"எல்லோருமே திருடங்கதான், சொல்லப்போனா குருடங்கதான்" ன்னு இசை ஞானி பாடின பாட்டு இன்னைக்கும் அப்படியே இருக்கு. ஆனா அதை பாடுவது போல் பாவனை செய்த சிவப்பு மனிதனின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. தன் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே சினிமாவை சேர்த்துக்கொண்ட ரசிகனுக்கு இவர் போன்ற வேசதாரிகளின் நடிப்பை சினிமாவுக்கு வெளியிலும் புரிந்து கொள்ள முடியாத பகுத்தறிவு பாடம் புகட்டியுள்ளது முற்ப்போக்கு கழகங்கள்.
தண்ணீர் கேட்டு தமிழன் தவித்து கொண்டிருக்கும் இந்நாளில் அவன் கண்ணீரும் காசாக்க தெரிந்த்தவர்தான் இந்த வியாபாரி. தமிழனுக்கு செஞ்சோற்று கடன் பட்டவன் போல் மேடையில் பேசி இன்று அவன் சோற்றிலே கைவத்தவர்தான் இந்த கலியுக சிவாஜி.
தமிழன் காதுக்கெட்டாத தூரம் போய் அவனுக்கு ஆதரவாய் பேசியதற்கு மண்ணிப்பு கோரியிருக்கும் இந்த மாமனிதனையும் மண்ணிக்கப் போகிறானா இந்த மானங்கொண்ட தமிழன்?
ஆடிப் பிழைப்பவரின் ஆட்டத்தை மட்டும் ரசிக்கத் தெரிந்த்திருந்தால் இன்று பரதேசியாய் தண்ணீருக்காக பிச்சை பாத்திரமேந்தியிருக்க வேண்டியதில்லை. பிச்சை எடுக்க வேண்டும் என்று எண்ணித்தானே இந்த தமிழர் விரோத பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அவனுக்கு தெரியாமலே அவன் மேல் கருத்தை தினித்துக் கொண்டிருக்கின்றன். அவாளை சொல்லி குற்றமில்லை. பகுத்தறிவு கற்றுத் தரவேண்டிய கழகங்கள் தமிழன் பெயர் சொல்லிக் கொள்ளையடிக்கும் கூட்டுத்தொழிலல்லவா செய்து கொண்டிருக்கின்றன.
"அடி வாங்குனது போன வாரம், இது இந்த வாரம்" னு சொல்லிட்டு குசேலன் பார்க்க கிளம்பும் ரசிகனுக்கு வாழ்த்துக்கள்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
Thursday, July 31, 2008
Sunday, July 27, 2008
சார்க் 2008 ம் விடுதலை புலிகளும்
"இந்த ஆண்டு சார்க் மாநாடு இன்று முதல் சிறிலங்கா தலை நகர் கொழும்புவில் தொடங்கியது"- இது இந்தியாவில் தென் மூலையில் இருந்து கொண்டு கலைஞர் டிவி மானாட மயிலாட நிகழ்ச்சியின் விளம்பர இடைவெளியில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்புக்கிடையே ஒரு வினாடி கேட்டுக்கொண்டு மீண்டும் இன்னும் ஒரு தமிழ் கலாச்சாரம் வளர்க்கும் தொலைக்காட்சிக்குள் மூழ்கிவிட எத்தனித்தேன். அப்பொழுது திடீரென நம் பாட்டன் பாரதி தோன்றினான்.
பாரதி : "என்னடா பேரா, நலமா?" என்றான்
அதெல்லாம் சவுக்கியமா இருக்கோம்ல. நீ எப்படி, சவுக்கியமா?
பாரதி : ஏதோ கொஞ்சம் உயிருடன் இருக்கும் தமிழின் உயிரைக் காப்பாற்ற ஆவியை பிடித்துக்கொண்டிருக்கிறேன்.
ஏன் தமிழுக்கென்ன? நாங்கதான் இப்ப சினிமா பேரெல்லாம் தமிழ்லதான் வெக்கறமல்ல.
பாரதி : ஆம். ஆம். இப்பொழுது தமிழ், திரைப்படங்களின் பெயரில்தான் வாழ்கிறது. அதற்கு விருதுகளும் வரி விலக்கும் தருவதுகூட இப்பொழுது எப்படி தமிழை தத்தெடுக்கிறீர்கள் என்பது தெரிகிறது.
உனெக்கென்ன தாத்தா உன்னோட பிரன்ஸுகளும் சிஸ்யர்களும் தமிழால் வாழ்ந்து தமிழையும் வாழவைச்சிட்டு போயிட்டீங்க.. இப்ப பாவம் நம்ம முத்தமிழ் காவலர் மட்டும் தனியா ஒத்த ஆளா நின்னு தமிழை தொலைக்காட்சில வாழ வெக்கிறார்.
பாரதி : ஆம். பார்த்தேனே.. நீங்கள் எப்படி தமிழை வளர்க்கிறீர்கள் என்று. தமிழ் பத்தினி தாயடா. அவளை ஏன் வேறு மொழிகளுடன் கலந்து வேசியாக்கி வணிகம் செய்கிறீர்கள் ?பதர்களே... உங்களிடமா என் தாயை ஒப்படைத்து விட்டு போனேன். அய்யகோ......
அய்யய்யோ.. தாத்தா நீ ஏன் உணர்ச்சி வசப்படரே. நீ இருந்த காலம் வேற இப்ப இருக்கற காலம் வேற. இப்பல்லாம் ஸ்கூல்ல தமிழ்ல பேசுனாலே தண்டனை குடுக்கிற காலம். நீ வேற சும்மா பொலம்பிட்டு... சரி வந்து இப்படி உக்காந்து நாங்க எப்படி இசைத்தமிழை நாட்டியத்தோட வாழ வைக்றம்னு பாரு.
பாரதி : "எங்களின் தாயவளை கொச்சை படுத்தி கூவி கூவி விற்க்கும் உங்களை கொன்றாலே அவளின் ஆயுள் அடுத்த நூறாண்டு வரை வாழுமடா" ன்னு கொலை வாளை எடுத்து முதலில் என் நாக்கை வெட்டி பின் என் தலையை வெட்டி அவன் வணங்கும் காளிக்கு என்னை காணிக்கை கொடுத்து விட்டான்.
நாக்க மூக்க ரிங் டோன் அலர எந்திருச்சு பாத்தா... யப்பா.. இது கனவுன்னு கன்பார்ம், சாரி.. மண்ணிக்கனும், உறுதிப்படுத்திக்கிறதுக்கு கழுத்தை தொட்டு பார்த்துக்கிட்டேன். தலை ஒட்டிக்கொண்டுதான் இருந்தது.
சரி எழுந்திருச்சு வெளிநாடு வாழ் தமிழ் நண்பனின் அழைப்பை ஏற்று நாட்டு நடப்பு பற்றி கதைத்து கொண்டிருந்தோம். அவன் "சார்க் மாநாட்டை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க.. தெரியுமா?" ன்னு கேட்டான்.
அட எங்க நீ வேற.. இங்க எங்கப்பா தைரியமா புலிகளை பத்தி செய்தி சொல்றாங்க. அப்பப்போ இத்தனை புலிகளை இலங்கை ராணுவம் கொன்றுச்சுன்னு கணக்கு சொல்லுவாங்க. அதுக்கு மேல ஒன்னும் சொல்ல மாட்டங்க. நான் சின்னப் பையனா இருந்தப்ப இருந்து இவுங்க சொன்ன கணக்குப்படி பார்த்தா புலிகளின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையவிட இரண்டு மடங்கு இருக்குமல்ல.
சரி சார்க் மாநாட்டுக்கு ஏன் புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க?
நண்பன் : என்ன இருத்தாலும் தமிழீழமும் தெற்க்காசிய நாடுதானே?
நான் : அதெப்படி இந்தியா அனுமதிக்காம தமிழீழம் உருவாச்சு. இங்க நாங்கதான் வல்லரசு தெரியும்ல.
நண்பன்: ஆமாம். உங்கள் உளவுத்துறையும் உங்கள் ஊடகங்களும் அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.
நான் : டேய். எங்க நாட்ட பத்தி தப்பா பேசாத. அப்பரம் விஜையகாந்த் அர்ஜுன் கிட்ட எல்லாம் சொல்லி உன்ன என்கவுண்டர் பண்ணிருவோம்.ஜாக்கிரதை!..
நண்பன்: நான் ஏண்டா உங்க நாட்டை பத்தி தப்பா பேசப் போறேன். இணையத்துல வந்து நாலு செய்திய படிச்சுப் பாரு. உனக்கே புரியும்.
நான் : என்னட சொல்றே?
நண்பன் : இப்ப உங்க பிரதமர் சார்க் மாநாட்டுக்கு சிறிலங்கா போறார்ல. அதுக்கு எதுக்கு 5000 வரையிலான உங்க ராணுவ வீரர்களோட போறார்?
நான் : அங்கதான் எப்ப பாத்தாலும் குண்டு வெடிக்குதல்ல. ஒரு வல்லரசின் பிரதமரை தீவிர வாதத்திடமிருந்து காப்பாத்தரதுல என்ன தப்பு?
நண்பன் : ஆமா. நேத்து கூடதான் உங்க நாட்ல பல இடங்கள்ல குண்டு வெடிச்சுது. அப்ப உங்க நாட்டுக்கு வர்ற அமெரிக்க அதிபர் 50000 படையினருடன் வருவாரா?
நான் : சரி என்னதான் சொல்ல வர்றே?
நண்பன் : முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும்னு உங்க அதிகாரிங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குப்பா.
நான் : புரியும் படி சொல்லு?
நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி சிறிலங்காவின் பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னாடி குண்டு வெடித்து பாகிஸ்தான் தூதர் Bashir Wali Mohmand மயிர் இழையில் உயிர்தப்பினார்..
நான் : அது விடுதலைப் புலிகள் செஞ்சிருப்பாங்க.
நண்பன்: ஆனா இதை அவங்க செய்யல. இது முழுக்க முழுக்க இந்திய உளவுத்துறை பண்ணின சதி வேலை ன்னு ஒரு சில பத்திரிக்கைல படிச்சேன். இலங்கை விசயத்துல பாகிஸ்தானோட தலையீடு மற்றும் ஆயுத உதவி போன்றவை வல்லரசுக்கு சற்று அச்சத்தை கொடுத்ததாகவும் எங்கே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கை என்ற சின்னப் பையன் வேறு ஒருவனின் கட்டுப்பாட்டுக்கு போயிருமோ என்ற எண்ணத்திலும் இன்னுமொரு காஷ்மீர் தென்னிந்தியாவில் உருவாகமல் தடுப்பதற்க்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் புலிகளின் பெயரை பயண்படுத்திக்கொண்டாதாகவும் தகவல்.
நான் : சே... சே... எங்க நாடு இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாது. இது முழுக்க முழுக்க வெளி நாட்டு சதி.
நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆப்கானிஸ்தான்ல இந்திய தூதரகத்துல குண்டு வெடிச்சு 40 க்கும் மேற்பட்டோற் இறந்த்ததாவது தெரியுமா?
நான் : ஆமாம். அது எங்களின் எதிரி பாகிஸ்தானின் சதிதான்.
நண்பன் : அதற்க்கு காரணம் தாலிபான்கள் என்று பாகிஸ்தான் சொல்லியிருக்கே?
நான் : அது பொய். பாகிஸ்தானின் ISI சதி.
நண்பன் : அது பாகிஸ்தானின் சதி. இங்கு நடந்தது புலிகளின் சதி.... நல்ல பகுத்தறிவுடா உனக்கு.
நான் : சரி இதுக்கும் புலிகளின் போர் நிறுத்தத்துக்கும் என்னடா சம்பந்த்தம்?
நண்பன் : இருக்கு. இந்த மாநாட்டை சாக்காக வைத்து பாகிஸ்தான் இந்திய பிரதமரை கொல்ல சதி திட்டம் தீட்டிருக்கலாம்னு ஒரு செய்தி இந்திய உளவுப்பிரிவுக்கு புலிகளின் உளவுப் பிரிவு மூலமா அனுப்பப் பட்டிருக்கு.
நான் : சரி நம்பிட்டேன். இதையே சாக்காக வைத்து பாகிஸ்த்தான் பிரதமரை கொலை செய்ய இந்தியா சதி செய்திருக்கிறதுன்னு தாலிபான் உளவுப்பிரிவு பாகிஸ்தான் உளவுப்பிரிகுக்கு தகவல் அனுப்பிச்சிருக்குமே?
நண்பன் : இருந்தாலும் இருக்கும். அதனால தான், அவுங்க இந்தியப் படைகள் பாதுகாப்புக்காக இலங்கையில் இருந்தால், தாங்கள் கலந்து கொள்ள போவதில்லைன்னு அறிவிச்சிருக்காங்க. இந்த வம்புல ஏன் தேவையில்லாம தமிழரின் விடுதலைப் போராட்டம் மாட்டிக்கிட்டு அல்லல் படனும்னு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிட்டாங்க.
நான் : காக்கா உக்காற பனை மரம் விழுந்த கதையாவல்ல இருக்கு.
நண்பன் : "உண்மை எதுன்னு யாருக்கு தெரியும். காலம் தான் பதில் சொல்லனும்" னு சொல்லிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.
என்னடா இன்னைக்கு ஒரே திகிலா போகுதுன்னு வொரி.. மண்ணிக்கணும்..வருத்தப்பட்டுட்டே .. வருத்தத்த போக்க ஏதவது ஒரு பள்ளிக்கூடம் பக்கம் பொறேன்.
அது என்னடா பள்ளிக்கூடத்துல வருத்தத்த போக்றாங்களான்னு நீங்க கேக்கறது தெரியுது.
அங்கதான் டாஸ்மாக் இருக்கும்ல............
http://www.dawn.com/2006/08/16/top10.htm
http://findarticles.com/p/articles/mi_kmafp/is_200608/ai_n16622684
http://www.thaindian.com/newsportal/india-news/isi-behind-the-indian-embassy-bombing-m-k-narayanan_10070860.html
http://wcbstv.com/topstories/afghanistan.bomb.blast.2.765878.html
http://www.colombopage.com/archive_08/July20160024JR.html
http://www.gulfnews.com/World/Afghanistan/10228788.html
பாரதி : "என்னடா பேரா, நலமா?" என்றான்
அதெல்லாம் சவுக்கியமா இருக்கோம்ல. நீ எப்படி, சவுக்கியமா?
பாரதி : ஏதோ கொஞ்சம் உயிருடன் இருக்கும் தமிழின் உயிரைக் காப்பாற்ற ஆவியை பிடித்துக்கொண்டிருக்கிறேன்.
ஏன் தமிழுக்கென்ன? நாங்கதான் இப்ப சினிமா பேரெல்லாம் தமிழ்லதான் வெக்கறமல்ல.
பாரதி : ஆம். ஆம். இப்பொழுது தமிழ், திரைப்படங்களின் பெயரில்தான் வாழ்கிறது. அதற்கு விருதுகளும் வரி விலக்கும் தருவதுகூட இப்பொழுது எப்படி தமிழை தத்தெடுக்கிறீர்கள் என்பது தெரிகிறது.
உனெக்கென்ன தாத்தா உன்னோட பிரன்ஸுகளும் சிஸ்யர்களும் தமிழால் வாழ்ந்து தமிழையும் வாழவைச்சிட்டு போயிட்டீங்க.. இப்ப பாவம் நம்ம முத்தமிழ் காவலர் மட்டும் தனியா ஒத்த ஆளா நின்னு தமிழை தொலைக்காட்சில வாழ வெக்கிறார்.
பாரதி : ஆம். பார்த்தேனே.. நீங்கள் எப்படி தமிழை வளர்க்கிறீர்கள் என்று. தமிழ் பத்தினி தாயடா. அவளை ஏன் வேறு மொழிகளுடன் கலந்து வேசியாக்கி வணிகம் செய்கிறீர்கள் ?பதர்களே... உங்களிடமா என் தாயை ஒப்படைத்து விட்டு போனேன். அய்யகோ......
அய்யய்யோ.. தாத்தா நீ ஏன் உணர்ச்சி வசப்படரே. நீ இருந்த காலம் வேற இப்ப இருக்கற காலம் வேற. இப்பல்லாம் ஸ்கூல்ல தமிழ்ல பேசுனாலே தண்டனை குடுக்கிற காலம். நீ வேற சும்மா பொலம்பிட்டு... சரி வந்து இப்படி உக்காந்து நாங்க எப்படி இசைத்தமிழை நாட்டியத்தோட வாழ வைக்றம்னு பாரு.
பாரதி : "எங்களின் தாயவளை கொச்சை படுத்தி கூவி கூவி விற்க்கும் உங்களை கொன்றாலே அவளின் ஆயுள் அடுத்த நூறாண்டு வரை வாழுமடா" ன்னு கொலை வாளை எடுத்து முதலில் என் நாக்கை வெட்டி பின் என் தலையை வெட்டி அவன் வணங்கும் காளிக்கு என்னை காணிக்கை கொடுத்து விட்டான்.
நாக்க மூக்க ரிங் டோன் அலர எந்திருச்சு பாத்தா... யப்பா.. இது கனவுன்னு கன்பார்ம், சாரி.. மண்ணிக்கனும், உறுதிப்படுத்திக்கிறதுக்கு கழுத்தை தொட்டு பார்த்துக்கிட்டேன். தலை ஒட்டிக்கொண்டுதான் இருந்தது.
சரி எழுந்திருச்சு வெளிநாடு வாழ் தமிழ் நண்பனின் அழைப்பை ஏற்று நாட்டு நடப்பு பற்றி கதைத்து கொண்டிருந்தோம். அவன் "சார்க் மாநாட்டை முன்னிட்டு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க.. தெரியுமா?" ன்னு கேட்டான்.
அட எங்க நீ வேற.. இங்க எங்கப்பா தைரியமா புலிகளை பத்தி செய்தி சொல்றாங்க. அப்பப்போ இத்தனை புலிகளை இலங்கை ராணுவம் கொன்றுச்சுன்னு கணக்கு சொல்லுவாங்க. அதுக்கு மேல ஒன்னும் சொல்ல மாட்டங்க. நான் சின்னப் பையனா இருந்தப்ப இருந்து இவுங்க சொன்ன கணக்குப்படி பார்த்தா புலிகளின் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையவிட இரண்டு மடங்கு இருக்குமல்ல.
சரி சார்க் மாநாட்டுக்கு ஏன் புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிருக்காங்க?
நண்பன் : என்ன இருத்தாலும் தமிழீழமும் தெற்க்காசிய நாடுதானே?
நான் : அதெப்படி இந்தியா அனுமதிக்காம தமிழீழம் உருவாச்சு. இங்க நாங்கதான் வல்லரசு தெரியும்ல.
நண்பன்: ஆமாம். உங்கள் உளவுத்துறையும் உங்கள் ஊடகங்களும் அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.
நான் : டேய். எங்க நாட்ட பத்தி தப்பா பேசாத. அப்பரம் விஜையகாந்த் அர்ஜுன் கிட்ட எல்லாம் சொல்லி உன்ன என்கவுண்டர் பண்ணிருவோம்.ஜாக்கிரதை!..
நண்பன்: நான் ஏண்டா உங்க நாட்டை பத்தி தப்பா பேசப் போறேன். இணையத்துல வந்து நாலு செய்திய படிச்சுப் பாரு. உனக்கே புரியும்.
நான் : என்னட சொல்றே?
நண்பன் : இப்ப உங்க பிரதமர் சார்க் மாநாட்டுக்கு சிறிலங்கா போறார்ல. அதுக்கு எதுக்கு 5000 வரையிலான உங்க ராணுவ வீரர்களோட போறார்?
நான் : அங்கதான் எப்ப பாத்தாலும் குண்டு வெடிக்குதல்ல. ஒரு வல்லரசின் பிரதமரை தீவிர வாதத்திடமிருந்து காப்பாத்தரதுல என்ன தப்பு?
நண்பன் : ஆமா. நேத்து கூடதான் உங்க நாட்ல பல இடங்கள்ல குண்டு வெடிச்சுது. அப்ப உங்க நாட்டுக்கு வர்ற அமெரிக்க அதிபர் 50000 படையினருடன் வருவாரா?
நான் : சரி என்னதான் சொல்ல வர்றே?
நண்பன் : முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும்னு உங்க அதிகாரிங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குப்பா.
நான் : புரியும் படி சொல்லு?
நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி சிறிலங்காவின் பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னாடி குண்டு வெடித்து பாகிஸ்தான் தூதர் Bashir Wali Mohmand மயிர் இழையில் உயிர்தப்பினார்..
நான் : அது விடுதலைப் புலிகள் செஞ்சிருப்பாங்க.
நண்பன்: ஆனா இதை அவங்க செய்யல. இது முழுக்க முழுக்க இந்திய உளவுத்துறை பண்ணின சதி வேலை ன்னு ஒரு சில பத்திரிக்கைல படிச்சேன். இலங்கை விசயத்துல பாகிஸ்தானோட தலையீடு மற்றும் ஆயுத உதவி போன்றவை வல்லரசுக்கு சற்று அச்சத்தை கொடுத்ததாகவும் எங்கே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இலங்கை என்ற சின்னப் பையன் வேறு ஒருவனின் கட்டுப்பாட்டுக்கு போயிருமோ என்ற எண்ணத்திலும் இன்னுமொரு காஷ்மீர் தென்னிந்தியாவில் உருவாகமல் தடுப்பதற்க்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் புலிகளின் பெயரை பயண்படுத்திக்கொண்டாதாகவும் தகவல்.
நான் : சே... சே... எங்க நாடு இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாது. இது முழுக்க முழுக்க வெளி நாட்டு சதி.
நண்பன் : கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஆப்கானிஸ்தான்ல இந்திய தூதரகத்துல குண்டு வெடிச்சு 40 க்கும் மேற்பட்டோற் இறந்த்ததாவது தெரியுமா?
நான் : ஆமாம். அது எங்களின் எதிரி பாகிஸ்தானின் சதிதான்.
நண்பன் : அதற்க்கு காரணம் தாலிபான்கள் என்று பாகிஸ்தான் சொல்லியிருக்கே?
நான் : அது பொய். பாகிஸ்தானின் ISI சதி.
நண்பன் : அது பாகிஸ்தானின் சதி. இங்கு நடந்தது புலிகளின் சதி.... நல்ல பகுத்தறிவுடா உனக்கு.
நான் : சரி இதுக்கும் புலிகளின் போர் நிறுத்தத்துக்கும் என்னடா சம்பந்த்தம்?
நண்பன் : இருக்கு. இந்த மாநாட்டை சாக்காக வைத்து பாகிஸ்தான் இந்திய பிரதமரை கொல்ல சதி திட்டம் தீட்டிருக்கலாம்னு ஒரு செய்தி இந்திய உளவுப்பிரிவுக்கு புலிகளின் உளவுப் பிரிவு மூலமா அனுப்பப் பட்டிருக்கு.
நான் : சரி நம்பிட்டேன். இதையே சாக்காக வைத்து பாகிஸ்த்தான் பிரதமரை கொலை செய்ய இந்தியா சதி செய்திருக்கிறதுன்னு தாலிபான் உளவுப்பிரிவு பாகிஸ்தான் உளவுப்பிரிகுக்கு தகவல் அனுப்பிச்சிருக்குமே?
நண்பன் : இருந்தாலும் இருக்கும். அதனால தான், அவுங்க இந்தியப் படைகள் பாதுகாப்புக்காக இலங்கையில் இருந்தால், தாங்கள் கலந்து கொள்ள போவதில்லைன்னு அறிவிச்சிருக்காங்க. இந்த வம்புல ஏன் தேவையில்லாம தமிழரின் விடுதலைப் போராட்டம் மாட்டிக்கிட்டு அல்லல் படனும்னு புலிகள் போர் நிறுத்தம் அறிவிச்சிட்டாங்க.
நான் : காக்கா உக்காற பனை மரம் விழுந்த கதையாவல்ல இருக்கு.
நண்பன் : "உண்மை எதுன்னு யாருக்கு தெரியும். காலம் தான் பதில் சொல்லனும்" னு சொல்லிட்டு இணைப்பை துண்டித்து விட்டான்.
என்னடா இன்னைக்கு ஒரே திகிலா போகுதுன்னு வொரி.. மண்ணிக்கணும்..வருத்தப்பட்டுட்டே .. வருத்தத்த போக்க ஏதவது ஒரு பள்ளிக்கூடம் பக்கம் பொறேன்.
அது என்னடா பள்ளிக்கூடத்துல வருத்தத்த போக்றாங்களான்னு நீங்க கேக்கறது தெரியுது.
அங்கதான் டாஸ்மாக் இருக்கும்ல............
http://www.dawn.com/2006/08/16/top10.htm
http://findarticles.com/p/articles/mi_kmafp/is_200608/ai_n16622684
http://www.thaindian.com/newsportal/india-news/isi-behind-the-indian-embassy-bombing-m-k-narayanan_10070860.html
http://wcbstv.com/topstories/afghanistan.bomb.blast.2.765878.html
http://www.colombopage.com/archive_08/July20160024JR.html
http://www.gulfnews.com/World/Afghanistan/10228788.html
Tuesday, July 22, 2008
திண்ணை காலி
எங்கடா மன்மோகன், சிதம்பரத்தையெல்லம் நிக்க வச்சு நாக்க மூக்க கேள்வி கேட்டுட்டு வெளியபோகும்போது தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் நம்மளை கைது பண்ணிட்டாங்களோன்னு பொங்க வெச்சு கொண்டாடுன உங்களை விடாது இந்த கருப்பு.
நாங்க கோடு எழுதுலேன்னா அமெரிக்க பொருளாதாரமே சும்மா மொடங்கிபோயுரும்ல... அதான் கொஞ்சம் டைம் பாசுக்கு கோடு எழுதி எழுதி ரிவியூல கோக்கு மாக்கா கேள்வி கேட்டவங்களுக்கு ஆப்பு வெச்சு சாமாளிச்சு வெளிய வர கொஞ்சம் லேட்டாயிருச்சு.
அதனால இந்த நாலுமாச நாட்டு நடப்ப நம்ம கலைஞர் மாதிரி நானே என்னை பேட்டி எடுத்து உங்களுக்காக பதிக்கிறேன்.
உலக நாயகன் நடிச்சு ஓடு ஓடுன்னு ஓடிட்டு இருக்கர தசாவதாரம் பற்றி....?
படம் நல்லா இல்லைன்னு சொல்லல. நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்.
இந்தியர்கள் அதிகமா சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்கன்னு புஸ் சொன்னத பத்தி...?
அது என்ன "ஆரம்பிச்சிட்டாங்க". இத என்னால ஏத்துக்க முடியாது. புஸ்ஸுக்கெல்லாம் பதில் சொல்லி நம்ம டைம வீண் பண்ணக்கூடாது.
திமுக கூட்டணியிலிருந்து ப மா கா வை கழட்டி விட்டதை பற்றி...?
காடுவெட்டி குரு மாதிரி ஆளுங்க எங்க தன்னோட கட்சிகாரங்கள விட மக்கள்கிட்ட அதிக செல்வாக்கு வந்துரும்னு ஒரு பயத்துல இந்த முடிவை எடுத்திருப்பார்னு நான் நினைக்கிறேன்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொண்றதை கண்டித்து முதலமைச்சர் உண்ணா விரதம் இருந்தத பற்றி...?
எலக்சன் வருதல்ல. அதான் மீன் பிடிக்கறார் முதலை மச்சர்.
சிம்புவும் நயனும் சந்திச்சத பத்தி....?
நயந்தான் இந்த வம்ப பத்தி சிந்திக்கணும். தயவு செஞ்சு என்னோட நம்பர அந்த பொண்ணுகிட்ட குடுத்திடாதீங்க..
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐமுகூ வெற்றி பெற்றதை பத்தி....
பணம் 575ம் செய்யும்.
அடுத்த காவியம் எப்பன்னு நம்ம வாசகர்கள் கேள்விக்கு....?
விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
வருட்டுங்களா........
நாங்க கோடு எழுதுலேன்னா அமெரிக்க பொருளாதாரமே சும்மா மொடங்கிபோயுரும்ல... அதான் கொஞ்சம் டைம் பாசுக்கு கோடு எழுதி எழுதி ரிவியூல கோக்கு மாக்கா கேள்வி கேட்டவங்களுக்கு ஆப்பு வெச்சு சாமாளிச்சு வெளிய வர கொஞ்சம் லேட்டாயிருச்சு.
அதனால இந்த நாலுமாச நாட்டு நடப்ப நம்ம கலைஞர் மாதிரி நானே என்னை பேட்டி எடுத்து உங்களுக்காக பதிக்கிறேன்.
உலக நாயகன் நடிச்சு ஓடு ஓடுன்னு ஓடிட்டு இருக்கர தசாவதாரம் பற்றி....?
படம் நல்லா இல்லைன்னு சொல்லல. நல்லா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன்.
இந்தியர்கள் அதிகமா சாப்பிட ஆரம்பிச்சிட்டாங்கன்னு புஸ் சொன்னத பத்தி...?
அது என்ன "ஆரம்பிச்சிட்டாங்க". இத என்னால ஏத்துக்க முடியாது. புஸ்ஸுக்கெல்லாம் பதில் சொல்லி நம்ம டைம வீண் பண்ணக்கூடாது.
திமுக கூட்டணியிலிருந்து ப மா கா வை கழட்டி விட்டதை பற்றி...?
காடுவெட்டி குரு மாதிரி ஆளுங்க எங்க தன்னோட கட்சிகாரங்கள விட மக்கள்கிட்ட அதிக செல்வாக்கு வந்துரும்னு ஒரு பயத்துல இந்த முடிவை எடுத்திருப்பார்னு நான் நினைக்கிறேன்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொண்றதை கண்டித்து முதலமைச்சர் உண்ணா விரதம் இருந்தத பற்றி...?
எலக்சன் வருதல்ல. அதான் மீன் பிடிக்கறார் முதலை மச்சர்.
சிம்புவும் நயனும் சந்திச்சத பத்தி....?
நயந்தான் இந்த வம்ப பத்தி சிந்திக்கணும். தயவு செஞ்சு என்னோட நம்பர அந்த பொண்ணுகிட்ட குடுத்திடாதீங்க..
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐமுகூ வெற்றி பெற்றதை பத்தி....
பணம் 575ம் செய்யும்.
அடுத்த காவியம் எப்பன்னு நம்ம வாசகர்கள் கேள்விக்கு....?
விரைவில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
வருட்டுங்களா........
Tuesday, March 4, 2008
யாருக்கு இந்த 60 ஆயிரம் கோடி
எல்லோரைப்போலவே நானும் நெகிழ்ந்து போனேன், சிதம்பரத்தின் நிதி நிலை அறிக்கையை பார்த்து. பிறகு எங்கோ படித்த சில கட்டுரைகள் சில உண்மைகளை சொன்னது.
விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்தது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டால், விவசாயிகளின் இந்த நிலமைக்கு என்ன காரணம் என்று ஒரு சின்ன ஆராய்ச்சி செய்தால் அது பொய்யென்று தெரிகிறது.
பெரும்பாலான தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ஆந்திரப் பிரதேச வாரங்கள் மாவட்டத்தை சேர்ந்த பருத்தி பயிரிட்டவர்கள். இந்திய அரசியல்வாதிகளின் நலம் நோக்கி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி மொன்சான்டோ என்ற வெளிநாட்டு விதை நிறுவனம் வழங்கிய மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் வந்த வினைதான் அது. அப்படியென்ன அந்த விதையில் உள்ளது என்கிறீர்களா?. இங்குதான் நமது மடமை நோக்கப்பட வேண்டியது. "சாதாரண விதையில் வளரும் பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க பூச்சிமருந்து செலவு செய்யவேண்டும், ஆனால் நாங்கள் கொடுக்கும் விதைக்கு பூச்சி மருந்து தேவையில்லை, விதையே எதிர்ப்பு சக்திகொண்டது, விலைமட்டும் கொஞ்சம் அதிகம்" என்று சொல்லி விவசாயிகளிடம் விற்றுவிட்டார்கள் சோதனை செய்யப்படாத ஊன விதைகளை. இந்த விலை அதிகமான பருத்தி பயிரிடுவதற்க்கு வங்கிகளின் மூலம்(ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி) விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்கியது இந்திய அரசு. அந்த பணமெல்லாம் அப்படியே மொன்சான்டோ கல்லாவிற்க்கு போனது.
இதுபோலவே பல மண்ணை மலடாக மாற்றும் வெளிநாட்டு உர நிறுவனங்களும் பணத்தை சுருட்டின மற்ற விவசாயிகளிடம் இருந்து.
பயிரிட்டு சில நாட்களுக்கு பிறகுதான் அந்த பயிரின் மகத்துவம் தெரிந்தது. அந்த பயிர் இந்திய மண்ணில் விழைச்சலை தராதென்று. சில நாட்களில் அனைத்து பயிர்களும் மடிந்து விட்டது. விவசாயிகளிடம் கடன் மட்டும் மிச்சமிருந்தது. பிறகு வெளிநாட்டு முதலாலிகள் முதலீடு செய்திருந்த வங்கிகள் கடனை வசூலிக்க சாட்டையய் சுற்றியதில் தப்பிப்பதற்க்கு தற்க்கொலை செய்து கொண்டான் இந்திய விவசாயி.
இப்படியே பயிரையும் மண்ணையும் கொன்று இனி எதிர்காலத்தில் அவர்களிடமே கையேந்தி நிற்க வேண்டும் என்ற தொலை நோக்கு திட்டத்தில் நம்மை விழவைத்து விட்டார்கள்.
எல்லாம் முடிந்த பிறகு இப்போது மக்களின் வரிப்பணத்தை எடுத்து வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி ஈட்டுத்தொகை கொடுக்கப்போகிறார்கள்.
இதற்க்கு பதிலாக இந்த அரசியல் வாதிகள் நேரடியாகவே வெளிநாட்டு நிறுவனத்திற்க்கு பணத்தை கொடுத்துவிட்டு அவன் வீசும் எழும்புத்துண்டை பொறுக்கிக்கொண்டு இருந்திருக்கலாம், பல இந்திய விவசாயிகளின் உயிர்களாவது மிஞ்சியிருக்கும்.
திட்டங்கள் வகுக்கும் மன்மோகன், சிதம்பரம், சுப்பிரமணிய சுவாமி எல்லாம் எங்கிருந்து கற்றுவந்தார்கள் இந்த பாடங்களை?
ஆதாரம்,
http://www.organicconsumers.org/monlink.cfm
http://www.scidev.net/content/opinions/eng/sowing-trouble-indias-second-green-revolution.cfm
http://www.globalresearch.ca/index.php?context=viewArticle&code=SHR20060911&articleId=3204
http://www.democracynow.org/2006/12/13/vandana_shiva_on_farmer_suicides_the
http://artsci.wustl.edu/~anthro/research/biotech_suicide.html
http://www.monsanto.com/
விவசாயிகள் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்தது ஒரு சாதனையாக பார்க்கப்பட்டால், விவசாயிகளின் இந்த நிலமைக்கு என்ன காரணம் என்று ஒரு சின்ன ஆராய்ச்சி செய்தால் அது பொய்யென்று தெரிகிறது.
பெரும்பாலான தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ஆந்திரப் பிரதேச வாரங்கள் மாவட்டத்தை சேர்ந்த பருத்தி பயிரிட்டவர்கள். இந்திய அரசியல்வாதிகளின் நலம் நோக்கி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி மொன்சான்டோ என்ற வெளிநாட்டு விதை நிறுவனம் வழங்கிய மரபியல் மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் வந்த வினைதான் அது. அப்படியென்ன அந்த விதையில் உள்ளது என்கிறீர்களா?. இங்குதான் நமது மடமை நோக்கப்பட வேண்டியது. "சாதாரண விதையில் வளரும் பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க பூச்சிமருந்து செலவு செய்யவேண்டும், ஆனால் நாங்கள் கொடுக்கும் விதைக்கு பூச்சி மருந்து தேவையில்லை, விதையே எதிர்ப்பு சக்திகொண்டது, விலைமட்டும் கொஞ்சம் அதிகம்" என்று சொல்லி விவசாயிகளிடம் விற்றுவிட்டார்கள் சோதனை செய்யப்படாத ஊன விதைகளை. இந்த விலை அதிகமான பருத்தி பயிரிடுவதற்க்கு வங்கிகளின் மூலம்(ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி) விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்கியது இந்திய அரசு. அந்த பணமெல்லாம் அப்படியே மொன்சான்டோ கல்லாவிற்க்கு போனது.
இதுபோலவே பல மண்ணை மலடாக மாற்றும் வெளிநாட்டு உர நிறுவனங்களும் பணத்தை சுருட்டின மற்ற விவசாயிகளிடம் இருந்து.
பயிரிட்டு சில நாட்களுக்கு பிறகுதான் அந்த பயிரின் மகத்துவம் தெரிந்தது. அந்த பயிர் இந்திய மண்ணில் விழைச்சலை தராதென்று. சில நாட்களில் அனைத்து பயிர்களும் மடிந்து விட்டது. விவசாயிகளிடம் கடன் மட்டும் மிச்சமிருந்தது. பிறகு வெளிநாட்டு முதலாலிகள் முதலீடு செய்திருந்த வங்கிகள் கடனை வசூலிக்க சாட்டையய் சுற்றியதில் தப்பிப்பதற்க்கு தற்க்கொலை செய்து கொண்டான் இந்திய விவசாயி.
இப்படியே பயிரையும் மண்ணையும் கொன்று இனி எதிர்காலத்தில் அவர்களிடமே கையேந்தி நிற்க வேண்டும் என்ற தொலை நோக்கு திட்டத்தில் நம்மை விழவைத்து விட்டார்கள்.
எல்லாம் முடிந்த பிறகு இப்போது மக்களின் வரிப்பணத்தை எடுத்து வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி ஈட்டுத்தொகை கொடுக்கப்போகிறார்கள்.
இதற்க்கு பதிலாக இந்த அரசியல் வாதிகள் நேரடியாகவே வெளிநாட்டு நிறுவனத்திற்க்கு பணத்தை கொடுத்துவிட்டு அவன் வீசும் எழும்புத்துண்டை பொறுக்கிக்கொண்டு இருந்திருக்கலாம், பல இந்திய விவசாயிகளின் உயிர்களாவது மிஞ்சியிருக்கும்.
திட்டங்கள் வகுக்கும் மன்மோகன், சிதம்பரம், சுப்பிரமணிய சுவாமி எல்லாம் எங்கிருந்து கற்றுவந்தார்கள் இந்த பாடங்களை?
ஆதாரம்,
http://www.organicconsumers.org/monlink.cfm
http://www.scidev.net/content/opinions/eng/sowing-trouble-indias-second-green-revolution.cfm
http://www.globalresearch.ca/index.php?context=viewArticle&code=SHR20060911&articleId=3204
http://www.democracynow.org/2006/12/13/vandana_shiva_on_farmer_suicides_the
http://artsci.wustl.edu/~anthro/research/biotech_suicide.html
http://www.monsanto.com/
Saturday, February 23, 2008
நாங்கள் இந்தியர்கள்
நாங்கள் இந்தியர்கள்.
எங்களுக்கு எங்கே யார் கொல்லப்பட்டாலும், ஏன் இந்தியாவை விட்டு வெளியே எங்கள் சொந்தங்கள் கொல்லப்பட்டாலும், ஏன் இந்தியாவில் கொல்லப்பட்டாலும் எங்களுக்கு கவலையில்லை.
நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடுவோம், நமீதாவின் நடனத்தைப்பாராட்டி விவாதம் நடத்துவோம்.
அதுவும் நாங்கள் தமிழர்கள். உலகத்தில் இருக்கிற இனங்களில் பழமையான இனம் எங்களது. நாங்கள் எப்பொழுதுமே ஒற்றுமையாக இருப்பதில்லை என்ற சபதம் எடுத்திருக்கிறோம். ஒரே ஒற்றுமை மற்றொரு தமிழன் காலை வாருவது.
ராஜிவ் காந்தி கொலையை பயங்கரவாதம் என்போம். சத்திய மூர்த்தி பவனில் நடக்கும் கத்தி குத்துக்கள் அகிம்சை என்போம்.
தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும் என்போம். அதில் அண்ணன் பெரியவனா தம்பி பெரியவனா என்ற போட்டிகள் வைப்போம். அதற்க்கு அப்பாவிகளை எரிப்போம்.
சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி ஆகியோர் தேசப்பற்றாளர் என்போம். ஏனென்றால் அவர்கள் சி ஐ ஏ ஏஜண்டுகளாக இருந்து பாகிஸ்தான் இந்திய எல்லயில் ஊடுருவுவதை அறிந்து தகவல் தேரிவித்து நாட்டை காப்பாற்றியவர்கள்.
சீதயும் ராவணனும் இப்போது பேசிக்கொள்வதை ரசிப்போம்.
தமிழனை கொல்ல மாற்றானுக்கு ஆயுதம் வழங்கவே நாங்கள் ஒவர் டைம் வேலை செய்து வரி கட்டுவோம்.
எவனாவது ஒருவன் போதை தெளிந்து கேள்விகேட்டால், பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் போட்டு உள்ளே தள்ளி பேச்சு சுதந்திரத்தை காப்பாற்றுவோம்.
"நாங்கள் இப்பொழுதெல்லாம் உணவில் உப்பு சேர்த்துவதை நிறுத்திவிட்டோம் என்பதை பெருமையுடன் இந்த நேரத்திலே உங்களுக்கு தெரிவிக்க நான் கடமை பட்டிருக்கிறேன்" என்று மேடையில் பேசுவோம்.
கீழே உள்ள படங்கலெல்லாம், நேற்று சிரிலங்கா விமானம் கிரஞ்சி பிரதேசம் மீது குண்டு வீசி கொன்ற விடுதலைப்புலிகள். இன்னும் பயங்கரமான ஆயுதங்களை வழங்கி மீதமுள்ள கருவிலுள்ள விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என இந்திய அரசை வலியுருத்துகிறோம்.






எங்களுக்கு எங்கே யார் கொல்லப்பட்டாலும், ஏன் இந்தியாவை விட்டு வெளியே எங்கள் சொந்தங்கள் கொல்லப்பட்டாலும், ஏன் இந்தியாவில் கொல்லப்பட்டாலும் எங்களுக்கு கவலையில்லை.
நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடுவோம், நமீதாவின் நடனத்தைப்பாராட்டி விவாதம் நடத்துவோம்.
அதுவும் நாங்கள் தமிழர்கள். உலகத்தில் இருக்கிற இனங்களில் பழமையான இனம் எங்களது. நாங்கள் எப்பொழுதுமே ஒற்றுமையாக இருப்பதில்லை என்ற சபதம் எடுத்திருக்கிறோம். ஒரே ஒற்றுமை மற்றொரு தமிழன் காலை வாருவது.
ராஜிவ் காந்தி கொலையை பயங்கரவாதம் என்போம். சத்திய மூர்த்தி பவனில் நடக்கும் கத்தி குத்துக்கள் அகிம்சை என்போம்.
தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும் என்போம். அதில் அண்ணன் பெரியவனா தம்பி பெரியவனா என்ற போட்டிகள் வைப்போம். அதற்க்கு அப்பாவிகளை எரிப்போம்.
சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி ஆகியோர் தேசப்பற்றாளர் என்போம். ஏனென்றால் அவர்கள் சி ஐ ஏ ஏஜண்டுகளாக இருந்து பாகிஸ்தான் இந்திய எல்லயில் ஊடுருவுவதை அறிந்து தகவல் தேரிவித்து நாட்டை காப்பாற்றியவர்கள்.
சீதயும் ராவணனும் இப்போது பேசிக்கொள்வதை ரசிப்போம்.
தமிழனை கொல்ல மாற்றானுக்கு ஆயுதம் வழங்கவே நாங்கள் ஒவர் டைம் வேலை செய்து வரி கட்டுவோம்.
எவனாவது ஒருவன் போதை தெளிந்து கேள்விகேட்டால், பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் போட்டு உள்ளே தள்ளி பேச்சு சுதந்திரத்தை காப்பாற்றுவோம்.
"நாங்கள் இப்பொழுதெல்லாம் உணவில் உப்பு சேர்த்துவதை நிறுத்திவிட்டோம் என்பதை பெருமையுடன் இந்த நேரத்திலே உங்களுக்கு தெரிவிக்க நான் கடமை பட்டிருக்கிறேன்" என்று மேடையில் பேசுவோம்.
கீழே உள்ள படங்கலெல்லாம், நேற்று சிரிலங்கா விமானம் கிரஞ்சி பிரதேசம் மீது குண்டு வீசி கொன்ற விடுதலைப்புலிகள். இன்னும் பயங்கரமான ஆயுதங்களை வழங்கி மீதமுள்ள கருவிலுள்ள விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என இந்திய அரசை வலியுருத்துகிறோம்.






யோகி - இறுதிப்பாகம்
எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கையில் அவர்கள் இதயங்கள் எதயோ பரிமாரிக்கொண்டன.
"இவன் யாரோ, இவன் யாரோ, வந்தது எதர்க்காக" என்று பாடிக்கொண்டிருந்தது அவள் உதடு.
"நீ இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை, வான வில்லே..." என்று இவனும் பாடிக்கொண்டிருந்தான்.
பேருந்து நகர்ந்து கொண்டிருக்கும்போதே யோகி பழய நினைவுக்குள் மூழ்கினான்...
இரண்டு வாரங்களுக்கு முன்னால்,
அகிலாவின் படிப்போ அல்லது அவள் எண்ணமோ தன் காதலால் திசை மாறிவிடக் கூடாதென்று காத்திருந்து அவளின் கடைசி தேர்வு முடிந்த நாளில் யோகி தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று அவள் பள்ளியில் இருந்து வரும் வழி பார்த்து நின்றான்.
தூரத்தில் வருவோரெல்லாம் அவனுக்கு ஆரம்பத்தில் அகிலா போல் தெரிவதும், பின் பக்கத்தில் வந்தபோது அவளில்லாமல் ஏமற்றமே அவனை எதிர் கொண்டது.
ஒரு மணி நேரம் நின்று காத்துக் கொண்டிருந்த பின் அகிலாவும் கடைசியில் வந்து கொண்டிருந்தாள்.. அவள்தான் கடைசியாக வந்து கொண்டிருந்தாள் என்பதால் அந்த நேரம் அவளை சுற்றி யாரும் இல்லை.
கால தேவன் தன் காதலுக்கு உதவிசெய்ததை, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அகிலாவை நோக்கி முன் நகர்ந்தான். தன்னை நோக்கி வருவதை விளங்கிக்கொண்டவளின் முகம் நானத்தால் சிவந்து தனது பாதையில் இருந்து சற்று விலகி நடக்கத்தொடங்கினாள்.
அவள் அருகில் சென்று.." அகிலா.. உன்னை பார்க்கத்தான் இவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கிறேன்..."
அவள் அதை எதையும் கேட்காதது போல் தொடர்ந்து நடந்தாள்...
"அகிலா.. அகிலா... உங்கிட்டதான் நான் பேசிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு போயிட்டு இருக்கே..."
" என்னை உனக்கு புடிக்கலையா? "
"உங்கள எனக்கு எதுக்கு பிடிக்கனும்?"
"ஆமா.. நீ எங்க மாமன் பெத்த பொன்னுதான.. அப்ப அவன் குணம் உங்கிட்ட இல்லாம இருக்குமா"
"என்ன சொல்ல வர்ரீங்க?"
"உன்னை எனக்கு புடிச்சிருக்கு.. என்னை உனக்கு புடிச்சிருக்கா?"
"சரி.. உங்கள எனக்கு பிடிச்சிருந்தா மட்டும் என்ன?"
உள்ளத்தில் பனிமழை பொழிய மீண்டும் அதை ஒருமுறை கேட்க
"என்ன சொன்னே?"
"எனக்கு உங்கள பிடிச்சிருந்தா மட்டும் இப்ப என்ன?. ஆரம்மத்துல உங்கள பத்தி நான் தப்பா நெனச்சிருந்தேன். ஆனா அப்பரம் எங்க பாட்டி உங்கள பத்தி சொன்னதுக்கப்பரம் தான் புரிஞ்சுது எங்கப்பாவுக்கும் உங்கப்பாவுக்குக் இருக்கிற பிரச்சினை. எங்கப்பவை யாரலும் மாத்த முடியாது."
"ஆன அதுமட்டும் இப்ப பிரச்சினை இல்ல.. எனக்குன்னு சில ஆசை, கனவுகள் எல்லாம் இருக்கு...."
"ஆசை இல்லாம இங்க யாருதான் இருக்கா? சொல்லு....."
"எனக்கு இப்ப கல்யணத்த பத்தி பேசர காலம் இப்ப இல்லேனாலும், என்னோட விருப்பத்த சொல்ரதுல தப்பு இல்ல"
"என்னைக்கவது ஒரு நாள் என்னை எங்கப்பா யாருக்காவது ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வெக்கதான் போராரு. ஆனா முன்ன பின்ன தெரியாத யாரோ ஒருத்தர்கிட்ட என்னோட வாழ்க்கைய குடுக்கரதுல எனக்கு விருப்பமில்லை... "
"நான் நினைச்சத்தான் நீயும் சொல்லிட்டு இருக்கே ...."
"அந்த அளவு மனசு ஒன்றிப்போறதனாலதான் இப்ப நான் இங்க நின்னு பேசிட்டு இருக்கேன்னு நெனைக்கிறேன்..."
"நீங்களும் என்னை சுத்தி சுத்தி வர்ரத நான் கவனிச்சிட்டுதான் இருக்கேன். இருந்தாலும் எனக்கு இந்த மாதிரி காதல்ல எல்லாம் விருப்பமில்லை. கல்யாணம் பண்ரதுன்னு முடிவெடுத்துட்டு காதல் பண்ணும்போது யாருக்கும் யாருமில்லாத தெருவில் நின்னு பேசனும்னோ, காதல்கடிதம் பரிமாரிக்கரதோ, பைக்ல சேர்ந்து சுத்தரதெல்லாம் செய்யத்தோணாது. தன்னை நம்பி தன்னோட வாழ்க்கைய தர்ர பொண்ணை எப்படி வாழ்க்க முழுதும் சந்தோசமா வெச்சுக்கரதுன்னு யோசிச்சு அதுக்கான முயற்சிய செய்ய ஆரம்பிக்கரவன் தான் உண்மயான காதலன்"
அகிலாவைப்பத்தி என்னென்னமோ எண்ணிக்கொண்டு வந்தவனிடம், அகிலாவின் வார்த்தைகளால் அவளை ஒரு தேவதையாகவே பார்க்க தொடங்கினான்.
"எங்கப்பா என்ன வசதியான வீட்லதான் கல்யாணம் பண்ணிக்கொடுப்பாரு. ஒரு அப்பாவா யாரும் தன் மகளோட வாழ்க்கய யோசிச்சு இந்த முடிவுதான் எடுப்பாங்க.."
"நீங்களும் நானும் வாழ்க்கைல ஒன்னா சேரணும்னா அதுக்கு நீங்க இப்ப இருக்கர நிலமையில இருந்து மேல வர முயற்ச்சி செய்யனும். எதாவது சாதிக்கனும்........"
"உங்களை நம்பி நாளைக்கு நான் வந்தா, உங்களோட உழைப்பில நாம வாழனுமல்ல?"
யொகிக்கு கொதிக்கும் எண்ணைக் குழிக்குள் போட்டது போன்று இருந்தது..
"காதலை நான் புரிஞ்சு வெச்சிருக்கரத விட நீ ரொம்ப புரிஞ்சு வச்சிருக்கே".
"என்னை வேறொருத்தர் கைல பிடிச்சு கொடுக்கரதுக்கு முன்னாடி நீங்க வந்து பொண்ணு கேட்டா எங்கப்பா குடுக்கர மாதிரி உங்க உழைப்பில முன்னேறி வாங்க. அப்ப எங்கப்பா என்னை உங்களுக்கு தர மாட்டேன்னு சொன்னாருன்னா நான் உங்க பின்னாடி வந்திருவேன். அதுவரைக்கும் இந்த மாதிரி பின் தொடர்ந்து வந்து காதலிக்கறதெல்லாம் வேண்டாம். சரி எனக்கு நேரமாச்சு. நான் போகனும்"
"சரி அப்ப மறுபடியும் நான் உன்ன பாக்க முடியாதா?" என்றான் ஏக்கத்துடன்.
"இன்னும் பத்து நாள்ல நான் காலேஜ்ல சேர அப்ளிகேசன் வாங்க சத்தி போவேன்."
என்று சொல்லிவிட்டு அவள் வீடு நோக்கி தொடர்ந்தாள்.
யோகி அவளிடம் பேச வருவதற்க்கு முன் பல ஒத்திகைகள் செய்து வந்திருந்தான். ஆனால் அவை அனைத்தும் அவளின் வார்த்தைகளால் வீனாய் போனது.
கண்களில் அவள் பிம்பமும் இதயத்தில் அவளின் வர்த்தைகளும் ஒலித்துகொண்டிருக்கும் போதே சத்தியை பேருந்து அடைந்திருந்தது. அவளிடம் பேச காத்திருந்த யோகி, அவள் பேருந்திலிருந்து இறங்கி அவனை கண்டு கொள்ளாமல் கல்லூரி நோக்கி சென்றது அவனுக்கு ஏமாற்றம் தந்தது, இருந்தும் அவளை புரிந்து கொண்டான்.
அவனும் அவன் கல்லூரி நோக்கி பயணம் செய்தான்.
கல்லூரிக்கு சென்று துறைத்தலைவரை சந்திக்க சென்றான். அவன் எழுதத் தவறிய தேர்வுக்குரிய பேராசிரியாய் அவனை அழைத்து விசாரித்தார்.
கொஞ்சமா படிக்கிற பசங்கல்ல கொஞ்சம் அதிகமா படிக்கர பய்யன்னு பேரெடுத்த யோகிய தேர்வில் தோல்வியடைய விரும்ப்பாத அந்த பேராசிரியய் மீண்டும் அவனை தேர்வெழுத அனுமதித்தார் அன்றய தினமே. யோகியும் தான் வந்த நோக்கம் நிரைவேரியதற்க்கு பேரசிரியய்க்கு நன்றி தெரிவித்து விடை பெற்றான்.
மூன்று வருடங்களுகுப் பிறகு படிப்பு முடிந்த நிலையில் வளாக நேர்முகத்தேர்விற்க்காக அமெரிக்காவின் மிகப்பெரும் கணினி நிறுவனமான இன்டெல் அவன் கல்லூரிக்கு வந்திருந்தது.
அவன் அகிலா விதைத்த கனவுகளுடன் தேர்வுகளின் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான். அவனின் எண்ணப்படியே நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று அடுத்த மாதம் அமெரிக்காவில் பணி நியமன ஆணை பெற்றான்.
எண்ணத்தில் கொள்ள முடியாத மகிழ்ச்சியுடன் அகிலாவை பார்க்க அவசரமாக ஊருக்கு கிளம்பினான்.
ஊரில் நுழைந்தவுடன் பேருந்து நிலையம் அருகே மக்கள் கூட்டமாக இருந்தது. யோகியும் என்னவென்று ஆர்வத்துடன் கூட்டத்தை விலக்கி பார்த்தான். அங்கு அவன் கண்ட காட்சி அவன் இதயம் உடைந்து அழச்செய்து விட்டது.
ஆம்.. அகிலா ரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்தாள். அன்று மாலை அவள் பேருந்திலிருந்து இரங்கி பாதையை கடக்கும் போது கட்டுப்பாடிழந்த லாரி யொன்று அவள் மீது மோதியது.
அது அவளின் வாழ்வுடன் யோகியின் வாழ்வையும் எடுத்து சென்றது.
அன்றிலிருந்து தன்னை மறந்து கால் போகும் போக்கில் நடந்து காலத்தை அகிலாவின் நினைவால் கரைத்து நடந்தான் முழு யோகியாக........
(முற்றும்)
"இவன் யாரோ, இவன் யாரோ, வந்தது எதர்க்காக" என்று பாடிக்கொண்டிருந்தது அவள் உதடு.
"நீ இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை, வான வில்லே..." என்று இவனும் பாடிக்கொண்டிருந்தான்.
பேருந்து நகர்ந்து கொண்டிருக்கும்போதே யோகி பழய நினைவுக்குள் மூழ்கினான்...
இரண்டு வாரங்களுக்கு முன்னால்,
அகிலாவின் படிப்போ அல்லது அவள் எண்ணமோ தன் காதலால் திசை மாறிவிடக் கூடாதென்று காத்திருந்து அவளின் கடைசி தேர்வு முடிந்த நாளில் யோகி தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று அவள் பள்ளியில் இருந்து வரும் வழி பார்த்து நின்றான்.
தூரத்தில் வருவோரெல்லாம் அவனுக்கு ஆரம்பத்தில் அகிலா போல் தெரிவதும், பின் பக்கத்தில் வந்தபோது அவளில்லாமல் ஏமற்றமே அவனை எதிர் கொண்டது.
ஒரு மணி நேரம் நின்று காத்துக் கொண்டிருந்த பின் அகிலாவும் கடைசியில் வந்து கொண்டிருந்தாள்.. அவள்தான் கடைசியாக வந்து கொண்டிருந்தாள் என்பதால் அந்த நேரம் அவளை சுற்றி யாரும் இல்லை.
கால தேவன் தன் காதலுக்கு உதவிசெய்ததை, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அகிலாவை நோக்கி முன் நகர்ந்தான். தன்னை நோக்கி வருவதை விளங்கிக்கொண்டவளின் முகம் நானத்தால் சிவந்து தனது பாதையில் இருந்து சற்று விலகி நடக்கத்தொடங்கினாள்.
அவள் அருகில் சென்று.." அகிலா.. உன்னை பார்க்கத்தான் இவ்வளவு நேரமா காத்துக்கிட்டு இருக்கிறேன்..."
அவள் அதை எதையும் கேட்காதது போல் தொடர்ந்து நடந்தாள்...
"அகிலா.. அகிலா... உங்கிட்டதான் நான் பேசிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு போயிட்டு இருக்கே..."
" என்னை உனக்கு புடிக்கலையா? "
"உங்கள எனக்கு எதுக்கு பிடிக்கனும்?"
"ஆமா.. நீ எங்க மாமன் பெத்த பொன்னுதான.. அப்ப அவன் குணம் உங்கிட்ட இல்லாம இருக்குமா"
"என்ன சொல்ல வர்ரீங்க?"
"உன்னை எனக்கு புடிச்சிருக்கு.. என்னை உனக்கு புடிச்சிருக்கா?"
"சரி.. உங்கள எனக்கு பிடிச்சிருந்தா மட்டும் என்ன?"
உள்ளத்தில் பனிமழை பொழிய மீண்டும் அதை ஒருமுறை கேட்க
"என்ன சொன்னே?"
"எனக்கு உங்கள பிடிச்சிருந்தா மட்டும் இப்ப என்ன?. ஆரம்மத்துல உங்கள பத்தி நான் தப்பா நெனச்சிருந்தேன். ஆனா அப்பரம் எங்க பாட்டி உங்கள பத்தி சொன்னதுக்கப்பரம் தான் புரிஞ்சுது எங்கப்பாவுக்கும் உங்கப்பாவுக்குக் இருக்கிற பிரச்சினை. எங்கப்பவை யாரலும் மாத்த முடியாது."
"ஆன அதுமட்டும் இப்ப பிரச்சினை இல்ல.. எனக்குன்னு சில ஆசை, கனவுகள் எல்லாம் இருக்கு...."
"ஆசை இல்லாம இங்க யாருதான் இருக்கா? சொல்லு....."
"எனக்கு இப்ப கல்யணத்த பத்தி பேசர காலம் இப்ப இல்லேனாலும், என்னோட விருப்பத்த சொல்ரதுல தப்பு இல்ல"
"என்னைக்கவது ஒரு நாள் என்னை எங்கப்பா யாருக்காவது ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வெக்கதான் போராரு. ஆனா முன்ன பின்ன தெரியாத யாரோ ஒருத்தர்கிட்ட என்னோட வாழ்க்கைய குடுக்கரதுல எனக்கு விருப்பமில்லை... "
"நான் நினைச்சத்தான் நீயும் சொல்லிட்டு இருக்கே ...."
"அந்த அளவு மனசு ஒன்றிப்போறதனாலதான் இப்ப நான் இங்க நின்னு பேசிட்டு இருக்கேன்னு நெனைக்கிறேன்..."
"நீங்களும் என்னை சுத்தி சுத்தி வர்ரத நான் கவனிச்சிட்டுதான் இருக்கேன். இருந்தாலும் எனக்கு இந்த மாதிரி காதல்ல எல்லாம் விருப்பமில்லை. கல்யாணம் பண்ரதுன்னு முடிவெடுத்துட்டு காதல் பண்ணும்போது யாருக்கும் யாருமில்லாத தெருவில் நின்னு பேசனும்னோ, காதல்கடிதம் பரிமாரிக்கரதோ, பைக்ல சேர்ந்து சுத்தரதெல்லாம் செய்யத்தோணாது. தன்னை நம்பி தன்னோட வாழ்க்கைய தர்ர பொண்ணை எப்படி வாழ்க்க முழுதும் சந்தோசமா வெச்சுக்கரதுன்னு யோசிச்சு அதுக்கான முயற்சிய செய்ய ஆரம்பிக்கரவன் தான் உண்மயான காதலன்"
அகிலாவைப்பத்தி என்னென்னமோ எண்ணிக்கொண்டு வந்தவனிடம், அகிலாவின் வார்த்தைகளால் அவளை ஒரு தேவதையாகவே பார்க்க தொடங்கினான்.
"எங்கப்பா என்ன வசதியான வீட்லதான் கல்யாணம் பண்ணிக்கொடுப்பாரு. ஒரு அப்பாவா யாரும் தன் மகளோட வாழ்க்கய யோசிச்சு இந்த முடிவுதான் எடுப்பாங்க.."
"நீங்களும் நானும் வாழ்க்கைல ஒன்னா சேரணும்னா அதுக்கு நீங்க இப்ப இருக்கர நிலமையில இருந்து மேல வர முயற்ச்சி செய்யனும். எதாவது சாதிக்கனும்........"
"உங்களை நம்பி நாளைக்கு நான் வந்தா, உங்களோட உழைப்பில நாம வாழனுமல்ல?"
யொகிக்கு கொதிக்கும் எண்ணைக் குழிக்குள் போட்டது போன்று இருந்தது..
"காதலை நான் புரிஞ்சு வெச்சிருக்கரத விட நீ ரொம்ப புரிஞ்சு வச்சிருக்கே".
"என்னை வேறொருத்தர் கைல பிடிச்சு கொடுக்கரதுக்கு முன்னாடி நீங்க வந்து பொண்ணு கேட்டா எங்கப்பா குடுக்கர மாதிரி உங்க உழைப்பில முன்னேறி வாங்க. அப்ப எங்கப்பா என்னை உங்களுக்கு தர மாட்டேன்னு சொன்னாருன்னா நான் உங்க பின்னாடி வந்திருவேன். அதுவரைக்கும் இந்த மாதிரி பின் தொடர்ந்து வந்து காதலிக்கறதெல்லாம் வேண்டாம். சரி எனக்கு நேரமாச்சு. நான் போகனும்"
"சரி அப்ப மறுபடியும் நான் உன்ன பாக்க முடியாதா?" என்றான் ஏக்கத்துடன்.
"இன்னும் பத்து நாள்ல நான் காலேஜ்ல சேர அப்ளிகேசன் வாங்க சத்தி போவேன்."
என்று சொல்லிவிட்டு அவள் வீடு நோக்கி தொடர்ந்தாள்.
யோகி அவளிடம் பேச வருவதற்க்கு முன் பல ஒத்திகைகள் செய்து வந்திருந்தான். ஆனால் அவை அனைத்தும் அவளின் வார்த்தைகளால் வீனாய் போனது.
கண்களில் அவள் பிம்பமும் இதயத்தில் அவளின் வர்த்தைகளும் ஒலித்துகொண்டிருக்கும் போதே சத்தியை பேருந்து அடைந்திருந்தது. அவளிடம் பேச காத்திருந்த யோகி, அவள் பேருந்திலிருந்து இறங்கி அவனை கண்டு கொள்ளாமல் கல்லூரி நோக்கி சென்றது அவனுக்கு ஏமாற்றம் தந்தது, இருந்தும் அவளை புரிந்து கொண்டான்.
அவனும் அவன் கல்லூரி நோக்கி பயணம் செய்தான்.
கல்லூரிக்கு சென்று துறைத்தலைவரை சந்திக்க சென்றான். அவன் எழுதத் தவறிய தேர்வுக்குரிய பேராசிரியாய் அவனை அழைத்து விசாரித்தார்.
கொஞ்சமா படிக்கிற பசங்கல்ல கொஞ்சம் அதிகமா படிக்கர பய்யன்னு பேரெடுத்த யோகிய தேர்வில் தோல்வியடைய விரும்ப்பாத அந்த பேராசிரியய் மீண்டும் அவனை தேர்வெழுத அனுமதித்தார் அன்றய தினமே. யோகியும் தான் வந்த நோக்கம் நிரைவேரியதற்க்கு பேரசிரியய்க்கு நன்றி தெரிவித்து விடை பெற்றான்.
மூன்று வருடங்களுகுப் பிறகு படிப்பு முடிந்த நிலையில் வளாக நேர்முகத்தேர்விற்க்காக அமெரிக்காவின் மிகப்பெரும் கணினி நிறுவனமான இன்டெல் அவன் கல்லூரிக்கு வந்திருந்தது.
அவன் அகிலா விதைத்த கனவுகளுடன் தேர்வுகளின் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான். அவனின் எண்ணப்படியே நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று அடுத்த மாதம் அமெரிக்காவில் பணி நியமன ஆணை பெற்றான்.
எண்ணத்தில் கொள்ள முடியாத மகிழ்ச்சியுடன் அகிலாவை பார்க்க அவசரமாக ஊருக்கு கிளம்பினான்.
ஊரில் நுழைந்தவுடன் பேருந்து நிலையம் அருகே மக்கள் கூட்டமாக இருந்தது. யோகியும் என்னவென்று ஆர்வத்துடன் கூட்டத்தை விலக்கி பார்த்தான். அங்கு அவன் கண்ட காட்சி அவன் இதயம் உடைந்து அழச்செய்து விட்டது.
ஆம்.. அகிலா ரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்தாள். அன்று மாலை அவள் பேருந்திலிருந்து இரங்கி பாதையை கடக்கும் போது கட்டுப்பாடிழந்த லாரி யொன்று அவள் மீது மோதியது.
அது அவளின் வாழ்வுடன் யோகியின் வாழ்வையும் எடுத்து சென்றது.
அன்றிலிருந்து தன்னை மறந்து கால் போகும் போக்கில் நடந்து காலத்தை அகிலாவின் நினைவால் கரைத்து நடந்தான் முழு யோகியாக........
(முற்றும்)
Saturday, January 12, 2008
யோகி பாகம் 4
முந்தைய பாகம் படிக்க இங்கே அழுத்தவும்
யோகி : இது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க குமார் கையை ஒரு கிள்ளி அவன் கத்துனதுல தெரிஞ்சிட்டேன். இருந்தாலும் என்னால இத நம்ப முடியல. சரி பக்கத்துல போயி பேசித்தான் பாக்கலாம்னு நெனச்சு அந்தப்பக்கம நகர எத்தனித்தேன். அது வரைக்கும் அமைதிய இருந்த குமார் இப்போ ரொம்ப அமைதியா இருந்தான்.
என்னடா ஆச்சுன்னு கேட்டா...
"டே.. இப்ப எதாவது நடந்துச்சா?" அப்படின்னு கேட்டான்.
நான் ஜெர்க்காகி.. ஒருவேலை நம்ம பையன் எல்லாத்தயும் கவனுச்சுட்டான் போல இருக்குன்னு "இஇஇல்லடா..ஒன்னும் நடக்கல.. ஏன்?" அப்படின்னு டரியலாகி கேட்டேன்.
இல்லடா..."எனக்கு வானத்துல பறந்துட்டு வந்த மாதிரி ஒரு பீலிங்..." அப்படின்னான்..
எங்களுக்கு ஒன்னும் புரியாம அவனையெ பாத்திட்டு இருந்தோம்.
மல்லிகா என்ன பார்த்து சிரிச்சிட்டு போனாடா.......
ஆகா... மறுபடியுமாடா....
இல்லடா இது உண்மையான காதல்டா.... அப்படின்னான்...
இது அவனுக்கு பதிமூனாவது உண்மையான காதல்.
"ச்சே.." அப்படின்னு எல்லார்க்கும் பலூன்ல காத்த எடுத்து விட்ட மாதிரியாகி அப்படியே நகர ஆரம்பிச்சோம்.
குமார் மட்டும் அங்க இருந்து நகர முடியாம, வேற வழி இல்லாம எங்களுக்கு பின்னாடி வர ஆரம்பிச்சான்.
குமார்-ம் கஜினியும் ஒன்னுன்னு சொல்லலாம். ஒவ்வொரு தோல்வியிலயும் துவண்டுவிடாம அடுத்த அட்டெம்ட் பண்ற மனச கடவுள் அவனுக்கு கொடுத்திருக்கார். போனவாரம் தான் அவன் எதிர்த்த வீட்டுக்கு அடிக்கடி வர்ர அந்த வீட்டு பொண்ணோட பிரண்ட்டுக்கு கஸ்டப்பட்டு காதல் கடிதம் கம்போஸ் பண்ணி கணேசனோட தம்பிக்கு ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்து தூது விட்டான். ரெண்டு நாள் கழிச்சு ஒரு பதில் கடிதம் வந்துச்சு " அண்ணா... இந்த லெட்டர் தப்பா எனக்கு வந்துடுச்சு... ரமேஸ்மாதிரியே நீங்களும் நல்லா எழுதரீங்க.. ஆனா இது அண்ணிக்கு சேர வேண்டியது." அப்படின்னு.
அன்னைக்கு நடந்த தாபா சங்கமத்துல அஞ்சு பீர் குடிச்சிட்டு, அமைதிய இருக்கிற மாதிரி நடிச்சிட்டு இருந்த அடுத்த வீதி ரமேஸ்-ங்கர குள்ள நரிய திட்டிட்டு அந்த பொண்ணயும் சேர்த்து வாந்தியெடுத்தான்.
அடுத்தவங்க மேல இரக்கப்படுரவுனுக்கு அடிக்கடி காதல் வர்ரதுல ஒன்னும் தப்பில்லயே.. அத மனசுல மறைச்சி வெச்சி கள்ளக்காதல் பண்றதுதான் தப்புன்னு தத்துவம் வேற பேசினான்.
அடுத்த நாள்,
எப்பவும் போல யோகி வீட்டு திண்ணைல சட்டசபை கூட்டம் நடந்திட்டு இருந்த போது
ஏதோ போன் வந்து உள்ளே போனான் யோகி.
வெளியே வரும்போது தலைல கைய வெச்சிட்டு வந்தான். என்னட ஆச்சுன்னு கேட்டான் கணேசன்,
"செமஸ்டர் லீவுங்கர சந்தோசத்துல (இங்க அகிலாவ பாக்கனும்கர ஆர்வத்துல) அவசரமா காலேஜ்ல இருந்து கெளம்பி வந்ததுல ப்ராக்டிகல் பரிச்சை எப்ப அப்படிங்கரத கவனிக்காம வந்துட்டேன். இன்னைக்கு அது முடிஞ்சு போச்சு. அந்த லெக்ட்சரர் என்ன தேடுனாருன்னு என் ப்ரண்டு போன் பண்ணான் ".
எதுலயும் குற்றம் கண்டு பிடிக்கர நம்ம குற்றமில்லாத கணேசன் " என்னடா செமஸ்டர் லீவுல வந்துருக்கரன்னே. இப்ப போயி எக்சாம் அது இதுன்னு சொதப்பரயேடா " அப்படின்ன்னான்.
யோகி: பொதுவா தியரி எக்சாம் முடிஞ்சு கொஞ்ச நாளுக்கப்பரந்தான் ப்ராக்ட்டிகல் எக்சாம் வப்பாங்க. அதெல்லாம் காலேஜ்ல படிக்கரவுங்களுக்குதான் தெரியும். ஸ்கூல்ல படிக்கரவுங்களுக்கெல்லாம் தெரியாதுன்னா கணேசனை மண்ணை கவ்வ வைத்தான்.
அதை விடு.. ஆனா நீ மொதல் வருசத்துலயே அரியர் வெச்சு முழு மனுசனாகிட்டயே காதல் மன்னா...
சரி விடு... ஒரு பேப்பர் தானென்னு சொன்னான் குமார்.
யோகி மனதுக்குள் : ஒரு பேப்பர்னாலும் அது அகிலாவுக்கு தெரிஞ்சா.... அப்படின்னு ஏதோ நெனச்சான்...
இதைபத்தியெல்லாம் கவலை படாமல், "இன்னைக்கு செகண்ட் சோ ஸ்ரிதேவில காதலுக்கு மரியாதைக்கு போலாமா"ன்னு திரியை பத்தவச்சான் மூர்த்தி.
ஏதோ காதல்னா என்னன்னு தெரியாத மாதிரியும் இந்த படத்த பாத்துதான் அத தெரிஞ்சுக்க போற மாதிரியும் யோசிச்சிட்டு யோகியும் குமாரும் சரின்னு சொன்னவுடன் சபை கலைந்தது.
அன்னைக்கு தியெட்டருக்கு போனப்ப நம்ம யோகியோட மூஞ்சில 1000 வாட்ஸ் பல்ப் எரிஞ்சத யாரும் கவனிக்கலை...
ஆம்... அங்கே அகிலாவும் காதலுக்கு மரியாதை செய்ய வந்திருந்தாள்.
உயிரற்ற மனிதர்களெல்லாம் காதலை திரையில் பார்க்க, காதல் உயிருள்ள யோகி அகிலாவின் கடைக்கண் பார்வையால் தாலாட்டப் பட்டான்.
அவர்கள் கண்களால் பேசிக்கொண்டதை நம்மால் டி-க்ரிப்ட் செய்ய முடியவில்லை....
அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கே எந்திரிச்சு காலேஜ்க்கு கெளம்ப ரெடியானான் யோகி.
"என்னடா லீவுன்னு சொல்லிட்டு இப்ப திடீர்னு காலேஜ்க்கு போகனும்கற" ன்னு தாய்க்குலம் கேட்க.. "இல்லம்மா.. இன்னைக்கு ஒரு முக்கியமான் ஸ்பெசல் க்ளாஸ் இருக்குன்னு ப்ரெண்டு போன் பன்னான்"னு, எட்டவதுல சயின்ஸ் புக், அறிவியல் புத்தகம் வாங்கனும்னு சொல்லி காசு வாங்குன அதே புத்தி சாலிதனத்தை பயன்படுத்தினான்.
காலையில் சத்தி செல்லும் KMK வில் முதல் சீட்டில் இடம் பிடித்தான். ஆம் அவன் எதிர் பார்தது போல் அகிலாவும் வந்து பஸ்ஸில் முன் சீட்டில் அமர்ந்தாள்..
(தொடரும்...)
யோகி : இது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க குமார் கையை ஒரு கிள்ளி அவன் கத்துனதுல தெரிஞ்சிட்டேன். இருந்தாலும் என்னால இத நம்ப முடியல. சரி பக்கத்துல போயி பேசித்தான் பாக்கலாம்னு நெனச்சு அந்தப்பக்கம நகர எத்தனித்தேன். அது வரைக்கும் அமைதிய இருந்த குமார் இப்போ ரொம்ப அமைதியா இருந்தான்.
என்னடா ஆச்சுன்னு கேட்டா...
"டே.. இப்ப எதாவது நடந்துச்சா?" அப்படின்னு கேட்டான்.
நான் ஜெர்க்காகி.. ஒருவேலை நம்ம பையன் எல்லாத்தயும் கவனுச்சுட்டான் போல இருக்குன்னு "இஇஇல்லடா..ஒன்னும் நடக்கல.. ஏன்?" அப்படின்னு டரியலாகி கேட்டேன்.
இல்லடா..."எனக்கு வானத்துல பறந்துட்டு வந்த மாதிரி ஒரு பீலிங்..." அப்படின்னான்..
எங்களுக்கு ஒன்னும் புரியாம அவனையெ பாத்திட்டு இருந்தோம்.
மல்லிகா என்ன பார்த்து சிரிச்சிட்டு போனாடா.......
ஆகா... மறுபடியுமாடா....
இல்லடா இது உண்மையான காதல்டா.... அப்படின்னான்...
இது அவனுக்கு பதிமூனாவது உண்மையான காதல்.
"ச்சே.." அப்படின்னு எல்லார்க்கும் பலூன்ல காத்த எடுத்து விட்ட மாதிரியாகி அப்படியே நகர ஆரம்பிச்சோம்.
குமார் மட்டும் அங்க இருந்து நகர முடியாம, வேற வழி இல்லாம எங்களுக்கு பின்னாடி வர ஆரம்பிச்சான்.
குமார்-ம் கஜினியும் ஒன்னுன்னு சொல்லலாம். ஒவ்வொரு தோல்வியிலயும் துவண்டுவிடாம அடுத்த அட்டெம்ட் பண்ற மனச கடவுள் அவனுக்கு கொடுத்திருக்கார். போனவாரம் தான் அவன் எதிர்த்த வீட்டுக்கு அடிக்கடி வர்ர அந்த வீட்டு பொண்ணோட பிரண்ட்டுக்கு கஸ்டப்பட்டு காதல் கடிதம் கம்போஸ் பண்ணி கணேசனோட தம்பிக்கு ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்து தூது விட்டான். ரெண்டு நாள் கழிச்சு ஒரு பதில் கடிதம் வந்துச்சு " அண்ணா... இந்த லெட்டர் தப்பா எனக்கு வந்துடுச்சு... ரமேஸ்மாதிரியே நீங்களும் நல்லா எழுதரீங்க.. ஆனா இது அண்ணிக்கு சேர வேண்டியது." அப்படின்னு.
அன்னைக்கு நடந்த தாபா சங்கமத்துல அஞ்சு பீர் குடிச்சிட்டு, அமைதிய இருக்கிற மாதிரி நடிச்சிட்டு இருந்த அடுத்த வீதி ரமேஸ்-ங்கர குள்ள நரிய திட்டிட்டு அந்த பொண்ணயும் சேர்த்து வாந்தியெடுத்தான்.
அடுத்தவங்க மேல இரக்கப்படுரவுனுக்கு அடிக்கடி காதல் வர்ரதுல ஒன்னும் தப்பில்லயே.. அத மனசுல மறைச்சி வெச்சி கள்ளக்காதல் பண்றதுதான் தப்புன்னு தத்துவம் வேற பேசினான்.
அடுத்த நாள்,
எப்பவும் போல யோகி வீட்டு திண்ணைல சட்டசபை கூட்டம் நடந்திட்டு இருந்த போது
ஏதோ போன் வந்து உள்ளே போனான் யோகி.
வெளியே வரும்போது தலைல கைய வெச்சிட்டு வந்தான். என்னட ஆச்சுன்னு கேட்டான் கணேசன்,
"செமஸ்டர் லீவுங்கர சந்தோசத்துல (இங்க அகிலாவ பாக்கனும்கர ஆர்வத்துல) அவசரமா காலேஜ்ல இருந்து கெளம்பி வந்ததுல ப்ராக்டிகல் பரிச்சை எப்ப அப்படிங்கரத கவனிக்காம வந்துட்டேன். இன்னைக்கு அது முடிஞ்சு போச்சு. அந்த லெக்ட்சரர் என்ன தேடுனாருன்னு என் ப்ரண்டு போன் பண்ணான் ".
எதுலயும் குற்றம் கண்டு பிடிக்கர நம்ம குற்றமில்லாத கணேசன் " என்னடா செமஸ்டர் லீவுல வந்துருக்கரன்னே. இப்ப போயி எக்சாம் அது இதுன்னு சொதப்பரயேடா " அப்படின்ன்னான்.
யோகி: பொதுவா தியரி எக்சாம் முடிஞ்சு கொஞ்ச நாளுக்கப்பரந்தான் ப்ராக்ட்டிகல் எக்சாம் வப்பாங்க. அதெல்லாம் காலேஜ்ல படிக்கரவுங்களுக்குதான் தெரியும். ஸ்கூல்ல படிக்கரவுங்களுக்கெல்லாம் தெரியாதுன்னா கணேசனை மண்ணை கவ்வ வைத்தான்.
அதை விடு.. ஆனா நீ மொதல் வருசத்துலயே அரியர் வெச்சு முழு மனுசனாகிட்டயே காதல் மன்னா...
சரி விடு... ஒரு பேப்பர் தானென்னு சொன்னான் குமார்.
யோகி மனதுக்குள் : ஒரு பேப்பர்னாலும் அது அகிலாவுக்கு தெரிஞ்சா.... அப்படின்னு ஏதோ நெனச்சான்...
இதைபத்தியெல்லாம் கவலை படாமல், "இன்னைக்கு செகண்ட் சோ ஸ்ரிதேவில காதலுக்கு மரியாதைக்கு போலாமா"ன்னு திரியை பத்தவச்சான் மூர்த்தி.
ஏதோ காதல்னா என்னன்னு தெரியாத மாதிரியும் இந்த படத்த பாத்துதான் அத தெரிஞ்சுக்க போற மாதிரியும் யோசிச்சிட்டு யோகியும் குமாரும் சரின்னு சொன்னவுடன் சபை கலைந்தது.
அன்னைக்கு தியெட்டருக்கு போனப்ப நம்ம யோகியோட மூஞ்சில 1000 வாட்ஸ் பல்ப் எரிஞ்சத யாரும் கவனிக்கலை...
ஆம்... அங்கே அகிலாவும் காதலுக்கு மரியாதை செய்ய வந்திருந்தாள்.
உயிரற்ற மனிதர்களெல்லாம் காதலை திரையில் பார்க்க, காதல் உயிருள்ள யோகி அகிலாவின் கடைக்கண் பார்வையால் தாலாட்டப் பட்டான்.
அவர்கள் கண்களால் பேசிக்கொண்டதை நம்மால் டி-க்ரிப்ட் செய்ய முடியவில்லை....
அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கே எந்திரிச்சு காலேஜ்க்கு கெளம்ப ரெடியானான் யோகி.
"என்னடா லீவுன்னு சொல்லிட்டு இப்ப திடீர்னு காலேஜ்க்கு போகனும்கற" ன்னு தாய்க்குலம் கேட்க.. "இல்லம்மா.. இன்னைக்கு ஒரு முக்கியமான் ஸ்பெசல் க்ளாஸ் இருக்குன்னு ப்ரெண்டு போன் பன்னான்"னு, எட்டவதுல சயின்ஸ் புக், அறிவியல் புத்தகம் வாங்கனும்னு சொல்லி காசு வாங்குன அதே புத்தி சாலிதனத்தை பயன்படுத்தினான்.
காலையில் சத்தி செல்லும் KMK வில் முதல் சீட்டில் இடம் பிடித்தான். ஆம் அவன் எதிர் பார்தது போல் அகிலாவும் வந்து பஸ்ஸில் முன் சீட்டில் அமர்ந்தாள்..
(தொடரும்...)
Subscribe to:
Comments (Atom)