Friday, November 13, 2015

திப்புவும் - திருவும்

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தி கோவை, பாலக்காடு வரை தனது கட்டுப்பாட்டில் வத்திருந்தார் திப்பு சுல்தான். கோயம்புத்தூரைக் கைப்பற்ற கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய இரண்டு போர்களில் திப்புவிடம் தோல்வியுற்று 'இந்தப்பக்கம் தலைகாட்டுவதில்லை' என்று எழுதிக்கொடுத்து ஓடி விட்டனர். திப்புவின் மரணத்திற்குப் பின் மூன்றாவது போரில் கோயம்பத்தூர் பிரிட்டிஸ்காரர்கள் ஆட்சியின் கீழ் வந்தது.

சரி - திப்புவும்கும் திருவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?.. இருக்கிறது...

திப்பு மைசூரிலிருந்து தனது பரந்த விரிந்த சாம்ராஜ்யத்தை பார்வையிட சாம்ராஜ்நகர், நஞ்சன்கூடு, சத்தியமங்கலம் வழியாக கோவை நோக்கிப் பயணித்த சாலை, புன்செய்ப் புளியம்பட்டியின் வழியே அமைந்தது. அந்த சாலை இன்றும் 'திப்பு சுல்த்தான் சாலை' என்றே அழைக்கப்படுகிறது. அனேகமாக நான் நடந்த முதல் நடை இந்த சாலையிலாகத்தான் இருக்கும். ஏனென்றால் எங்கள் வீட்டின் வாசலை ஒட்டியே திப்பு சுல்தான் சாலை அமைந்துள்ளது. 

தேசிய நெடுஞ்சாலை NH209 திப்புவின் கால் தடத்திலேயே அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment