Tuesday, June 23, 2015

ஓதி மலை

கடவுள் நம்பிக்கையில் மாறுபட்ட கருத்து இருந்தாலும் மற்றவர் நம்பிக்கையின்பால் நமக்குள்ள புரிதல்களாலும், ஏனையோருக்கும் பயன்படும் என்ற நோக்கில் "ஓதி மலை" பற்றிய சிறு குறிப்பு.

புன்செய் புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும். இங்கு அமைந்த முருகன் கோவில் வரலாறு கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது. படைத்தலை தொழிலாகக்கொண்ட பிரம்மனிடம் முருகன் சோதிப்பதற்க்காக பிரணவமந்திரத்தையும் அதன் பொருளையும் கேட்டுள்ளார். பிரம்மன் பரிட்சைக்கு படித்தபோது மனப்பாடம் செய்ததை வேலை செய்யும்போது மறந்து தொலைத்துவிட்டதால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படி சரியாக பார்முலா தெரியாமல் நீ படைத்து கிழித்தது போதும் என்று சொல்லி பிரம்மாவை ஒரு இரும்பு அறையில் சிறைவைத்துவிட்டு தானே படைப்புத்தொழிலை செய்ய ஆரம்பித்தார். முருகனுடைய உற்ப்பத்தியில் எந்த குறைவுமில்லாமல் உயிர்கள் நீண்ட நாள் வாழ்ந்தன. அதனால் எடை தாங்க முடியாத பூமி புராஜக்ட் மேனஜரான சிவபெருமானிடம் போய் முறையிடுகிறாள். இப்படி டிபக்ட் இல்லாமல் சர்வர் ஓடினால் உலகம் தாங்காது என்று. உடனே சிவ பெருமான் முருகனிடம் சென்று ஒரு மீட்டிங் போட்டு ஆர்க்கிடெக்ட் வேலையை பிரம்மாவே செய்யட்டும், உனக்கு வேறு புராஜக்டில் அசைன்மெண்ட் கொடுக்கிறேன் என்று சொல்லி ஒரு வழியாக பிரம்மாவிற்க்கு பழையபடி புரடக்சன் லைன் ஓட்ட அசைக்ன் மெண்ட் வாங்கி கொடுத்துவிட்டார். மீட்டிங்கின் போது முருகன் பிரம்மாவிற்க்கு பிரணவ மந்திரமே மறந்து விட்டதாகவும் இவரை நம்பி படைப்பை கொடுத்தால் உலகம் அழிந்து விடும் என்று அவர் விளக்கத்தைச் சொல்லும்போது, "உனக்கு விளக்கம் தெரியுமா?" என்று சிவ பெருமான் கேட்க, முருகப்பெருமான் சிவனின் தோள்மீது அமர்ந்து விளக்கத்தை சொல்கிறார். சுவாமி மலையில் சொன்ன விளக்கத்திற்க்கு கூடுதலான விளக்கங்களையும் சந்தேகங்களையும் இங்கு தீர்த்து வைக்கிறார். அவர் சொல்வது ஒரு ஆசிரியர் மாணவனுக்கு பாடம் சொல்வது போல் இருந்ததால் "ஓதி"  னார் என்றும், அவர் ஓதிய இடம் "ஓதி மலை" என்றும் பெயர் பெற்றது. பிறகு இங்கு போகர் பழனிக்கு வழி தெரியாமல் முருகனுக்காக சிலை வடித்து தவம் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. போகரின் குகையையும் இங்கு காணலாம். இங்கு இருக்கும் முருகனுக்கு ஐந்து தலைகள், எட்டு கரங்கள். பிரம்மாவைப் போலவே ஐந்து தலைகள் கொண்டு படைப்பைச் செய்ததனால் இங்கு ஐந்து தலைகளுடன் காட்சியளிக்கிறார் ஆறுமுகப்பெருமான்.

நம்பிக்களுக்கு அப்பால் இது ஒரு மிகச்சிறந்த இயற்கை எழில் கொஞ்சும் மலை. இன்று பல்வேறு உடல் நலப் பிரச்சினையுள்ளவர்கள் மாதம் ஒரு முறை மலையேறி வந்தால் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். எப்படி? இந்த மலையின் படிக்கட்டுகள் பாதி வரை ஓரளவு எளிதில் ஏறும் வகையிலும் மீதி படிக்கட்டுகள் சற்று செங்குத்தாகவும் இருக்கும். மாதமொருமுறை அதிகாலையில் இந்த மலையை ஏறி இறங்கும்போது தூய காற்றை சுவாசித்து முச்சுக்குழல் விரிவடைந்து நல்ல ரத்த ஓட்டமும், உடல் வியர்த்து வேண்டாத கொழுப்புகள் கரைந்து உடலுக்கு ஒரு மிகச்சிறந்த பயிற்ச்சியை கொடுக்கும். அடிக்கடி மலையேறி இறங்குபவர்கள் உடலின் கொழுப்பு, இதய துடிப்பு மற்றும் ரத்த ஓட்டத்தையும் சீறாக வைத்துக்கொள்ள முடியும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக மாதமொருமுறை மலையேறி இறங்கலாம். சஷ்டி நாட்களில் அதிகாலை கோவில் திறந்து பூஜையும் நடைபெரும். ஆதலால் சஷ்டி நாட்களை தேர்வு செய்துகொள்ளலாம். இளையவர்கள், இன்னும் திறன் மிகுந்தவர்கள் கொஞ்சம் எடையை தூக்கி ஏற முடியும் என நினைப்பவர்கள், கோவில் திருப்பணிக்காக மணல் மற்றும் சிமெண்ட் சிறு மூட்டைகளாக எடுத்துச்செல்லும் அளவில் கட்டி அடிவாரத்தில் வைத்திருக்கிறார்கள். உடல் பயிற்ச்சிக்கக அவற்றையும் மேலே கொண்டு சேர்க்கலாம். 

கோவிலுக்கு போகின்றவர்கள் தயவு செய்து தனி வாகனங்களில் போக வேண்டாம். இன்னும் இந்த மலை இயற்க்கை சூழலுடன் இருக்கிறது. பேருந்தோ அல்லது சைக்கிள்களிலோ சென்று  வாகனப்புகையை தவிற்த்து சூழலை காக்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment