Monday, March 11, 2019

தாய்மொழி நாள்

பால் கலாநிதி என்ற இந்திய வம்சாவளி நரம்பியில் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஆய்வாளர் “மூச்சு வெறும் காற்றாகும்போது” என்னும் நூலில் மரணத்துடனான தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். புற்றால் பின்நாளில் மரணித்துப் போகும் அவர் தன் அனுபவத்தை நூலாக வெளியிட்டிருக்கிறார்.
அதில் ஒரு அனுபவத்தைச் சொல்லும்போது, மனித மூளையில் மொழியைப் புரிந்துகொள்ளவும், மொழியின் வழி உரையாடவும் என இரு பகுதிகள் இருக்கிறது. அந்தப் பகுதியில் மூளையில் புற்றுக் கட்டி உருவான ஒருவர் நாம் பேசுபவற்றை புரிந்துகொள்வதும், பதிலை வெறும் எண்களில் “4523” சொல்லும் நிகழ்வொன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
மொழி என்பது வெறும் தொடர்புகொள்ளும் கருவியல்ல. அது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அவனின் சிந்தனையை, ஆற்றலை தீர்மானிக்கும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது. தாய் மொழியில் சிந்திப்பவர்கள் திறன் இயல்பாகவே கூடுதலாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.ஆங்கிலம், ஸ்பானிஸ், மாண்டரின் என எல்லா மொழிகளையும் கற்கலாம். ஆனால் தாய்மொழியைக் கற்றுக்கொண்டு அதன் வழி சிந்திப்பதும், விளங்கிக் கொள்வதும் இயல்பாக கூடுதல் ஆற்றலை ஒருவருக்குத் தரும்.இவ்வாறான நிலையில் ஆங்கிலம் உயர்ந்தது, இந்தி சொறுபோடும், சமசுக்கிருதம் மோட்சம் தரும் என்று தமிழை அரசு அதிகாரத்தின் வழி ஒரு பிரிவினர் அழிக்க முயல்வதை புரிந்து கொள்ளவேண்டும். மொழியை அழிப்பதன் மூலம் ஒருவரது அடையாளத்தை, சிந்திக்கும் ஆற்றலை அழித்துவிட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதற்கு நம்முடனே இருக்கும் சில கோமாளிகளும் துணை நிற்கிறார்கள்.தமிழ் மொழி ஒரு அறிவியல் மொழி. அதன் ஒலி, சொல்லமைப்புகள் தற்செயலானதல்ல. வலி மிகுந்த ஒலியை ஏற்படுத்தும் சொற்கள் உணர்ச்சியை அப்படியே வெளிப்படுத்துவை. மூளை தான் சொல்ல வருவதை வாய் அப்படியே வெளிப்படுத்துகிறது. பூசி மெழுகிச் சொல்லும் தேவை தமிழில் இல்லை. தமிழில் ஒரு சொல்லில் வெளிப்படுத்தும் உணர்வை வேறு மொழிகளில் சொல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இது பண்பட்ட மொழிக்கே உள்ள சிறப்பு. தமிழுக்கு யாரும் செம்மொழி அங்கீகாரம் கொடுக்கும் முன்னும் அது செம்மொழியாகவே இருந்தது.

“தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!” என பாரதிதாசன் பாடியது மிகுந்த பொருள் கொண்டது.
உலகத்தினருக்கு தாய்மொழி தின வாழ்த்துகள்
தமிழருக்கு உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள்..

No comments:

Post a Comment