாகரனை படிக்கும் அனைவருமே பிரபாகரன் தான். ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் அதன் காரணங்களை ஆராய்ந்து அடுத்த வெற்றிக்கு நாள்குறிப்பது அவர்களின் வாழ்க்கை முறை. வெறும் இலங்கைத்தீவிற்க்குள் நின்றிருந்த போராட்டம் இன்று உலகம் முழுதும் எட்ட தொடங்கி விட்டது. இன துரோகிகள் யார், நண்பர்கள் யார், உண்மையான இன உணர்வாளர்கள் யார் என்பதை இந்த இக்கட்டான தருணத்தில் தமிழன் தெரிந்து கொண்டான். துரோகிகளை புறம்தள்ளி நண்பர்களை கூட்டி விடுதலைப்போராட்டம் வலுப்பெறவேண்டிய காலம் வந்து விட்டது.

எரியும் வீட்டில் எவர் எவர் நெறுப்பு காய்கிறார் என்பதை தொலைவில் இருந்து பார்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் நெறுப்பை வென்றவர்கள். காலம் நிச்சயம் அவர்களின் கணக்கை தீர்த்துக்கொள்ளும். அதுவரை இவர்களின் ஏளனமும் இருமாப்பும் வாழட்டும்.

Sunday, March 22, 2009

Friday, March 6, 2009

எதிரியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

நா வரல கத்தியாகிவிட்டது. நாதியில்லாத இந்த இனத்தின் ஈனக்குரல் சமாதியிலிருக்கும் பேரரசின் காதை எட்டவில்லை. மானம் விட்டு மண்டியிட்டது போதும். அரசியல் காரணங்களுக்காக எத்தனை நாட்கள் எத்தனை விலைமதிக்க முடியாத உயிர்களை சுருங்கிக் கொண்டிருக்கும் இனம் கொடுக்கமுடியும்.

கிளர்ந்தெழும் இனவெழுட்சியை எப்படி முடக்கவேண்டும் என்று எமது தலைவர்களுக்கு தெரியும். இன்னும் இவர்களை நம்பி வாய்பிளந்து காலம் கடத்துவது இன்னும் இருக்கும் உயிர்களை பலிகொடுப்பதை தவிர வேறெதுவும் சாதிக்கப்போவதில்லை.

தமிழன் என்ற தனி அடையாளத்துடன் இந்தியாவில் வாழவேண்டுமென்றால் அதற்க்கு சரியான இடம் சிறைச்சாலைகள் என இந்திய சட்டம் கூறுவதை இன்னும் புரிந்து கொள்ள நமக்கு ஏன் இன்னும் தாமதம்.

பாகிஸ்தானிடம்,சீனாவிடம் இலங்கை ஆயுதம் வாங்குவது தனது இறையாண்மைக்கு ஆபத்து என தானே ஆயுதம் வினியோகிக்கும் இந்தியாவிடம் போர் நிறுத்த பிச்சை கேட்பதற்கு மானத்துடன் மரணத்திற்க்கு அழைப்பிதழ் தரலாம். இலங்கையை இதற்குமேல் தன்னால் வற்புறுத்த முடியாது என்ற தனது இயலாமையை வெளிப்படையாக தெரிவித்து விட்டபிறகும்
உண்ணாவிரதமும் நடைபயணமும் எதற்க்கு?

இந்திய அரசிடம் இத்தனை மன்றாடியும் எதயும் சாதிக்கமுடியாத நாம் எதிரியிடமிறுந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். இந்திய தூதரகத்தை முற்றுகையிடுவதும் கையெழுத்து வாங்கி அனுப்புவதும் வீன் வேலை. இந்தியா சொல்லி இலங்கை கேட்காது என்பதும் தெரிந்துவிட்டது. யார் சொன்னால் இலங்கை கேட்குமோ அவரிடம் முறையிடுவது தானே அறிவுப் பூர்வமாக எடுக்கும் முடிவு. சீனாவும் பாகிஸ்தானும் தான் இலங்கையில் இன்றைய ஆளுமை செழுத்தும் நாடுகள். அதனால் சந்திக்க வேண்டிய, ஆதரவு கேட்கவேண்டிய, நிர்பந்திக்க கோருகிற கோரிக்கைகளை சீன மற்றும் பாகிஸ்தானிடம் முறையிடுவதுதான் பயனுள்ளதாகும் என்பது எதிரியிடமிருந்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடமாகும்.

Wednesday, February 18, 2009

பூநூல் கொலைகாரன்
















நன்றி. குமுதம் இணைய தொலைக்காட்ச்சி.

Sunday, February 8, 2009

ஏகாதிபத்தியமும் விசுவாசமும்

உலகிலுள்ள வளங்களை தனதாக்கி கொண்டு, அதன் மூலம் தான் மட்டும் பயண்பெறும் நோக்கில் அரசியல், ராணுவ உத்திகளை கொண்டு சிறிய ஏழை நாடுகளை தன்னுடைய அடிமையாக்கிக் கொண்டு சுரண்டிப் பிழைக்கும் பெரியண்ணனின் புதிய சின்னத் தம்பி, அண்ணன் வழி செல்வதில் ஆச்சர்யம் இல்லை.

சுரண்டிப் பிழைக்கும் வர்க்கம் ஆட்சி செய்யும் போது, ஏழையும் இயலாதவனும் இறையாண்மைக்கு அடிமையாகி கடைசியில் உயிர்த்தியாகம் செய்து விடுதலையை தேடிக்கொள்வதில் வியப்பேதும் இல்லை.

உயிர் பிழைக்க ஒருவாய் தண்ணீர் கேட்கும் தமிழருக்கு செவிசாய்க நேரமில்லாமல் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வளர்ச்சிதிட்டங்களை தீட்டிக் கொண்டு வெளியிட்டிருக்கும் மேதைகளின் அறிவை மெச்சிக்கொள்ள வார்த்தைகளில்லை.

சிறுவர், குழந்தகள், முதியவர், இளம் ஆண்கள் பெண்கள் என வருங்கால சந்ததியினரை அழித்து விட்டு யாருக்கு இந்த வளர்ச்சி திட்டங்கள். சோனியாவும் நீரோவை போல பிடில் வாசிக்கிறார்.

தமிழர் வளங்களை சுரண்ட இன்னும் என்னென்னமோ திட்டங்கள் வரும் நாட்களில் வரும்.... அதையெல்லாம் கேட்டுக் கொண்டும் அதையே தமிழனிடம் விற்பனைசெய்யவரும் குள்ள நரித்தலைவர்களை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த மானம் கெட்ட தமிழனின் விதியை மாற்றியெழுத இங்கு யாருமே இல்லை என்பதுதான் வேதனை கலந்த உண்மை...