Thursday, November 12, 2015

ஒரு லைக்... ஒரு லைப் - ரியல் லைப் சிறு கதை

முகிலன் சமீபத்தில் தான் இஞ்சினியரிங் முடித்துவிட்டு ஒரு சாப்ட்வேர் நிறுவத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். கன்னியாகுமரியில் இருந்து வந்தவனுக்கு சென்னை கார்ப்பரேட் வாழ்கை ஆச்சர்யமாகவும் பெருமிதம் தருவதாகவும் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஐடி கார்டை அணிந்து கொள்ளும்போதும் அவனுக்குள் ஏதோ மெடலை அணிந்துகொள்வது போன்ற ஒரு அனுபவத்தை உணர்ந்தான். இருக்காதா பின்னே..., இப்படித்தானே படித்து முடித்து வேலைக்குச் சேரும் ஒவ்வொரு இளைஞனும் இந்த 21ஆம் நூற்றாண்டில் உணர்கிறான்.
ஒரு வழியாக ஜாவா டிரெயினிங் முடித்து ஒரு அமெரிக்க மருந்து கம்பெனியின் அப்ளிகேசனை சப்போர்ட் செய்யும் டீமில் இடம்பிடித்து, வெள்ளைக் காலர் பட்டாளத்தில் ஒருவானாகினான். முதல் இரண்டு மூன்று மாதங்களுப்பிறகு வேலை நுணுக்கங்களை ஓரளவு கற்றுக்கொண்டிருந்தான். வேலை மீதிருந்த அதீத பயம் விலகி, ஒரு மாட்டை பழக்கி, பால் கறக்கும் பக்குவத்தை அடைவது போல், சாப்ட்வேர் வேலையையும் பழகிக் கொண்டான்.
அப்ளிகேசனை தெரிந்து கொண்டதால் அவனுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை சீக்கிரமே முடித்துவிட்டு கூகுள் குரோம் உலவியில் அறிவுத்தேடலைத் தொடங்கியிருந்தான். அப்போது எதேச்சையாக தமிழில் எழுதப்பட்ட "உலகப் பொருளாதாரம்" என்ற ஒரு கட்டுரை அவன் கண்ணில் பட்டது. அது 'ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்" என்ற ஆங்கில நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை. அதுவரை அவன் நகர வாழ்க்கை, கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது கொண்டிருந்த பிம்பங்களை அந்த கட்டுரை உடைத்தது. அவனால் அந்த கட்டுரையை நம்ப முடியவில்லை. அதன் தொடர்சியாக சில தரவுகளை கூகுளில் தேடினான். வந்து கொட்டிய தகவலை படித்த முடித்தபோது அவனால் அமைதி கொள்ள முடியவில்லை. அவன் வளர்ந்த விதமும், பணியில் சேர்ந்தபின் தன் வாழ்கை பற்றி அவன் கொண்டிருந்த கனவும் கேள்விக்குள்ளாக்கப் படுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இரண்டொரு நாள் கூகுளின் பக்கம் போகமல் இருந்தான். ஆனால் அவனுடைய தேடல் முற்றுப் பெறாமலும் முழுமையடையாமலும் அவனைத் துளைத்தது. தன் டீம் மேட்டிடம் இதைப்பற்றி தெரிந்து கொள்ள, "எகானமி ஹிட்மேன்" பற்றி தெரியுமா என்று கேள்வி எழுப்பினான். "அது என்ன புதிய அர்னால்டு படமா?" என்று வந்த பதிலில் ஒருவாறு தெளிவு பெற்றான், தன் டீம் மேட் தெளிவாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு அவனிடம் அது பற்றிய பேச்சை பின்நாளில் எடுக்கவே இல்லை.
ஆனால் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்த டர்புலன்ஸை கட்டுப்படுத்த முடியாமல் அந்த கட்டுரையின் ஆசிரியர் யார் என்று தேடினான். "விடுதலை பாண்டியன், சென்னை" என்ற பெயருடன் அவரின் பேஸ்புக் புரொபைலை பெஸ்ட் பெட்டாக கூகுள் கொண்டுவந்து நிறுத்தியது. அதுவரை பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத அவன், அந்த புரொபைலின் முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள ஒரு அக்கவுண்டை உருவாக்கினான். பிறகு அவர் மிகச்சிறந்த சிந்தனைவாதியென்றும், அவர் இதற்கு முன் இந்திய அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் குறிப்பிடத்தக்க உறுப்பினராக இருந்தாரெனவும், மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நிகழவிருந்த பெரும் ஸ்டாக் மார்கெட் சரிவை தன்னுடைய ஆலோசனையின் பேரில் தடுத்து விட்டதாகவும், பின்நாளில் தன்னுடைய வாழ்க்கை - பெரும் பொருளாதாரக் காணல் நீரைச் சுற்றி அலைந்து வீனாகப் போய், ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை உணர்ந்து அது குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துருவாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துவதைக் கடமையாகச் செய்து கொண்டிருப்பதாக அவரது டைம்லைன் போஸ்டுகளும், லிங்க்குகளும் காண்பித்தது.

....தொடரும்.....

6 comments:

  1. ipidi mukkiyamana nalla kaduraikkellam thodarum poda koodathu

    ReplyDelete
    Replies
    1. விரைவில் அடுத்த பகுதி வெளியிடப்படும்...

      Delete
  2. Replies
    1. புனைவுகள் உண்மைபோல இருப்பதாக படிப்பவர் நம்புவது எழுதியவருக்கு பாராட்டு.. நன்றி..

      Delete