Friday, May 8, 2015

வேட்டி-ராஜ்கிரண்-விளம்பரம் - இன்னொரு கோணம்

ராஜ்கிரண் ஒரு வேட்டி விளம்பரத்தில் நடிக்காமல் தவிர்த்ததற்க்கு கூறும் காரணத்தால் அவரை மெச்சி நாம் நாம் பகிர்ந்து கொண்ட ஒளிப்படத்தைபற்றியது இந்த பதிவு. இதில் ராஜ்கிரணையோ அவரது உணர்வுகளையோ விமர்சனத்திற்க்குள்ளாக்குவது நமது நோக்கமல்ல. மாறாக ஒரு செய்தியை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் எனபதைப்பற்றியே. 

முதலில் ராஜ்கிரண் தன் பேட்டியில் ஒரு வேட்டி கம்பெனி (Ramrajஆக இருக்கலாம்) தன்னை அதன் விளம்பரத்திற்க்கு அழைத்ததாகவும் அவர்கள் இரண்டுகோடிவரை கொடுத்தும் தான் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடுகிறார். அதற்க்கு அவர் சொல்லும் காரணம் தனக்கு கொடுக்கும் சம்பளத்தை வேட்டியின் விலையை உயர்த்தி வேட்டிகட்டும் ஏழையிடம் பறித்துக்கொள்வார்கள் என்று... நிற்க்க

முதலில் வேட்டி கட்டுபவரெல்லாம் ஏழையா? ஏழை விவசாயி இந்த பெரு நிறுவனங்களின் வேட்டியைத்தான் கட்டுகிறானா? விளம்பரத்திற்க்காக செலவு செய்யும் பணத்தை நிறுவனங்கள் விலையை ஏற்றித்தான் ஈடுகட்டிக்கொள்ள முடியுமா? 

முதலில் ஏழை விவசாயி தன்னுடையை ஆடைத்தேவைகளை நகரங்களில் இருக்கும் பெரும் ஆடை அங்காடிகளில் நிறைவேற்றிக்கொள்வதில்லை. மாறாக ஊர்க்கடைகளிலிலும் காதிபவன் மற்றும் ரேசனில் கொடுக்கும் வேட்டியின் மூலம் நிறைவேற்றிக்கொள்கிறான். நூறு ரூபாய்க்கான வேட்டி இங்கேதான் கிடைக்கிறது. 

பெரும் ஆடை அங்காடிகளில் விற்க்கப்படும் வேட்டிகளின் விலை சுமார் ரூ 350 ல் இருந்து ஆரம்பிக்கிறது. இந்தவகை வேட்டிகளை வாங்குபவர்கள் ஏழையென்றே எடுத்துக்கொண்டாலும் ராஜ்கிரணின் விளம்பரத்தால் ரூ 1000 ரூபாயகவா மாறிவிடப்போகிறது. அப்படியே மாறினாலும் அதை வாங்க முடியாதவர் ரூ 350 க்கு என்ன பிராண்டு கிடைக்குமோ அதை வாங்கிக் கொள்வார்.

ஒரு வேளை ராஜ்கிரண் நடித்து அந்த விளம்பரத்தால் வேட்டி விற்ப்பனை அதிகமாகும்போது நிறுவனம் விலையை அதிகரிக்காமலே விளம்பரச்செலவை ஈடுகட்டிக்கொள்ள முடியும். உதாரணம் : விளம்பரத்திற்க்கு முன் மாதமொன்றுக்கு ஒரு லட்சம் வேட்டிகள் விற்ப்பனையாகிறதென்று எடுத்துக்கொண்டால் 100000x350 = ரூ 35000000.00 = 35 கோடி. இதுவே இராஜ்கிரண் நடித்ததால் விற்ப்பனை அதிகமாகி ஒரு பத்தாயிரம் வேட்டிகள் அதிகமாகிறது என்று வைத்துக்கொண்டால் அதன் மதிப்பு(விலை மாற்றம் செய்யாமல்)  = 110000x350 = 38.5 கோடி. ராஜ்கிரணுக்கு கொடுத்தது போக மீதி ஒன்றரைக்கோடியை நிறுவனம் லாபமாக ஈட்டிக்கொள்ளும். வேட்டி விற்ப்பனை அதிகமாகும்போது அதை உற்ப்பத்தி செய்யும் ஆட்களின் அளவு அதிகமாக தேவைப்படும், அது போலவே விற்ப்பனை செய்யும் ஆட்களின் அளவும். இது கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குமல்லவா? மேலும் வேட்டி உற்ப்பத்திக்கு தேவைப்படும் பருத்தியின் தேவை அதிகமாகும், பருத்தி உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படும்போது, பருத்தி விவசாயிக்கு கூடுதல் விலை, வருமானம் கிடைக்கும்.

மேற்க்கண்ட பல்வேறு நலன்கள் ஏழை விவசாயிகளுக்கு ராஜ்கிரன் தன் விளம்பர நிராகரிப்பால் கிடைக்காமல் செய்துவிட்டார் எனவும் கொள்ளலாமல்லவா?

மேலும் இப்போது ராஜ்கிரண் நடிக்காமல் போனதால் அந்த நிறுவனம் வேறு சில மலையாள நடிகர்களைக்கொண்டு அந்த விளம்பரத்தையெடுத்து அந்த வருமானத்தை கேரளாவுக்கு கொண்டுபோக அனுமதித்திட்டாரல்லவா? அதவாது தமிழர் வாங்கும் வேட்டியில் பங்கு மலையாளிகளுக்கு போகிறது....

விளம்பரத்தை தவிற்க்காமல், தான் நடிப்பதால் வேட்டியின் விலையை ஆறுமாதத்திற்க்கு அதிகரிக்க கூடாதென்றும், தனக்கு இரண்டு கோடிக்கு பதில் ஒரு கோடி கொடுத்தால் போதுமென்று ஒப்பந்தத்தில் விளம்பரத்தில் நடித்திருந்தால் மேற்ச்சொன்ன எந்த பாதிப்பும் ஏழைகளுக்கும் தமிழர்களுக்கும் நடந்திருக்காதல்லவா.

பதிவை அப்படியே பகிர்ந்து பாலாபிசேகம் செய்யும் முன் உங்கள் அறிவையும் கொஞ்சம் பயன்படுத்தி கருத்து திணிப்பை தவிர்த்திடுங்கள்.

https://m.youtube.com/watch?v=ny8ynZSF3oo

பி.கு: எனக்கு ராஜ்கிரனை மிகவும் பிடிக்கும். உள்ளபடியே அவரின் வெள்ளந்தி மனம் பேட்டியில் தெரிந்தது. அதனாலேயே அவரும் நாமும் நம்மையே ஏமாற்றிக்கொள்ளவேண்டியதில்லை.

No comments:

Post a Comment