Friday, September 2, 2016

இதயம் வென்றான்

இமயம் வென்றான் என்றார்,
இதுவரை அவர் பாதை இங்கிருப்பவர்
எவர் கண்டார்..
கடிதொழில் செய்து கருகிச்
சேர்த்ததெல்லாம் கள்ளும்,
மானம் விற்ற காணற் கலையுமாகவல்லவோ
கரைக்கின்றார்...
வானளந்த புகழ் கொண்ட வரலாற்று
நாயகர்களை ஏடுகளில் மட்டும் கொண்டு
மோடியென்றும், மோகனென்றும்
அவர்பாதத்தில் தலையணைக்க
தவம் கிடக்கிறார்...
சூதும் வாதும் செய்வதை சுட்டாலும்
ஏற்றுக்கொள்ளாத அறம் தள்ளி,
அரசியல் சூதானம் தெளிந்தவர் என்று
புகழெடுத்து-
இங்கத்தவர் நாடாள
வாய்த்த பேரை அங்கத்தவர் ஆயினும்
அவர் அரசியல் சங்கறுத்து
தன்னை நிறுத்துக் கொண்ட
தலைகொண்ட உடலன்றோ இன்நிலம்...
அரிதினும் அரிதாய் அமைந்த
தென்னவர் ஏறும் அரியாசனத்தை
மன்னவர் போற்றும் மாண்பெய்தும்
செயல்விடுத்து,
கள்ளர் மாண்டுகொள்ளும் வன்னம்
குடிஉடை மடியினில் மறைத்து
இனியொரு மாமாங்கம் பழி வாழ
வழிசெய்தார் ஆங்கோர் அடிமைக்கு அடிமை..
பொன்னைத் தின்றார், போதவில்லையென்று
இணைகொடி தோண்டி மண்ணைத்தின்றார்,
மட்டுறார் மாவணிகன் வாய்ச்சோற்றையும் தின்னக்கேட்க,
வாழ்ந்து சேர்த்த சிறப்பை
தாழ்ந்து கெடுக்க முனையார்- அவர்
எரியும் நெருப்பணைக்கத் தாங்கும்
கங்கணைத்தார்..
அறம் போற்ற வாழும் வாழ்வு துறந்தார்
தம்மினம் மாண்பு துறந்து சாக வழிசெய்தார்..
வாழிய அவர் புகழ் இவ்வையம் வாழும் வரை..
இமயம் வேண்டாம் - மக்கள்
இதயம் வெல்லும்
"இதயம் வென்றான்" அல்லவோ
எமக்கின்று வேண்டும்?!..

No comments:

Post a Comment