Saturday, February 23, 2008

நாங்கள் இந்தியர்கள்

நாங்கள் இந்தியர்கள்.

எங்களுக்கு எங்கே யார் கொல்லப்பட்டாலும், ஏன் இந்தியாவை விட்டு வெளியே எங்கள் சொந்தங்கள் கொல்லப்பட்டாலும், ஏன் இந்தியாவில் கொல்லப்பட்டாலும் எங்களுக்கு கவலையில்லை.

நாங்கள் இங்கு கிரிக்கெட் விளையாட்டை கொண்டாடுவோம், நமீதாவின் நடனத்தைப்பாராட்டி விவாதம் நடத்துவோம்.

அதுவும் நாங்கள் தமிழர்கள். உலகத்தில் இருக்கிற இனங்களில் பழமையான இனம் எங்களது. நாங்கள் எப்பொழுதுமே ஒற்றுமையாக இருப்பதில்லை என்ற சபதம் எடுத்திருக்கிறோம். ஒரே ஒற்றுமை மற்றொரு தமிழன் காலை வாருவது.

ராஜிவ் காந்தி கொலையை பயங்கரவாதம் என்போம். சத்திய மூர்த்தி பவனில் நடக்கும் கத்தி குத்துக்கள் அகிம்சை என்போம்.

தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும் என்போம். அதில் அண்ணன் பெரியவனா தம்பி பெரியவனா என்ற போட்டிகள் வைப்போம். அதற்க்கு அப்பாவிகளை எரிப்போம்.

சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி ஆகியோர் தேசப்பற்றாளர் என்போம். ஏனென்றால் அவர்கள் சி ஐ ஏ ஏஜண்டுகளாக இருந்து பாகிஸ்தான் இந்திய எல்லயில் ஊடுருவுவதை அறிந்து தகவல் தேரிவித்து நாட்டை காப்பாற்றியவர்கள்.

சீதயும் ராவணனும் இப்போது பேசிக்கொள்வதை ரசிப்போம்.

தமிழனை கொல்ல மாற்றானுக்கு ஆயுதம் வழங்கவே நாங்கள் ஒவர் டைம் வேலை செய்து வரி கட்டுவோம்.

எவனாவது ஒருவன் போதை தெளிந்து கேள்விகேட்டால், பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் போட்டு உள்ளே தள்ளி பேச்சு சுதந்திரத்தை காப்பாற்றுவோம்.

"நாங்கள் இப்பொழுதெல்லாம் உணவில் உப்பு சேர்த்துவதை நிறுத்திவிட்டோம் என்பதை பெருமையுடன் இந்த நேரத்திலே உங்களுக்கு தெரிவிக்க நான் கடமை பட்டிருக்கிறேன்" என்று மேடையில் பேசுவோம்.


கீழே உள்ள படங்கலெல்லாம், நேற்று சிரிலங்கா விமானம் கிரஞ்சி பிரதேசம் மீது குண்டு வீசி கொன்ற விடுதலைப்புலிகள். இன்னும் பயங்கரமான ஆயுதங்களை வழங்கி மீதமுள்ள கருவிலுள்ள விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் என இந்திய அரசை வலியுருத்துகிறோம்.











2 comments:

  1. Ithayellam padithuvittu yenthavoru tamilanukkum kobam varakkoodathu....

    yenendral namathu nokkam NAMITHA-win pugalai ulagirkku parai saatra vendum...

    ReplyDelete
  2. Dear brothers!
    don't loose ur heart...still we have people like us,spending time on watching ur blog-giving fiting replies to local bramins who are aginst tamil community_
    Do u know onething be it The Hindu Ram or Thuklak cho r subramanian swamy r Dhinamalar ramesh...they are all high concentrated poison..we will create awareness..tamil community will wake up soon....join hands with us...

    ReplyDelete