Sunday, November 1, 2015

திண்ணைப் பேச்சு

ராமசாமி: இந்த வருச விஜய தசமி திருவிழா சிறப்பா இருந்துச்சைய்யா.. ஆனா வர வர ஊர்வலப் பந்தல் எண்ணிக்கை கொறைஞ்சுட்டே போகுதய்யா... பத்து வருசத்துக்கு முன்னாடி, சாமி ஊர்வலப்பாதையில் பத்தடிக்கொரு பந்தல் இருக்கும்...இப்ப மொத்தமே நாலு பத்தல்தான்..

முனுசாமி: இப்பத்த மக்களுக்கு எங்கைய்யா அதுக்கெல்லாம் நேரம்.. அப்பல்லாம் ஏதாவது ஒரு வேண்டுதல வெச்சு, பந்தல் போட்டுட்டு இருந்தாங்க.. இப்ப வேண்டுதலையும் கம்ப்யூட்டர்லயே முடிச்சிருவாங்களா இருக்கும்...
ராமசாமி: ஆமாமாம்...காலம் மாறிருச்சு.. வாத்தியர் கிருஸ்ண மூர்த்தி வரார்...
கிருஸ்ண மூர்த்தி : என்ன நேரத்திலியே திண்ணைல கூடிட்டீங்களாட்டிருக்கு.. இன்னைக்கு செய்தி யாரோ கோவன்னனு ஒருத்தரை கைது பண்ணிப் போட்டாங்களாமா.. பேப்பர்ல அதான் செய்தி..
முனுசாமி: யாருங்க அவரு... ஏதும் தீவிர வாதிங்களா?
கிருஸ்ண மூர்த்தி: அது வேற கதையய்யா.. சோட்டா ராஜன். இது நம்ம மாதிரி சாதரண ஆள்தான்யா.. மக்கள் கலை இலக்கிய மன்றம் அப்படிங்கற பேர்ல, இடது சாரி கருத்துக்களை ஊர் ஊரா பொய் பாட்டுப் பாடி பிரச்சாரம் செய்யறவுரு..
ராமசாமி: நக்சலைட்டா இருக்குமய்யா..
கிருஸ்ண மூர்த்தி: நக்சலைட்டெல்லாம் இல்லைய்யா.. இடது சாரின்னா நக்சலைட்டா.. இவரு சமீத்துல டாஸ்மாக் கடைகளை எதிர்த்து பிரச்சாரம் பண்ணும் போது ஒரு சில பாடல்கள் பாடி பிரச்சாரம் பண்ணியிருக்கார்...பாட்டுல கடைய மூடனும்னு சொன்னதோட இல்லாம, முதலமைச்சரையும் கொஞ்சம் கடிஞ்சு வரிகள் அமைச்சிருக்கார்.. அதனால அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைச்சிருக்காங்களாமா.
முனுசாமி: இப்பதான் போராட்டமெல்லாம் முடிஞ்சு போய், மாட்டுக்கறி பத்தி பேச ஆரம்பிச்சாச்சே.. அப்ப இவர் இன்னும் பிரச்சாரத்தை நிறுத்தலையா?
கிருஸ் : ஆமாம், நீங்க சொல்றது சரிதான்.. இவர் பாடுனது இரண்டு மூனு மாசத்துக்கு முன்னாடி.. இப்ப ஏதோ காரணத்துக்காக இவரைப் புடிச்சு உள்ள போட்டிருக்காங்க..
ராமசாமி: இந்த அரசியல் வாதிகளுக்கு ஏதாவது பிரச்சினைன்னா, ரோட்ல போறவன புடிச்சி வெச்சி பிரச்சினையை திசை திருப்பியுட்டுறுவானக..
கிருஸ்: இருக்குமய்யா.. இருக்கும்.. நேத்து தான் இந்த முதலமைச்சரோட தோழி சசிகலா ஏதோ பெரிய தியேட்டரை வெலைக்கு வாங்குச்சாமா.. அது பத்திரிக்கையிலும், கலைஞரும் அறிக்கை விட்டு எழுதியிருக்காங்க.. ஒரு வேளை அதை மக்கள்கிட்ட இருந்து திசை திருப்ப இப்படி செய்றாங்களோ என்னமோ...
ராமசாமி: இருக்கும்.. இருக்கும்..நமக்கெதுக்கு ராஜங்க ரகசியமெல்லாம்..தேசிய பாதுகாப்பு சம்பந்தமானதுன்னு வேற சொல்ற.. எதுக்கு அந்த பாதுகாக்கப்பட்ட தேசிய சொத்தை பற்றி நாம பேசணும்...
கிருஸ்: ஆமாம்..நேரமாகுது.. வீட்டுக்கு கறி ஒரு கிலோ எடுத்துக் குடுக்கணும், பொறவு வரேன்.
ராமசாமி: சரி சரி.. நானும் கெளம்பிறேன். முனுசாமி, அப்படியே சைக்கிள்ள என்னைய அந்த ரோட்டுக் கடைவரைக்கும் எறக்கி விட்டுடு.

No comments:

Post a Comment