Sunday, November 30, 2014

என்னாடுடைய இயற்க்கையே போற்றி - 4

(என்னாடுடைய இயற்க்கையே போற்றி. இயற்க்கை வேளான் ஆசான் ஐய்யா நம்மழ்வாரின் கட்டுரைத்தொடர் - விகடன் பிரசுர வெளியீடு)

4. திருவள்ளுவரின் தெளிப்பு நீர்ப்பாசனம்!
----------------------------------------------

‘மன்னன், எப்படி மக்களைக் காப்பாற்றுகிறானோ, அதேபோல வானத்தில் இருந்து சுரக்கும் மழை மக்களைக் காப்பாற்றுகிறது’ என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் ‘மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!’ என்று 1,800 ஆண்டுகளுக்கு முன்னரே சிலப்பதிகாரத்தில் பாடி வைத்திருக்கிறார் இளங்கோவடிகள்.

சிலப்பதிகாரம் எழுதப்படுவதற்கு முன்னரே, ‘வளர்வதன் பாத்தியுள் நீர் சொரிந் தற்று’ (வளரக்கூடிய பயிருக்கு மேல் இருந்து நீர் தெறித்ததுபோல) என, 'அவையறிதல்' அதிகாரத்தில் சொல்லி வைத்திருக்கிறார், திருக்குறளைப் படைத்த வள்ளுவர்.

சொட்டு நீர், தெளிப்பு நீர் என்று நீர்ச் சிக்கனம் பற்றிப் பேசுபவர்களுக்கு இந்தக் குறள் கைக் கொடுக்கும். அதேபோல, களையைக் கட்டுப்படுத்திய பிறகுதான் நீர்ப் பாய்ச்ச வேண்டும் என்றும் சொல்லி வைத்திருக்கிறார் வள்ளுவர். ஆக, நீரை மேலிருந்து சொரிந்தால், நிலத்தில் நீர் இறங்கினால், நிலம் முழுவதிலும் உள்ள செடி - கொடிகள் செழிக்கும். அங்கு, பல்லுயிர் ஓம்பும். அதனால் வாழ்க்கை மலரும். இப்படிப்பட்ட வாழும் கலை, 3,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இருந்திருக்கிறது.

சோழ மண்டலத்தில் கி.பி.900 முதல் கி.பி.1,200-ம் ஆண்டு வரைக்கும் உள்ள இடைப்பட்ட காலங்களில், மூன்று மா நிலத்தில் (ஒரு ஏக்கர்) 4,800 முதல் 7,200 கிலோ வரை நெல் விளைந்து இருக்கிறதாம். தென்னாற்காடு மாவட்டத்தில் கி.பி.1,100-ம் ஆண்டில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டில், மூன்று மா நிலத்தில் (ஒரு ஏக்கர்) 5,800 கிலோ நெல் விளைந்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. ராமநாதபுரத்தில் கி.பி.1325-ம் ஆண்டு செதுக்கப்பட்டு இருக்கும் ஒரு கல்வெட்டில், மூன்று மா நிலத்தில் (ஒரு ஏக்கர்) 8,000 கிலோ விளைந்ததாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, கரிகாற்சோழன் காலத்தில் மூன்று மா நிலத்தில் (ஒரு ஏக்கர்) 4,200 கிலோ நெல் அறுவடை செய்துள்ளதாக சொல்லப்பட்டு இருக்கிறது. பாரதப்போர் நடந்த காலகட்டத்தில், 'உதியஞ்சேரலாதன் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் சாப்பாடு கொடுத்தான்' என்று முடிநாகராயர் பாடியிருக்கிறார். இவையெல்லாம் நமது சரித்திரமும் இலக்கியங்களும் கூறும் தகவல்கள்.

ஆனால் இன்றைய நிலை?

பச்சைப் புரட்சி காலத்தில் இருந்தே (1965) அரிசி, கோதுமை, எண்ணெய் வித்துக்கள், பருப்பு... என அனைத்தையும் நாம் இறக்குமதி செய்துகொண்டு இருக்கிறோம். இயற்கையிலேயே சத்தோடுகூடிய தானியங்கள் எல்லாம் கண்ணில்கூட சிக்காமல் மறைந்துகொண்டு இருக்கின்றன. ஏரிகள் முள் காடாகவும் (விருதுநகர் மாவட்டம் நீங்கலாக), நிலங்கள் சரள் மேடாகவும் அல்லது களர் பாலையாகவும் மாறி வருகின்றன.

இயேசு பிறப்பதற்கு 3,700 ஆண்டுகளுக்கு முன்பே உழவாண்மை செழித்து இருந்த பூமி இது. இந்த பூமியில் இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கலாசாரம், நம் வாழ்வாதாரத்தையெல்லாம் சிதைத்துவிட்டது. நம்மவர்களில் பலரும் பெருமையோடு பேசிக்கொண்டு இருக்கும் மேற்குலக நாடுகளின் உழவு பற்றிய ஆராய்ச்சி, மிக சமீபத்திய காலத்தைச் சேர்ந்ததுதான்.



கி.பி.1563-ம் ஆண்டில் பேலிசி என்பவர், ‘செடிகளைக் கொளுத்தும்போது கிடைக்கின்ற சாம்பல்தான், செடிகள் மண்ணில் இருந்து எடுத்தவை’ என்று எழுதினார்.

கி.பி.1561 முதல் 1624-ம் ஆண்டு வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த ஃபிரான்சிஸ் பேக்கன், ‘தண்ணீர்தான் செடிக்கு ஆகாரம்’ என்றார். அதே காலகட்டத்தில் ஜான் பேப்டிஸ்ட்ஸ் ஹெல்மான் என்ற மருத்துவரும் இதை ஆமோதித்தார். கி.பி.1627 முதல் கி.பி.1691-ம் ஆண்டு வரை வாழ்ந்த ராபர்ட் போயல், ‘மண்ணில் உள்ள தாதுக்களும் காற்றில் உள்ள கரிக்காற்றும் செடி வளர்ச்சிக்குத் தேவை’ என்ற முந்தைய முடிவுகளோடு, ‘செடி வளர்ச்சிக்கு உப்பு, சாராயம், மண், எண்ணெய் எல்லாம் தேவைப்படுகிறது. அவை தண்ணீரிலேயே காணப்படுகின்றன’ என்று சொல்லி இருக்கிறார்.



ஜெர்மானிய விஞ்ஞானி, ஜஸ்டஸ் வான் லைபிக் (Justus von Liebig) வெளியிட்ட ஆராய்ச்சி முடிவில் இருந்துதான் சிக்கலே தொடங்கி இருக்கிறது. லைபிக், 1840-ம் ஆண்டில் வெளியிட்ட ‘உழவாண்மை வேதியியல்’ என்ற புத்தகத்தில், ‘கரியமிலக் காற்று, மண்ணில் உள்ள மட்கில் இருந்து வரவில்லை; காற்றில் இருந்து வருகிறது. சேற்றில் இருந்து சில வேதிப்பொருட்கள் செடிக்குத் தேவைப்படுகின்றன. எந்த வேதிப்பொருள் குறைவாக இருக்கிறதோ... அதுவே விளைச்சலைத் தீர்மானிக்கிறது’ என்று பச்சைப் பொய் ஒன்றைச் சொல்லி இருக்கிறார். அவர்தான், மண்வளத்தைக் கெடுத்துக் கொண்டு இருக்கும் ‘N.P.K.’ (தழை, மணி, சாம்பல் சத்து) என்று பெருமையாகப் பேசப்படும் விஷயத்துக்கு வித்திட்டவர்.

பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த மெக்காலே பிரபுவின் வாரிசுகள், ரசாயனங்களை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்தனர். தவிர, ‘மாவட்ட சாகுபடித் திட்டம்’ என்று தொடங்கி, 30 ஆண்டுகளில் இந்தியக் கடலோரங்களில் 100 ரசாயனத் தொழிற்சாலைகள் உரங்களை உற்பத்தி செய்து குவித்தன. விளைவு... கணக்கிலடங்கா நோய்கள், இயற்கை மாசுபாடுகள், நாடெங்கிலும் வறுமை, பட்டினிச் சாவுகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

நின்று, கவனித்து சரியான பாதையைத் தேர்வுசெய்ய வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது.

Saturday, October 11, 2014

ஆதிமனிதன் நீ.. இங்கே அடிமைக்கோலத்தில் அலைவது ஏனோ?

தமிழராக பிறந்ததற்க்கு பெருமை கொள்ளுங்கள். இதோ ஒரு மிகச்சிறந்த கள ஆய்வாய்வாளரான ஒரிசா பாலு அவர்களின் நேர்காணல், தென்றலில் இருந்து.

அதிலிருந்து சில துளிகள்

*அதிகபட்சம் ஒரு நாளைக்கு 80 கி மி தொலைவு செல்லக்கூடிய ஆமைகள், ஆரய்ச்சியில் பல ஆயிரம் மைல்கள் பயணிப்பது தெரியவந்தது. ஆமைகள் கடல் நீரோட்டத்தைப்பயன்படுத்துதியே அவ்வளவு தொலைவு பயனித்திருக்கிறது.

*பயணத்தில் ஆமைகள் கரையொதுங்கும் இடங்கள் பெரும்பாலும் துறைமுக நகரங்களாகவே இருந்திருக்கின்றன.

*ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகளின் இந்த துறைமுக நகரங்களில் தமிழரின் நாகரீக, கலாச்சார அடையாளங்கள் காணப்படுகின்றன.

*இந்த துறைமுக நகரங்களின் பெயர்கள் தமிழில் இருக்கிறது.

*லெமூரியா கண்டம் இருந்தது உண்மை. அது சங்ககால இலக்கியத்தில் உள்ள சான்றுகள் மற்றும் இவருன் ஆய்வின் முடிவுகள் உறுதிப்படுத்துகிறது. 

*தெலுங்கு சோழர்கள் என்ற குறிப்பு இந்த கட்டுரையில் உள்ளது. சோழர்கள் திராவிடர்களா? என்ற வினாவிற்க்கு வரலற்றாய்வாளர்கள்தான் பதிலளிக்க வேண்டும்.


Thursday, August 14, 2014

சுதந்திரம்...


சுதந்திரம்...கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாயுடன் முடிந்துவிடும் ஒரு சடங்கான நிகழ்வகிப்போன பிறகு, ஆளும் அரசாங்கம் தான் சுதந்திரத்தை பெற்றுதந்தது போல எங்கெல்லாம் சுதந்திரம் பற்றி விமர்சனம் எழுகிறதோ அங்கெல்லாம் தண்டைகாரர்களாகி கம்பு சுத்துவது தேசப்பற்றாகாது. காந்தி , நேரு மட்டுமல்ல, எங்கள் தாத்தனும் முப்பாட்டனும் சுதந்திர நாட்டிற்காக தியாகங்கள் செய்திருக்கிறார்கள். அதற்க்காக இந்த சுதந்திரத்தை நீங்கள் எப்படி கொண்டாட வேண்டும் என்று நான் சொல்ல முடியாது.. அதே போல் என்னிடம் நீங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது..எங்கள் விமர்சனம், விசனம் எல்லாம், ஒரு தகப்பனை போல் நடந்து ஈழ மக்களை கப்பற்றியிருக்க வேண்டிய தேசம், கண்ணை மூடிக்கொண்டும் கருணையே இல்லாமல் எம் உறவுகளை அழிக்க அத்தனை உதவிகளை செய்து கொண்டு ஒரு கொலை காரனாய் எங்கள் முன் நின்று கொண்டு, நீ கேட்கும் மரியாதையை இந்த அரசுக்காக என்னால் செய்ய முடியாது. இந்த சுதந்திரம், இந்த அரசு பெற்றுக்கொடுததல்ல.. அது என் பாட்டன் வழி சொத்து. எனக்கான உரிமை வேறு எவர் கொடுத்ததும் வந்ததில்லை. போரில் இறந்த சிங்கள சிப்பாய்களின் உடலுக்கும் அவர்களின் மரணத்திற்கும் மரியாதையை தந்தவர், தலைவர். அவர்களின் சுதந்திரத்தையும் மதித்தவர், மதிக்க கற்றுகொடுதவர். எதிரியின் சுதந்திரத்திற்கே மரியாதை கொடுத்த இனம், இன்னொருவர் சுதந்திரத்தை எப்போதும் அவமதிக்காது. நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த ஈகிகளுக்கும் இன்னும் எல்லையில் காவல் நிற்க்கும் எமது காவல் தெய்வங்களுக்கும் இந்த சுதந்திர தினத்தில், எமது வணக்கம். மற்றபடி எம் இனத்தை கொலை செய்து கொண்டாடிய அனைவர்க்கும்.... போ.. போ..பிழைத்து போ...உங்களுக்கு உயிர் பிச்சை போட்டு உங்களுக்கு சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது..கொண்டாடுங்கள்...

Thursday, December 15, 2011

Penny worth lives

Enough has been written and spoken about an issue that is about the safety of people around Mullai periyar. Well, the feelings on both side are valuable, the focus is shifted from the core issue. The claim about the safety of the Dam is sidelined by the safety of the people around it. Yes, those who voiced for the lives around the dam were became predators. The reason may be different, but the lives around mullai pariyar is endangered by the people of their own land and not the one portrayed as killer, Tamilnadu.

I had a belief that 100% literacy will make man and woman a 100% human. A belief proved wrong as of my many others.I just made up my self,may be it is what you taught matters.

I was not a witness on the scenes where women workers were molested, torchered and beaten to death for being another race.

I was not the witness when the devotees of a god, who found his place on the earth where people with more intelligence, were beaten and humiliated for the reason they belonged to a different race.

Thank god, i was not a witness, i prefer to be an illiterate on this sense.

There are news across state(Tamilnadu) that the other race's properties have been damaged for revenge. I felt bad about the poor illiterates who doesn't even value the lives of their own race. Period.

The words of the politicians never meant to be same over the time. It makes sense for their life, lacking sense of life. But the common man who seeks to portray them self as highly dignified personnel on platforms by showing visualized images and fact reports with research thesis from premier institute doesn't seems to have the basic quality of humanity, to respect the life of a human.

I am not surprised to see the direction of wind flow, as it matters with the atmosphere, how smart you are in reaching out the people with your thought, even if it is not testified.

Well, I ended up in talking more about the other side. Let me wrap up with a note on the race I belong.

They will never show you their strength by repeating whatever harm you did to them.

They may not be successful in winning the minds of people around.

They might have lost the war.

But, They will be last forever in the world with the memory that they lived in the earth with heart, yet illiterate.

Either the Dam is Safe or Unsafe, the people around it (Tamils) gets affected is the fact.

Sunday, January 31, 2010

அன்புப் பஞ்சம்

பிறை நிலா பார்த்து அலை கடல்
வாரி இறைக்கும் வசந்தம், அன்பே
நீ என்னைக் கடக்கும் ஒரு நிமிடம்.....

உன் அன்பின் சிறைதள்ள முனையும்
உன் ஓரவிழிப்பார்வை, அதையே
வேண்டி தவமிருக்கும் என் ஊமை நெஞ்சமும்
விட்டுக் கொடுக்கவில்லை இந்தக்கணம் வரை...

ஆதாயம் பாராமல் பொழியும் ஆகாயம்-
அன்பு போழியும் தேவதை உன் நெஞ்சம்,
அள்ளி அள்ளிக்குடித்தாலும் தீராத தாகம் கொண்ட
அன்பு பஞ்சத்தில் வாடுது என் மானுட நெஞ்சம்!.

சொல்லிச் செல்வதுமில்லை
அழுது புலம்பினால் வருவதுமில்லை -
உன் நினைவுகள்!

உனக்கு தெரியும்
எனது கண்ணீர் துளிர்க்கும் தருணங்கள்!
உனக்கு தெரியும்
எனது மனம் சிரிக்கும் தருணங்கள!

கண்ணீர் துடைக்கிறாய்,
இன்பத்தில் தோழ் சாய்கிறாய்
காதல் சொல்ல விளைகிறேன் -
விடைபெற வேண்டும் என்கிறாய்.

தூர இருந்தாலும் என் உயிரின்
ஈர நினைவுகள் உன்னைச்சுற்றியே இருக்கும்
என்பது உனக்கும் தெரியும்- அதனால்தான்
நீ என்னை விட்டு விலகினாலும் என் காதல்
உன்னோடு உயிர்ப்போடு இருக்கிறது...

Saturday, November 28, 2009

எங்கள் தலைவன்

எங்கள் தலைவன் - டாஸ்மாக் உள்ளே போகும் முன்

ஐந்துவேலை சோறும்
அசதிபோக்க ஆடல் பாடல்
கேளிக்கை தொலைக்காட்சிகளும்
இருக்க எனக்கென்ன கவலை இந்த உலகத்திலே!

இருக்கிறார் எங்கள் தலைவர்
பசி தீர்க்க ஒரு ரூபாய் அரிசி போட
பொறுக்கிக் கொள்வோம் அவர்போடும் பிச்சையய் ஆசையாய்
அவர்பாதம் எம் தலைமேல் வைத்து
துதிபாடுவோம் எந்நாளும் அவர் புகழ் ஓங்க!

மூட்டைதூக்கி முதுகுவலி வந்தாலும்
சாக்கடை சுத்தம் செய்து நளிந்துபோனாலும்
ஆண்டு முழுதும் தூக்கமில்லாமல் ஆடை நெய்தாலும்
ஆதவனின் அன்புப் பிள்ளை எம் தலைவன் எழுதும்
ஆபாசக் கவிதை படித்தால் எம் துன்பம் பறந்து போகுமே!

(டாஸ்மாக் ஊள்ளே )

தன் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் ஊரார்பிள்ளை
தானெ வளரும் என்ற தத்துவம் கண்ட தற்கால சாக்ரடீசே!
எத்தனை துரோகம் செய்தாலும் உனக்குத்தான் என் ஓட்டு
மறக்காமல் குவாட்டர் மட்டும் தொடர்ந்து ஊத்து!

எவன் மாய்ந்தால் எனக்கென்ன?
எவன் எந்த நதியைய் தடுத்தால் எனக்கென்ன?
எவன் எங்கு குண்டு போட்டால் எனக்கென்ன?
என் பிள்ளை நாளை எவனுக்கு அடிமையய் இருந்தால் எனக்கென்ன?
எனக்கு இப்போது நீ குவாட்டர் ஊத்து!

சீனாக்காறான் கச்சத்தீவில் குண்டுபோடும்
களம் அமைத்தால் எனக்கென்ன?
அவன் நாளை என் மீது குண்டு போட்டால்
எனக்கென்ன?
இப்போ நீ எனக்கு குவாட்டர் ஊத்து!

தக்காளி! நீதாண்டா தமிழன தலைவன்!
புறநானூற்றின் வீரம் சொறிந்து சொறிந்து
புறமுதுகெல்லாம் புண்ணானபோதும்
உடன்பிறப்பை உசிப்பிவிட்டு ரசிக்கும் ரசிகனே!

தொலைபேசி தரகில் லட்சம் கோடி அமுக்கிவிட்டு
அதைபத்தி பேசாமல் உலகச் செம்மொழி மாநாடு
கும்மியடிக்கும் உன் திறன் வியந்து செயல்மறந்து
வாய் பிளக்கிறேன்... அந்த குவாட்டரை கொஞ்சம் ஊத்து!


அந்த குவாட்டரை கொஞம் ஊத்து!!!

- குவாட்டருடன் உடன் பிறப்பு

Friday, November 20, 2009

மாவீரர் நினைவுச்சுடர்!



உம் உயிர் கொடுத்து எமது மானம் காத்த
மாவீரர் உம் பாதம் தொட்டு வணங்குகிறோம்!!!