Saturday, May 9, 2015

தீர்ப்பிற்குப் பின்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மே 11 திங்கட்கிழமை வெளி வரவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளும் தலைவர்களின் காய் நகர்த்தல்கள் எப்படியிருக்கும் என்ற அலசல்.

முந்தைய தீர்ப்பின்போது ஓரளவிற்க்கு அனுதாப அலை வீசியது. ஆனால் இந்த முறை அமைச்சர் நத்தம் விஸ்வனாதன் முதல் அக்ரி கிருஸ்ணமூர்த்தி வரை ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி அரசு ஊழியர்கள் தற்க்கொலைக்கு தூண்டப்படுமளவிற்க்கு அரசாட்சி சந்தி சிரிக்கிறது. ஜெயலலிதாவைப் பொருத்தவரை தன்னை விட அதிமுக வில் தலைவரில்லை என்ற தோற்றத்தை உருவாக்கியது, இப்போது அவரின் கட்சிக்கே ஆபத்தாக முடியப்போகிறது. கடந்த நான்கைந்து மாதங்களில் அரசு ஸ்தம்பித்து போனதும், அமைச்சர்களெல்லாம் மக்கள் பிரச்சினைகளை பின்னுக்குத்தள்ளி அம்மாவின் விடுதலைக்காக பாலாபிசேகம், அக்கினி குண்டமிதிப்பு என்று சுற்றியதில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டிருக்கின்றனர். மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளில் அரசு கவனம் செய்யாமல் சுனக்கம் கண்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

தீர்ப்பு: தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறை செல்ல நேரிடும்

திமுக: நீண்ட சட்டப் போராட்டத்திற்க்குப் பிறகு ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் தண்டனை வாங்கிக்கொடுத்து விட்ட வெற்றிக் கழிப்பு. இந்த வெற்றியை தேர்தல் வெற்றியாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பு. சென்ற தேர்தலில் மக்கள் காட்டிய கோபம் ஓரளவிற்க்கு குறைந்திருக்கிறது. ஆனால் கட்சியை நம்பி மக்கள் ஓட்டுப்போடுமளவிற்க்கு தயார் படுத்தப்படவில்லை. நல்ல கூட்டணியமைத்து அ தி மு க வை தனிமைப்படுத்தி வெற்றி பெருவது ஒரு உத்தி. ப ஜ க ஜெயலலிதாவிற்க்கு மறைமுக அழுத்தம் தந்து நிலம் கையப்படுத்தும் சட்டத்திற்க்கு ஆதரவு வாங்கியதன் மூலம் இரு கட்சிகளுக்கும் ஏதொவொரு ஒப்பந்தமிருப்பதை ஓரளவு ஊகித்துக்கொள்ள முடிகிறது. ஆதலால் ப ஜ க வை நம்பி ஆற்றில் இறங்கக்கூடிய நிலையில் தி மு க இல்லை. விஜய காந்தின் தே மு தி க, கம்யூனிஸ்டுகள், வி சி க வுடன் கூட்டணி ஏற்ப்படுத்துவது ஓரளவிற்க்கு முடிந்துவிட்டது. கடந்த காலத்தைப்போலவே ஸ்டாலினை ஊழலுக்கெதிரான உத்தமர் போல் ஒரு பிம்பத்தை உருவாக்கி கூட்டணிக்கட்சிகளுடன் தேர்தலை சந்திப்பது சாமர்த்தியம். காங்கிரஸ் கட்சியை வழக்கம்போலவே ஒரு கைக்குட்டையைப்போல பயன்ப்டுத்திக்கொள்ளலாம்.

அ தி மு க: வழக்கின் தீர்ப்பு கட்சிக்குள் குழப்பத்தையும் அதிகார மைய்யத்தை கண்டுகொள்வதில் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் குழப்பமேற்ப்பட்டிருக்கிறது. சோ முதலான நலன் விரும்பிகளின் ஆலோசனைப்படி ப ஜ க வைத்தவிர பெரிய கூட்டணி நம்பிக்கை இல்லை. தீர்ப்பு கொஞ்சம் அனுதாபத்தை யேற்ப்படுத்தியிருந்தாலும் அது ஓட்டுக்களை சேர்க்க எந்த அளவு உதவும் என்பது கேள்வி. இருக்கும் பத்து மாதத்திற்க்குள் எவ்வளவு காசு சேர்க்க முடியெமென்று அமைச்சர்களும் கட்சியும் திட்டங்களை நிறைவேற்ற நிதியை கரைப்பார்கள். சேர்த்த பணத்தை தேர்தலில் இரைத்தும், காவிரி, முல்லைபெரியாறு, மூவர் தூக்கு என்று ஏதாவது தமிழர்கள் பதட்டமடையும் சிக்கலை கையிலெடுத்து தமிழர்களை காப்பதற்க்கு தன்னைவிட்டால் யாருமில்லை என்ற உருவகத்தை உருவாக்கி வெற்றிபெற முயர்ச்சிப்பது ஒரு உத்தி. 

காங்கிரஸ்: ஆட்சியில் நடக்கும் ஊழல்களை வெளிப்படுத்துவதில் ஓரளவு ஸ்கொர் செய்து விட்டார் இளங்கோவன். ஆனால் அதை நம்பி மக்கள் ஓட்டுபோடுவார்களா என்பதும், தேசிய தலைமயின் மேல் தமிழகத்திற்க்கு இருக்கு வெறுப்பு இன்னும் குறையாதது எதிர் மறை அலையை குறைக்கவில்லை என்பதி உணர்ந்தே இருக்கிறது. என்னதான் வெளியில் தைரியமாக இருப்பதுபோல் நடித்தாலும் கூட்டணியில்லாமல் தேர்தலை சந்திக்குமளவிற்க்கு கட்சி தயாராகவில்லை என்பதை தலைமை உணர்ந்தே இருக்கும். தேர்தலை சந்திக்க இரண்டு வழி, திமுக வுடன் கூட்டணியேற்ப்படுத்திக் கொள்வது அல்லது மூன்றாவது அணி அமைக்க முயற்ச்சிப்பது. மாநில தேர்தலைப்பொருத்த அளவு காங்கிரசின் நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு பாதிப்பை ஏற்ப்படுத்யிருந்தாலும் சொந்த கட்சிக்கு எந்த நன்மையையும் ஏற்ப்படுத்தப்போவதில்லை. நாடாளு மன்றத்தேர்தல் வரை ஒரு நிழல் எதிர்க்கட்சிபோல் செயல்பட்டு தி மு க வை ப.ஜ.க பக்கம் சாயாமல் பார்த்துக்கொண்டு தேர்தல் நேரத்தில் கூட்டணியேற்ப்படுத்த முயலலாம்.

ப ம க: இப்பொதைக்கு தி மு க விற்க்கும் அ தி மு க விற்க்கும் மாற்று தேவைப்படும் இன்றைய சூழலை பயன்படுத்திக்கொண்டு தன் வாக்கு வங்கியை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். தே மு தி க வை நேரடியாக எதிர்த்து அந்த இடத்திற்க்கு சண்டைபோடுவதை விட்டுவிட்டு இரண்டு பெரிய யாணைகளுடன்(தி மு க மற்றும் அ தி மு க) மோதினால் தோல்வி கண்டாலும் அந்த போராட்டம் தே மு தி க வைவிட செயல்திறன் கொண்ட எதிர் கட்சியாக உருவெடுக்க உதவும். இந்த மதிப்பைக்கொண்டு தேர்தலில் ப ஜ க, மற்றும் சில பிராந்திய கட்சிகளுடன் கூட்டணியமைத்து தேர்தலை எதிர்கொண்டு கணிசமான தொகுதிகளைப் பெற்று தமிழகத்தில் தி மு க, அ தி மு க விற்க்கு மாற்றாக ப ம க என்ற நிலையை கொண்டு வந்து விடலாம். இது தே மு தி க வின் வாக்கு வங்கி( தி மு க, அ தி மு க வை பிடிக்காதவர்களின் வாக்கு)யை ஓரளவு தன் பக்கம் கொண்டுவந்து விஜயகாந்தின் செல்வாக்கை குறைத்துவிடலாம். 

 ஆம் ஆத்மி, மற்றும் பிற கட்சிகளின் நிலை யில் பெரிய மாற்றமில்லை. அவர்கள் இன்னும் தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளில் பங்கெடுத்து மக்களுடன் ஒரு நெருங்கிய உறவை பேணுவது பின்வரும் காலங்களில் உதவும்.

No comments:

Post a Comment