Thursday, November 10, 2016

செல்லாக்காசு

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததென அறிவித்தது பொதுப்படையாக வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் அதன் சாதக பாதகங்களை அளவிட்டால் இது குளோபலைசேசன் என்ற உலகமயமாக்கல் போல், இந்தியமயமாக்கல் குறிப்பாக வட இந்திய வர்த்தக நிறுவனங்கள் தமிழகத்தில் காலூன்ற வழியேற்படுத்தும் அதன் பின், உலக நிறுவனங்கள் அவர்களுடன் கைகோர்த்து இது வரை உடைக்க முடியாத உள்ளூர் சந்தையை உடைத்து தங்கள் வணிக வலையை விரித்து இலாபமீட்டமுடியும்.
உதாரணத்திற்கு, வால்மார்ட். தமிழக அரசு ஒரு வகையில் அந்நிய சில்லரை வணிகக் கடைகளுக்கு தடை விதித்திருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட அளவு இலாபத்தை மற்ற மாநிலங்களில் கூட அடையாமல் கைவிட்டுவிட்டு சென்றனர். அப்போது அவர்கள் கூட்டு வைத்தது ஏர்ட்டெல் மிட்டலுடன். தோல்விக்கு முக்கியக்காரணம் உள்ளூர் சிறு வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர் உறவு மற்றும் வணிகக் கலாச்சாரம்.
இப்போது சரவணா ஸ்டோர்சையும், சென்னை சில்க்ஸ், சரவணபவன் போன்ற உள்ளூர் நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம். அவர்கள் வணிகம் முற்றிலும் வங்கிப் பரிவர்த்தனை மற்றும் சரியான கணக்குகளின்படி இயங்குவதில்லை என்பது அந்த வணிகத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும். அரசுக்குக் கணக்குக் காட்டுவதைவிட பல மடங்கு அவர்களின் வர்த்தகம் இருக்கும். காரணம் பெரும்பாலன விற்பனை காசாக கையாளப்படுகிறது. இந்த நிறுவனங்கள் எப்போதும் பெரும் தொகையை காசாக வைத்திருக்கும். ஊழியர்களுககு சம்பளம் முதல், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் என்று அனைத்துமே காசாகத்தான் கையாளப்படுகிறது. மோடியின் இந்த உத்தரவால் இவர்களுக்குப் பெரும் அடி விழுந்திருக்கும். இதிலிருந்து மீண்டுவர வெகு நாட்களாகும்.
இந்தச் சந்தர்ப்பம், வட நாட்டு மார்வாடிகள், வியாபாரிகளுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும். புதிய முதலீடுகளை அவர்கள் வெள்ளைப்பணமாகவே கொண்டுவந்து முதலீடு செய்ய வாய்ப்பு அதிகம். அப்படி நேருகையில் ரிலையன்ஸ் டிரெண்ட், பிக் பஜார் போன்ற நிறுவனங்களும், வால்மார்ட் போன்ற வெளிநாட்டு நிறுவங்களும் தங்கள் கடைகளைத் திறக்க வழியேற்ப்படும். குறைந்த காலத்தில் உள்ளூர் வியாபரிகளின் சவாலில்லாமல் சந்தையைப் பிடித்து நிலைகொண்டுவிடுவர்.
நலிவடைந்த உள்ளூர் நிறுவனங்கள் பழைய நிலைக்கு வருவதற்குள் அவர்களின் சந்தை கைமாறியிருக்கும். முடிவில் சந்தை உள்ளூர்க்காரர்களிடம் இருந்து வெளி மாநிலத்தவரிடம் சேர்ந்திருக்கும்.
இதற்கு முக்கியமான காரணம் உள்ளூர் வணிகர்கள் தங்களை இந்தச் சவாலுக்கு தயார்படுத்திக் கொள்ளாதது. பெரு நிறுவனங்ள் பங்குகள் மூலம் கருப்பை வெள்ளையாக்கி ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவங்னங்கள் மூலமாக சந்தையைக் கைப்பற்றுவர். அவர்கள் ஒன்றும் வரியை முழுவதுமாக கட்டிவிடப்போவதில்லை. அதற்கும் ஓட்டைகளை வைத்தே இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக.. செல்லாக்காசனது உள்ளூர் வணிகர்களே.

சொர்கமே என்றாலும்

மூன்றாண்டுகளுக்குப் பின் தாயகம் நோக்கிப் பயணம். பெரிதாக எந்த திட்டமிடலும் இல்லை. தொலைவும் காலமும் ஊர்மீதும், உறவுகள் மீதும் அன்பை அதிகப்படுத்தியுள்ளது. தீர்க்கப்பட வேண்டிய விடுப்புகள் கண்முன்னே நின்றதும் எதேச்சையாக அமைந்த பயணம். நான்கு வாரங்கள், பிள்ளைகளை பிரிந்திருப்பது கவலையென்றாலும் சிறு பிரிவுகள் உறவுகளை பலமாக்கும் என்ற நம்பிக்கையில் பயணத்தை தொடர்கிறேன்.

சென்றமுறை ஊர் சென்றது தந்தையாரின் உடல்நலச் சீர்க்கீட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவசர அழைப்பாகச் சென்றது. மருதமலை முருகன் அருளால் மீண்டு வந்துவிடடார். ஆனால் மருந்துகளால், படுக்கையிலேயே வாழ்கிறார். இப்போது பார்த்தால் மகிழ்ச்சியடைவார், ஆனால் பெயரன் பேத்தியைத் தேடும் கண்களுக்கு என்னிடம் பதிலில்லை.

நான்கு நாட்கள் நண்பன் ஹரியுடன்  தில்லி, ஆக்ரா, ராஜஸ்தான் சுற்ற திட்டம். பயணம், விடுதி அனைத்தும் திட்டமிடப்பட்டுவிட்டது . தில்லியில் பாராளுமன்றத்தைப் பார்வையிட எண்ணமெழுந்தபின் அனுமதி பற்றி தேடியபோது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அனுமதி பெற்றுத்தரவேண்டும் என்று தெரிய வந்தது. நண்பர் அப்துல்லாவிடம் உதவி கேட்டுள்ளேன். அனுமதி கிடைக்குமா என்று தெரியாது ஆனால் ஆவலாக உள்ளேன்.

முகநூலில் பயணம் குறித்த குறிப்பிற்கு நண்பர் முருகானந்தம் தாராபுரம் வர அழைத்துள்ளார். சந்திக்க ஆவல். அப்துல்லா சென்னை வந்தால் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவரையும் சந்திக்க வேண்டும். முன்பொருமுறை உரையாடுகையில் பிரியாணி விருந்தோம்பல் குறித்து தெரிவித்ததால், அதைக்குறித்து பதிலளித்திருக்கிறேன். நல்ல நண்பர்.

கல்லூரி நண்பர்களை சந்திக்கும் திட்டத்தை நண்பன்  ராமகிருஸ்ணனிடம் தெரிவித்துள்ளேன். கூர்க் பயணம் அவர்களுடன் செல்லாத் திட்டம். இல்லையென்றால் நண்பர்களை அவர்களின் ஊரிலேயே சந்திக்கத் திட்டம். 98க்குப் பிறகு கல்லூரி  நண்பர்களைச் சந்திப்பது உற்சாகமாக இருக்கிறது.

பாரதியார் பல்கலை நண்பர்களை சந்திக்க வேண்டும். திட்டமேதுமில்லை, ஊர் சென்றதும் தொலைபேசி சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

பேரூர், கோவை அருங்காட்சியகம், கீழடி, மதுரை, கண்ணகி கோவில், கர்நாடகாக் கலைக் கோவில்களையும், ஊட்டி ரயில் பயணத்தையும் திட்டமிட்டுள்ளேன்.

முக்கியமாக ஊர் வரலாற்றை ஆவணப்படுத்த எண்ணியுள்ளேன். அடுத்த தலைமுறைக்கு ஊரின் சுவடுகள் தெரிய உதவும். பெரும் நிகழ்வுகள் எதுவும் இல்லையென்றாலும் ஊர் தன்னை எப்படி வளர்த்துக்கொண்டுள்ளது, என்னென்ன மாற்றங்களையெல்லாம் கண்டுள்ளது என்று காலத்தின் சாட்சியாக வாழும் மனிதர்களின் அனுபவங்கள் வழியாகப் பதிவது சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

Wednesday, November 9, 2016

டிரம்ப் எனும் குழப்பம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. இனி  தொடர்ந்து எழுத எண்ணம். 

பெரும் எதிர்பார்ப்பிற்குப் பின் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. டெமோக்ரட்டுகளாக தங்களை உணரும் இவர்கள் ரிபுபலிக்கன்களின் கொள்கைகளுக்கு எதிராகவும், தங்கள் சார்ந்த கட்சி உலக அமைதிக்கு படுபடுவதாகவும் நம்புகிறார்கள். இதில் எனக்கு மற்றுக்  கருத்துண்டு. பொதுவாக அமெரிக்க சமூகம் முதலாளித்துவ சிந்தனை  கொண்டது.அதாவது தனி மனித உழைப்பை வைத்து பொருளாதாரத்தை கடடமைப்பதை விட மனித உழைப்பு மிகுந்த நாடுகளில் முதலீடு செய்து இலாபம் ஈட்டுவது. உள்நாட்டில் தங்களுக்கு சேவை செய்ய ஒரு மக்கள்  கூட்டம்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம்.

ஆசிய  நாட்டு மக்களின், குறிப்பாக இந்தியர்களின் உழைப்பு அமெரிக்க வேலை வாய்ப்பை அதிகம் எடுத்துக்கொள்வதாகக் கருதுகிறார்கள். ஒருவகையில் உண்மை என்றாலும் அந்த உழைப்பு அமெரிக்காவிற்குத் தேவை. அதனால் டிரம்ப் சொன்னதுபோல் அந்த வேலை வாய்ப்புகளை எப்படி அமெரிக்கர்களுக்கு அளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அதே போல் ஆவணப்படுத்தப்படாத ஸ்பானிஸ் பேசும்  தென்னமெரிக்கர்களை  டிரம்ப் வெளியேற்றப்போவதாக தனது பரப்புரையில் அறிவித்திருந்தார். ஆனால், அவர்கள் தான் கிழ்மட்ட வேலைகளான வீட்டு வேலைகள், கட்டட வேலைகள், சாலையமைப்பது, புல்வெளியைப் பராமரிப்பது போன்ற வேலைகளை செய்கின்றனர். அவர்களில்லாமல் இந்த வேலைகளை யார் செய்வார்? இந்த வேலைகளை செய்வதற்காகவல்லவோ  அவர்களை ஆவணமில்லாமல்   வாழ அனுமதித்து  அவர்களின் உழைப்பை சுரண்டிக்கொண்டுள்ளனர்.

மொத்தத்தில் டிரம்ப்பின் வேற்றி,  தெளிவில்லாத எதிர்காலத்தையும், நிறைவேறாத கனவுகளை அமெரிக்கர்களிடையேயே ஏற்படுத்தியுள்ளது. சந்தை தேர்தல் முடிவை வரவேற்கவில்லை. அடுத்த சில நாட்களுக்கு இதே நிலைதான் தொடரும் என்று நினைக்கிறேன்.

முகநூலில்  பகிர்ந்த கருத்துக்கள் ....


டிரம்பின் வெற்றியால் அமெரிக்காவை நம்பியிரும் கணினித்துறையினர் வேலை வாய்ப்பை இழப்பர் என்று இன்பமும், கவலையும் அடையும் நண்பர்களுக்கு..
இந்தியர்கள் கணினித்துறையில் சிறந்த அடிமைகள்.. அவர்களை மிஞ்சும் அடிமைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கணினி நிறுவனங்கள் கடைந்தெடுத்த கில்லாடிகள். டிரம்பின் நடவடிக்கைகளைச் சமாளிக்க சட்ட மற்றும் அரசியல் நகர்வுகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஆகவே...
கவலையடைபவர்கள் நிறுத்திக்கொள்ளுங்கள்....
See More
LikeShow more reactions
Comment


வெற்றி பெற்றது டிரம்பல்ல, ஜூலியன் அசாஞ்சே என்ற கைதி...
இம்பெர்மேசன் ஈஸ் வெப்பன்..


டிரம்பின் வெற்றியால் அமெரிக்காவை நம்பியிரும் கணினித்துறையினர் வேலை வாய்ப்பை இழப்பர் என்று இன்பமும், கவலையும் அடையும் நண்பர்களுக்கு..
இந்தியர்கள் கணினித்துறையில் சிறந்த அடிமைகள்.. அவர்களை மிஞ்சும் அடிமைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கணினி நிறுவனங்கள் கடைந்தெடுத்த கில்லாடிகள். டிரம்பின் நடவடிக்கைகளைச் சமாளிக்க சட்ட மற்றும் அரசியல் நகர்வுகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஆகவே...
கவலையடைபவர்கள் நிறுத்திக்கொள்ளுங்கள்.
இன்பமடைவர்கள் இப்படியே எப்போதும் இன்பமாக இருக்க இறைவன் உங்களுக்கு வாய்ப்பளிக்கட்டும்... டும்.. டும்..

Me: Trump won the Election.
Son: Rolling his eyes and said, "No"
Daughter: "No.. I want Hillary to Win", then after two seconds she glanced me top to bottom and threw this to me, "Did you vote for Trump?" as if my vote gave Trump victory...
இன்னுமா இந்த உலகம் நம்மல நம்புது..


தேர்தல் முடிவுகளுக்கு இடையில் அமேசானின் விளம்பரம் ஒன்று,
தேர்தல் முடிவுகளைக் கவனிக்கும் இளைஞர் ஒருவர் அமேசானின் எக்கோவிடம் "அலெக்சா, கனடாவுக்கு ஒருவழிப்பயணச் சீடொன்றுக்கு கட்டணம் எத்தனையென்று கயாக்கிடம் கேட்டுச்சொல்." என்று உரையாடுகிறார்.

#JustAsk when you need to get away from it all. Get information, music, weather and more with the all-new Echo Dot, only $49.99.
M.YOUTUBE.COM




குடியரசுத் தலைவர் டிரம்பு - விளைவாக
1. சந்தை சிறிது காலம் கீழ் நோக்கிச் செல்லும். முக்கிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தங்களில் தெளிவான அறிவிப்பு வெளிவரும்வரை.
2. ஒபாமா கேர் ஒழிக்கப்பட்டுவிடும். காப்பீடில்லாமல் கைவிடப்படுவோர் எண்ணிக்கை உயரும்.
3. உள்ளூர் வேலை வாய்ப்புகளுகு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இது செலவு மிகுந்த முன்னெடுப்பு. விலைவாசி உயரும். பணவீக்கம் அதிகமாகும்.
4. தொழிற்சாலைகள் சில அமெரிக்காவிற்கு நகர முற்படும், சட்டம் மட்டும் இயங்கு செலவினங்களால் தோல்வியில் முடியும்.
5. சீனாவிற்கு மாற்றாக இன்னொரு அமெரிக்கா சார்ந்த உற்பத்தி தொழிற்சாலை உருவாக வாய்ப்பு.
6. ரசியா, இரான் உள்ளிட்ட நாடுகளுடன் சுமுக உறவு ஏற்பட வாய்ப்பு.
7. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம், குறிப்பாக வளைகுடா நாடுகளை அமெரிக்க கைவிடும் அபாயம் அல்லது புதிய வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் இதன் விளைவாக அந்த நாடுகள் அமெரிக்க நிறுவனங்களில் செய்துள்ள முதலீடு, வைப்பு போன்றவை விலக்க வழிகள் ஏற்படும்.
8. சீனாவின் எதிர்வினை அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
9. நேடோ மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளில் விரிசல் ஏற்படும்.
10. உடனடியான போர் எதுவும் இருக்காது ஆனால் பொருளாதார நெருக்கடி போருக்கு கொண்டு போய் நிறுத்தும்.
11. ஆப்ரிக்கா மற்றும் தென் சீனக் கடலில் ஆதிக்கப் போட்டி முன்னெப்போதும் இல்லாததை விட அதிகமாக இருக்கும்.
12. இந்தியாவிற்கு ஒருபக்கம் ஐடி வருமானத்தில் பாதிப்பு என்றாலும் இன்னொருபுறம் இரஸ்யா மற்றும் இரானுடனான உறவை இன்னும் வெளிப்படையாக வைத்துக்கொள்ளும்.
13. அமெரிக்காவில் வேலைகாக வழங்கப்படும் விசாவில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படலாம்.
14. ஆவணப்படுத்தபடாத அமெரிக்க வாழ் தென்னமெரிக்கர்களுக்கு நெருக்கடி ஏற்படும். குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.
15. வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு.
16 அதிக அச்சுறுத்தல், அதிக பாதுகாப்புச் செலவில் முடியும்.
இவையணைத்தும் டிரம்பின் தேர்தல் பரப்புரையை வைத்து மதிப்பிடப்பட்டது. ஒரு வேளை வெள்ளை மாளிகைக்கு வந்தபின் சூழலை அறிந்து பெரிதாக எந்த ஆணியையும் பிடுங்காமல், கார்ப்பரேட்டுகளுக்கு நலன் பயக்கும் ஓரிரு ஆணிகளை மட்டும் பிடுங்கி காலத்தை ஓட்டினால் உலகத்தில் இன்றுள்ள நிலை தொடர வாய்ப்பு.

ஜெய் டோனல்டானந்தா..
அன்றே சொன்னார் அண்ணா...
Like
Comment


எதிர்வரும்  இந்தியப் பயணம் குறித்த குறிப்புகளை எழுத ஆவல். குறிப்பாக பயணம் மற்றும் ஊர் வரலாற்றை ஆவணப்படுத்த பெரியவர்களை சந்தித்து அவர்கள் கருத்துக்களை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.

Wednesday, September 7, 2016

திருமணம் - திரும்பிப் பார்க்கிறேன்.

துணையிருந்த சிறுமிகள்
தாயாகிவிட்டனர்
ஆசீர்வதித்த பெரியவர்கள்
பரலோகமடைந்து விட்டனர்
முடி நிறைந்த தலை
முடி துறந்து நிற்கிறது
அடிதொழுத மனைவி
முடியாட்சி செய்யும்
நினைவு-நிகழ்வு இணைகாட்சி
திருமணக் காணொளிப்பதிவு காண்கையில்.

களிநயம் - விமர்சனம்

நெடுநாட்களுக்குப் பிறகு நண்பர் ஒருவரின் உதவியில் ஊரில் வாங்கி வைத்திருந்த தமிழ்ப் புத்தப் பொதிகள் கிடைத்தது. நல்ல புத்தகங்களை நண்பர்களின் பரிந்துரைகள், மதிப்புரைகள், ஆசிரியரின் எண்ணம், எழுத்துக்களைக் கொண்டும், எனது தனிப்பட்ட ஆர்வம் காரணமாகவும் அவ்வப்போது குறித்து வைத்துக் கொண்டு, பிறகு மொத்தமாக இணையத்தில் ஊர் முகவரிக்கு வாங்கிவிடுவது வழக்கம். பிறகு நானோ அல்லது நண்பர்களோ ஊருக்குச் சென்று வரும்போது புத்தகங்களை அமெரிக்கா கொண்டுவருவேன். அந்த வகையில் இந்த முறை பல புத்தங்கள் கிடைக்கப்பெற்றது. அதில் கவிஞர் மகுடேஸ்வரனின் களிநயமும் ஒன்று.

நான்கு நாட்கள் தொடர்ந்து படித்ததில், தொலைவு பிரித்த நண்பனை மீண்டும் கொண்டுவந்து சேர்த்தது. படித்து முடித்ததும், புத்தகத்தையும் நண்பனையும் பிரிய நேரும் துயரம் அப்பிக்கொண்டது. ஒரு சக மனிதனுடன் தற்கால நிகழ்வுகள், ஆலோசனைகள், சமூக மதிப்பீடுகள், அறிவுப் பரிமாற்றம் என்று பலவற்றை இந்தப் புத்தகம் கொண்டிருக்கிறது.

கல்லூரி நாட்களில் மின்ணணுவியல் பாடத்தின் போது வகுப்பே ஆசிரியர் சொல்வதை உள்வாங்கிக் கொள்வது போலும், எனக்குமட்டும் புரியாதது போலும் தோன்றும். சில நேரங்களில் வாய்விட்டு சந்தேகங்களைக் கேட்டும் புரிந்து கொள்ள முடியாமலிருக்கும். காரணம், மின்ணணுவியலில் எதையும் இயந்திரவியல் போன்று கண்கூட, தொட்டுணர்ந்தோ பார்த்து புரிந்து கொள்ள முடியாது. மின்ணிணைப்புகள், ரெஸிஸ்டர், இண்டெக்ரேடட் சர்க்யூட் எல்லாமே அவரவர் கற்பனைக்கு எட்டியவண்ணமே புரிதல் இருக்கும். ஒரு சர்க்யூட்டை விளக்கினால், ஏற்கனவே கொண்டுள்ள புரிதல்/அனுமானத்தில்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். சில பல நேரங்களில் புரிபடமால் இரண்டு மூன்று தடவை சந்தேகம் கேட்க நேரிடும்.

வகுப்பே அமைதியாய் உள்வாங்கிக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் கேட்டு எனக்கு மட்டும் புரியாமல் போன ஒரு நிலை வருத்தமளிக்கும். வகுப்பு முடிந்ததும் பக்கத்திலிருப்பன், முன் வரிசையில் அமர்ந்திருப்பன் என்று எவனிடமும் சந்தேகம் கேட்டாலும் அவர்களுக்கும் தெரியாது. பிறகுதான் புரிந்தாது, எல்லோருமே ஒரு "சோசியல் ஸ்டேடஸுக்காக" பிடித்து வைத்துள்ள பிள்ளையார் போன்று பாடம் கேட்டது.

அதைப்போல ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள், நிகழ்வுகளில் நமக்கான புரிதல் ஒட்டு மொத்த சமூகத்தின் புரிதலில் இருந்து நேர்மாறாக இருக்கும். அதைச் சொல்வதால் தனித்து விடப்படுவோமோ என்ற அச்சத்தில் பெரும்பாலும் நாம் நம் கருத்துக்களை வெளியே சொல்வதில்லை. அந்த நேரத்தில் நம்மைப் போலவே அந்த பிரச்சினைகளை, நிகழ்வுகளை புரிந்து கொண்டவர், நம் சிந்தனை வடிவிலேயே ந்தம்ன்முடன் உரையாடி நம்மை அடுத்த நிலைக்குக் கொண்டு சேர்ப்பது எப்படி ஒரு இணக்கத்தைத் தருமோ, அதே உணர்வு களிநயம் படித்த பின் ஏற்பட்டது.

தன்னை ஒரு சமூகத்தின் உயர் நிலையின் எனவோ, கல்வி, கேள்வியில் ஏனையோரை விட தான் உயர்ந்தவர் என்று பக்கத்தின் ஏதாவது ஒரு மூலையில் தன்னுயர்வை வைக்காமல் எழுததாத நவீன எழுத்தாளர்களிலிருந்து வாசகனின் மனதோடு நெருக்கமாக, தனக்குள் ஒருவனாக புத்தகமெங்கும் உரையாடியிருக்கிறார்.

வாகனங்களை பராமரிப்பது முதல் ஒரு நிறுவனத்தை நடத்த வேண்டிய அடிப்படைப் பண்புகள் வரை தன் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். கடைசியில் 13 திருக்குறள்களுக்கு சமகாலத்திலிருந்து உவமைகளைக் கூறி பொருள் விளக்கமளித்திருக்கிறார்.

தன்னுடைய புத்தகத்தை காசு கொடுத்து வாங்கும் வாசகன் ஒரு போதும் ஏமாந்துவிட்டோமே என்றெண்ணாத வகையில் புத்தகத்தில் பொருளடக்கம் செய்திருப்பதில், அவர்தம் திருப்பூர் தொழில் நேர்த்தி தெரிகிறது.

நல்லதொரு புத்தகம், நட்பினை உணர்த்தும் புத்தகம். 

Friday, September 2, 2016

ரிலையன்ஸ் ஜியோவுக்கு முன்...

இருபத்தி ஓராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், VOIP எனப்படும் வாய்ஸ் ஓவர் இண்டெர் நெட் புரொட்டொக்கால் என்னும் தொழில் நுட்பம், இண்டெர் நெட் மூலம், அதாவது ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினி தொடர்பு கொள்ளும் முறையில் (இண்டெர் நெட் பாக்கெட் எனப்படும் சிறு அளவிலான தகவல் கத்தையை அனுப்புனர், பெறுநர், இடைமறிக்கமுடியாதபடி இறுக்கிக்கட்டப்பட்ட முறை, கட்டை அவிழ்க்கும் சாவி என) குரல் அழைப்புகளை அனுப்புவது. முன்பு பிஎ ஸ் என் ல் தொலைபேசி இணைப்புக்காக, PSTN என்ற பொதுப்பயப்பாட்டுக்கான இணைப்பை ஏற்படுத்தும் டெலிபோன் நெட்வொர்க் மூலம், இண்டெர்நெட் சேவையைப் பெற, அனலாக் எனப்படும் வாய்ஸ் நெட்வொர்க்கில் டிஜிட்டல்(பைனரி/பாக்கட்) தகவலை அனுப்பும் முறை மூலம் இண்டெர்நெட்டைப் பயன்படுத்தினோமல்லவா, அதன் நேர் எதிர் முறை இது. அதாவது இண்டர்நெட் இணைப்பினுல் ஒரு டிஜிட்டல் ஓடை ஏற்படுத்தி, அதில் குரலை அனுப்பும் நுட்பம். ஆரம்பத்தில் வெளிநாடுகளிக்கான தொலைபேசி இணைப்பை வழங்கும் சேவையில், கட்டணம் மிச்சப்படுத்த பயன்படுத்தப்பட்டது. கட்டண மிச்சம், நிறுவனத்திற்கே, வாடிக்கையாளர்களுக்கு அல்ல, அதாவது வாடிக்கையாளர்கள் ஐஎஸ்டி கட்டணத்தைத்தான் கட்டினார்கள். பிறகு யாகூ மெஸ்ஸஞர் மூலம் கணினி வழி தொலைப்பேசி இலவசமாக வழங்கப்பட்டது. இதன்மூலம் நிலையான தொலைபேசி இல்லாமல் உலாவிக்கொண்டே உரையாடும் முறைக்கு வழிவகுத்தது.
இந்தியாவில் சில இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு இந்த VOIPஐ வழங்கியது. அதன் ஆரம்பகாலங்களில் அந்த இணையவழி குரல் உரையாடல் ஏற்படுத்தும் நுட்பத்துடன் இணைந்து, கட்டண அளவீடு செய்யும் மென்பொருளை அந்தகாலகட்டத்தில் வேலை செய்த நிறுவனத்தில், ஐஐடி மெட்றாஸ் வளாகத்தில் செய்த அனுபவம் இந்தத் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்ள எனக்கு உதவியது.
பிற்காலத்தில் 2G, 3G, 4G என அடுத்தடுத்த தலைமுறைச் செல்லிடப்பேசி நுட்பங்கள் வளர்ந்தபின், அதே நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு இப்போது ரிலையன்ஸ் ஜியோ இணைய நுட்ப்த்தைப் பயன்படுத்தி, அலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தும் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளர்ந்த நாடுகள் ஏற்கனவே கட்டடற்ற தொலைபேசி அழைப்புகளை வழங்கிவருகின்றன. இணைய இணைப்புகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் வகை செய்துள்ளார்கள். ஏற்கனவே சில அதிபுத்திசாலி நிறுவனங்கள் உங்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. இந்த நுட்பத்தில் மிக முக்கியமானது தகவல்களை கத்தையாக்கும் நுட்பம். அதாவது Data Compression Technique. இது குறைந்த அளவு மென்ணெண்களைப்(Data)வைப் பயன்படுத்தி அதிக அளவிலான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறை.
ஆகவே.. ரிலையன்ஸ் ஜியோ - சந்தையைத் தனக்குச் சாதகமாப் பயன்படுத்திக் கொள்ளும் நுட்பமேயன்றி, அலைக்கற்றை வழங்கிய அம்பானிகளையும், வழியேற்படுத்தும் வழியில் நின்ற ராஜக்களையும் கும்பிடவேண்டியதில்லை.

இதயம் வென்றான்

இமயம் வென்றான் என்றார்,
இதுவரை அவர் பாதை இங்கிருப்பவர்
எவர் கண்டார்..
கடிதொழில் செய்து கருகிச்
சேர்த்ததெல்லாம் கள்ளும்,
மானம் விற்ற காணற் கலையுமாகவல்லவோ
கரைக்கின்றார்...
வானளந்த புகழ் கொண்ட வரலாற்று
நாயகர்களை ஏடுகளில் மட்டும் கொண்டு
மோடியென்றும், மோகனென்றும்
அவர்பாதத்தில் தலையணைக்க
தவம் கிடக்கிறார்...
சூதும் வாதும் செய்வதை சுட்டாலும்
ஏற்றுக்கொள்ளாத அறம் தள்ளி,
அரசியல் சூதானம் தெளிந்தவர் என்று
புகழெடுத்து-
இங்கத்தவர் நாடாள
வாய்த்த பேரை அங்கத்தவர் ஆயினும்
அவர் அரசியல் சங்கறுத்து
தன்னை நிறுத்துக் கொண்ட
தலைகொண்ட உடலன்றோ இன்நிலம்...
அரிதினும் அரிதாய் அமைந்த
தென்னவர் ஏறும் அரியாசனத்தை
மன்னவர் போற்றும் மாண்பெய்தும்
செயல்விடுத்து,
கள்ளர் மாண்டுகொள்ளும் வன்னம்
குடிஉடை மடியினில் மறைத்து
இனியொரு மாமாங்கம் பழி வாழ
வழிசெய்தார் ஆங்கோர் அடிமைக்கு அடிமை..
பொன்னைத் தின்றார், போதவில்லையென்று
இணைகொடி தோண்டி மண்ணைத்தின்றார்,
மட்டுறார் மாவணிகன் வாய்ச்சோற்றையும் தின்னக்கேட்க,
வாழ்ந்து சேர்த்த சிறப்பை
தாழ்ந்து கெடுக்க முனையார்- அவர்
எரியும் நெருப்பணைக்கத் தாங்கும்
கங்கணைத்தார்..
அறம் போற்ற வாழும் வாழ்வு துறந்தார்
தம்மினம் மாண்பு துறந்து சாக வழிசெய்தார்..
வாழிய அவர் புகழ் இவ்வையம் வாழும் வரை..
இமயம் வேண்டாம் - மக்கள்
இதயம் வெல்லும்
"இதயம் வென்றான்" அல்லவோ
எமக்கின்று வேண்டும்?!..