Saturday, March 21, 2015

வி ஆர் டி - (முதலாளித்துவத்தின்) எழுச்சியும் வீழ்ச்சியும்

கொங்கு மண்டலத்தின் ஒரு மிகப்பெரும் வணிகம் மற்றும் தொழில் குடும்பத்தின் பின் புலத்தில் உருவான பருத்தி நூற்ப்பாலை -சத்தியமங்கலமத்திலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புஞ்சை புளியம்பட்டியில் அமைந்துள்ள வி ஆர் டி எனப்படு வி ஆர் டெக்ஸ்டைல்ஸ் (பி) லிட்.

சிறுமுகையில் தொழிற்ச்சாலை கொண்டிருந்த சவுத் இண்டியா விஸ்கோஸ் எனப்படும் ரெயான் நூல் ஆலையை நிறுவிய வெங்கடசாமி நாயுடு என்ற மிகப்பெரிய தொழிலதிபரின் வாரிசான வி. ரங்கசாமி நாயுடுவால் அவர்களால் 19 செப்டம்பர் 1956 அன்று நிறுவப்பட்டது. பின் நாளில் அவரின் பேரனான வி. ராதாகிருஸ்னன் அவர்களின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் வந்தது. 1960 முதல் 2000 வரை இந்த ஆலை இந்தப்பகுதியில் மிகப்பெரும் வேலை வாய்ப்பை வழங்கும் நிறுவனமாக இருந்தது. இந்த ஆலையில் நிறந்தர தொழிலாளியாக இருந்து பணிமூப்படைந்தவர்கள் நிறையபேர். 2000த்தில் ஸ்பின்னிங் மாஸ்டர் எனப்படும் பணியில் இருப்பவர்கள் முப்பதாயிரத்திற்க்கு குறையாமல் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தனர். ஏறக்குறைய புளியம்பட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் பெரும்பாலான நடுத்தரக்குடும்பங்கள் இந்த நூற்ப்பாலையை நம்பி பிழைத்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இந்திய அளவில் பருத்தி நூல் உற்ப்பத்தியில் ஏழாவது இடத்தில் இந்த நூற்ப்பலை இருந்தது. பருத்திக்கான சந்தையை நன்றாகப்பயன்படுத்திய நிர்வாகம், தொழிலார்களுக்கு போனஸ் ஊதிய உயர்வு என்று ஓரளவுக்கு நன்றாகவே தொழிலாளர்களை கவனித்து லாபமும் ஈட்டி வந்தது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக லட்சுமி கணேசா டெக்ஸ்டைல் என்னும் நிறுவனம் புளியம்பட்டிக்கு அருகிலேயே அமைந்திருந்தது. நிர்வாகத்திற்க்காகவும் வரி காரணங்களுக்காகவும் தனியான ஆலையாக இருந்தபோதும் தொழிலார்கள் தேவைக்கேற்ப்ப ஒரு ஆலையிலிருந்து மற்றொன்றிற்க்கு பகிர்ந்து கொள்ளப்பட்டனர்.

பின்னர் குடும்ப சிக்கல் மற்றும் நிர்வாகக் குளருபடிகளால் முதலில் லட்சுமி கணேசா டெக்ஸ்டைல் நிறுவனம் மூடப்பட்டது. ஆனால் அன்றைய கால கட்டத்தில் ஆலைக்காக உழைத்த பல்வேறு ஊழியர்களுக்கு சரியான பணி இழப்பீடு மற்றும் அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படியான நிவாரணம் ஏதும் வழங்கப்படாமல் ஆலையின் ஒவ்வொரு செங்கல்லும் விற்க்கப்பட்டது.

இதே போன்று சிறுமுகையில் இயங்கிவந்த ரெயான் ஆலையான சவுத் இண்டியா விஷ்கோஸ் நிறுவனமும் தொழிலாளர்களுக்கு நிவரணம் வழங்காமல்  1997 ல் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே முறையில் தற்ப்போது வி ஆர் டி ஆலையும் மூடப்படவுள்ளது. அங்கு பணியாற்றிய தொழிலாளிகள் கூறுகையில், நிர்வாகச்சீர்கேடே ஆலையின் இந்த நிலைமைக்கு காரணம் எனவும், ஆலை நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்தது எனவும் முதலாளிகளின் குடும்பச்சிக்கல் காரணமாக ஆலையின் பங்குகள் பிரிக்கப்பட்டு ஆலையின் கடன் என்றுமில்லாத அளவுக்கு அதிகமாகிக் கிடக்கிறது என்றும் கூறுகின்றனர். வேலை செய்துவந்த பல ஊழியர்களுக்கு நான்கு மாதத்திற்க்கும் மேல் ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாகவும், ஆலைக்கு வரவேண்டிய தொகைகள் கடன்கொடுத்தவர்கள் கைக்கு நேராகச்சென்று விடுவதாகவும் கூறுகின்றனர். தொழிலாளர் பாதுகாப்புப்சட்டத்தின்படி இது போன்ற சூழலில் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய ஊதியமும் இழப்ப்பீடும் கொடுத்த பிறகே ஆலையின் சொத்துக்கள் கடன் மற்றும் வர்த்தக வரவு செலவுகளுக்கு  செலவிட முடியும். ஆனால் இந்த விதி முறைகள் பெரும்பாலான நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதில்லையென்றாலும் தன்னுடைய லாபத்திற்க்காக இரவு பகல் பார்க்காமல் உழைத்த தொழிலாளிகளுக்கு அவர்களுக்குறிய ஊதியமும் பங்கும் கொடுக்க ஆவன செய்ய வேண்டியது மனசாட்சியுள்ள முதலாளியின் கடமை. அது அவர் குடும்பப் பாரம்பரியத்தைன்பறைசாற்றும் செயலும் கூட.

இதே சம காலத்தில் இந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்க்கு தொடர்புடைய மற்ற நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது.

லம்போதரா டெக்ஸ்டைல்ஸ் லிட்- கோவை 

நிர்வாகிகள்:

சந்தோஷ் ராதாகிருஸ்ணான் - ஆண்டு ஊதியம் - 7.8 கோடி
விமலா ராதாகிருஸ்ணன்
பாஸ்கோ ஜுலியா - ஆண்டு ஊதியம் 8.4 கோடி

ஸ்ரைக் ரைட் இண்டெக்ரேடெட் சர்வீசஸ் லிமிடெட் - கோவை 

நிர்வாகிகள்:

போஸ்கோ ஜுலியா 
விமலா ராதாகிருஷ்ணன்
ரமேஷ் செனாய் கல்யான்புர்

கோடிகளை லாபமாக அள்ளிச்செல்லும் முதலாளிகள் இக்கட்டான காலகட்டங்களில் நட்டத்தை தொழிலாளியின் தலையில் கட்டிவிட்டு கடந்து சென்றுவிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்தப்பிரச்சினையில் தற்ப்போது தொழிலாளிகளுக்காக குரல் கொடுக்க கம்யூனிஸ்டு கட்சி்யைச்சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு. சுந்தரம் அவர்கள் களமிரங்கியுள்ளார். அவரின் முயற்ச்சியின் பலனாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கு்ம் என்று தொழிலாளர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்குமா அல்லது ஏமாற்றம்தான் மிஞ்சுமா என்று காலம்தான் பதில் சொல்லும்.

No comments:

Post a Comment