Tuesday, February 28, 2017

புத்தகப் பரிசு

கடந்தவாரம் என்னைப் பின் தொடருபவர்களுள் சிலருக்கு இரா. முருகவேள் அவர்களின் முகிலினி புதினம் அன்பளிபப்பாக தருவதாகச் சொல்லியிருந்தேன். என்னுடன் நட்பில் இருந்தமைக்கும், உரையாடல் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து அவர்கள் நேரத்தை செலவிட்டமைக்கும் நன்றியாக இந்தப் புத்தகங்களைப் பரிசளிக்க எண்ணினேன். மற்றவர்க்கு அளிக்கும்போது இருமடங்காகப் பெருகும் மகிழ்ச்சியைத் தரவல்லது புத்தகமும், அறிவும். அந்த வகையில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

சிறு ஆலோசனை. ஏன் இதை முடிந்த அனைவரும் செய்யக்கூடாது? ஒரு புத்தகத்தை உங்கள் நண்பருக்கு பரிசளிக்கக் கூடாது. புத்தகம் பெற்ற நண்பரும் தன் நண்பர் ஒருவருக்கு ஒரு புத்தகத்தை பரிசளிக்கலாம்.

அதேபோல் புத்தக விற்பனை நிலையங்கள், பதிப்பகங்கள் புத்தகங்களைப் பரிசளிக்க தங்கள் இணையப்பக்கங்களில் சில மாற்றங்களைச் செய்யலாம்,

உதாரணமாக

1. புத்தகத்தைத் தேர்வு செய்து, பரிசளி என்ற தேர்வை வழங்கலாம்.
2. பிறகு புத்தகத்தை பெறும் நபரின் முகவரியை உள்ளீடு பெற்றுக்கொள்ளலாம்.
3. பரிசளிப்பவர் விரும்பும் வாசகத்தை புத்தகத்தில் இடம்பெறச்செய்யலாம், உதாரமாக வாழ்த்துகள்
4. பெறுபவர் பரிசாக விரும்பும் புத்தகம் பெற்றுகொள்ள பரிசுக்கூப்பன்கள் இணையத்தில் அனுப்ப வசதி

கவனத்திற்கு:

Vediyappan M Munusamy
Badri Seshadri
Kannan Sundaram
Panuval BookStore
udumalai.com
பூவுலகு
Abdul Hameed Sheik Mohamed
யாவரும்.காம்

#giftabook

No comments:

Post a Comment