Tuesday, January 20, 2015

இதுவும் கடந்து போகும்


இந்த மனித மனம், ஒரு அற்புத சக்தி வாய்ந்தது. அது தனக்கு என்ன தேவையோ அதை சாதித்துக்கொள்கிறது. அதற்கு நல்லது கெட்டது எல்லாம் அதைப்பழக்கியவர் பழக்கத்தில் கற்றுக்கொள்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் ஒரு தவரை சரியென்று புரிந்து கொள்ளவும், தவறை சரி என்று புரிந்து கொள்ள முடியும். அதற்க்கு தேவை ஒன்றே ஒன்றுதான் - தனக்கு விருப்பமானது - அது எதுவானாலும்.


ஒரு நீண்ட நெடும் உல்லாசப் பயணம் பாதியிலேயே முடியப்போகிறதோ என்று இன்றைய இளையவர்கள் மத்தியில் ஒரு கலக்கம் கலந்த மன நிலை நிலவுகிறது. 90ளில் கல்விபயின்ற பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பற்றிய அவ்வளவு பெரிய கவலை இருக்க வில்லை. கல்லூரி படிப்பு முடித்தவுடன் சென்னையிலோ, பெங்களூரிலோ ஏதாவது ஒரு கணிணி படிப்பை படித்து வேலை வாங்கிவிடலாம். எப்போதும் வேலை தேடும் நண்பர்களுக்கு அடைக்கலம் தரும் வேலையுள்ள நண்பர்கள் இருந்து கொண்டிருந்தார்கள். பொறியியல் பட்டம் அல்லது கணினி பயண்பாட்டில் நிபுணதுவம் படித்திருந்தால் எப்படியும் போராடி ஒரு வேலையை வாங்கிவிடலாம்.

நிற்க்க.. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களெல்லாம் வரப்போகும் ஒரு மாபெரும் சுனாமி அலையைப்பற்றி அறியாமல் கிடைத்த கிளர்க் வேலையிலும், எலக்ரிக் சூப்பர்வைசர் வெலையிலும், மார்க்கெட்டிங் மற்றும் ஆசிரியர், சுய தொழில் என்று ஏதாவது ஒன்றில் ஐக்கியமாகியிருந்தார்கள். அது ஒரு பழைய தலைமுறையாக பார்க்கப்பட்டது.

ஏழாயிரம் மாதச்சம்பளம் வாங்கியவர் நல்ல வேலையில் உள்ளார், அவருக்கு பெண் கொடுக்க மணமகள் வீட்டார் தயக்கமின்றி முன்வருவர். அந்த கால கட்டத்தில் எங்கள் ஊரின் அருகிலுள்ள சிறுமுகை விஸ்கோஸில் வேலை கிடைப்பதென்பது அரசு வேலையை விட அதிக மதிப்பானது. அதற்காகவே டிப்லமோ எலக்ரிகல், மெக்கனிக்கல், டெக்ஸ்டைல் என்று கடன் வாங்கிப்படித்தவர்கள் பல பேர். அங்கு வேலை கிடைக்க எம் எல் ஏ, எம் பி சிபாரிசெல்லாம் தேவைப்பட்டது. வேலைகிடைத்தவர் நண்பர்களாலும், உற்றார் உறவினரால் ஒரு சாதனையாளர் போல் பார்க்கவும் மதிக்கவும் பட்டார். அவருடை சம்பளம் மாதம் ஏழாயிரத்து ஐநூறு, ஆண்டுக்கொருமுறை போனஸ் பதினைந்தாயிரம். அந்த சாதனையாளர் அதிக பட்சம் தன் சாதனையை மற்றவர் பார்த்தவுடன் தெரிந்துகொள்ள ஒரு TVS-Suzuki two stroke பைக் வாங்கி ஊருக்குள் ஓட்டுவார். ஒரு சிலர் பருத்தி மில்லில் பர்மணெண்ட் வேலைக்காக மெனக்கெட்டனர். டிப்ளமோ படித்துவிட்டு மாதம் நாலாயிரத்திற்க்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் சூப்பர்வைசர்களாக வேலை செய்து வேலை நிரந்தரம் ஆனவர்கள் உண்டு. 

மேற்ச்சொன்ன மிகப்பெரும் ஆலைகள் இன்று இல்லை. அதனால் அதை நம்பி வேலைக்கு சேர்ந்த நண்பர்கள் கெட்டுப்போகவில்லை. வேறு ஆலைகளிலும் வேறு துறைகளிலும் பரிமளிக்கிறார்கள். காரணம் - தன்னுடைய சூழ்நிலைக்கொப்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் மனது. எதுவெல்லாம் நிரந்தரமானது என்று அன்று நம்பினார்களோ அதுவெல்லாம் நிரந்தரம் இல்லை என்று ஆனபோது அதையும் நம்பினார்கள், அவர்களின் நிரந்தரத்திற்கான தேவை வேரொன்றை நிரந்தரம் என நம்பிக்கொண்டு முன்னேறுகிறார்கள்.

1956ல் J பாபா அவர்களின் தூண்டுதலால் J R D Tata வால் நிறுவப்பட்ட Tata Institute for Fundamental Research (TCIF) நிறுவனம் சுயமாக ஒரு வெற்று குழாய்களை கொண்ட கணினியை வடிவமைத்தது.  பின் 1963ல் அமெரிக்காவின் Control Data Corporation(CDC) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட CDC-3600-160A என்ற டிரான்சிஸ்டரால் வடிவமைக்கப்பட்ட கணினியை 15 லட்சம் அமெரிக்க டாலார்களுக்கு அமெரிக்க நிதி உதவியுடன் வாங்கியது TCIF. இது முற்றிலும் இயற்பியல் மற்றும் அணு ஆராய்ச்சிக்கு பயன்படும் நோக்கில் வாங்கப்பட்டது. இதனிடையே ரஸ்யாவின் கணினியையும் இறக்குமதி செய்து உபயோகித்தும் பார்த்தனர்.

எழுபத்தி நான்கில் இந்தியா நடத்திய முதல் அணு சோதனையால் எந்தவித உயர் தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு தர அமெரிக்கா தடை விதித்தது. இது இந்திய கணினி வரலாற்றில் ஒரு தேக்க நிலையை உருவாக்கியது. பின்னர் வந்த மொராஜி தேசாய் அரசால் 1978ல் பொதுப்பயன்பாட்டுக் கணினி கொள்கையை வெளியிட்டு, தனியார் நிறுவனங்கள் உள்நாட்டிலேயே இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களிக்கொண்டு கணினி செய்ய வழிவகுத்தது. அன்றய IBM உலகில் வழக்கொழிந்த கம்ப்யூட்டர்களை இந்தியாவில் விற்றுக்கொண்டிருந்தது. அரசின் சீர்திருத்தங்களால் இந்திய கூட்டாளியில்லாமல் தொழில் செய்யமுடியாது என்ற நிலையில் நாட்டைவிட்டு 1978ல் வெளியேறியது.

பின் 1991ல் ராஜீவ் காந்தி பிரதமர் ஆன காலத்தில் திவாலாகும் இந்தியாவுக்கு உலக வங்கி உதவியது. கைமாறாக தாராளமயத்தை பெற்றுக்கொண்டது. கணினித்துறையில் மிகப்பெரும் வளர்ச்சியேற்ப்பட்டது. பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவந்து வெளினாடுகளில் இருந்து கணினி பாகங்களை இறக்குமதி செய்ய சட்டத்திருத்தங்கள் கொண்டுவந்தார். அது வரை உள்ளூர் தொழில் நுட்பத்திலேயே கணினி தொழில் நுட்பத்தை உருவாக்க முயன்றார்கள். பெரிய அளிவில் வெற்றி பெறவில்லையென்றாலும் அந்த முயற்ச்சிகள் மூலம் கற்றுக் கொண்ட பாடங்கள் ECIL(Electronics Corporation of India) மற்றும் BEL போன்ற இன்ன பிற தற்ச்சார்பு மின்னணு ஆலைகள் உருவாக்கப்பட்டன. ECIL தொழிச்சாலையில் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் சிப்கள் புழக்கத்தில் இருந்த காலம் அது. 

பிறகு கணினி மென்பொருள் இறக்குமதி மற்றும் கணினி மென்பொருள் உற்ப்பத்தி, ஏற்றுமதி என விரிந்து இன்று மிகப்பெரும் மென்பொருள் ஏற்றுமதி நாடாக இந்தியா இருக்கிறது. கணினித்துறையில் நிபுனத்துவத்திற்க்கு காரணம் பிரிட்டிஸ்காரர்கள் இந்தியாவை ஆண்டதால் இந்தியர்கள் எளிதாக ஆங்கிலத்தில் உரையாடி வாடிக்கையாளர்களை பெற்றுக்கொண்டார்கள் என்று சொல்பவர்களும் உண்டு. அது ஒரளவு உண்மை என்றாலும், பிரிட்டிஸ்காரர்கள் ஆண்ட எந்த நாடுமே இந்தியா போன்ற வளர்ச்சியை பெறவில்லை. 

இங்குள்ள இளைஞர்களுக்கு சாதிக்க வேண்டும் என்ற தூண்டலும் சமூக/குடும்ப கடமைகளுக்கு முக்கியத்துவமளித்து கடினமான கணிதம் மற்றும் கணினி கூறுகளை கற்று தங்களுக்கான இடத்தை பிடித்துக்கொண்டனர்.

2000க்கு பிறகு கணினித்துறையின் வளர்ச்சியை கணித்து ஆந்திராவும், தமிழகமும் அதிக பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது. முன்பு Electronics, Electrical பொறியியல் படித்தவர்கள் கணிப்பொறி பயிற்ச்சிக்குப்பிறகு மெயின்பிரேம்,  கோபோல் போன்ற கணினி நுட்பங்களை கற்று, வளர்ந்து வந்த TCS, Infosys, CMC, Wipro நிறுவனங்களில் வேலைகளில் அமர்ந்தனர். 2000 ல் உண்டான Y2K மற்றும் டாட்காம் வாய்ப்புகளை இந்த நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வணிக வாய்ப்புகளை வெளிநாடுகளில் பெற்று உள்ளூர் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அளித்தனர். பிறகு ஏற்பட்ட உலக பொருளாதார மந்த நிலை மற்றும் அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு மூலம் பாதிக்கப்பட்ட அமெரிக்கப்பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக இந்த நிறுவனங்கள் வணிக வாய்ப்பை இழந்தன. அவை ஆட்குறைப்பு செய்து தங்களுக்கு ஏற்ப்படும் நட்டத்தை தவிர்த்துக்கொண்டனர். அதே சமயம் இன்னொருபுறம் கால் செண்டர் எனப்படும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் என்ற வணிக முறை வேகமாக வளர்ந்து வந்தது. பொருளாதார சரிவில் இருந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பிலும், நிறுவனப்பணிகளை வெளிநாடுகளில் இருந்து குறைந்த கூலிக்கு செய்துகொடுக்கும் out sourcing என்ற வணிக வாய்ப்பை பயன்படுத்தி வளர்ச்சி அடைந்தன.

வளர்ந்து வரும் தொழில் நுட்பம், உலக பொருளாதாரம், அரசியல் என்ற பல்வேறு காரணிகளை கடந்து நிற்க்கும் இன்றை கணினித்துறை தற்ப்போது செய்யும் ஆட்குறைப்பு, எதிர்காலத்தில் நிகழப்போகும் பெரும் மாற்றங்களையும் புதிய வாய்ப்புகளையும் நோக்கி நகரும் போது ஒன்றுமில்லாமல் போகும். அதே சமையம் வேலை பாதுகாப்பில்லாத துறையாக இருக்கும் இன்றய நிலை மாறி, தொழிலாளர் நலன்கள் காக்கப்படும் சட்டங்களும் சூழ்நிலைகளும் உருவாக ஒரு திருப்பு முனையாக மாற இந்த நிகழ்வுகள் உதவும்.

கற்றுக்கொள்ளும் ஆர்வமும் தன்னம்பிக்கையும் கொண்ட இளைஞர்களை முன்னேறுவதிலிருந்து தடுக்க யாராலும் முடியாது. மிகப்பெரும் வாய்ப்புகளோடு காத்திருக்கும் எதிர்காலத்தில் இன்றய இளைஞர்கள் பயணிக்கும்போது, இதுவும் கடந்து போகும்.



2 comments:

  1. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  2. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    ReplyDelete