Wednesday, February 8, 2017

மந்திராலோசனை..

இன்பாக்சில் வந்து கருத்து கேட்டவர்களுக்காக..

பன்னீர் முதல்வராக வரவேண்டும், மாஃபியாவிடம் இன்னும் நான்காண்டு தமிழகம் சிக்கி அல்லல் படக்கூடாதென்றால்,

பன்னீர் மக்களிடம் சில உறுதி மொழிகளைக் கொடுத்த நேரடியாக ஆதரவு கேட்க வேண்டும்,

1. காவிரிப் பிரச்சினை, முல்லைப்பெரியாறு, மேகேதாது மற்றும் இதர தமிழக ஆற்று நீர் உரிமையை மீட்டெடுத்தல்.

2. தமிழ் மொழியை பின்னுக்குத் தள்ளும் எந்த நடவடிக்கைக்கும் பலமான எதிர்ப்பு காட்டுவது, நடவடிக்கை எடுப்பது

3. கீழடி அகழாய்வை தொடர்ந்து தமிழகத்தில் நிரந்தர பண்பாட்டுச்சின்னமாக அதை அறிவித்து பேணிப்பாதுகாத்து, ஆய்வு முடிவுகளை வெளியிடவது.

4. NEET, GST போன்றவற்றில் தமிழகத்தின் உரிமை காக்கப்படவேண்டும்.

5. மணல் கொள்ளையை நிரந்தரமாக தடுக்க சட்டமும், அதை நடைமுறைப்படுத்தும் வழிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

6. மாஃபியா கும்பல் கொள்ளையடித்த சொத்துக்களை அரசுடமையாக்குவது.

7. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை அறக்கட்டளை மூலம் பராமரித்து அவர் காலத்திற்கும்  பெயர் சொல்லுவது போல் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், முதியவர்களுக்கும், மருத்து வடதிக்கு வழியில்லாதவர்களுக்கும் உதவ வழி செய்திட வேண்டும்.

இவற்றையெல்லாம் நிறைவேற்ற உறுதி(அம்மாவின் மீது ஆணையிட்டு) வழங்கினால்,

தாங்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த சட்ட மண்ர உறுப்பினர்களின் வீடுகள், அலுவலகங்களை மக்கள் அமைதியான, காந்திய வழியில் முற்றுகையிட்டு, அவர்களை பன்னீருக்கு ஆதரவளிக்க நிர்பந்திக்கலாம்.

இதைக் கட்சி சார்பில்லாமல் நடத்திடவும், ரவுடிகள், சமூக விரோதிகள் குழப்பத்தை ஏற்படுத்தாத வண்ணம் ராஜினாமாவை வாபஸ் பெற்று முதல்வர் பதவியில் அமர்ந்து காவல்துறையை வழி நடத்தலாம்.

திமுக ஏற்கனவே சொன்னதுபோல் பன்னீர் முதல்வராக அமர, தனது வாக்கைக் காப்பாற்ற, அமைதியாக வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கலாம்.

பணபலத்துடன் MLA க்களை அமுக்கி வைத்திருக்கும் மாஃபியா கும்பலிடமிருந்து தமிழகத்தையும், MLAக்களையும் மீட்க இதுதான் ஒரே வழி.

மக்கள் ஆதரவைப் பார்த்து MLAக்களும் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு 41/2 ஆண்டு பிழைக்க பன்னீரை ஆதரித்தே ஆக வேண்டும்.

No comments:

Post a Comment