Wednesday, November 9, 2016

டிரம்ப் எனும் குழப்பம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. இனி  தொடர்ந்து எழுத எண்ணம். 

பெரும் எதிர்பார்ப்பிற்குப் பின் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. டெமோக்ரட்டுகளாக தங்களை உணரும் இவர்கள் ரிபுபலிக்கன்களின் கொள்கைகளுக்கு எதிராகவும், தங்கள் சார்ந்த கட்சி உலக அமைதிக்கு படுபடுவதாகவும் நம்புகிறார்கள். இதில் எனக்கு மற்றுக்  கருத்துண்டு. பொதுவாக அமெரிக்க சமூகம் முதலாளித்துவ சிந்தனை  கொண்டது.அதாவது தனி மனித உழைப்பை வைத்து பொருளாதாரத்தை கடடமைப்பதை விட மனித உழைப்பு மிகுந்த நாடுகளில் முதலீடு செய்து இலாபம் ஈட்டுவது. உள்நாட்டில் தங்களுக்கு சேவை செய்ய ஒரு மக்கள்  கூட்டம்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம்.

ஆசிய  நாட்டு மக்களின், குறிப்பாக இந்தியர்களின் உழைப்பு அமெரிக்க வேலை வாய்ப்பை அதிகம் எடுத்துக்கொள்வதாகக் கருதுகிறார்கள். ஒருவகையில் உண்மை என்றாலும் அந்த உழைப்பு அமெரிக்காவிற்குத் தேவை. அதனால் டிரம்ப் சொன்னதுபோல் அந்த வேலை வாய்ப்புகளை எப்படி அமெரிக்கர்களுக்கு அளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அதே போல் ஆவணப்படுத்தப்படாத ஸ்பானிஸ் பேசும்  தென்னமெரிக்கர்களை  டிரம்ப் வெளியேற்றப்போவதாக தனது பரப்புரையில் அறிவித்திருந்தார். ஆனால், அவர்கள் தான் கிழ்மட்ட வேலைகளான வீட்டு வேலைகள், கட்டட வேலைகள், சாலையமைப்பது, புல்வெளியைப் பராமரிப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர். அவர்களில்லாமல் இந்த வேலைகளை யார் செய்வார்? இந்த வேலைகளை செய்வதற்காகவல்லவோ  அவர்களை ஆவணமில்லாமல்   வாழ அனுமதித்து  அவர்களின் உழைப்பை சுரண்டிக்கொண்டுள்ளனர்.

மொத்தத்தில் டிரம்ப்பின் வேற்றி,  தெளிவில்லாத எதிர்காலத்தையும், நிறைவேறாத கனவுகளை அமெரிக்கர்களிடையேயே ஏற்படுத்தியுள்ளது. சந்தை தேர்தல் முடிவை வரவேற்கவில்லை. அடுத்த சில நாட்களுக்கு இதே நிலைதான் தொடரும் என்று நினைக்கிறேன்.

முகநூலில்  பகிர்ந்த கருத்துக்கள் ....


டிரம்பின் வெற்றியால் அமெரிக்காவை நம்பியிரும் கணினித்துறையினர் வேலை வாய்ப்பை இழப்பர் என்று இன்பமும், கவலையும் அடையும் நண்பர்களுக்கு..
இந்தியர்கள் கணினித்துறையில் சிறந்த அடிமைகள்.. அவர்களை மிஞ்சும் அடிமைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கணினி நிறுவனங்கள் கடைந்தெடுத்த கில்லாடிகள். டிரம்பின் நடவடிக்கைகளைச் சமாளிக்க சட்ட மற்றும் அரசியல் நகர்வுகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஆகவே...
கவலையடைபவர்கள் நிறுத்திக்கொள்ளுங்கள்....
See More
LikeShow more reactions
Comment


வெற்றி பெற்றது டிரம்பல்ல, ஜூலியன் அசாஞ்சே என்ற கைதி...
இம்பெர்மேசன் ஈஸ் வெப்பன்..


டிரம்பின் வெற்றியால் அமெரிக்காவை நம்பியிரும் கணினித்துறையினர் வேலை வாய்ப்பை இழப்பர் என்று இன்பமும், கவலையும் அடையும் நண்பர்களுக்கு..
இந்தியர்கள் கணினித்துறையில் சிறந்த அடிமைகள்.. அவர்களை மிஞ்சும் அடிமைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கணினி நிறுவனங்கள் கடைந்தெடுத்த கில்லாடிகள். டிரம்பின் நடவடிக்கைகளைச் சமாளிக்க சட்ட மற்றும் அரசியல் நகர்வுகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஆகவே...
கவலையடைபவர்கள் நிறுத்திக்கொள்ளுங்கள்.
இன்பமடைவர்கள் இப்படியே எப்போதும் இன்பமாக இருக்க இறைவன் உங்களுக்கு வாய்ப்பளிக்கட்டும்... டும்.. டும்..

Me: Trump won the Election.
Son: Rolling his eyes and said, "No"
Daughter: "No.. I want Hillary to Win", then after two seconds she glanced me top to bottom and threw this to me, "Did you vote for Trump?" as if my vote gave Trump victory...
இன்னுமா இந்த உலகம் நம்மல நம்புது..


தேர்தல் முடிவுகளுக்கு இடையில் அமேசானின் விளம்பரம் ஒன்று,
தேர்தல் முடிவுகளைக் கவனிக்கும் இளைஞர் ஒருவர் அமேசானின் எக்கோவிடம் "அலெக்சா, கனடாவுக்கு ஒருவழிப்பயணச் சீடொன்றுக்கு கட்டணம் எத்தனையென்று கயாக்கிடம் கேட்டுச்சொல்." என்று உரையாடுகிறார்.

#JustAsk when you need to get away from it all. Get information, music, weather and more with the all-new Echo Dot, only $49.99.
M.YOUTUBE.COM




குடியரசுத் தலைவர் டிரம்பு - விளைவாக
1. சந்தை சிறிது காலம் கீழ் நோக்கிச் செல்லும். முக்கிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தங்களில் தெளிவான அறிவிப்பு வெளிவரும்வரை.
2. ஒபாமா கேர் ஒழிக்கப்பட்டுவிடும். காப்பீடில்லாமல் கைவிடப்படுவோர் எண்ணிக்கை உயரும்.
3. உள்ளூர் வேலை வாய்ப்புகளுகு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இது செலவு மிகுந்த முன்னெடுப்பு. விலைவாசி உயரும். பணவீக்கம் அதிகமாகும்.
4. தொழிற்சாலைகள் சில அமெரிக்காவிற்கு நகர முற்படும், சட்டம் மட்டும் இயங்கு செலவினங்களால் தோல்வியில் முடியும்.
5. சீனாவிற்கு மாற்றாக இன்னொரு அமெரிக்கா சார்ந்த உற்பத்தி தொழிற்சாலை உருவாக வாய்ப்பு.
6. ரசியா, இரான் உள்ளிட்ட நாடுகளுடன் சுமுக உறவு ஏற்பட வாய்ப்பு.
7. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம், குறிப்பாக வளைகுடா நாடுகளை அமெரிக்க கைவிடும் அபாயம் அல்லது புதிய வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் இதன் விளைவாக அந்த நாடுகள் அமெரிக்க நிறுவனங்களில் செய்துள்ள முதலீடு, வைப்பு போன்றவை விலக்க வழிகள் ஏற்படும்.
8. சீனாவின் எதிர்வினை அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
9. நேடோ மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளில் விரிசல் ஏற்படும்.
10. உடனடியான போர் எதுவும் இருக்காது ஆனால் பொருளாதார நெருக்கடி போருக்கு கொண்டு போய் நிறுத்தும்.
11. ஆப்ரிக்கா மற்றும் தென் சீனக் கடலில் ஆதிக்கப் போட்டி முன்னெப்போதும் இல்லாததை விட அதிகமாக இருக்கும்.
12. இந்தியாவிற்கு ஒருபக்கம் ஐடி வருமானத்தில் பாதிப்பு என்றாலும் இன்னொருபுறம் இரஸ்யா மற்றும் இரானுடனான உறவை இன்னும் வெளிப்படையாக வைத்துக்கொள்ளும்.
13. அமெரிக்காவில் வேலைகாக வழங்கப்படும் விசாவில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படலாம்.
14. ஆவணப்படுத்தபடாத அமெரிக்க வாழ் தென்னமெரிக்கர்களுக்கு நெருக்கடி ஏற்படும். குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
15. வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு.
16 அதிக அச்சுறுத்தல், அதிக பாதுகாப்புச் செலவில் முடியும்.
இவையணைத்தும் டிரம்பின் தேர்தல் பரப்புரையை வைத்து மதிப்பிடப்பட்டது. ஒரு வேளை வெள்ளை மாளிகைக்கு வந்தபின் சூழலை அறிந்து பெரிதாக எந்த ஆணியையும் பிடுங்காமல், கார்ப்பரேட்டுகளுக்கு நலன் பயக்கும் ஓரிரு ஆணிகளை மட்டும் பிடுங்கி காலத்தை ஓட்டினால் உலகத்தில் இன்றுள்ள நிலை தொடர வாய்ப்பு.

ஜெய் டோனல்டானந்தா..
அன்றே சொன்னார் அண்ணா...
Like
Comment


எதிர்வரும்  இந்தியப் பயணம் குறித்த குறிப்புகளை எழுத ஆவல். குறிப்பாக பயணம் மற்றும் ஊர் வரலாற்றை ஆவணப்படுத்த பெரியவர்களை சந்தித்து அவர்கள் கருத்துக்களை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment