Monday, December 24, 2007

தூக்கம்விற்ற காசுகள்

தூக்கம்விற்ற காசுகள்

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை

இதோ அயல்தேசத்து ஏழைகளின்கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்விசா அரிப்புகளோடும் வருகின்ற கடிதங்களை நினைத்து நினைத்துபரிதாபப்படத்தான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்சென்டில் வேண்டுமானால்...வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?தூக்கம் விற்ற காசில்தான்...துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்காலநினைவுகளையெல்லாம்...ஒரு விமானப்பயணத்தூனூடேவிற்றுவிட்டுகனவுகள்புதைந்துவிடுமெனத் தெரிந்தேகடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மரஉச்சியில் நின்றுஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!

வாரவிடுமுறையில்தான்..பார்க்க முடிகிறதுஇயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்தொட்டு எழுந்த நாட்கள்கடந்து விட்டன!

இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டுஎழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவுநேர கனவுக்குள் வந்து வந்துகாணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்விறால் பாய்ச்சல்மாட்டுவண்டிப் பயணம்நோன்புநேரத்துக் கஞ்சிதெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி எனசீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொருஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...விளையாடி மகிழ்ந்த உள்ளுர்உலககோப்பை கிரிக்கெட்!

இவைகளைநினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...விசாவும் பாஸ்போட்டும் வந்து...விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய்வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்மறுத்து போராட்டம்!பெண்வீட்டார் மதிக்கவில்லைஎனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்"கண்டிப்பாய் வரவேண்டும்" என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...சங்கடத்தோடுஒருதொலைபேசி வாழ்த்தூனூடே...தொலைந்துவிடுகிறதுஎங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?

நாங்கள் அயல்தேசத்துஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்அரபிக்கடல் மட்டும்தான்...ஆறுதல் தருகிறது!

ஆம், இதயம் தாண்டிபழகியவர்களெல்லாம்...ஒரு கடலைத்தாண்டியகண்ணீரிலையே...கரைந்துவிடுகிறார்கள்;!

"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் இழப்பையும்கணக்கிட்டுப் பார்த்தால்எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை...
முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தைதினாரும் - திர்ஹமும்தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லிகுழந்தை அழும் சப்தத்தை...தொலைபேசியில் கேட்கிறோம்!கிள்ளாமலையேநாங்கள் தொலைவில் அழும் சப்தம்யாருக்குக் கேட்குமோ?

ஒவ்வொருமுறை ஊருக்குவரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவுஇப்படிபுதிய முகங்களின்எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்மறைதலையும் கண்டு...
மீண்டும்அயல்தேசம் செல்லமறுத்துஅடம்பிடிக்கும் மனசிடம்...

தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறதுமீண்டும் அயல்தேசத்திற்கு!

- ரசிகவ் ஞானியார், துபாய்

No comments:

Post a Comment